என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர்"
- மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தார்.
- கூட்டத்தில் 45 கட்சிகள் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் பட்டியலிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.
தமிழ்நாட்டுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டமாக புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை மிக கடுமையாக எதிர்த்தார்.
அது மட்டுமின்றி மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் நீடிக்கும். மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தார். அதுமட்டு மின்றி இந்தி திணிப்பை கட்டாயமாக எதிர்ப்போம் என்றும் அறிவித்து உள்ளார்.
இந்த பிரச்சனை பரபரப்பாக உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் பல பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.
இது மட்டுமின்றி 2026-ல் எம்.பி. தொகுதிகள் மறு சீரமைப்பு குறித்து ஏற்படும் இழப்புகள் பற்றி விவாதிக்க மார்ச் 5-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் 45 கட்சிகள் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதம் தி.மு.க. கூட்டணி கட்சிகளை மேலும் கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைக்கும் என்பதோடு தென்னிந்திய அரசியலிலும், இந்திய அரசியல் களத்திலும் இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதாகவே பார்க்கப்படுகிறது.
மாநில நலன் என்று வரும்போது அ.தி.மு.க., பா.ம.க. முதலான கட்சிகள் கூட இதை எதிர்க்க முடியாது என்பதால் இதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோவையில் பேசும்போது தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பாராளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படாது என்று உறுதி அளித்து பேசியிருந்தாலும், அதற்கும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பல்வேறு விளக்கங்களை கேட்டு பேட்டி அளித்தார்.
விகிதாசார அடிப்படை என்பது இப்போதுள்ள தொகுதிகள் அடிப்படையில் கணக்கிடப்படுமா? அல்லது மக்கள் தொகை அடிப்படையில் இருக்குமா? என்று கேட்டார். இதற்கு உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இருந்து தெளிவான பதில் இல்லை.
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏதாவது கட்சிகள் விலகுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கும் எதிர்க்கட்சிகள் மத்தியில் அரசியல் சதுரங்க காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட நகர்த்தி வருகிறார்.
இதன் அச்சாரமாக காஞ்சிபுரத்தில் ஏற்கனவே கூட்டணி கட்சிகள், தோழமை கட்சிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து பொதுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது தனது பிறந்த நாளையொட்டி சென்னை கொட்டிவாக்கத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று சிறப்புரையாற்ற உள்ளார்.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணியாக வலுவான கூட்டணியாக அமைவதற்கு வழிவகுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
- பல்வேறு கட்டணமில்லா ஆன்மிகப் பயணங்களையும் செயல்படுத்தி வருகிறது.
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில்/வழங்கப்படும் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் .
சென்னை:
இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான கோவில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் ஆன்மிகப் பயணங்களுக்கு அரசு மானியம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு கட்டணமில்லா ஆன்மிகப் பயணங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தலா 500 நபர்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மானசரோவர் சென்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.40,000/-ஐ ரூ.50,000/-ஆகவும், முக்திநாத் சென்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.10,000/-ஐ ரூ.20,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025-ம் நிதியாண்டில் (01.04.2024 முதல் 31.03.2025 வரை) சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பிய, 18 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்/வழங்கப்படும் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் .
இதற்கான விண்ணப்ப படிவங்களை www.tnhrce.gov.in என்ற இத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் "ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034" என்ற முகவரிக்கு ஏப்ரல் 30-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் (www.tnhrce.gov.in) மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறிள்ளார்.
திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் மைதானத்தில் நிட்-ஷோ எந்திர கண்காட்சி-2018 தொடக்க விழா நடந்தது. கண்காட்சியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
இந்த கண்காட்சி திருப்பூர் தொழில் துறையினரின் வர்த்தகத்தை உயர்த்தும் வகையிலும், அவர்கள் பல்வேறு தகவல்கள் மற்றும் வர்த்தகர்களின் அறிமுகங்களை பெறும் வகையிலும் நடத்தப்படுகிறது. கண்காட்சி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.
இதில் எம்.எல்.ஏக்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன் மற்றும் ஏ.இ.பி.சி. துணை த்தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:-
நிட்-ஷோ கண்காட்சி மூலம் தொழில்துறையினருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இதில் கலந்துகொள்வதன் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். அனைத்து அரங்குகளிலும் தொழில்துறையினருக்கு தேவையான பிரிண்டிங், நிட்டிங் உள்ளிட்ட எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் இது வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொழில்துறையினருக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. கோவை கொடிசியா மைதானத்தை போல் திருப்பூரில் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் நிரந்தர கண்காட்சி வளாகம் விரைவில் அமைக்கப்படும். இதற்கான இடமும் விரைவில் தேர்வு செய்யப்படும்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சலுகைகளுடன் கூடிய ஜவுளிக்கொள்கை விரைவில் அறிவிக்க முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.