search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிவிபத்து"

    • பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.

    தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெடிவிபத்தில் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் (வயது 34) பலத்த தீக்காயங்களுடன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே உள்ள தாம்னா என்ற கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், ரசாயன பவுடர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்த வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வெடிவிபத்து குறித்து தகவலறிந்த துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதாகவும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நாக்பூர் போலீஸ் கமிஷனர் ரவீந்திர சிங்கல் தெரிவித்துள்ளார்.

    • ராஜமாணிக்கம் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள்.

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழிந்துள்ளார்.

    இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல மற்றும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (16.5.2024) மாலை சுமார் 5.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    சிவகாசி:

    சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறியதாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த பட்டாசு ஆலையை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக வருவாய் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த செங்கமலபட்டி கிராம மக்கள் பட்டாசு ஆலை இருக்கும் பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களை விரட்டினர். இதனை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் லோடு ஆட்டோ ஆகிவற்றை விட்டுவிட்டு தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள், லோடு ஆட்டோவை போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா். கிராம மக்கள் ஒப்படைத்த மோட்டார் சைக்கிளில் ஒரு மோட்டார் சைக்கிளில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை விசாரித்து வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி நடைபெற்ற செங்கமலபட்டி பட்டாசு ஆலையில் தற்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பட்டாசு ஆலையில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
    • காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பட்டாசு ஆலையில் இருந்த 10 அறைகள் தரைமட்டமாகின.
    • மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 13 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன.
    • புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் ஆர்.எஸ்.ஆர்.கிரஷர் என்ற பெயரில் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் அங்குள்ள வெடிமருந்து சேமித்து வைக்கும் குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். அவர்களது உடல் பாகங்கள் 1 கி.மீ. தூரம் வரை வீசப்பட்டு கிடந்தது. இந்த விபத்து தொடர்பாக கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆவியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    முதல் தகவல் அறிக்கையில் வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு:-

    நானும் (கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ்), கிராம உதவியாளர் மஜீத்கனியும் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது டமார் என்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே நாங்கள் இருவரும் குவாரி பக்கம் சென்று பார்த்தபோது, கிரஷருக்கு தெற்கு பக்கம் உள்ள வெடிமருந்து குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டு குடோன் தரைமட்டமாகி கிடந்தது. குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன. அதன் பாகங்கள் நாலாபக்கமும் சிதறிக்கிடந்தன.

    வெடிச்சத்தம் கேட்டு வந்த கடம்பன்குளத்தை சேர்ந்த வேட்டையன் மற்றும் கிரஷரில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்த கீழஉப்பிலிக்குண்டு குருநாதனிடம் விசாரித்த போது, கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டி அழகர்சாமி மகன் கந்தசாமி, தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் அருகன்குளம் குருசாமி ஆகியோர் குடோனில் இருந்த வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு உடல் பாகங்கள் நாலாபுறமும் சிதறி இறந்துவிட்டதாக சொன்னார்.

    மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல் உயர்ரக வெடிமருந்துகள் இறக்கும் இடத்தில் போதிய கண்காணிப்பு செய்யும் அலுவலர் இல்லாமலும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரோ மிக்சர் (நைட்ரஜன்) வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து லோடு இறக்கினாலோ, ஏற்றினாலோ வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் சேதத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இறக்கியுள்ளனர்.

    வெடி மருந்துகளை போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமல் வெடிமருந்து குடோனில் வேலை செய்ததால் வெடிவிபத்து ஏற்பட்டு அதன் காரணமாக இருந்த மேற்படி வெடிமருந்து குடோனை முறையாக நிர்வகிக்காத அதன் உரிமையாளர் ராஜ்குமார், மேற்பார்வை செய்து வந்த உரிமையாளர்களான ராம்ஜி, மேற்பார்வையாளர் ராம மூர்த்தி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதில் தலைமறைவாக இருக்கும் ராஜ்குமார், ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோர் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட 1,200 கிலோ வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் அதன் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர்.
    • 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள கீழஉப்பிலிக்குண்டுவில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி (வயது 47), தென்காசி மாவட்டம் வடமலாபுரத்தை சேர்ந்த பெரியதுரை (25), சிவகிரி அருகன்குளத்தை சேர்ந்த குருசாமி (60) ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள்.

    தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர். பின்னர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தமழக அரசு சார்பில் விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இறந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு கல்குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததும் அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
    • வெடி விபத்து குறித்த தகவலை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் பகிர்ந்துள்ளார்.

    கம்போடியா நாட்டின் மேற்கு பகுதி, கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது.

    அங்கு, வெடி பெருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில், அங்கு கரும் புகை மண்டலமாக உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    • மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் மையமான தருஹேராவில் உள்ள லைஃப் லாங் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், வானத்தில் புகை மூட்டத்துடன் மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    • தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி பலியாகினர்.

    பாங்காக்:

    சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. அப்போது 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 ஊழியர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×