என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் அலை"

    • மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
    • காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது.

    லிமா:

    தென் அமெரிக்க நாடான பெருவின் மார்கோனா நகரைச் சேர்ந்த மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61). இவர் கடந்த டிசம்பர் மாதம் சக மீனவர்களுடன் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.

    அங்கு 2 வாரங்கள் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.

    இதில் காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது. ஆனால் அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

    இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து காஸ்ட்ரோவின் உறவினர்களும் அவரை தேடி வந்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு படகில் காஸ்ட்ரோ ஆபத்தான நிலைமையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் பெரு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதன்பிறகு அவரது உறவினர்களிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்கப்பட்டார். கடலில் மாயமான காஸ்ட்ரோ 95 நாட்களுக்கு பிறகு திரும்பியதால் குடும்பத்தினர் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.
    • சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் கடலில் நேற்று குளித்த திருவாரூர் மருத்து வக்கல்லூரி மாண வர்களில், 4 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர், இதில் 3 பேர் மீட்கபப்ட்ட நிலையில், ஒருவர் மாயமாகி யுள்ளார். அவரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிர மாக தேடிவருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வரும், சிவக்குமார் (வயது 20), கரோனா (20), அகிலாண்டேஸ்வரி (19), கனகலட்சுமி (19) உள்ளிட்ட 15 மாணவ-மாணவிகள் காரைக்காலுக்கு சுற்றுலா வந்தனர்.

    அவர்களில், சிவக்குமார், கரோனா, அகிலாண்டேஸ் வரி, கனகலட்சுமி உள்ளிட்ட 4 பேர், மாவட்ட நிர்வாக த்தின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் வந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் சிலர் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை. தொடர்ந்து, காரைக்கால் நகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் நிலையத்திற்கு மாண வர்கள் தகவல் அளித்த னர். அதன்பேரில், கடலில் மாயமான பட்டு கோட்டை யைச்சேர்ந்த மாணவர் சிவக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். காப்பாற்றப்பட்ட 3 மாணவி கள், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை கக்காக சேர்த்துள்ளனர்.

    இது குறித்து, காரைக் கால் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டும், அப்பகுதியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையில் ஈடுபட்டாமல் இருந்ததாக கூறப்படு கிறது.கடலில் குளிக்க வேன்டாம் என மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் எச்சரிக்கை போர்டு வைத்திருந்தாலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் நேரத்தில், போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வல ர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது.

    இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-ல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு துறைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி. கடல்சார் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் அப்துஸ் சமது வழிநடத்துவார்.

    இதுகுறித்து அப்துஸ் சமது கூறுகையில், "54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இதன் மூலம் நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யமுடியும்" என்றார்.

    • கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்.
    • கடலோர காவல் படையினர் மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (வயது18).

    இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கூழையார் பகுதியில் உள்ள கடலில் தனது நண்பர்கள் 6 பேருடன் குளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி மாயமானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்

    • பக்தர்களின் பாதுகாப்புக்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்
    • அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர் கள் வந்து பொங்க லிட்டு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் அவர்கள் அங் குள்ள கடற்கரைக்கு சென்று கால் நனைப்பது வழக்கம்.

    நேற்று நாகர்கோவிலில் மருந்து கடை நடத்தி வரும் பிரமுகர் ஒருவர் தனது குடும்பத்தினர் மற்றும் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுடன் மண்டைக்காடு கோவிலுக்கு வந்திருந்தார். அவர்கள் சாமி தரிசனம் முடிந்து கடற்கரைக்கு சென்றனர்.

    அங்கு கடலில் கால் நனைத்து கொண்டிருக்கும் போது திடீரென எழுந்த ராட்சத அலை 3 பெண்கள் மற்றும் 13 வயது சிறுவன் உள்பட 4 பேரை இழுத்து சென்றது. அலையில் சிக்கிய அவர்கள் உயிர் கடல் நீரில் தத்தளித்தபடி கூச்சலிட்ட னர். இதனை பார்த்த புதூர் மீனவர்கள் டேனியல், ஜாண்பால், சிலுவையடிமை, அந்தோணி மற்றும் சிலர் கடலில் குதித்து அனை வரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் சென்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் மண்டைக்காடு கோவிலுக்கு தற்போது பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். அவர்கள் கடற்கரைக்கும் வந்து செல்கின்றனர். ஆனால் கடற்கரையில் போதுமான பாதுகாப்பு இல்லை. இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பல வருடங் களாக மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத் தும் எந்த விதமான நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே மீனவர்கள் மற்றும் பக்தர்களின் நலன் வேண்டி இங்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு மீனவர்கள் திரும்பி பார்த்தனர்.
    • பலத்த போராட்டத்திற்கு பிறகு 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பொட்டல்குழி பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி (வயது 48). இவரது மனைவி சீமா (47).

    இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் விஜயா (45). இவரது மகள்கள் ஆஷா (22), ஆஷிகா (17). இவர்கள் அனைவருக்கும் குடும்ப கோவில் ஒன்று உள்ளது. அங்கு நடைபெறும் திருவிழாவுக்கு மண்டைக்காடு கடலில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்வது வழக்கம்.

    தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருவதால், இன்று காலை வைகுண்டமணி அவரது மனைவி மற்றும் விஜயா குடும்பத்தினர் புனித நீர் எடுப்பதற்காக மண்டைக் காடு சென்றனர். அவர்கள் முதலில் கடலில் இறங்கி கால் நனைத்தனர்.

    அப்போது ராட்சத அலை எழுந்து வந்தது. இதனை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் கடல் அலை வாரி இழுத்துச்சென்றது.

    வைகுண்டமணி, அவரது மனைவி சீமா, விஜயா, அவரது மகள்கள் ஆஷா மற்றும் ஆஷிகா ஆகியோர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டபடியே தண்ணீரில் மூழ்கினர். அப்போது காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்கள், கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு திரும்பி பார்த்தனர். உடனடியாக கடலில் குதித்து 5 பேரையும் காப்பாற்ற முயன்றனர். பலத்த போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் 5 பேரும் அதற்குள் மயங்கிவிட்டனர். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும், குளச்சல் கடலோர போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். உடனடியாக மயக்கத்தில் இருந்த 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.

    சரியான நேரத்தில் 5 பேரையும் கடலில் குதித்து காப்பாற்றிய மீனவர்களை பலரும் பாராட்டினர். மீனவர்கள் கவனிக்காமல் இருந்திருந்தால் கடல் அலையில் 5 பேரும் மூழ்கி பலியாகி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர்.
    • கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    நாகர்கோவில்:

    திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.

    நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

    கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆனது. பலியான வெங்கடேஷ், பிரவீன் சாம், காயத்ரி, சாருகவி, சர்வ தர்ஷித் ஆகியோரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் 5 பயிற்சி டாக்டர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கடல் சீற்றமாக இருக்கும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் நேற்று கடல் அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். தேங்காய்பட்டினம் பகுதியில் தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஆதிரா (7) என்பவரை கடல் அலை இழுத்துச்சென்றது.

    அவரது உடலை இன்று காலை மீட்டனர். நேற்றும், இன்றும் கடல் அலையில் சிக்கி குமரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்
    • மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம். அகஸ்தீஸ்வரம் வட்டம் இராஜாக்கமங்கலம் கிராமம் மெமூர் கடற்கரையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது. கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (23), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாருகவி (23) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (24)ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்யயும் உத்தரவிட்டிருக்கிறேன்.

    இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடல் அலை கரையை தாண்டி தொட்டு சென்றது.
    • கோவில் முதல் உதவி சிகிச்சை மையத்தில் முதல் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    இந்நிலையில் கோவில் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடல் அலை கரையை தாண்டி தொட்டு சென்றது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம் போல் புனித நீராடினர். இந்நிலையில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சேலத்தை சேர்ந்த தங்கம் (52), புதுக்கோட்டையை சேர்ந்த பாகாம்பிரியா (39), கோயம்புத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (56) ஆகியோர் கடலில் நீராடிய போது அலையின் சீற்றத்தில் சிக்கினர்.

    இதில் அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களை, கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவராஜா, சுதாகர், ஆறுமுக நயினார், இசக்கிமுத்து, ராமர் ஆகியோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில் முதல் உதவி சிகிச்சை மையத்தில் முதல் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மரணப் பாறை' அருகே செல்பி எடுக்க முயன்ற விஜய் தவறி கடலில் விழுந்தார்.
    • கடலில் மூழ்கிய இளைஞரை கண்டுபிடிக்க தொடர்ந்து 2-வது நாளாக தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    அவர்களில் விஜய் (வயது 27) என்ற இளைஞர் உள்பட சிலர் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட 'மரணப் பாறை' என்று இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு செல்பி எடுக்க முயன்ற விஜய் தவறி கடலில் விழுந்தார்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலில் மூழ்கிய இளைஞரை கண்டுபிடிக்க தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலாப் பயணி விஜயின் உடல், டவர் அருகே சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

    இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த தஞ்சை கல்லூரி மாணவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முகுந்தன், தஞ்சாவூரை சேர்ந்த ராஜஸ்ரீ, வேதராண்யத்தைச் சேர்ந்த அபிசேக், கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், நீடாமங்கலத்தைச் சேர்ந்த தினகரன், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுதர்ஷன், மதுரையைச் சேர்ந்த பாண்டியம்மாள், புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுசுயா ஆகியோர் நேற்று மாலை வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கடலில் ஆற்று முகத்தூவாரம் அருகே 8 மாணவர்களும் குளித்துள்ளனர். அப்போது முகுந்தன் மற்றும் ராஜஸ்ரீ இருவரும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் சக மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து ராஜஸ்ரீயை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடல் அலையில் இழுத்துச் சென்ற மாணவர் முகுந்தனை தேடிய நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளார். 

    இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த முகுந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    கடல் அலையில் சிக்கி இறந்த பள்ளி மாணவனின் உடல் இன்று கரை ஒதுங்கியது. மற்றொரு வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிங்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அபு (வயது 14). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜாவித் (18). இவர் தனியார் பள்ளி வேனில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

    நேற்று மாலை அபு, ஜாவித் மற்றும் அவர்களது நண்பர்கள் இப்ரான் உள்பட 6 பேர் மரக்காணம் அடுத்த தீர்த்தவாரி கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் அபு மற்றும் ஜாவித் சிக்கினர். அலையானது அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. அவர்கள் கடலில் மூழ்கினார்கள். இதை பார்த்த அவர்களது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அபு மற்றும் ஜாவித்தை கடலில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்த பகுதி மீனவர்களுடன் இணைந்து மாயமான அபு மற்றும் ஜாவித்தை நீண்ட நேரம் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் வந்ததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை குப்பம் கடற்கரையில் மாணவன் அபுவின் உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    மேலும் கடல் அலையில் சிக்கி மாயமான மற்றொரு வாலிபர் ஜாவித்தை இன்று 2-வது நாளாக கடலோர காவல் படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    ×