search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர்"

    • எந்த மதுவை குடித்தாலும் அவர்களுக்கு அது ஒத்துப்போகாது.
    • விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வை தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது.

    நாளைல இருந்து அந்தக் கருமத்தை கையில தொடவே கூடாது என்று சபதம் எடுக்கும் குடிமகன்கள் அடுத்த நாளே சபதத்தை முடித்துவிட்டு மீண்டும் உற்சாக உலகில் மிதக்க தொடங்கி விடுகிறார்கள்.

    இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் மிகவும் அதிகரித்தே காணப்படுகிறது. விதவிதமான மது வகைகள் இருந்தபோதிலும் விஸ்கி, பிராந்தி, பீர் ஆகியவற்றை மட்டுமே அதிக அளவில் மது பிரியர்கள் குடித்து வருகிறார்கள். மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற போதிலும் மது பிரியர்களால் அதனை முழுமையாக விட முடிவதில்லை.

    குறிப்பிட்ட வகை மதுவை அருந்தி பழகி விட்டவர்கள் வேறு எந்த பிராண்டையும் தொடுவதில்லை. அதே நேரத்தில் ஒரு சிலர் எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடித்து விடுவதும் உண்டு. காக்டைல் என்று அழைக்கப்படும் மது கலவையும் பார்களில் பரிமாறப்படுவது உண்டு. இப்படி மது குடிப்பவர்களை விதவிதமாக பட்டியல் போட்டுவிடலாம்.

    விஸ்கி பிராந்தியை மட்டுமே குடிப்பவர்களில் பலர் அதற்கு மட்டுமே அடிமையாகி தொடர்ந்து பிராந்தியையே குடித்து வருவார்கள். வேறு எந்த மதுவை குடித்தாலும் அவர்களுக்கு அது ஒத்துப்போகாது. அதேபோன்று பீர் மட்டுமே குடிப்பவர்களும் உண்டு. இந்த இரண்டும் நமக்கு ஆகவே ஆகாது. நமக்கு ஏத்த சரக்கு விஸ்கி மட்டும்தான் என்று கூறிக்கொண்டு போதையில் மூழ்கிக் கிடப்பவர்கள் ஏராளம். விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகமாக்கி விடும் என்று கூறுவார்கள். இதனால் விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வை தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது. இதனால் புது மாப்பிள்ளைகளுக்கு குடிமகன்கள் பலர் மாப்ள... அப்பப்ப விஸ்கிய உள்ள தள்ளிக்க... சரியா ? என்று கிண்டலாக கூறுவதும் உண்டு.

    இப்படி போதையில் விழுந்து கிடக்கும் விஸ்கி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. தொடர்ச்சியாக விஸ்கி குடிப்பவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் பெண்ணாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.

    இது தொடர்பாக 100 குடிமகன்களுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்குள் 8 முறை மது கிண்ணங்களில் விஸ்கியை ஊற்றி கொடுத்து பரிசோதித்து பார்த்ததில் இது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்கிற அமிலம் விஸ்கி சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக சுரந்து அதுவே ஆண்மைத் தன்மையை காலி செய்வதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்று விஸ்கி சாப்பிடுபவர்கள் நாளடைவில் முழு மங்கையாக மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே விஸ்கி பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் சமூக வலைதள பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இந்த சோதனை முடிவில் விஸ்கி சாப்பிடுபவர்கள் பெண்களைப் போல அமைதி சொரூபமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. யாருடனும் அதிகமாக வாதாடாமல் அவர்கள் அடக்க ஒடுக்கமாக பெண் தன்மையுடன் மாறி இருந்ததாகவும் கூறப்படுகிறது. சில பெண்கள் என்னதான் தவறு செய்தாலும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.

    அது போன்ற உணர்வுகளையும் விஸ்கி குடித்த ஆண்களிடம் காண முடிந்துள்ளது. அதே நேரத்தில் அவர்கள் சம்பந்தம் இல்லாமல் அதிகமாக பேசிக் கொண்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. எனவே விஸ்கி பிரியர்களே உஷாராக இருங்கள். ஒருவேளை உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு நீங்கள் பெண்ணாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் உங்களது வரலாறே மாறி விடும். ஆபத்தும் உள்ளது. நீங்கள் வசந்தாக இருந்தால் வசந்தியாக மாற நேரிடும். கண்ணனாக இருந்தால் கண்ணம்மாவாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    உஷார் உஷார் உஷார்....

    • உணவு டெலிவரி நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
    • ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது பொதுமக்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்தத் துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவருகின்றன.

    இந்த நிறுவனங்கள் உணவுக் கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துக் கொள்கின்றன.

    மேலும், உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

    இதையடுத்து பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிள் அனுமதி பெற்று மதுபானங்கள் ஹோம் டெலிவரியை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

    • பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது.
    • குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர்.

    காய்ச்சிய உடனே குடிக்கும் சரக்கில் தான் மது போதை கிக் அதிகம் என மது பிரியர்கள் நினைக்கிறார்கள். மது பிரியர்களின் இந்த தீராத குறையை தீர்க்க ஐதராபாத்தில் குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபான கூடங்களில் டேப் ரூம் என்ற பெயரில் புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளன.

    இந்த மதுபான கூடங்களில் நண்பர்கள், கூட்டாளிகள், தோழிகள் என யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த டேப் ரூம் மதுபான கூடம் பீர் பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான புத்துணர்ச்சியை ஊட்டும் அனுபவத்தை வழங்குகிறது. அதாவது வரிசையாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது. அதனை பிடித்து குடிமகன்கள் அப்படியே குடிக்கலாம்.

    விட்டில், கோதுமை, ஜேம்ஸ் ப்ளாண்ட், அங்கிள் டங்கிள் உள்ளிட்ட உயர் ரக பீர் வகைகள் இந்த குழாய்களில் வருகின்றன. எந்த குழாயில் எந்த வகையான பீர் வரும் என்ற பெயர் குழாய்களுக்கு மேலே அச்சிடப்பட்டுள்ளன.

    இதிலும் தனித்துவம் என்னவென்றால் இந்த குழாய்களில் வரும் பீர் ஆலைகளில் இருந்து காய்ச்சிய உடனே மதுபான கடைக்கு கொண்டுவரப்பட்டு அப்படியே குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் காய்ச்சிய உடனே பீர் குடிக்கும் அனுபவம் கிடைக்கிறது. குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர். பல்வேறு விதமான பீர்களை அவர்களே பிடித்து ருசித்து மகிழ்கின்றனர். இந்த புதிய திட்டத்தால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மதுபான கூட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
    • நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.

    நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.

    நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.

    • டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உட்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வெழுத்து வாங்குவதாலும், 109 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதாலும், டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீரென பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல கடைகளில் தேடி அழைந்தும் பீர் கிடைக்காத விரக்தியில் சரக்கு குடித்து செல்கின்றனர்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதாலும், "குடிமகன்கள்" விரும்பும் சரக்குகள் கிடைப்பதில்லை. குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன.

    விலை அதிகரிப்பு உள்ள சரக்குகள் தான் கிடைக்கின்றன. என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் குளு குளு பீர் வகைகள் கிடப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர்.

    டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது.
    • வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர்.

    சென்னை:

    வெயில் சுட்டெரிக்கிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி? சமாளிப்பது எப்படி? என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கோணத்தில் யோசிக்கிறார்கள்.

    குடிமகன்களுக்கு 'தண்ணி' தாராளமாக வேண்டும். அதாவது பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். பீர் குடித்தால் வெயிலோடு விளையாடலாம் என்பது அவர்களின் எண்ணம்.

    ஆனால் அதுவும் ஆல்கஹால்தான் என்பதை அவர்கள் கண்டு கொள்வதில்லை. அதிலும் 10 சதவீதம் வரை ஆல்கஹால் கலக்கப்படுகிறது. குடிமகன்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்காக தட்டுப்பாடு இல்லாமல் பீர் சப்ளை செய்ய டாஸ்மாக் நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது. தற்போது 10 லட்சம் பெட்டிகள் கையிருப்பில் உள்ளன.

    தற்போது டிராபிக்கல் நிறுவனத்திடம் இருந்தும் தண்டர் போல்டு, காட்பாதர் ஆகிய இருவகை பீர்கள் கொள்முதல் செய்யப்படுவதால் தட்டுப்பாட்டை சமாளிக்க முடிகிறதாம்.

    இந்த நிலையில் இப்போது காப்பர் போல்டு என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர். இந்த பீர் ரூ.190 விலைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி மதுவகை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-

    பீர் வகைகள் எல்லாமே ஏதாவது ஒரு தானியத்தில் இருந்துதான் தயாராகிறது. இதில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் அனைத்துமே உடலுக்கு தீங்கானதுதான்.

    வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவிருக்கும் கோதுமை தயாரிப்பான பீர் உற்பத்தி செய்ய கூடுதல் நாட்கள் ஆகும். டிராபிக்கல் பீர் விலையே ரூ.170 முதல் ரூ.180 ஆக இருக்கும் போது இறக்குமதி செய்யப்படும். பீர் விலை ரூ.230-க்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்றார்.

    • எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.
    • மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடை, பார்கள் உள்ளது.

    கோடை வெயில் தொடங்கியதால் பெரும்பாலான மது பிரியர்கள் பீர் வகைகளை அதிக அளவு வாங்கி அருந்துகின்றனர்.

    பீர்கள் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது. பீர் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில மதுபான கடைகளில் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.

    அதோடு பண்டிகை காலங்களில் அதிக அளவில் பீர் வியாபாரம் ஆகும் என கருதி மதுக்கடை உரிமையாளர்கள் பெட்டி பெட்டியாக பீர் வகைகளை வாங்கி குடோன்களில் சேமித்து வைக்கின்றனர்.

    ஆனால் எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.

    இதனால் காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு மதுபான கடைகள் ரூ.20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றன. ரூ.120 மதிப்பிலான பீர்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர்.
    • தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து பீர் வகைகள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம், லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்மை ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலர்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு கெஸ்ட்ரா, ஸ்ட்ராங் பீர், ஹண்டர் வூட்பெக்கர், பவர் கூல் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டிகளுக்கு மேல் பீர் விற்பனையாகிறது. கோடை காலம் வந்து விட்டதால் பீர் விற்பனை இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 65 லட்சம் பெட்டி அளவுக்கு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவும் கூலிங் பீர் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குகிறார்கள். அதற்கேற்ப டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடின்றி வினியோகிக்கிறார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மது ஆலைகளில் இருந்து அதிகளவு பீர் கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு வாரத்துக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், இதற்கு முன்பு மது குடிப்பவர்கள் குறிப்பிட்ட ரக மதுபானங்களை வாங்கி குடிப்பது வழக்கம். மற்ற ரக பீர்களை குடித்தால் தலை வலிக்கும் என்று வாங்க மாட்டார்கள்.

    ஆனால் இப்போது அப்படி அல்ல. எந்த ரகமாக இருந்தாலும் வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்கு போதை ஏற வேண்டும். அதுதான் நோக்கம். இதனால் ஒரு பிராண்ட் இல்லாவிட்டால் வேறொரு பிராண்டை வாங்கிச் சென்று குடிக்கிறார்கள். குடிகாரர்களின் மனநிலை மாறிவிட்டது. 5 வருடத்துக்கு முன்பு குடித்தவர்கள் மனநிலை வேறு விதமாக இருந்தது. இப்போது மனநிலை வேறு விதமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் போதைக்கு அடிமையாகி கிடைத்த சரக்கை வாங்கி குடிக்கிறார்கள்.

    இதனால் மது தட்டுப்பாடு என்ற நிலை வரவில்லை. டாஸ்மாக் நிர்வாகமும் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து ஒரு வாரம் இருப்பு வைக்கும் அளவுக்கு சரக்கை அனுப்புகிறார்கள். இதனால் பீர் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
    • தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.

    அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.

    சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன்-பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் ஒரு ரசிகை பீர் குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன்-பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதிபடி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கேப்டவுன் அணி 16.5 ஓவரில் 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் போது ஒரு ரசிகை பீர் அருந்துவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு கிளாஸ் பீரை ஒரு மடக்கில் குடிப்பதை காண முடிந்தது.

    சாதரணமாக போட்டியை ரசித்துக் கொண்டிருந்த அந்த பெண், அவரை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் தெரிவதை கண்டு முதலில் கையில் இருந்த குளிர்பானத்தை குடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிறிது நேரத்தில் மீண்டும் அந்த பெண் திரையில் காண்பிக்கப்பட்டதும் பக்கத்தில் முதியவரிடம் இருந்து மறுபடியும் ஒரு கிளாஸ் பீரை குடித்து சந்தோசத்தில் துள்ளி குதித்தார். இதற்கு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • இந்திய மதுபான வர்த்தக சந்தை 33 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடையது
    • அம்ருத் விஸ்கி 183 சதவீதம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது

    மதுபான வகைகளில் உலகளவில் பெரும்பாலான ஆசிய நாடுகளில் பீர் விரும்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வைன் சுவைப்பதையே அதிகளவில் மதுப்பிரியர்கள் விரும்புகின்றனர்.

    ஆனால், இந்தியர்கள் விஸ்கி பிரியர்கள்.

    மதுபான வர்த்தகத்தில் $33 பில்லியன் மதிப்புடைய சந்தையாக அதிக விஸ்கி சுவைப்பவர்கள் நாடாக இருந்த இந்தியா தற்போது அதிகளவில் விஸ்கி தயாரிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது.

    இந்திய தலைநகர் புது டெல்லியை சேர்ந்த பிக்காடிலி வடிசாலையில் (Piccadily distillery) தயாராகும் சிங்கிள் மால்ட் வகை "இண்ட்ரி" (Indri) விஸ்கி, உலகிலேயே சிறந்த விஸ்கி என முதலிடத்தை பிடித்துள்ளது.

    உலகளவில் முன்னணியில் உள்ள பிரான்சின் பெர்னாட் ரிகார்ட் (Pernod Ricard) நிறுவனத்தின் க்ளென்லிவெட் (Glenlivet), இங்கிலாந்தின் டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் டாலிஸ்கர் (Talisker) ஆகிய மதுபான வகைகள் இந்தியாவின் இண்ட்ரி, அம்ருத் (Amrut) மற்றும் ராம்புர் (Rampur) போன்ற உள்ளூர் விஸ்கி மதுவகைகளுடன் போட்டி போட முடியாமல் திணறுகின்றன.

    தங்கள் உபயோகத்திற்கும், கேளிக்கை விருந்து பரிமாற்றங்கள் மற்றும் பிறருக்கு பரிசளிக்கவும் பெரும்பாலான இந்தியர்கள், இந்த உள்ளூர் தயாரிப்புகளையே விரும்ப தொடங்கி உள்ளனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உலகின் தலைசிறந்த விஸ்கிகளுக்கான பரிசு (Whiskies of the World) போட்டியில், ஸ்காட்லேண்டு மற்றும் அமெரிக்காவின் பல பிராண்டுகளை பின்னுக்கு தள்ளி "பெஸ்ட் இன் ஷோ" (Best in Show) பரிசை இண்ட்ரி (தீபாவளி எடிஷன்) வென்று முதலிடம் பிடித்தது.

    விற்பனையில் முன்னணியில் இருந்த க்ளென்லிவெட், இந்திய பிராண்டான அம்ருத் விஸ்கியின் 183 சதவீத வளர்ச்சியால் சரிவை சந்தித்திருக்கிறது.

    வரும் 2025 காலகட்டத்தில் பிக்காடிலி நிறுவனம் தனது உற்பத்தியை 66 சதவீதம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் சித்தார்த்த ஷர்மா தெரிவித்தார்.

    விற்பனையில் முன்னணியில் உள்ள இந்த மது தயாரிப்பு நிறுவனங்கள் விலையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு பாட்டில் இண்ட்ரி $37, அம்ருத் $42 மற்றும் ராம்புர் $66 என அயல்நாட்டு மதுபானங்களுக்கு ஈடாக விற்பனை ஆகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

    அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.

    வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

    ×