என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியர்"

    • தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலங்கொம்பு அரசு பள்ளியில் 7,8, 9-ம் வகுப்புகளில் படித்து வரும் 9 மாணவிகளுக்கு அந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவிகள் புகார் அளித்தும், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள் அதனை கண்டு கொள்ளாமல், அதற்கு உடந்தையாக இருந்தாகவும் தெரிகிறது.

    இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா அளித்த புகாரின் பேரில் போலீசார் இடைநிலை ஆசிரியர் நடராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் சம்பவம் தெரிந்தும், புகார் அளிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியைகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில் தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடராஜன் ஒரு வாரத்திற்கு முன்பே சஸ்பெண்டு செய்யப்பட்டு விட்டார்.

    அதனை தொடர்ந்தே அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆசிரியர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    • விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
    • தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    சேலத்தில் நேற்று காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.

    இந்நிலையில், விழாவில் பங்கேற் தம்பயாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முறையாக பள்ளிக்கு செல்லாமல், அதிமுக பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தொடக்க பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தம்பயா கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
    • பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

    இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பெருமாள்பட்டியைச் சேர்ந்த கே. அடைக்கலம் (வயது44) என்பவர் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அடைக்கலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடைக்கலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது,

    கைதான அடைக்கலம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் தங்களின் உடலை தொடுவதாகவும், மேலும் முகம் பார்த்து பேசாமல் உடலின் அங்கங்களை பார்த்து பேசுவதாகவும் 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அன்னவாசல் அருகே அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பள்ளி மாணவ-மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் சில ஆசிரியர்களுக்கு மத்தியில், கிருஷ்ணா ரெட்டியின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
    • ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா சேலூரு கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மர்மநபர்கள் அந்த பள்ளி கழிவறையின் கதவை உடைத்து நாசப்படுத்தியிருந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் மாணவ-மாணவிகளால், பள்ளியின் கழிவறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக கிடந்தது. அத்துடன் பயங்கர துர்நாற்றமும் வீசியது. இதனால் மாணவ-மாணவிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணா ரெட்டி, பள்ளிக்கூட கழிவறைகளை சுத்தம் செய்ய முன்வந்தார். அதன்படி அவர் குழாய் மூலம் தண்ணீர் அடித்து துடைப்பானை கையில் பிடித்து கழிவறைகளை சுத்தம் செய்தார்.

    பள்ளி மாணவ-மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் சில ஆசிரியர்களுக்கு மத்தியில், கிருஷ்ணா ரெட்டியின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் அவர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது.
    • அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை.

    இதனால் மாணவர்கள் தங்களது முடியை பல விதமாக அலங்காரம் செய்து கொண்டு சுற்றி திரிந்தனர்.

    தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

    இவர்களை பெற்றோர் கண்டித்தும் வெட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தன்ராஜ் தனது சொந்த செலவில் 2 முடித்திருத்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து முடியை சீராக்கினார்.

    தொடர்ந்து இதே போல் வெட்ட வேண்டும் இல்லை என்றால் மீண்டும் பள்ளியில் மாணவர்களுக்கு முடி வெட்டப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.

    குரூப் 1 தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37).இவரது தந்தை பெயர் ராமன், தாயின் பெயர் சிந்தாமணி இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வளையகாரன் வலசு.

    இவர் பிஎஸ்ஸி (கணிதம்)எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 17.01.2002 முதல் இன்று வரை 17 வருடங்களாக அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார் இவர் ஐ.ஏ.எஸ். கனவுடன் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளும் எழுதியுள்ளார்.

    கடந்த 2013 முதல் 3 முறை குரூப் 1 தேர்வுகள் எழுதப்பெற்று முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிளாரன்ஸ் இவரும் அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இவருக்கு அறிவமுது (11) என்ற மகளும் அமுதப் பிரியன் ( 9) என்ற மகனும் உள்ளனர்.

    டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற இவரை சக ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். #tamilnews

    கும்பகோணம் அருகே தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.

    இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார்.

    இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் சம்பவ இடம் சென்று வாலிபரை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர் மனோகரனை தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.

    இதுபற்றி மனோகரன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. #tamilnews
    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.

    இதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.

    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

    முன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.

    இதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வேலை நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த அரசு பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார்.
    ஓசூர்:

    உத்தனப்பள்ளி அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி கலையரசன். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், தந்தை வழி பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு படித்து, மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். 

    நம்பிக்கை நட்சத்திரமான ரஜினி கலையரசன் எம்.டி படிப்பதற்காக தற்போது உத்தனப்பள்ளியில் கிளினீக் நடத்தி வருகிறார். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தாம் படித்த அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார் இளம் மருத்துவர்.  

    தன்னம்பிக்கை கதைகளையும், தாம் மருத்துவரான பின்புலங்களையும் எடுத்துரை மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். அயராத உழைப்பால், மனதை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வீர நடைபோடும் மருத்துவர் ரஜினி கலையரசனின், சுயநலமில்லாத தொண்டை பாராட்டி மனம் நெகிழ்கிறார்கள் உத்தனப்பள்ளி வாசிகள்.
    புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அரசு பள்ளி ஆசிரியருக்கு இந்த ஆண்டுக்கான “கனவு ஆசிரியர்” விருதை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
    கீரனூர்:

    தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைசெயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற புதிய விருதினை தமிழக அரசு இந்த ஆண்டு முதல் வழங்குகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஆறு ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் பள்ளியில் மிகசிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியமைகாக புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் உடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் சுப்பிரமணியன் என்பவருக்கும் இந்த ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா விருதுநகரில் நடந்தது. விழாவில் ஆசிரியர் சுப்பிரமணியனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விருது வழங்கினார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி. பள்ளிகல்வித் துறை இயக்குனர், தொடக்க பள்ளி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விருது பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் 8-ம் வகுப்பு மாணவர்களையும் பங்கேற்க செய்து வெற்றி பெற செய்துள்ளார். தொழில்நுட்ப பாடங்களையும் நடத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறார்.

    விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஊர்பொதுமக்கள் வாழ்த்துக்களை கூறினர்.
    ×