search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதி"

    அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Facebook #ElectionMeddling
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியும், இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதியும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் இருந்து, அதன் கோடிக்கணக்கான உபயோகிப்பாளர்களின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும், பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    இந்த நிலையில், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வரும் நவம்பர் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் சதி செய்து ‘பேஸ்புக்’கில் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    அந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதின் பின்னணியில் எந்தக் குழுவினர் உள்ளனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த கணக்குகளை உருவாக்கியவர்கள் மறைந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கணக்குகள் அஜ்ட்லான் வாரியர்ஸ், பிளாக் எலிவேசன், மைன்ட்புல் பீயிங், ரெசிஸ்டர்ஸ் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்டு இருந்தனவாம். ஒரு கணக்கை மட்டுமே 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் தொடர்ந்து வந்து உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது.  #Facebook #ElectionMeddling #tamilnews 
    ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருவதாக ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மூவலூர் தேரடி வீதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

    தி.மு.க. வை விட்டு விலகிச் சென்றவர்கள் அனைவரும் தற்போது வைகோ, வந்தது போல மீண்டும் தி.மு.க.விடமே வந்து சேர்வார்கள். அ.தி.மு.க. இரண்டு தலைமைகள் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. இது நிலைத்து இருக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. சிதறி சின்னா பின்னமாகிவிடும்.

    தி.மு.க. வில் 2-வது தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    சினிமாவில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று பேசுகிற ரஜினி நிஜத்தில் தனது உரிமைகளுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று சொல்லி மக்களை குழப்புகிறார்.

    தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தமிழகத்திலேயே ஓடும் ரெயிலுக்கு ‘அந்த்யோதயா’ என்ற இந்தி பெயரை வைத்துள்ளனர். அந்த ரெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடியை காட்டி தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை இந்தியை திணிக்க முடியாது.

    தற்போது தமிழை மறக்கடிக்க வெளி மாநிலங்களில் இருந்து ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க இன்னும் 250 ஆண்டுகளாவது ஆகும். எதனையும் எதிர்க்க தயாராக தி.மு.க. தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    நீட் தேர்வை தமிழக மாணவர்கள் கேரளாவில் சென்று எழுதினால் என்ன தவறு? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வர இருக்கிற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்திலும், தமிழிசை வெளிமாநிலத்திலும் நின்று ஜெயிக்க முடியுமா?

    இவ்வாறு ராதாரவி பேசினார். #DMK #RadhaRavi #ADMK #BJP
    ×