என் மலர்
நீங்கள் தேடியது "ஊக்கத்தொகை"
- பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் அதன் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
- நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தில் எழிலூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் பற்றியும், பாரம்பரிய நெல் ரகம் அதன் மதிப்பு கூட்டுதல் பற்றியும், தற்போது நிலவி வரும் காலநிலையில் நெல் பயிரில் ஏற்படக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் மண்வள மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றியும் நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், கைபேசி எண் இ.கே.ஒய்.சி. இணைக்கவும், மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். பயிற்சியில் எழிலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் இளமதி சிவகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் முன்னோடி விவசாயிகள் மணிமொழி, சுபத்ரா என 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது.
- குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100 ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது :-
தஞ்சாவூர் மாவட்ட குடும்ப நலச் சார்பில் வாசக்டமி இரு வார விழா டிசம்பர் 4-ம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இரு வார விழாவின் நோக்கமானது முதல் வாரத்தில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, மருத்துவக் கல்லூரி மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார அளவிளான அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசாரம் செய்ய அனைத்து நிலையங்களில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டு உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் முகாம் ஏற்பாடு செய்து அதிக எண்ணிக்கையில் தகுதியுள்ள தம்பதியர்களில் ஆண்கள் பங்கேற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் என்.எஸ்.வி. சிறப்பு முகாம் தொடக்கமாக வரும் 28-ந் தேதி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார மருத்துவனையிலும், 30-ந் தேதி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 2.11.2022 அன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100- ம் ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்களும், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ. 200-ம் தமிழ்நாடு அரசால் வழங்கபடுகிறது.எளிய பாதுகாப்பான வாசக்டமி மூன்றே நிமிடங்களில் கத்தியின்றி, தையல் இன்றி செய்யப்படுகிறது.
ஆனந்த வாழ்க்கை பெற தடையில்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லை. கடின உழைப்பினை மேற்கொள்ளலாம். மயக்க மருந்து அளிபபதில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அளவான குடும்பத்தை அமைப்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பாகும்.
இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் மலர்விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
- ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
நாகப்பட்டினம்:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
இதை அடுத்து திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரி யின் தாளாளர் முனைவர்.வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர் துறை தலைவர்கள் நிர்வாக அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
- ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
- முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சஹானா, ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் மாதவன் ஆகியோா் முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அந்த பள்ளிகளின் பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினாா்.
இதனை அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆயக்காரன்புலம் பழனியப்பன், தாணிக்கோட்டகம் தமிழ்ச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
- 2022-2023 -ம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக 23.09.2022 முதல் வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- கல்வியுதவித் தொகை வழங்கிட தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்களாக இருக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் 2022-2023 -ம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக 23.09.2022 முதல் வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு கல்வியாண்டு 2022-2023 முதல் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு மத்திய அரசின் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.எல்.எஸ் போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 23.09.2022 முதல் உயர் கல்வி பயில்வதற்கு ஊக்கத் தொகையாக ஆண்டிற்கு ரூ.50,000 வழங்கிட குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கல்வியுதவித் தொகை வழங்கிட தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்களாக இருக்க வேண்டும். உயர் கல்வியில் ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள படிப்புகளுக்கு சேரும்போது முன்னாள் படைவீரரின் மகன்களுக்கு 25 வயதிற்குள்ளும் மகள்களுக்கு திருமணம் ஆகும் வரையும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் கைம்பெண்க–ளுக்கு வயது வரம்பு கிடையாது. இவ்வுதவித்தொகை 2022-2023-ஆம் கல்வி ஆண்டு முதல் விண்ணப்பித்து பயனடையலாம்.மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.
- 606 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- இதனை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் சிவ கங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
- மதுரை மாவட்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரை
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் பொது மேலாளர் மற்றும் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கடந்த 20 .10. 2022 அன்று சென்னை கோட்டையில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் சங்கப் பிரதிகளை அழைத்து பால் விலை உயர்வு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியது .பின்னர் விலை அறிவிக்கும் போது சங்கப்பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் மிகவும் சொற்ப விலையான லிட்டருக்கு ரூ.3 மட்டுமே விலை உயர்வு செய்து அறிவித்தார்கள் .
மேற்கண்ட விலை மூலம் உற்பத்தியாளர்களுக்கு ரூ.31 வரை பால்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆனால் தனியார் பால் நிறுவனங்களில் ரூ.38 முதல் 46 வரை கொடுத்து பால் கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களை நேரடியாக சந்தித்து பாலை கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக விலை கொடுக்க முடியாததால் பிரதம சங்கங்களால் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து ஒன்றியத்திற்கு அனுப்ப முடியவில்லை .இதனால் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் படிப்படியாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
எனவே மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லிட்டருக்கு ரூ.7 ஊக்கதொகையாக உடனடியாக வழங்கினால் மட்டுமே பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் . வருகிற 10-ந் தேதிக்குள் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 11-ந் தேதி முதல் மதுரை மாவட்டத்தை தொடர்ந்து ஒன்றியத்துக்கு பால் வழங்குவது நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்பாக தங்கு நிர்வாகிகள் வெண்மணி சந்திரன்,சுப்பிரமணி ஆகியோர் கூறும்போது, மாட்டு தீவனங்களின் விலை அதிகரித்து விட்டது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு ரூ .42 தருவதாக கூறிவிட்டு ரூ. 32 தான் தருகிறது. எனவே ஊக்க தொகையாக லிட்டர் ரூ.7 தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
- வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.
- ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்தில் செயல்படும் வடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஈட்டிய நடப்பாண்டு லாபத்தொகை யிலிருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் (பால்வளம்) இரா.கணேஷ், ஆவின் பொது மேலாளர் ஆர்.சதீஸ் மற்றும் ஆவின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் ேமற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள்2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்1998 பிரிவு 84(1)ல் அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத் தொகை அதிகபட்ச மாகரூ.5,000 வரை வழங்கப்படும்.
அதன்படி சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல்அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, ஏப்ரல் 30-ந்தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகைகளான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், குரல் ஒலி அழைப்புகள், திருப்பூர்மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகளில் சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடுதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், பண்பலை அலைவரிசை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி ஒலிப்பரப்பு செய்தல், செய்தித்தாள்களில் விளம்ப ரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சொத்து உரிமையாள ர்கள், சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும்வரிவசூலிப்பாளர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்து ள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும்வரை வோலை மூலமாகவும், திருப்பூர் மாநகராட்சி இணையதளம், NEFT and RTGS ஆகியவற்றின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை யினை பெற்றிடுமாறும், திருப்பூர் மாநகரத்திற்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்க மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
- மேலூர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு சொத்து வரிகளை நகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மூலம் மற்றும் நகராட்சி வசூல் மையம் மூலமாகவோ, காசோலை மற்றும் மின்னணு டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவோ ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 சதவீதம், அதாவது அதிகபட்சமாக ரூ.5000 வரை அளிக்கப்படும். எனவே நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தங்கள் சொத்து வரிகளை செலுத்தி அதற்கான ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)ல், அரை யாண்டுக்கான சொத்துவரியை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.
அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். ஏப்ரல் 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், மாநகராட்சி மைய அலுவ லகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக சொத்துவரியை உரிமையாளர்கள் செலுத்து வதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியை மதுரை மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் "TN Urban Esevai" செயலி வாயிலாக வரி செலுத்து வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.
- சொத்துவரி தொகையை வருகிற 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளவும்,இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளவேண்டும்.
கடலூர்:
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தரவின்படி நகர்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு அரையாண்டிலும் 30 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 2023 - 24- ம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்துவரி தொகையை வருகிற 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளவும். இந்த அறிய வாய்ப்பை மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.