என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜீவனாம்சம்"
- சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும்.
- தச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [1986] விஞ்ச முடியாது.
விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை தற்போது தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நீதிமன்ற உத்தரவுப்படி சரவணன், கலாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கி வந்தார்.
- இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). பட்டதாரி ஆசிரியரான இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த எலசவாடி அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலா.
கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில், விவாகரத்து பெற்று விட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி சரவணன், கலாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜீவனாம்சம் வழங்க ஆத்தூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி, கலாவிடம் நீதிமன்ற உத்தரவு நகல் ஒன்றை சரவணன் வழங்கி உள்ளார். அந்த உத்தரவு உண்மையானதா? என அறிந்து கொள்ள, கலா ஆத்தூர் நீதிமன்றத்திற்கு சென்ற விசாரித்துள்ளார். அப்படி எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. உடனே கலா, ஆத்தூர் நீதிமன்றத்தில், போலி ஆணை பற்றி தெரிவித்தார்.
இதையடுத்து ஆத்தூர் ஜே.எம்.2 நீதிமன்ற ஊழியர் செல்வி, ஆத்தூர் டவுன் போலீசில் போலியான நீதிமன்ற உத்தரவு ஆணை தயாரித்து வழங்கியவர்கள் மீது புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் சரவணன் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் இருக்க, போலி உத்தரவு ஆணையை தயாரித்து வழங்கியதும், இதற்கு ஆத்தூர் புனல்வாசல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (50) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த இருவரும் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் ஆசிரியர் சரவணன் மற்றும் தமிழ்செல்வனை கைது செய்தனர். 10 மாதத்திற்கு பின் சிக்கிய இருவரையும், விசாரணைக்கு பின் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்