search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி"

    • இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
    • இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்

    நடிகர் ராகவா லாரன்ஸ், பல வருடங்களாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் அது தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும், KPY பாலா இணைந்து செயல்பட உள்ளனர்.

    இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

    இந்நிலையில் 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர்! நீங்கள் பல வருடமாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்பொழுது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 'மாற்றம்' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும். அதற்கு அந்த ஆண்டவனுடைய அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், "தலைவர், என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகளைப் பெற்றேன். உங்கள் நிலையான ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து தற்பொழுது எஸ்ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் ராகவா லார்ன்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ், வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் மற்றும் வெற்றி மாறனின் எழுதிய கதையான அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 437 மனுக்கள் பெறப்பட்டன.

    மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருவருக்கு காது கருவி, 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் ஆகியவற்றை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அதனைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் கோரோட் அறக்கட்டளை மூலம் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் உளவியல் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்றுள்ள 19 திருநங்கையருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பவானி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    தமிழக முதலமைச்சர் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருவரங்குளத்தில் 2 ஊராட்சி அமைப்பு அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி மதிப்பிலான காசோலையும், மேலும் 40 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான கடன் உதவி தொகையும் மொத்தம் ரூ.3.20 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் பெண்கள் முன்னேறும் வகையில் சிறப்பான திட்டங்களை வரையறுத்து அதனை நிறைவேற்றி வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருப்பதால் இத்திட்டங்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. நல்ல ஆட்சிக்கு அறிகுறியாக முதல்-அமைச்சர் மாதம் தோறும் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களுக்கு துணையாக இருந்து வருகிறார் என்றார்.

    நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, உதவி திட்ட அலுவலர்கள் தில்லைமணி, சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுல கிருஷ்ணன், ஆயிஷா ராணி, ஒன்றிய செயலாளர் வடிவேல், சுற்றுச்சூழல் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் வீரசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் கல்விக்கடன் பெற வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
    • கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனை வோர், மாணவர்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். முகாமில் 26 பயனாளி களுக்கு ரூ.5 கோடியை 11 லட்சத்து 28ஆயிரத்து 600 ரூபாய்க்கான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    மாணவ-மாணவிகள் கட்டாயம் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் இப்பகுதியில் 12ம் வகுப்பு வரை நன்றாக படிக்கிறார்கள். அதன் பின் பொருளாதார நிலையை மனதில் வைத்து உயர் கல்விக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.பொதுவாக கல்வி ஒன்று தான் நிலையான சொத்து அதை எந்த நிலையிலும் மாணவப் பருவத்தில் தவற விடக்கூடாது.

    வங்கிகள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களை 100 சதவீதம் ஏற்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அவர்கள் கல்விக்கடன் பெற்று பயனடைய உரிய உதவிகள் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளை பொருத்தவரை கடன் வாங்கினால் திரும்பி செலுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மனப்பான்மையை கொண்ட வர்கள். அவர்களின் மனநிலையை மேன்மையடைய செய்யும் வகையில் அவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஷர்மிளா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மையப் பொறி யாளர் பிரதீப், தாட்கோ மேலாளர் தியாகராஜன், தமிழ்நாடு தொழில் முத லீட்டாளர் கழக மேலாளர் ராஜா மற்றும் அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட மலர் கலந்து கொண்டனர்.

    நலத்திட்ட உதவிகளை மாணவர்கள் முறையாக பெற்று முன்னேற்றமடைய வேண்டும்அமைச்சர் மெய்யநாதன் அறிவுரை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன்தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய பொதுமக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கத்தக்குறிச்சி ,வாண்டாக்கோட்டை மற்றும் வல்லத்திராக்கோட்டை பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதிகளில் உள்ள குறைந்த மின்அழுத்தம் சரிசெய்யப்பட்டு வீட்டு மின்சாரம் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் வல்லத்திராக்கோட்டையில் திரௌபதியம்மன் கோவில் முன் மண்டபம் மராமத்து பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை த்தொடர்ந்து வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கும் 86 மாணவிகளுக்கும் மற்றும் வேங்கிடகுளம் தூய வளனார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 78 மாணவர்களுக்கும் 71 மாணவிகளுக்கும் என மொத்தம் 300 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளித்திவிடுதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பணிகள் அடிக்கல்நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    இதன்மூலம் இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைவதுடன் வளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் சேந்தன்குடி பகுதியில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதி கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடை களுக்கான மருத்துவ வசதியினை வீடுகளுக்கு அருகாமையிலேயே பெற்றுக்கொள்ள முடியும். மேலும் கால்நடைகளுக்கான மருத்துவ சேவையினை பெற்று நோயில்லாமல் கால்நடைகளை வளர்த்து பயன்பெறலாம். எனவே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, தலைமையாசிரியர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் இலவச காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது
    • முதலமைச்சரின் மருத்துவ திட்டத்தின் கீழ் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா வழங்கினார்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக காது கேட்கும் கருவியை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா முன்னிலையில், தலைமை மருத்துவர் சாரதா வழங்கினார்.

    மேலும் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவி மாதம் ஒரு முறை வழங்கப்படுகிறது என்றும், காது கேட்கும் கருவி தேவைப்படும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து இலவசமாக காது கேட்கும் கருவி பெற்று பயன்பெறுமாறு தலைமை மருத்துவர் சாரதா கேட்டுக் கொண்டார்

    • புதுக்கோட்டையில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
    • மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    அப்துல் காதர் பயிற்சிகள் அளித்து வருகிறார். இங்கு பயிற்சி பெறும் குத்துச்ச ண்டை வீரர்கள் மாவட்ட மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளனர்.மேலும் குத்துச்சண்டை பயிற்சி பெறுபவர்களுக்கு கையுறை மற்றும் தலைக்க வசம் ரூ. 3000, 4000 விலை உள்ளதால் வீரர்கள் வா ங்குவதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில்,இவர்களுக்கு உதவி செய்வதற்காக புதுக்கோ ட்டை ரோட்டரி சங்க தலை வர் ராஜா முஹம்மது ஏற்பா ட்டில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குத்து ச்சண்டை வீராங்க னைக ளுக்கு கையுறை மற்றும் தலைக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் புது க்கோட்டை குத்துச்சண்டை கழக தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி துணை ஆளுநர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் வேலு கார்த்திக் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது பொருளாளர் அருண் செயலாளர் ராம்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கி சிறப்பித்தனர்.குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு உதவி செய்த சங்க நிர்வாகிகளுக்கு குத்துச்சண்டை வீராங்க னைகள் மிகுந்த மகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்தனர்.

    • அரியலூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விவரங்களை அறிய உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது

    அரியலூர்,

    மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி முதல் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறியவும், அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதன்படி, அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) குமரையா - 9626725241, 04329228151, அரியலூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோவிந்தராசு - 9843869337, 04329222058, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் உமாசங்கரி -7598720601, 04331245352, அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் (பொறுப்பு) பசுமதி - 9786326209, 04329222062.ஜெயங்கொண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் அண்ணாதுரை- 9095689998, 04331-250220, செந்துறை தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வக்குமார் - 9025277223, 04329242320, ஆண்டிமடம் தலைமையிடத்து துணை தாசில்தார் பார்த்திபராஜன் - 9841304410, 04331299800 ஆகியோரை தொடர்பு கொண்டு பயனாளிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையங்கள் வருகிற 30-ந் தேதி வரை செயல்படும். விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.விடம் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம்.மேலும், இந்த திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு வருகின்ற குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஓ.டி.பி. எண்கள் மற்றும் இதர விவரங்களை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். இதுபோன்ற விவரங்கள் கேட்கப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது
    • பிரதமர் நிதியில் இருந்து தள்ளுவண்டிகள் நகராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பி.எம்.ஸ்வா நிதியில் தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் 10 பேருக்கும், பூக்கடை வியாபாரிகள் 3 பேருக்கும், டிபன் கடை வியாபாரிகள் 2 பேருக்கும் தள்ளுவண்டிகளை வழங்கினார். இதில் நகர்மன்ற கவுன்சிலர்கள், நகரமைப்பு ஆய்வாளர் மாணிக்க செல்வன், இளநிலை உதவியாளர் பார்த்திபன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் இந்தியன் ஸ்வச்லீக்-2023 2.0 திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி சார்பில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிடும் வகையில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல் குறித்தும், கழிவுநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • எடப்பாடி பழனிச்சாமி-முன்னாள் அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார்.

    மதுரை

    மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான டாக்டர் சரவணன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை யில் உள்ள முக்கிய கோவில்களில் டாக்டர் சரவணன் பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை டாக்டர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை சந்தித்து டாக்டர் சரவணன் வாழ்த்து பெற்றார்.

    மேலும் முன்னாள்

    எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செய லாளர் வெற்றிவேல், மாந கராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா ஆகியோர் டாக்டர் சரவணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்தநாளை முன்னிட்டு சதீஷ் ஏற்பாட்டில் தொழிலதிபர் ரகுநந்தன் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

    மத்திய 3-ம் பகுதி செயலாளர் மாணிக்கம், விளாங்குடி பகுதி செய லாளர் ஜித்தன், வாடிப் பட்டி ஒன்றிய பொறுப் பாளர் ஆவியூர் ராதா கிருஷ்ணன், வடக்கு 2-ம் பகுதி செயலாளர் கணே சன், பழங்காநத்தம் பகுதி செயலாளர் பிரிட்டோ, அம்மன் குரூப்ஸ் உரிமை யாளர் லட்சுமணன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்திக், தமிழக முன்னேற்ற கழகம் நிறு வனர் ராஜ்குமார், மருது தேசிய கழகம் சார்பில் மருதுபாண்டி, அகமுடை யார் கல்வி மைய நிர்வாகி கள் ஆகியோர் டாக்டர் சரவணன் சந்தித்து பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த னர்.

    டாக்டர் சரவணனின் சூர்யா அறக்கட்டளை மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மாற்று கால்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் ஏராள மானோருக்கு இலவச இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.

    இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • அகரப்பட்டி கிராம மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1. 55 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 655 பயனாளிகள் பயனடைந்தனர்

    விராலிமலை,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதம் தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி அகரப்பட்ட்டி கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பல்லுயிர் பரவல், பசுமையாக்குதல் மற்றும் காலநிலைமாற்றம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 655 பயனாளிகளுக்கு ரூ 1கோடியே 54லட்சத்தி 70ஆயிரத்து 104 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசியதாவது:-அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்துகொள்வதுடன் அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் சதீஸ், ஊராட்சிமன்ற தலைவர் தனபாக்கியம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    ×