என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை"
- வேலு என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.
- மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாது. பாதிக்கப்பட்ட நபரை சில கி.மீ. தூரம் தூக்கி சென்று அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்ற பரிதாப நிலை இருக்கிறது.
இந்தநிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பேச்சிப்பாறை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்த வேலு (வயது 67) என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.
இதையடுத்து அவருடைய மகன் விக்னேஷ், தந்தையை காப்பாற்ற தோளில் சுமந்து சென்றார். அந்த வகையில் 3 கி.மீ. தூரம் கடந்து சென்ற அவர் பின்னர் ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வேலு ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.
இதனை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த வேலுவை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்த சம்பவம் பழங்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- அரிவாளால் சரமாரியாக அவர்கள் 2 பேரையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த இருவரும் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர்.
- போலீசார் இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (40). விவசாயி. இவரது மகன் சந்தோஷ் (18). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கொய்யா சாகுபடி செய்துள்ளனர்.
வெள்ளைச்சாமிக்கும் இவரது சகோதரர் பழனியாண்டி (52) என்பவருக்கும் இடையே நில தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தோட்டத்தில் கொய்யா பழங்கள் பறித்துக் கொண்டிருந்த வெள்ளைச்சாமியிடம் பழனியாண்டி மற்றும் இவரது மகன் அழகர் ஆகியோர் தகராறு செய்தனர்.
அப்போது கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை காட்டி வெள்ளைச்சாமி மற்றும் அவரது மகன் சந்தோஷை மிரட்டினர். மேலும் அரிவாளால் சரமாரியாக அவர்கள் 2 பேரையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த சந்தோஷ் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர்.
அங்கிருந்த போலீசார் இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த அண்ணன் மற்றும் அண்ணன் மகனை நாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- ரூபாவை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
- லோகநாதன் மற்றும் அவரது மகன்களை கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகேயுள்ள தீர்த்தமலை பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். விவசாயி. இவரது மனைவி ரூபா (வயது 38).
இவர்களது உறவினர் லோகநாதன். இருவருக்கும் இடையே நில தகராறு உள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக லோகநாதன், அவரது மகன்கள் விக்னேஷ், வெங்கடேஷ் ஆகியோர் ரவிகுமாரின் வீடு புகுந்து ரூபாவை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
அதனை தடுக்க முயன்ற ரவிக்குமாரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து ரவிக்குமார் தந்த புகாரின்பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதன் மற்றும் அவரது மகன்களை கைது செய்தனர்.
காயம் அடைந்த ரூபா அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவிக்குமாரும், ரூபா வும் தங்களை தாக்கியதாக விக்னேஷ் ஒரு புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
- சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
- அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார்.
- தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலிதொழிலாளி. இவருக்கு கவுண்டமணி (30), செந்தில் (28) என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பிரமணி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தந்தை காணாமல் போன நிலையில் கடந்த 3 நாட்களாக கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சுப்பிரமணியை பல இடங்களில் தேடி உள்ளனர்.
சுப்பிரமணியின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடிச் சென்றனர்.
இதற்கிடையே கள்ளக் குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் முதியவர் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இது குறித்து தியாகதுருகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த தியாகதுருகம் வனத்துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த முதியவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர். கிட்டத்தட்ட காணாமல் போன சுப்பிரமணியின் உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்ததால் தியாகதுருகம் வனப்பகுதியில் கிடந்த பிணம், தனது தந்தை தான் என முடிவு செய்த கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எலவனாசூர்கோட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.
தந்தை உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு அவர்கள் தகவல் சொல்லவே, இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினார்கள்.
தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்ற நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனா சூர்கோட்டைக்கு சென்றார்.
அப்போது கடைவீதியில் முதியவர் சுப்பிரமணி நடந்து வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் உறவினர் நீ இறந்துவிட்டதாக கூறி உனது மகன்கள் அங்கே பிணத்தை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
இதில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார். கதையில் மிகப்பெரிய திருப்பமாக சுப்பிரமணி மீண்டும் உயிரோடு வந்ததை பார்த்து கவுண்டமணி, செந்தில் அதிர்ச்சி அடைந்த னர். இந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- இன்னொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை
- குடிபோதையால் குடும்பமே சீரழிந்த அவலம்
கன்னியாகுமரி:
இரணியல் அருகே பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48) எலக்ட்ரீசியன். இவரது மனைவி அனிதா (35) இவர்களுக்கு தன்ஷிகா (11), அஸ்மிதா (9) என்ற மகள்கள் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக் காததால் அனிதா அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அனிதா வேலைக்கு செல்வது நாகராஜனுக்கு பிடிக்கவில்லை. நேற்று வீட்டிலிருந்த அனிதாவை வேலைக்கு செல்ல வேண் டாம் என்று நாகராஜன் கூறினார். ஆனால் அனிதா வேலைக்கு சென்று விட்டார்.
இதையடுத்து நாகராஜன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் கள் தன்ஷிகா, அஸ்மிதா இருவர் மீதும் தீ வைத்தார்.அவரும் உடலில் மண்எண் ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடல் கருகிய 2 குழந்தைகளையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான நாகராஜன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த மகள் தன்சிகா பரிதாபமாக இறந்தார்.
அஸ்மிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இருப்பினும் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருகிறார்கள். பலியான தன்ஷிகாவின் உடல் பிரேத பரிசோ தனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்கப் படுகிறது.
தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மகளின் உடலையும் அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணை யில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்களை விற்று குடிப்பதை வாடிக்கை யாக வைத்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச் சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தான் அனிதா குடும்ப செலவு களை சமாளிக்க பக்கத்தில் உள்ள பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று அனிதா வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் குழந்தைகள் மீது நாகராஜன் தீவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குடிபோதையில் நிதானம் இழந்து நாகராஜன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கதி யாகி உள்ளது அந்த பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வ ராஜ் (வயது 65), விவசாயி. இவரது மகன் அசோக்ராஜ் (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் கோவில்களுக்கும் சென்ற வேண்டுதல் நிறைவேற்றி பிரார்த்தனை செய்து வந்தனர். அதே வேளையில் அசோக்ராஜ் உரிய சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார்.
இதற்கிடையே அசோக் ராஜ் கடந்த மூன்று மாதங்களாக சரியான முறையில் மருந்து, மாத்திரை சாப்பிட மறுத்து வந்துள்ளார். அவரது பெற்றோர் எடுத்துக்கூறியும் அசோக்ராஜ் கண்டுகொள்ளவில்லை. இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தனது தாய் மணிமொழியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அவரது வயதான தந்தை செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார்.
அவரையும் அசோக்ராஜ் கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் வந்து மணிமொழி பார்த்தபோதுதான் கணவர் செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் தப்பினார்.
பின்னர் இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையுண்ட செல்வராஜ் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனநலம் பாதித்த மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
- தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார்
கன்னியாகுமரி :
மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி வில்லு மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவர் ஞாறான்விளையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜ்.இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் அவர் தம்பி விஜயகுமாரின் மகளை 18 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்தார். இந்நிலையில் பால்ராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பின்பு அவரது மனைவி வசுமதி, வளர்ப்பு மகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 4-ம் தேதி வசுமதியும் இறந்து விட்டார். இதனால் அவர்கள் தத்தெடுத்த மகள் தனியாக வசிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணன் பால்ராஜ் வீட்டில் தனியாக வசித்து வரும் மகளை அழைத்து செல்ல அவரது பெற்ற தந்தை விஜயகுமார் நேற்று இரவு 10 மணிக்கு, சென்றார். அங்கு இருந்த மகளை தன்னோடு அழைத்த போது அவரை அங்கிருந்த உறவினர்கள் அனுப்ப மறுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. இதில் விஜயகுமார் தாக்கப் பட்டார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அழைக்க சென்ற போது, கல்லு பாலத்தை சேர்ந்த பத்ரோஸ் ( 52 ), பயணம் பிரவீன்(22), சிதறால் ஜூலியட் (50), பயணம் விஜயகுமார்(52), நாகர்கோவில் ஐடா(42),கலா (43) உள்பட 10 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே விஜய குமார் மீது அவரது மகளும் தனியாக ஒரு புகார் கொடுத்தார். அதில் தான்,தனது வளர்ப்பு தாயார் வசுமதி வீட்டில் வசித்து வருவதாகவும், தற்போது பிளஸ் 2- முடித்து மேற்படிப்பு படிக்க இருப்பதாகவும், இந்த நேரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைக்க முயற்சித்ததோடு, தனது உறவினர் சுரேஷ் என்ப வரை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பெண்ணின் பெற்ற தந்தை விஜயகுமார், அபிஷேக் ,சசிகுமார், அனுஜ் உள்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.வளர்ப்பு தந்தையின் உறவினர்களுக்கு ஆதரவாக பெற்ற தந்தை மீது பெண் புகார் கொடுத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை.
- இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார்.
ஜபல்பூர் :
மத்திய பிரதேச மாநிலம், தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜாம்னி பாய், கடந்த 13-ந் தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பலவீனமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி பெற்றோர், அந்த குழந்தையை அங்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 15-ந் தேதி குழந்தை இறந்து விட்டது. ஆனால் அந்த குழந்தையின் உடலை பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என்று கூறி தர மறுத்து இருக்கிறது.
தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை. இதையடுத்து குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து, பஸ்சில் எடுத்துச்சென்றுள்ளார்.
இதை அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் உருக்கமுடன் கூறி உள்ளார்.
ஆனால், இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "புதிதாக பிறந்துள்ள குழந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தொடங்கி உள்ளது. ஆனால் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்தபோதும், அதன் பெற்றோர் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். எனவே டிஸ்சார்ஜ் செய்த போது குழந்தை உயிருடன்தான் இருந்தது" என தெரிவித்தார்.
- தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
- 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது
கன்னியாகுமரி :
கன்னி யாகுமரி மாவ ட்டம் மேக்காமண்டபம் பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது 2½ வயது மகன் ஆத்வீக், கடமலக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரி.கேஜி. படித்து வருகிறான். இவன் நேற்று பள்ளி வாகனத்தில் சென்ற போது, காரில் வந்த கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது.
குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனை அவனது தந்தை விபின் பிரியன் தான் கூலிப்படை மூலம் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஈத்தா மொழி பகுதியில் ஒரு வீட்டில் சிறுவன் ஆத்வீக் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டின் குளியலறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆத்வீக்கை மீட்டனர்.
இது தொடர்பாக அவனது தாயார் பிரியா அளித்த புகாரின் பேரில், பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரித்தி, நண்பர் அஜித், சரண்,முகேஷ் உள்பட 17 பேர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 147,148, 294(பி),341,366 மற்றும் 506 (2) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்களை பிடிக்க தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் 3-தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21).
கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.
அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார்.
- பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் ஜெபரீசிடம் சகோதரி பற்றி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிண்டி போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிர மணி உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஜெபரீசை போலீசார் கைது செய்தனர் போலீஸ் விசாரணையில் ஜெபரீஷ் வேலை இல்லாமல் சுற்றி திரிவதை தந்தை பாலசுப்ரமணி தட்டி கேட்டு அடிக்கடி தகறாரில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது.