search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேல்முருகன்"

    • போக்குவரத்தை தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை வேல்முருகன் இயக்க முயன்றார்.
    • சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

    சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகாட் போட்டு ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியாக பின்னணி பாடகர் வேல்முருகன் காரில் வந்தார். போக்குவரத்தை தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை வேல்முருகன் இயக்க முயன்றார்.

    இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுப்பான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல், இந்த வழியில் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் காரை ஓட்டி வந்த வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவி மேலாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

    இந்நிலையில் மெட்ரோல் ரெயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் பாடகர் வேல் முருகன் கைது செய்யப்பட்டார். பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசியது மற்றும் ஊழியரை தாக்கியது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல்முருகன் ஜாமீனில் வந்ததது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்
    • தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும்

    சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், "சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்

    தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் ஒருவேளை என்னை கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.

    அண்மையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சிகள் உறுப்பினர் ஆவதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேரலாம் என்று விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என சுருக்கமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் TVK என அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது கட்சியை TVK என அழைக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு எப்படி TVK என அழைக்கலாம் என தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும்
    • நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்கிற வேண்டுகோளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவிடம் வைத்து உள்ளேன். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரசார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் எப்படி ஓங்கி ஒலிக்கிறதோ அதேபோல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்று நல்ல பதிலை தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளேன். இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற சந்திப்பாக இருந்தது.

    நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்தது இல்லை. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்.

    தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
    • தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டி.வி.கே. என வருகிறது.

    சென்னை:

    விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.

    ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    • கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • தற்போதைய நிலையில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் இன்னும் கூட்டணியில் இடம் பெறுவதில் சில கட்சிகள் நழுகியும், வழுகியும் பிடி கொடுக்காமல் இருப்பதால் விட்டுப்பிடிக்கும் மன நிலையில் தலைவர்கள் இருக்கிறார்கள்.

    தற்போதைய நிலையில் பா.மக. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை. தனது கட்சியினரிடம் 'அவசரப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள்' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

    வட மாவட்டங்களை மனதில் கொண்டு பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க.வுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் பா.ம.க. இடம் பெற்றால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகளும் முரண்டு பிடிக்கின்றன.

    இந்த நிலையில் இப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 'பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் நாங்கள் இடம் பெறமாட்டோம் என்று கூறி இருக்கிறார்.

    எனவே அப்படி ஒரு சூழ்நிலைவந்தால் வேல்... வேல்... வெற்றிவேல் என்று அ.தி.மு.க.வை நோக்கி வேல்முருகன் புறப்படுவார் என்கிறார்கள்.

    • தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.
    • ஆய்வில் டி.ஆர்.ஓ. பத்மாவதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட் டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன் மற்றும் உறுதிமொழிக்குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட னர்.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்க த்தை புதுப்பித்தல் பணி நிறைவடைந்து பயன்பாட்டில் இருப்பதை பார்வையிட்டதோடு, குற்றலத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல அரங்கம் வாரியத்தின் அமைப்புசார தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவத ற்கென உள்ள "திரு.வி.க. இல்லம்" எனும் விடுமுறை ஓய்வு இல்லம் புதுப்பித்தல் பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவி அருகில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதலாக பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும், கோவில் சுவரில் ஏற்பட்டிருக்கும் தீக்கறையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கவும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட போலீஸ் அலுவலக கட்டிடத்தையும், தென்காசி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளையும், தென்காசி அரசு மருத்துவமனையில் புதிய மாவட்ட மருந்துகிடங்கு கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பிரேமலதா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) முரளிசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் வில்லியம் ஜேசுதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    இந்தியா என்பது பன்முகம் கொண்ட நாடாகும். இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பா.ஜ.க. அரசின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, இறையாண்மை எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும். பாசிச நடவடிக்கை என்பது விஷ விதை மண்ணில் புதைப்பதாகவும், ஆகையால் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இதனை எதிர்க்க வேண்டும்.

    ஆகையால் மத்திய அரசு உடனடியாக இக்குழுவை திரும்பப் பெற வேண்டும். ஒற்றை ஆட்சி முறை பேராபத்தும் பெரிய அபாயத்தையும் விதைக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக அதிமுகவினர் மிகப்பெரிய ஊழல் செய்து உள்ளனர். அதனை தற்காத்துக் கொள்வதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதனை ஆதரித்து உள்ளனர். அவர்கள் இந்தியாவை பாதுகாத்திட வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.க. அரசு 7.5 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை வீண் செய்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இதில் தமிழகத்தில் 5 சுங்கசாவடியை சோதனை செய்தபோது சுமார் 128 கோடி கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடித்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.

    ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக சட்டம் உள்ளிட்ட எந்த நடவடிக்கை கொண்டு வந்தாலும், கொசு, காலரா ஒழித்தது போல் பாசிச தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருப்பதாக தெரிய வருகிறது.

    இவ்வாறு கூறினார்.

    பேட்டியின்போது மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார்.
    • மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம் வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசுகிறார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கிளை கழகம் தோறும் கொடியேற்று விழா நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. விரிவாக விவாதிக்கிறார்.

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார். மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். அண்ணாநகர், வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர் பகுதி நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.

    இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் முன்னின்று செய்து வருகிறார்.

    • சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    சென்னை:

    சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்) மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வகுப்புவாரி பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சமூக நீதி தான் ஜனநாயகத்தின் ஆணி வேர். இந்த சமூகநீதியை நிலை நிறுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்பதை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதை உடனே செயல்படுத்தக்கோரி வருகிற 16-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். நான் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு சத்ரியன் து.வெ.வேணுகோபால் அறிக்கையில் கூறி உள்ளார்.

    பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் ஆதரவு என முதல்வர் எடப்பாடி கூறியிருப்பது, முழு சோற்றில் யானையை மறைப்பது போல் இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர். இதில் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுபோல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் போலீசார் அவரை கைது செய்து சென்னை ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்த வேல்முருகனுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் நாகர்கோவிலில் தங்கி கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து வேல்முருகன் நாகர்கோவில் வந்தார். கோட்டார் போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜராகி கையெழுத்திட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எங்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது எனக்கு அந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டது.

    அதன்பிறகு 4 நாட்களுக்கு பிறகு என்னை கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த என்னை விமான நிலையத்தில் தடுத்து கைது செய்தனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் துவண்டுவிட மாட்டேன். பொதுமக்களுக்காக என்னுடைய போராட்டம் தொடரும்.

    நான் ஜெயிலில் இருந்த போது திண்டுக்கல்லில் நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜெயிலில் இருந்த என் மீது வழக்கு போடப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டு என்னை கைது செய்ய தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாரதிராஜா, சீமான், டைரக்டர் கவுதமன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்புடையது அல்ல.

    சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அங்கு 99.99 சதவீதம் மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதாகத்தான் கூறுவார்கள். ஆனால் முதல்-அமைச்சர் முழு யானையையே சோற்றில் மறைக்கிறார்.

    இப்போது முதல்-அமைச்சராக இருப்பதால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் வருகிறார். பதவி இழந்தால் இவர் மக்களை சந்திக்க வர வேண்டும். தேர்தல் வரும் போதும் மக்களிடம்தான் வர வேண்டும். அப்போது மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

    கவர்னர் அவரது அதிகாரத்தை மீறி ஆய்வு நடத்தி வருகிறார். இதை தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தைரியமானவர்கள். எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மன வலிமை கொண்டவர்கள். கவர்னரின் மிரட்டலையும் அவர்கள் எதிர்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள த.வா.க தலைவர் வேல்முருகன் மீது நெய்வேலி காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #VelMurugan
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த 26-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இரண்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சிறுநீரக கோளாறும் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட த.வா.க தலைவர் வேல்முருகன், சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உண்மை நிலையை கண்டு அறிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன் இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர் அறிவித்திருந்த நிலையில், திடீரென அவர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார்.

    இதனை அடுத்து, அவரை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
    ×