என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரம்"
- கொரோனா ஊரடங்கால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.
- கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளது.
இதில் கடந்த சில வாரத்துக்கு முன்பு 12 கடைகளுக்கு வாடகை நிலுவை இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் சீர்காழி பழைய பஸ் நிலைய நகராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் கால அவகாசம் இல்லாமல் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சீர்காழி பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகளை வர்த்தகர்கள் பூட்டி கடையடைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து பழைய பஸ் நிலைய வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கொரோனோ காலக ட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.
இதனால் கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்துநகராட்சி நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு மாதத்திற்கு மட்டு மே வாடகை விலக்கு அளித்தனர்.
மீதமுள்ள வாடகை தொகையை மொத்தமாக கால அவகசம் இன்றி கட்ட கூறியதால் தங்களால் கட்ட இயலவில்லை.அதற்கு கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
- செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் டவுன் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் உதவி கமிஷன் வெங்கடேசன் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு வசித்து வந்த லோகேஸ்வரன் (வயது 32) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (27) ஆகியோரை கைது செய்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது.
பல்லடம் :
பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில், வருடம் தோறும் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு பல்லடத்தின் ஒரே கடைவீதியான என்.ஜி. ஆர். ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், நகைகள் என வாங்குவதற்கு மக்கள் ஆர்வமுடன் கடைவீதியில் கூடுவார்கள். வியாபாரிகளும் தங்களது கடைகள் முன்பு அலங்கார பந்தல்கள் அமைத்து, பொது மக்களை கவரும் வண்ணம் புதிய ஆடைகளை பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.
இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. விசைத்தறி தொழில், பனியன் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாக பேச்சு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக திடீர் என மழை பெய்வதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே கடைசி நேர விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.
- வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் நடக்கிறது.
- முக்கிய இடங்களில் கேமராக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.
வல்லம்:
தஞ்சை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் இது பற்றி மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் கூறியதாவது ;-
ஜி.எஸ்.டி. வரி வருவதற்கு முன்னர் பொருட்கள் அனைத்தும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தது.
தற்போது பொருளாதார நெருக்கடியால் கடைகளே விற்பனையாகி வருகிறது. வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வணிகர்கள் மீண்டும் சற்று தலைதூக்கி வியாபாரம் செய்து வருகிறோம்.
தற்போது வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் வந்து கொண்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட தஞ்சை கரந்தை பகுதியில் சமூக விரோதிகளால் வணிகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது சிலர் ஆயுதபூஜை அன்று பல இடங்களில் கடைகளுக்கு வந்து மிரட்டி மாமூல் கேட்டு வாங்கி சென்றுள்ளனர்.
சில திருநங்கைகள் கடையில் வாசலில் நின்றும், கடைக்குள் வந்தும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
அதேபோல் சில சமூக விரோதிகளும் மிரட்டி பணம் கேட்டனர். தற்போது இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது.
அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரவுள்ளது.
தீபாவளி பண்டிகை நேரத்திலும் இவர்களால் மாமூல் தொல்லை ஏற்படும்.
மாமூல் கேட்டு வணிகர்கள் மிரட்ட படும் அபாயம் உள்ளது.
அது போன்ற சூழலில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.
இது தொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம்.
சங்கம் சார்பாகவும் தஞ்சை, பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அந்தந்த ஊர்களில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.
வணிகர்கள் மிரட்டப்பட்டால் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
கடைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.
அதேபோல் அனைவரும் அந்தந்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பாஸ்கரன், ஊடக தொடர்பாளர் இராம.சந்திரசேகரன், மாவட்ட இணை செயலாளர் முருகையன், மாவட்ட கூடுதல் செயலாளர் தாமரை செல்வன், தியாக சுந்தரமூர்த்தி, மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
- வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே, கொள்ளை சம்பவத்தில் உள்ளுர் கொள்ளையர்களு க்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.
தக்கலை, ஆக.13-
தக்கலை அருகே திருவிதாங்கோடு தைக்கா பள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசிம் (வயது 70).
இவர் சிறுதொழில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. நேற்று இரவு இவர் தனது மகன் இக்பால் என்பவரின் வீட்டுக்கு தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை இவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு முன் கதவு உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே, கொள்ளை சம்பவத்தில் உள்ளுர் கொள்ளையர்களு க்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சம்பந்தப்பட்ட நபரின் அங்க அடையாளங்களுடன் கூடிய விபரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் அமர்த்தப்படும் நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட உள்ளது.
- அடையாள அட்டை மற்றும் வியாபாரம் செய்தவற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
தமிழக சாலையோர வியாபாரிகள் திட்டம் மற்றும் விதிகள் 2015-ன் படி "தமிழ்நாட்டில்த குதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட, நடப்பாண்டில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் எவ்வித சிரமும் இன்றி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும்கு ம்பகோணம் மாநகராட்சி, பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி பகுதிகளில்உ ள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
இக்கணக்கெடுப்பின் போது சாலையோர வியாபாரிகளை அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கே வயது கைபேசி செயலி மூலம்இ டக்குறியீட்டுடன், சம்பயதப்பட்ட நபரின் அங்க அடையாளங்களுடன் கூடிய விபரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் அமர்த்தப்படும்நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட உள்ளது.கணக்கெடுப்பு பணி முடிவுற்ற பின் தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு திட்டவிதிகளின்படி, அடையாள அட்டை மற்றும் வியாபாரம் செய்தவற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்டநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்ட விதிகளின்படி சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும்சான்றிதழ் பெற தகுதியானவர்கள் விபரம் பின்வருமாறு:
சாலையோர வியாபாரம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள நபர்கள்.14 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். தனி நபர் அல்லது அவரது குடும்பத்தார் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
இத்திட்டத்தில் சாலையோரங்களில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், நிரயதரமாககடைகள் வைத்திருப்பவர்கள், பல இடங்களுக்கு வாகனமின்றி மற்றும் வாகனங்களில் சென்றுவியாபாரம் செய்பவர்கள், வாராந்திர சந்தை, மாத சந்தை, இரவு சந்மதை மற்றும் விழாக்கால சந்தைகளில் வியாபாரம் செய்பவர்கள், என சாலையோர வியாபாரிகள்வ கைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திட்ட விதிகளின்படி சாலையோர வியாபாரிகளால், வியாபாரம் செய்யப்படும்கடைகளின் அளவு, நேரம் மற்றும் முறைகளின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளால் விதிக்கப்படும் வியாபார கட்டணத்தை செலுத்திட வேண்டும்.
மேலும், சாலையோர வியாபாரிகளால், அவரவர் வியாபாரம் செய்யும் பகுதிகள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். அவர்களால் உருவாக்கப்படும் கழிவுகளை, உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்படி அப்புறப்படுத்திட வேண்டும். இதற்காக நகர்ப்புறஉள்ளாட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் பராமரிப்பு கட்டணத்தை செலுத்திட வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்மட்டுமே வியாபாரம் செய்யப்பட வேண்டும்.சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் 5 வருட காலம் அல்லது மறு கணக்கெடுப்பு காலம் வரை செல்லத்தக்கதாகும்.
தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில்ந கர்ப்புற பகுதிகளில் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், கணக்கெடுப்பின்போது முழு ஒத்துழைப்பினை வழங்கிடவும், திட்டத்தின் வழிகாட்டுதலின்படி சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
- ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, போன்ற வெளி மாநிலங்கள் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் ஜவுளி சந்தையில் கடந்த சில நாட்களாக பள்ளி சீருடை, முகூர்த்த ஜவுளிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. மேலும் உள்ளூர் திருவிழாக்களையொட்டி வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகள் விற்பனையானது.
இந்நிலையில் முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
ஆனி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாட்கள் நிறை வடைந்து விட்டதால் ஜவுளி சந்தையில் வியா பாரம் மந்த நிலையில் காணப்பட்டது. சில்லரை விற்பனை 30 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வழக்கமாக ஆந்திரா வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு ஆந்திரா வியாபாரிகள் யாரும் வரவில்லை. கேரளா வில் இருந்து வர வேண்டிய ஆர்டர்களும் வரவில்லை. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி னர்.
- குளச்சல் களிமார் பாலம் அருகில் பழக்கடையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.22 ஆயிரம் திருட்டு.
- குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல்மார்க்கெட் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் களிமார் பாலம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வியாபாரம் முடிந்ததும் இரவில் கடையை பூட்டிச் சென்றார். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு ராஜேஷ் கடையை திறக்க வந்தார்.
அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கும்போது மேசை டிராயரில் வைத்து சென்ற ரூ.22 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ராஜேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்