என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்லைன்"
- கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
- போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்:
தமிழ்நாடு கார் வியா பாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனம் சம்பந்தமான சான்றுகளுக்கு விண்ணப் பித்தால் மிகுந்த தாமதமா கிறது. இதை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவ தும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் போலியான விளம்பரத்தை நம்பி உபயோகப்ப டுத்தப்பட்ட காரை வாங்கு வதற்காக பணம் செலுத்தி ஏமாறு கின்றனர் .எனவே போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உபயோக படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா நடத்த வேண்டும். கார் மற்றும் வாகன வியாபார தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்க ணக்கான வாகன ஆலோ சகர்கள் ஆன்லைன் வர்த்த கத்தால் மிகவும் நலிவடைந்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு ஒரு நல வாரி யம் அமைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- நாமக்கல் கல்லூரி மாணவியிடம் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது.
- ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் நகரைச் சேர்ந்த வர் சாகுல்அமீது. இவரது மகள் ஷெலிகா பேகம் (வயது 20), என்ஜினீயரிங் கல்லூரி யில் படித்து வருகிறார்.
இவர் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார். சில நாட்களில் அவருக்கு ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது. மேலும் அவர்கள் ஒரு வெப்சைட்டிற்கான லிங்க்கை அனுப்பி வைத்த னர்.
அந்த லிங்க்கில் கொடுக்கப்படும் டாஸ்க் மூலம் பணியை தொடர வேண்டும் என தெரி விக்கப்பட்டது. முதலில் டாஸ்கை செய்ய குறைந்த பட்ச தொகை டெபாசிட் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்தது. அந்த தொகையை செலுத்தி பணியை தொடர்ந்தார்.
இவ்வாறு 18 தவணைக ளாக சிறிய, சிறிய தொகையாக ஷெலிகா பேகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் பணியை தொடர மேலும் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும் என தகவல் வந்தது. இதனால் சந்தேகப்பட்ட ஷெலிகா பேகம், தன்னிடம் இனி அனுப்புவதற்கு பணம் இல்லை, எனக்கு வேலை வேண்டாம், இதுவரை நான் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்புங்கள் என கேட்டு உள்ளார்.
அதற்கு அவர்கள் எவ்வித பதிலும் தரவில்லை. மேலும் செல்போன் மூலமும் அவர்களை தொடர்பு கொள்ள முடிய வில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷெலிகா பேகம் இது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது.
- அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சென்னை:
இன்றைய அவசரமான உலகில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் வேலை முடிந்து வரும் அவர்கள் வீடுகளில் சமைப்பதற்கு பதில் அதனை ஓட்டல்களில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்டனர்.
இப்போது ஓட்டல்களுக்கு செல்வதற்கு பதில் அதனை வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்துவிட்டது. இதற்காகவே தொடங்கப்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் உணவு ஆர்டர் செய்வதற்காக தனி செயலிகளை தொடங்கி அதன்மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உணவு பொருள்களை சப்ளை செய்து வருகிறார்கள்.
இந்த செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரு நகரங்களில் இதுபோன்ற உணவு பொருள் வினியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வீடுகளுக்கே சென்று உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் உணவு பொருளின் விலையுடன் சேவைக்கட்டணம் மற்றும் வினியோக கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து வாங்கி கொள்ளும். அதாவது சென்னையில் ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.150 என்றால், அதனை உணவு வினியோக நிறுவனம் மூலம் வாங்கினால் அதற்கு வாடிக்கையாளர் ரூ. 200 செலுத்த வேண்டும்.
இந்த கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கூடுதல் கட்டணத்தை உணவு வினியோக நிறுவனத்தினர் தனித்தனியாக பிரித்து காட்டுவதில்லை. மொத்தமாக பில்லில் குறிப்பிட்டு இருப்பார்கள். இதனால் வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வளவு பணம் கூடுதலாக வாங்கப்படுகிறது என்பது வாடிக்கையாளருக்கு தெரியாது.
இந்நிலையில் உணவு வினியோக நிறுவனங்கள் இப்போது டெலிவரி கட்டணத்தை ரூ.2 உயர்த்த உள்ளனர். இதுபோல உணவு வினியோக நிறுவனத்தின் உறுப்பினர் கட்டணத்தையும் அதிகரிக்க உள்ளனர். இக்கட்டணங்கள் அதிகரிக்கும் போது இப்போது வாங்கும் விலையை விட உணவு பொருள்களின் விலை 25 சதவீதம் வரை அதிகரிக்கும்.
அதாவது உணவு வினியோக நிறுவனங்கள் மூலம் வாங்கும் பொருள்களுக்கு தான் இந்த விலை உயர்வு. இதனையே நாம் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டால் இந்த விலை உயர்வு இருக்காது.
இதுபோல உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகவும் சேர்த்துள்ளனர். இதற்காக மாதத்திற்கு ஒரு கட்டணமும் வசூலிக்கிறார்கள். உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு உணவு வாங்கினால் சலுகை வழங்குவதாக கூறியிருப்பார்கள்.
அந்த சலுகையை பெற வாடிக்கையாளர் தனது தேவைக்கு அதிகமான உணவை ஆர்டர் செய்ய வே ண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இவ்வாறு உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் கட்டண உயர்வு மூலம் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், இதனை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிப்பதில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களுக்கான விலையை முறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
- இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
- கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது.
சென்னை:
தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்விணையதளத்தின் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.
வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக http://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.
ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.
- தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.
தமிழ்நாடு அரசின் 2017- ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.
- யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்துவதற்கு வசதியாக http://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் ஆகியவற்றை செலுத்தலாம். இதில் ஆன்லைன் பேமெண்ட், டெபிட், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டுகள், யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் பொதுமக்கள் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்த தேவையான அனு–ம–தி–களை எளி–தில் பெற ஒற்றை சாளர முறையில் இதற்கென பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவிந்தாபுரம் ஊராட்சி தலைவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 42 சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தற்போது முன் மொழியப்பட்டுள்ள 42 சேவைகளில் 22 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் தொடர்பானவை ஆகும்.
சென்னை:
தமிழக போக்குவரத்து துறை தனது டிஜிட்டல் சேவையை மென்மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் மோட்டார் வாகன சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான மானிய கோரிக்கைக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மக்கள் செல்லாமல் ஆன்லைன் வாயிலாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலக சேவைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி 42 சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது முன் மொழியப்பட்டுள்ள 42 சேவைகளில் 22 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் தொடர்பானவை ஆகும். மீதமுள்ளவை மோட்டார் வாகனங்கள் மற்றும் அனுமதி பத்திரங்கள் தொடர்பானவை ஆகும்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களில் பெயர், முகவரி போன்றவற்றை மாற்றவும், நகல் எல்.எல்.ஆர். உரிமங்கள் பெற்றிடவும், மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவு பெறவும், வாகன பதிவுக்கு தடையில்லா சான்றிதழ் பெறவும், மொபைல் எண்ணை புதுப்பிக்கவும், வாகனங்களை மற்ற இடங்களுக்கு மாற்றும்போது நகல் மோட்டார் வாகன ஆவணங்கள் அல்லது தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கும் இனிமேல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவுக்கான விண்ணப்பம் நகல், பதிவு சான்றிதலுக்கான விண்ணப்பம், ஆர்.சி.க்கு என்.ஓ.சி. வழங்குதல், ஆர்.சி.யில் முகவரி மாற்றம், புதிய அனுமதி வழங்கல், நகல் அனுமதி மற்றும் பரிமாற்றம் ஆகியவை ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.
இது தரகர்கள் அல்லது முகவர்களின் செல்வாக்கை குறைப்பதோடு லஞ்சத்தையும் குறைக்கும் என போக்குவரத்து ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய திருத்தம் தமிழக முழுவதும் இந்த வாரம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தார்.
இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக ஆன்லைன் செயலி நிறுவனத்தார் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனால், தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதை அடுத்து மனமுடைந்த லோகேஷ்வரன், வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைனில் கடன் செயலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
- டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை, அல்லிகுட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
மேலும் அந்த டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய கோகுல் கண்ணன், அவர் குறிப்பிட்ட வங்கியில் ரூ.1 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு, அந்த மர்மநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுல் கண்ணன், இது குறித்து சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
- ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
- இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.
ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி கட்டாயம், இலவச மருந்து மாத்திரை விநியோகம் நிறுத்தம், மாத்திரை தட்டுப்பாடு, உயர்சிகிச்சைக்கு ஏழைகளை தவிர்த்து கட்டணம் என அறிவித்து பல சர்ச்சைக்கு உள்ளானார்.
இதனால் ஜிப்மருக்கு எதிராக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடந்தது. மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தும் அந்த நிதியை முறையாக பயன்படுத்தி செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெறப்பட்டது. கவர்னர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வும் செய்தார்.
இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் மாற்றம் உறுதியாகி உள்ளது. தற்போதைய இயக்குனர் ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் முடிந்துள்ளது.
இந்த நிலையில் ஜிப்மர் இணையத்தளத்தில் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுகலைத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.2 ½ லட்சத்துக்குள் தரப்படும். ஜிப்மர் வளாகத்தில் குடியிருப்பு விடுதி தரப்படும். வயது 60-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ, நியமனத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். நிர்வாக துணை இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ. 31.20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
- விவசாயி சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 20 சதவிகித மானியம் கூடுத லாக வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிராமங்களின் பஞ்சாயத்துகளில் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 2 விசை உழுவை (பவர் டில்லர்) அல்லது களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) வழங்கப்படும் என்பதை அடிப்படையாக கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொதுப் பிரிவில் விசை உழுவை (பவர் டில்லர்) (8 குதிரை திறனுக்கு மேல்) 23, சிறப்பு பிரிவில் 5 மற்றும் களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) (5 குதிரைதிறனுக்கு மேல்) பொதுப்பிரிவில் 4 மற்றும் சிறப்பு பிரிவில் ஒன்று மானியத்தில் வழங்க ரூ. 31.20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விசை உழுவையினை பொறுத்த வரை, சிறு, குறு, பெண் விவசாயிகள், சிறப்பு பிரிவு விவசாயிகளுக்கு ரூ.85 ஆயிரம் அல்லது விசை உழுவையின் மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகையும், இதர பிரிவினருக்கு ரூ.70 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். களை எடுக்கும் கருவியினை பொறுத்தவரை சிறு, குறு, பெண் விவசாயிகள், சிறப்புப் பிரிவு விவசாயி களுக்கு ரூ.63 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகையும், இதர பிரிவினருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். சிறப்பு பிரிவு விவசாயிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 20 சதவிகித மானியம் கூடுத லாக வழங்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் 19 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் தேரே கால்புதூர், பஞ்சலிங்கபுரம், ராஜாக்கமங்கலம் வட்டா ரத்தில் புத்தேரி, ஆத்திக் காட்டுவிளை, மேல கிருஷ்ணன்புதூர், தோவாளை வட்டாரத்தில் தோவாளை, மாதவலாயம், கடுக்கரை, குருந்தன்கோடு வட்டாரத்தில் கக்கோட்டு தலை, முட்டம், மேல்புறம் வட்டாரத்தில் மாங்கோடு, விளவங்கோடு, முஞ்சிறை வட்டாரத்தில் விளாத்துறை, தூத்தூர், கிள்ளியூர் வட்டாரத்தில் முள்ளங்கினாவிளை, மத்திக்கோடு, திருவட்டார் வட்டாரத்தில் செறுகோல், ஏற்றக்கோடு, தக்கலை வட்டாரத்தில் சடையமங்கலம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் விசை உழுவை அல்லது களை எடுக்கும் கருவி பெற சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம், ஆதார் கார்டு நகல், சிறு, குறு விவசாய சான்றிதழ், சாதிசான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் பதிவு செய்வது கட்டாயமாகும். இத்திட்டம் உழவன் செயலியில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகே உள்ள வேளாண்மை பொறியியல் துறை, கோணம் தொழிற்பேட்டை உதவி செயற்பொறியாளர் மற்றும் அழகியமண்டபம் பனங்காலவிளை உதவி செயற்பொறியாளர் அலுவ லகங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.
- ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன.
சேலம்:
மாறி வரும் நவீன தொழில் நுட்ப யுகத்துக்கு ஏற்ப சமீப காலமாக இணையவழிக் குற்றங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.
இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நம்ப வைத்து பணம் பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன. இத்தகைய குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற மின்னஞ்சல், வாட்சப் என போலியான தகவல்களை அனுப்பு கின்றனர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்குக் எஸ்.எம்.எஸ்.அனுப்புகிறார்கள்.
செல்போன் டவர் அமைத்துத் தருகிறோம், ஆஸ்திரேலியக் கப்பலில் வேலை வாங்கித் தருகிறோம், முத்ரா திட்டத்தில் மானிய மாகக் கடனளிக்கிறோம், வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது அதைக் கொடுக்கிறோம், கொரோனா நிவாரணநிதி அளிக்கிறோம், வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம் என்று நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவார்கள். நம்பிக்கையை அதிகரிக்க போலியான மின்னஞ்சல், போலியான இணையதளத்தைக் கூடக் கொடுப்பார்கள்.
இவ்வாறாக பெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டு முன்பணம் அல்லது சேவைக் கட்டணம் அல்லது சுங்கக் கட்டணம் என்று ஏதாவது சொல்லி, பணத்தைக் கட்டச் சொல் வார்கள். நமக்கும் ஆசை கண்ணை மறைப்பதால் கேள்வியே கேட்காமல் கேட்கும் தொகையை கட்டிவிடுவோம். அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்வோம்.
சில நேரங்களில் பணமாகக் கேட்காமல் அறியாமையைப் பயன்படுத்த வங்கி அதிகாரியாக ஆதார் சரிபார்க்கிறோம், வருமான வரித்துறையினராக பான் சரிபார்க்கிறோம், ஆதார் - பான் அட்டை இணைக்கிறோம், தொலைத்தொடர்புத் துறையினராக கே.ஒய்.சி. சரிபார்ப்பு, கூரியர் வந்துள்ளது அடையாளத்தைச் சரி பார்க்கிறோம், கொரோனா தடுப்பூசி போடப் பதிவு செய்யச் சொல்லியோ கறாராகவும் பேசுவார்கள்.
இவர்களை நம்பி பல தகவல்களைக் கொடுத்தால் ஏ.டி.எம்.கார்டின் எண், ரகசிய எண் என்று நேரடியாகக் கொடுத்து ஏமாறுபவர்கள் உண்டு. சில நேரம் ஓடிபி எண் மட்டும் கொடுத்து ஏமாறுபவர்களும் உண்டு. அட்டை என்னிடம் தானே இருக்கு எப்படி ஏமாற்ற முடியும் என நினைக்கலாம். ஆனால் அட்டை இல்லாமல் அட்டை எண்ணுடன் ரகசிய எண் மட்டும் கொடுத்து, பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் குறுஞ்செய்தி கூட இல்லாமல் பணம் மாற்றமுடியும்.
வங்கியில் பணமில்லை என்றுகூட அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஓ.டி.பி. மூலம் கணக்கில் நுழைந்து, உங்கள் பெயரில் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நீங்கள் கொடுக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று மெல்லிய மிரட்டல்கள் வந்தாலும் இத்தகைய தகவல்களைப் பகிரவேண்டாம். வங்கியைத் தொடர்பு கொண்டு நிலையறிந்து செயலாற்ற வேண்டும்.
இதுபோன்ற இணையவழி குற்றங்களை தடுக்க அரசு சைபர் கிரைம் என்ற்ர பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் குற்றச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இந்த சூழலில் சேலத்தில் வேலை தருவதாக எஸ்.எம்.எஸ்.அனுப்பி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி திவ்யா (வயது 36). இவரது செல்போனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த குறுந்தகவலை பார்த்து, அதில் வேலை கேட்டு மெயில் அனுப்பி உள்ளார்.
அதை தொடர்ந்து இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சில நிபந்தனைகளை பணம் செலுத்தி செய்தால், பகுதி நேர வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய திவ்யா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் செலுத்தி அதன் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி எந்த ஒரு வேலையும் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பாலாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வீரமணிகண்டன் (வயது 28). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை பார்த்து பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொண்டு உள்ளார். இவரும் அதே பாணியில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் பேச்சைக் கேட்டு ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளார்.
ஆனால் இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீர மணிகண்டன், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.