என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள்"
- தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
- மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.
அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
- மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
- ஆறு பேர் கொண்ட குழு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பாக் ஜலசந்தியில் மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் காரணமாக, அப்பகுதி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல் வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் முயற்சியால் ராமேசுவரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய் கிழமை) விமானம் மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர்.
ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை அன்று வாவுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
- தமிழ்நாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார்.
- மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
- காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது.
லிமா:
தென் அமெரிக்க நாடான பெருவின் மார்கோனா நகரைச் சேர்ந்த மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61). இவர் கடந்த டிசம்பர் மாதம் சக மீனவர்களுடன் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.
அங்கு 2 வாரங்கள் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
இதில் காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது. ஆனால் அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.
இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து காஸ்ட்ரோவின் உறவினர்களும் அவரை தேடி வந்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு படகில் காஸ்ட்ரோ ஆபத்தான நிலைமையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் பெரு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு அவரது உறவினர்களிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்கப்பட்டார். கடலில் மாயமான காஸ்ட்ரோ 95 நாட்களுக்கு பிறகு திரும்பியதால் குடும்பத்தினர் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- இன்று மாலையில் கரைக்கு திரும்பும் படகுகளுக்கு மட்டும் அனுமதி.
- விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என்று கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு, மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று முதல் தினசரி இழுவை விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடலில் தங்காமல் காலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மாலையில் கரை திரும்பும் படகுகளுக்கு மட்டும் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடலுக்குச் செல்லும் படகுகள் உயிர்காப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. வரும் 16-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கடலில் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
- 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த 5-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களை 2 படகுகளோடு இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரியும் ராமேசுவரத்தில் கடந்த 6-ந்தேதி முதல் பெரிய விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு வானிலை சீரான நிலையில் 13 நாட்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இன்று காலையில் மீன்பிடி உபகரண பொருட்களை சேகரித்துக்கொண்டு மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்கு புறப்பட்டனர்.
இதனால் இன்று காலை முதலே ராமேசுவரம் துறைமுகம் பரபரப்பானது. 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதேபோல் 300-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகளில் 1500-க்கு மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
- சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது
- 4 நாட்கள் தொடர் மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதேபோல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரைகிராமங்களிலும் பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை கிராமங்க ளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
- 14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும்.
- உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
நாகர்கோவில்:
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கம் குமரி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவநலத் துறை சார்பில் உலக மீனவர் தின வெள்ளிவிழா கொண்டாட்டம் முட்டத்தில் நடந்தது.
பொதுக்கூட்டத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சகாயராஜ் தி.மு.க. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசினார்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய உங்களோடு இந்த மீனவர் தின விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாதி மீனவர்கள் வசிக்கின்றனர். மெரினா கடற்கரை பாதி தொகுதியில் வருகிறது. என் எம்.எல்.ஏ. அலுவலகம் மீனவ பகுதியில் தான் உள்ளது. அவர்களின் செல்ல பிள்ளையாக அவர்கள் வீட்டில் ஒருவராக நான் உள்ளேன். இங்கே உங்களை அன்போடு பார்க்கிறேன்.
கலைஞர் அரசு தான் கை ரிக்ஷாவை ஒழித்தது. படகுகளுக்கு இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் தந்தது, மீனவர் நல வாரியம், மீன்பிடி தடை கால நிவாரணம், டீசல் மானியம் உயர்வு போன்றவற்றை தந்தது கலைஞர் அரசுதான்.
சிறு படகுகளுக்கு மண்எண்ணெய், காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் முனைப்பு காட்டியது வெளிநாடுகளில் சிறையில் வாடிய 170 மீனவர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்து வந்தது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.ரூ.320 கோடி மீனவர்களுக்கு நிவாரணம் ரூ.743 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெய் மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து 6000 ஆக உயர்த்தியது மு க ஸ்டாலின் அரசு தான். விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ.8000 ஆக உயர்த்தப்பட உள்ளது.
14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும். கடலில் காணாமல் போன மீனவர்களில் இறந்தவர்க ளாக அறிவிக்க 7 ஆண்டுகள் என்பது அதிகம்.இதை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.
கணவரை இழந்து வாடும் பெண்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் கிடைக்க பரிசீலனை செய்யப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். கடல் ஆம்புலன்ஸ் சர்வதேச அடையாள அட்டை அரசின் கவனத்தில் உள்ளது. நிதி நிலையை பொறுத்து அவற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தருவார் என உறுதி அளிக்கிறேன். பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். வீடுகள் காலி செய்ய வேண்டும் தி.மு.க. இதனை ஏற்காது. மீனவர்களின் கோரிக்கைகளை முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்.
மத்திய அரசு மீனவர்க ளுக்கு எதிராக எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் மீனவர்கள் பக்கம் தான் திமுக அரசு இருக்கும் அதனால் உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.
13 கோரிக்கைகள் இங்கு தந்துள்ளீர்கள். மீன வர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணும் பணியில் திராவிட மாடல் அரசு ஈடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மீன் துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில தலைமை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் கலந்து கொண்டனர்.
- புயல் வலுவிழந்தததால் 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
- மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
ராமேசுவரம்
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டல சுழற்சி புயலாக மாறியது. இதனால் ஆழ்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. அதனுடைய தாக்கம் காரணமாக தமிழக கடலோரப்பகுதியில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
பாம்பனில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ராமேசுவரம் மண்டபம், பாம்பன் ஆகிய கடலோரப்பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தவும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி விசைப்படகுகள் தரையில் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து புயலின் தாக்கம் குறைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு இன்று (23-ந் தேதி) காலையில் மீனவர்கள் மீன் பிடிக்கசெல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் ராமேசுவரம் மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு படகுகளில் மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக் கொண்டு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
ராமேசுவரம் பகுதியில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க சென்றனர்.
- மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
- மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றது .இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.
இந்த 2 மாவட்ட மக்களின் கோரிக்ககைளை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் அழகன் குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும் செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பரா என்கிற இடத்திலும் 2 பீப்பிள் துறைமுகங்கள் அமைக்க கடந்த 2ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் மேற்கொண்டனர்.
தற்போது இந்த பணிகள் கிடப்பில் உள்ளது. எனவே இந்த 2 மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ.சி.ஆர். சாலையில் அனுமந்தையில் உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
- மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்.
- முத்துப்பேட்டை சுற்றுவட்டார மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், வாழ்வுரிமை குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் பேசினர்.
இதில், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
- ஏர்வாடி அருகே வலையில் சிக்கிய டால்பின் மீனை மீனவர்கள் கடலில் விட்டனர்.
- இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கீழக்கரை
மன்னார்வளைகுடா கடலில் ஓங்கி இன திமிங்கலங்கள், ஆவுலியா எனப்படும் கடல் பசு, டால்பின், பாறாமை, பாலாமை, பனை மீன், வேளா மீன், பால் சுறா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வாலிநோக்கம் கடலில் தற்போது சீலா மீன் பிடிக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி பின்னர் கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன் வலையில் சிக்கி இருந்தது. வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பினை கண்ட மீனவர்கள் அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
இது குறித்து வனச்சரகர் செந்தில்குமார் கூறும்போது, அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின் வாலி நோக்கம் மீனவர்கள் கரை வலையில் சிக்கியுள்ளது. மீனவர்கள் உடனே அதனை மீட்டு கடலில் விட்டுள்ளனர் என்றார். கடந்த 20-ந் தேதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.