என் மலர்
நீங்கள் தேடியது "நண்பர்கள்"
- கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு திருமணம் நடந்தது.
- அன்று காலையில் ரகுவின் மனைவி, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததை ரகுவின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
திருவனந்தபுரம்:
ஒவ்வொரு வாலிபர்களுக்கும் வீட்டின் அருகிலும், பள்ளி, கல்லூரியிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பது வழக்கம்.
அந்த வாலிபர், படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் நெருக்கமான நண்பர்களை சந்தித்து அவர்களுடன் அரட்டை அடிப்பதில் அவருக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி. இரவு 9 மணி ஆனாலும் கூட இந்த அரட்டை கச்சேரிக்கு முடிவு இருக்காது.
இவை எல்லாம் அந்த வாலிபருக்கு திருமணம் ஆகும்வரை மட்டுமே சாத்தியம். அதன்பின்பு இரவு தொடங்கியதும் அவர் வீட்டுக்கு சென்று விடவேண்டும். இல்லையேல் பெற்றோர் கண்டிப்பார்கள். அடுத்து மனைவியிடம் இருந்து அன்பு கட்டளை பிறக்கும்.
வீட்டில் நான் தனியாக இருக்கிறேன். எனவே இரவானதும் வீட்டுக்கு வந்து விடுங்கள் என்ற மனைவியின் கட்டளை, அந்த வாலிபரை கொஞ்சம், கொஞ்சமாக நண்பர்களிடம் இருந்து பிரித்து விடும்.
அதன்பிறகு எங்காவது, எப்போதாவது தான் நண்பர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போதும் ஹாய்... ஹாய் என்ற பேச்சுடன் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள். அப்போது அந்த நண்பர்களின் மனதில் ஓடும் எண்ணம், திருமணமானால் எல்லாம் மாறிவிடும் என்பதே ஆகும்.
உலக நடைமுறையான இந்த நிகழ்வுகளில் இருந்து மாற பாலக்காடு, மலையக்கோடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரின் நண்பர்கள் முடிவு செய்தனர்.
ரகுவுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடிக்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. அவருக்கு பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்த விழாவில் நண்பர்களும் கலந்து கொண்டனர்.
அவர்கள் ரகுவின் மனைவியாக போகும் பெண்ணை சந்தித்து பேசினர். அப்போது ரகு தங்களின் நெருங்கிய நண்பன் என்று கூறியதோடு, தங்களுடன் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை அரட்டை அடித்துவிட்டு தான் வீட்டுக்கு போவான் என்று கூறினர். திருமணத்திற்கு பிறகும் அவனை தங்களுடன் அரட்டை அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ரகுவின் மனைவியாக போகும் பெண் ஒப்புக்கொண்டார். அப்போது, அவரிடம் பேசிய நண்பர்கள், இப்போது ஒப்பு கொள்வீர்கள், திருமணமானதும் மாறிவிடுவீர்கள் என்று கலாய்த்தனர். அதற்கு அந்த பெண் அப்படியெல்லாம் இல்லை என்றார்.
உடனே நண்பர்கள் அப்படியானால் ஒரு 50 ரூபாய் பத்திரம் வாங்கி வருகிறோம், அதில் திருமணமானாலும் இரவு 9 மணி வரை கணவரை அவரின் நண்பர்களுடன் அரட்டை அடிக்க அனுமதிப்பேன், அடிக்கடி போன் போட்டு தொந்தரவு செய்யமாட்டேன் என்று எழுதி கையெழுத்திட்டு தாருங்கள் என்றனர். இதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் அந்த பெண், கணவரின் நண்பர்கள் கூறியபடி எழுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு திருமணம் நடந்தது. அன்று காலையில் ரகுவின் மனைவி, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததை ரகுவின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி பலரது பாராட்டையும் குவித்து வருகிறது. இப்படியும் நண்பர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- பரமக்குடி வாலிபர் கொலையில் அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பரமக்குடி
சிவகங்கை மாவட்டம் கல்லனி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பரமக்குடி கோர்ட்டில் ஆஜரான கண்ணன் நேற்று காலை பரமக்குடி எமனேஸ்வரம் அருகே உள்ள சுடுகாட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணனுக்கும், இளையான்குடி அருகே உள்ள ராதாபுளி கிராமத்தை சேர்ந்த விஜயராஜ், தர்மகர்த்தா ஆகியோருக்கும் நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேரும் கண்ணனை பீர் பாட்டிலால் அடித்துக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விஜயராஜ், தர்மகர்த்தா ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது.
- சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள்
திருமணத்தின் போது மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்யும் வேடிக்கையான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வேகமாக பரவும் வீடியோ ஒன்றில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில், மணமக்கள் மேடையில் இருப்பதையும், விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதையும் காண முடிகிறது. அப்போது மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது. பின்னர் அவர்கள் ஒரு குளிர்பானத்தில் மது பானத்தை கலக்கிறார்கள்.
சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள். அதை குடித்த மணமகன் சிரிக்க தொடங்குகிறார். இதை பார்த்த மணமகளும் விஷயத்தை புரிந்து கொண்டு சிரிப்பது போன்று காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்டுகளை பெற்று வருகிறது. 26 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. இப்படிப்பட்ட நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு பயனரும், மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வேறு லெவல் என ஒருவரும் பதிவிட்டுள்ளனர்.
- திருமண மாப்பிள்ளையான சிவா சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
- பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக திருமண பரிசாக வழங்கினோம்.
திருச்சுழி:
திருமணம் என்றாலே மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள், திருமணத்திற்கு வருபவர்கள் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். உறவினர்களை பொறுத்தவரை கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை மணமக்களுக்கு சீர் வரிசைகளாக வழங்குவார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையிலும், திருமண மாப்பிள்ளைக்கு பிடித்ததுமான சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக அவரது நண்பர்கள் வழங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் சிவா. இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.
தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமு டனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.திருமண மாப்பிள்ளையான சிவாவும் சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்தததால், சண்டை கிடாய்கள், சண்டை சேவல், நாட்டு இன நாய் உள்ளிட்டவைகளை அவரது நண்பர்கள் பரிசு பொருட்களாக வழங்கினர். அவர்கள் 2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அவர்கள் பரிசாக வழங்கிய சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் மணமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறும் போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக அவர் விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.
- நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
- 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது.
அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது.
18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.
இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய 'உண்மையான' நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.
நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர்.
இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர்.
55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.
3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு 'சிறந்த நண்பர்' இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் 'இணை' (Partner) என்று கூறியுள்ளனர்.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது 'சிறந்த நண்பர்' என்று கூறியுள்ளார்.
டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு 'உண்மையான நண்பர்கள்' இல்லை என்று கூறியிருக்கிறார்.
"3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது" என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
- இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
- இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இந்தி திரை உலகில் பிரபல நடிகரான அமிதாபச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவும், ஷாருக்கான் மகள் சுகானா காணும் நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் நண்பர் வேதாந்மகாஜன் பிறந்தநாள் லண்டனில் நடந்தது. இதையொட்டி நடந்த இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அவர்களுடன் அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகள் நைசாவும் பங்கேற்று உள்ளார். இரவு விருந்து முடிந்து சுகானா காணும், அகஸ்தியா நந்தாவும் ஒரே காரில் திரும்பி சென்றனர்.

இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் லண்டன் விருந்தில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
- போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர்.
டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் 16 வயது சிறுவன், புதிய போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்கவில்லை என்று கூறி சக நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சச்சின் மறுத்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சச்சினை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். பின்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், 16 வயது உள்ள 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
- இறந்து கிடந்தவர்களின் பெயர்கள் ஆசுதோஸ் ராணா, முகேஷ் சிங், சன்னி சவுதாரி என்று தெரியவந்தது.
- மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் ஒரு புகார் வந்தது. அதில் தனது சகோதரர் படீர்வா நகருக்கு செல்வதாக கூறி சென்றவர், பின்னர் போன் அழைப்புகளை ஏற்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில் போலீசார் அவரை தேடியபோது, படீர்வா பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அவரது மோட்டார் சைக்கிள் நிற்பதை கண்டனர். அங்கு விசாரித்தபோது அவரும், மற்ற 2 பேரும் சேர்ந்து அறை எடுத்து தங்கி இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சென்று, அவர்களின் அறை கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் நினைவிழந்த நிலையில் கிடந்தனர்.
பின்னர் தடய அறிவியல் குழுவினரும், மருத்துவ குழுவினரும் வரழைக்கப்பட்டு சோதனை செய்தபோது அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் அறிவித்தனர். தடய அறிவியல் பிரிவினர் தடயங்களை சேகரித்தனர்.
இறந்து கிடந்தவர்களின் பெயர்கள் ஆசுதோஸ் ராணா, முகேஷ் சிங், சன்னி சவுதாரி என்று தெரியவந்தது. ஜம்மு பகுதியில் வசித்த நண்பர்களான இவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இங்கு சுற்றுலா வந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்கள் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தங்கிய அறையில், கரி மூலம் செயல்படும் ஹீட்டர் சாதனம் ஒன்று இருந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட புகையால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவில்தான் அவர்கள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-17, கோவில் சாலையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55). இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அசோக்குமார் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் அசோக்குமாரை பல இடங்களில் தேடினர். அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அசோக்குமாரின் அண்ணன் சதீஷன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 19 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். அசோக்குமாரின் நண்பர் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அசோக்குமாரை அவரது நண்பர் சுரேஷ்குமார் மற்றும் வடலூரை சேர்ந்த ராஜேஷ் (36), நெய்வேலியை சேர்ந்த காமராஜ் (32) ஆகியோர் கடத்தி சென்று கொலை செய்து உடலை புதைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த சித்தாலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (45) என்பவரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
அதன்படி போலீசார் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான மீன் குட்டையில் புதைக்கப்பட்டிருந்த அசோக்குமாரின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், ராஜேஷ், மீன் குட்டை வைத்திருந்த இளங்கோவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட காமராஜை தேடிவருகின்றனர்.
என்.எல்.சி. அதிகாரி கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்.எல்.சி. அதிகாரி அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் தனது நண்பர்கள் சுரேஷ்குமார், ராஜேஷ், காமராஜ் ஆகியோருடன் அடிக்கடி மது குடித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.
அசோக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சுரேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் வேலை எதுவும் பார்க்காமல் சுற்றி திரிந்தனர். அசோக்குமாருடன் ஏற்பட்ட நட்பால் அவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி உள்ளனர்.
அப்போது அசோக் குமார் தான் கடனாக கொடுத்த பணத்தை அவர் களிடம் கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அசோக் குமாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.
மேலும் அசோக்குமாரின் வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் இருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது. அதனை அப கரிக்கவும் அவர்கள் திட்ட மிட்டனர். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அசோக்குமாரை அங்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தனர்.
மது போதையில் இருந்த அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டு அபகரித்து, ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் மது மயக்கத்தில் இருந்த அசோக்குமாரை தாக்கினர்.
மேலும் அசோக்குமாரின் முகத்தை செல்லோ டேப்பால் ஒட்டினர். இதனால் மூச்சுத்திணறி அவர் இறந்து விட்டார். பின்னர் அவரின் உடலை புதைக்க முடிவு செய்தனர். அப்போது அவர்கள் சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனிடம் தொடர்பு கொண்டனர். அவர் உடனே எனக்கு சொந்தமான மீன் குட்டை உள்ளது. அங்கு அசோக்குமாரின் உடலை புதைத்தால் யாருக்கும் தெரியாது என்றார். அதன் பேரில் இளங்கோவன் காரை எடுத்து கொண்டு அங்கு வந்தார்.
பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த காரில் அசோக்குமாரின் உடலை ஏற்றி பெத்தான்குப்பத்தில் உள்ள மீன் குட்டைக்கு கொண்டு சென்றனர். அங்கு 12 அடி ஆழத்தில் குழி தோண்டி அசோக்குமாரின் உடலை புதைத்தனர். இதில் யாருக்கும் சந்தேகம் அடையாமல் இருக்க மீன் குட்டையை சுற்றிலும் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் போட்டு மூடினர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், ராஜேஷ், இளங்கோவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று மாலை நெய்வேலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதான 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.