search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212363"

    • மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
    • மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.

    திருவாரூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு குளிக்கரை ஊராட்சித் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியை அட்சரசுந்தரி வரவேற்றுப் பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, பூமியை வருங்கால சந்த்தியினர் ஆரோக்கியமாக உயிர்வாழ வழிவகை செய்யும் கடமை நம் ஒவ்வொருக்கும் உள்ளது.

    மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.

    மரங்களின் ஆக்சிஜனை நாம் சுவாசிக்கிறோம்.

    நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் சுவாசிக்கின்றன.

    மாணவர்களிடம் நீங்கள் நடுவது மரம் மட்டுமல்ல.

    ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலையும் கூட என சொல்லி, மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.

    இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிரந்திர மக்கள் நீதிமன்றம் நீதிபதி பரணிதரன், மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி.கதிரவன், நீதித்துறை நடுவர் பிரபாகரன் மற்றும் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஷ்டா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர். சேக் இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அலுவலக நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கரூர்,

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை ஓட்டம் என்ற மராத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.காகிதபுரம் காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வேலாயுதம் பாளையம் ரவுண்டானா சென்று திரும்பும் வகையில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 432 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசாக 100 பேருக்கு தலா ரூ. 500 வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு காகித ஆலை சார்பில் நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட சுற்றுசூழலுக்கு ஏற்ற டி-சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம், காகித ஆலை நிறுவனத்தின் தலைமை விழிப்புணர்வு அதிகாரி பண்டிகங்காதர், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், கரூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற கையேட்டினை எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட அதனை உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயக்குமார் பெற்று கொண்டார்.

    தொடர்ந்து காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத் தோட்டம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மற்றும் நிலைத்தன்மை அதிகாரி சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு) வரதராஜன், காகித ஆலை வனத்தோட்டத்துறை மற்றும் மனித வளத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காகித ஆலை நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (வனம்) நன்றி கூறினார்.

    • பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி ஜி-20 கல்விப் பணிக்குழுவின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரக்கன்று நடும் விழா திருவாரூர் அடுத்த அலிவலத்தில் நடைபெற்றது.

    இதில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

    அலிவலம் ஊராட்சி தலைவர் நிர்மலா பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    தொடர்ந்து, பயனாளி களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    பின்னர், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அலுவ லர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்க்கா, மனோஜ், பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் சாலையில் குப்பைகளை கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவின்படி, வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பினர்கள், ஈகா, பிரியம் அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.

    பின், நந்தவன குள தெருவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து, அகஸ்தியர்கோவில் குளம் தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக நகராட்சி நுண்ணிய உரக்கிடங்கில் பணிபுரியும் 8 பணியாளர்களுக்கு நற்சான்றிதழை நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் வழங்கினர்.

    பின்னர், தோப்புத்துறை இலந்தயடி ரஸ்தா பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டு பொதுமக்களிடம் குப்பைகளை சாலையில் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    • சத்யா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பழைய சென்னாக்குளம் கிராமத்தில் மரங்கன்றுகள் நடப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி. எஸ்.இ. பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. சத்யா வித்யாலயா பள்ளி குழுமத் தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி மருத்துவர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் அனுசுயா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சுற்றப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பழைய சென்னாக்குளம் கிராமத்தில் மரங்கன்றுகள் நடப்பட்டது.

    • மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகராட்சி தலைவர் ெதாடங்கி வைத்தார்.
    • இந்த கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

    மானாமதுரை

    மானாமதுரையில் தமிழக அரசின் தூய்மை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி அலுவலகம் அருகே வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர் மன்றத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நகரங்களில் தூய்மை இயக்கத்தின் சார்பில் மானாமதுரை நகராட்சியில் பல இடங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இக்கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

    • வாடிப்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • தாசில்தார் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நெடுங்குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நெடுங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவுக்கு பெட்கிராட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.சுப்புராம் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாடிப்பட்டி வட்ட தாசில்தார் மூர்த்தி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ''பிளாஸ்டிக்கை ஒழிப்போம்'' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மஞ்சப்பை மற்றும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் அலுவலர் சுஜின் தர்மராஜ் நெடுங்குளம் கிராமத்திற்கு பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும் பவுண்டேஷன் சார்பில் செய்து வருவதாக பேசினார். நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி வாழ்த்தி பேசினார். பின்னர் நெடுங்குளம் கண்மாய்கரை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங் நன்றி கூறினார். பின்னர் சமயநல்லூரில் உள்ள மீனாட்சி மில் வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • கரூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடப்பட்டன

    கரூர், 

    கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடத்தியது. இவ்விழாவினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அனைத்து நீதிபதிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர் சரவணன், தமிழ்வாணன், செயலர், பார் அசோசியேசன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மொத்தம் 500 மரக்கன்றுகளில் 70 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. மீதமுள்ள மரக்கன்றுகள் இம்மாதத்திற்குள் நட்டு வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.

    • ஆலங்குடி பகுதிகளில் பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது
    • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதி, பாத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பாத்தான் குளம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார்.அப்போது ஒவ்வொரு மரக்கன்றுகளும் முறையாக வளர்ச்சி அடைந்துள்ளதா, ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்று அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் கூறும்போது, இந்த ஆண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மா, பலா, நாவல், கொய்யா போன்ற பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளோம். ஏற்கனவே 14 இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது நல்ல பலனை தந்துள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் நடவு செய்ய உள்ள அனைத்து மரக்கன்றுகளும் பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகளாகவே நடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
    • புவி வெப்பமயமாதலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையிலும், தொடர்ந்து மழை பொழிந்திடவும் மரக்கன்றுகளை வளர்ப்பது இன்றைய காலத்தில் இன்றியமையாததாகும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க பணிக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பேசும்போது கூறியதாவது:- பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியினை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பல்வேறு திட்டங்களின் மூலம் நாம் நடும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து அவற்றை மரங்களாக வளர்த்துக் காட்ட வேண்டும். புவி வெப்பமயமாதலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையிலும், தொடர்ந்து மழை பொழிந்திடவும் மரக்கன்றுகளை வளர்ப்பது இன்றைய காலத்தில் இன்றியமையாததாகும். எனவே வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அதிகளவிலான மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

    அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். நமது பெரம்பலுார் மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் உள்ள மாவட்டமாக, பசுமை போர்வையால் போர்த்தப்பட்ட மாவட்டமாக உருவாக அரசு அலுவலர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருளாளன், பயிற்சி உதவி கலெக்டர் பிரியதர்ஷினி மற்றும் வனச்சரகர்கள் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் நாள் மண்டகப்படியாக சோழவந்தான் விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் அக்கசாலை விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட நீதிபதி சுந்தர்ராஜ், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், தி.மு.க. பேரூர் செயலாளரும், 9-வது வார்டு கவுன்சிலருமான வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

    ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் கண்ணன், மணி, அங்குசாமி, நாகு ஆசாரி, பிச்சைமணி, முருகன், ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    ×