என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து"

    • சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் மகன் தகராறு
    • போலீசார் மகனை அழைத்து அறிவுரை

    கன்னியாகுமரி:

    குளச்சலை அடுத்த மேற்கு நெய்யூர் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 67). இவரது மனைவி சுசீலா (65). இந்த தம்பதியின் மகன் பிரபாகரன் (42).

    இவர் சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து பழனி குளச்சல் போலீசில் பலமுறை புகார் செய்துள்ளார். போலீசார் பிரபாகரனை அழைத்து அறிவுரை கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பிரபாகரன் வீட்டில் தகராறு செய்து தனது தாயார் சுசீலாவை கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் பிரபாகரன், அவரது மனைவி வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம், பொன்னிவாடி கிராமத்தில் உள்ளது நல்லதங்காள் ஓடை அணை.இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. ஓடையின் நீர்த்தேக்க பகுதியில், சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த போது, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை துவக்கினார். பொன்னிவாடி கிராமத்தில் உள்ள அந்த அமைப்பின் கிளை சார்பில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி நடந்துவருகிறது.

    சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மூலனூர் அருகே கோணேரிப்பட்டி கிராமத்தில் இருந்து, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பால்ராசு, தற்போது இமாச்சலபிரதேசம் சிம்லா மாவட்ட கலெக்டராக இருக்கிறார். விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    பால்ராசு கூறுகையில், அணைக்கட்டு மொத்தம் 937 ஏக்கரில் அமைந்துள்ளது.அவற்றில் 800 ஏக்கர் அளவுக்கு சீமைக்கருவேல மரம் வளர்ந்துள்ளது. அவற்றை முழுமையாக அகற்றி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகள் தான் அழியாத சொத்து.அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் 'நமது சொத்து' என்று பராமரிக்க வேண்டும் என்றார்.

    • வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
    • காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காங்கயம் : 

    வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
    • தெரு வாசிகள் கார்வேட்டிநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி

    சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் குருவமந்தடி (வயது 80). இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். முதல் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து, குருவமந்தடி 2-வதாக மங்கம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள் உண்டு. 2 மகள்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி விட்டது. முதல் மனைவியின் மகன் முரளி தனது மனைவியோடு சேர்ந்து, தந்தையின் சொத்தை சித்திக்கு தெரியாமல் தன்னுடைய பெயருக்கு மாற்றி கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மங்கம்மாவின் மகள்கள் நீதி வேண்டி கோர்ட்டை நாடினர். கோர்ட்டில் சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இந்தநிலையில் குருவமந்தடி உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். தனது தந்தை உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட 2 மகள்களும் கிராமத்துக்கு வந்தனர். அவர்கள், தந்தையின் சொத்துப் பிரச்சினையைத் தீர்க்கும் வரை தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த விட மாட்டோம், எனக் கூறி தடுத்தனர்.

    அதன் காரணமாக உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்களும், தெருவாசிகளும் கடந்த 3 நாட்களாக குருவமந்தடியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்தனர். இதனால் கார்வேட்டிநகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தெரு வாசிகள் கார்வேட்டிநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தெருவாசிகள் உதவியோடு நேற்று குருவமந்தடியின் 2 மகள்களுக்கும், மகனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து குருவமந்தடியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

    • நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சொத்து வரி, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள தஞ்சை கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.

    மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி ரத்தினசுந்தரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெங்கப்பா அனைவரையும் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகள் குறித்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பனர்.

    இதில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, நிர்வாகிகள் தம்பிதுரை, பிலிப், முத்துமாறன், குமார், மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், வல்லம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிங்.ஜெகதீசன், வார்டு செயலாளர் மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர் தெட்சிணமூர்த்தி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஐயப்பன், போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் சிங் முருகானந்தம், மாணவரணி முருகேசன், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2004-2007 காலகட்டத்தில் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாக தகவல்.
    • 45 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக முடக்கியது மத்திய அமலாக்கத்துறை.

    முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.

    கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    • வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.
    • சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.

    புதிய ஊர்களில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனித்து அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.

    * சொத்தின் உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மைனராகவோ இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் கிரய பத்திரத்தில் கார்டியன் கையெழுத்து வாங்க வேண்டும்.

    * உரிமையாளர் நொடிப்பு நிலை அடைந்திருந்தால் அதிகார பூர்வமாக கோர்ட்டுஅறிவித்த சொத்து காப்பாளர் மூலம் எழுதி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து வழிபாட்டு தலங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் தக்க நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

    * சொத்துக்களுக்கான விற்பனை உள்ளிட்ட பரிவர்த்தனை பத்திரங்களை எழுத அரசு உரிமம் உள்ள ஆவண எழுத்தர்களை அணுக வேண்டும். காரணம், சொத்துக்களுக்கான பத்திரங்களை எழுதுபவர் ஒரு வகையில் ஆவணத்திற்கான சாட்சி போன்றவர்.

    * கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற அனைத்து பங்குதாரர்களின் சம்மதம் அவசியம். மேலும், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு இயற்றிய தீர்மானப்படி சொத்து விற்கப்பட அனுமதி மற்றும் கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    * இந்தியாவை விட்டு வெளியேறியவர் மற்றும் குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கப்பட்டு இருந்தால், அரசு பாதுகாப்பாளர் மட்டுமே சொத்தை விற்க உரிமை பெற்றவர் ஆவார். மேலும், வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.

    * நிலம் அல்லது கட்டமைப்பில் பல காலம் குத்தகைதாரராக இருப்பவருக்கு சொத்தை வாங்கி கொள்ளும் உரிமை உண்டு. அதனால், சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.

    * சொத்தை எழுதி கொடுப்பவரின் பெயரும், இன்சியலும், அவரது அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, தாய் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

    * சொத்துக்கான தாய்ப்பத்திரம் இல்லாதபோது சொத்தை எழுதிக் கொடுப்பவர்களால் காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.

    * கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, சொத்து எவ்வாறு கிடைத்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது என்பதற்கான அனைத்து லிங்க் பத்திரங்களையும் தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது பாதுகாப்பானது.

    * கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சர்க்கார் வரி வகைகள், சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்கள் ஒப்படைப்பு, பின் வரும் காலங்களில் பத்திரத்தில் பிழைகள் இருப்பது, வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக்கொடுப்பது ஆகியவற்றுக்கான உறுதியை அளித்திருப்பது நல்லது.

    * ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணதாரர் முகவரி, சொத்துரிமை, சொத்து விவரங்கள் ஆகியவை ஆன்லைன் இன்டெக்ஸ் செய்யப்பட்டு, ஆவணத்தின் சுருக்க முன் வரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பின்பு பதிவுக்கு செல்லுவது மிக, மிக முக்கியம்.

    * பொதுவாக பத்திரங்களை கம்ப்யூட்டர் டைப் செய்து பிரிண்டிங் செய்யும் முன்பு ஒரு டிராப்ட் மாதிரி எடுத்து அதில் பிழைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பதிவு செய்த பின்பு பிழைகளை கண்டறியும் நிலையில், ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் நேரில் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து, பிழை திருத்தல் ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.

    • 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.
    • மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இந்த கோயிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.

    கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்கு மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    அதன்படி மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வி.ஏ.ஓ சங்கீதா முன்னிலையில் கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கனக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் எடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீட்கப்பட்ட இந்த நிலங்களில் எவரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இடத்தில் இது குறித்த தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

    • சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லிக்குப்பம் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023 - 24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை செலுத்துவதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    மேலும் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரிகளில் தங்களது இல்லம் தேடிவரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகம் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆகையால் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து கேட்டு தாய், தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமான்தேவன்பட்டியை சேர்ந்தவர் முத்து(75). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு மணிமாறன் என்ற மகனும், 2மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சொத்துகளை தனது பேரில் எழுதி வைக்குமாறு மணிமாறன் தந்தையிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் 2மகள்கள் இருப்பதால் 3பேருக்கும் சரிசமமாக சொத்தை பங்கீடு செய்துதான் தரமுடியும் என முத்து கூறியுள்ளார்.இந்த நிலையில் சம்பவத்தன்று சொத்துக்களை எழுதி வைக்க கேட்டு மணிமாறன் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிமாறன் பெற்றோரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார்.
    • 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர்

    திருப்பூர் :

    திருப்பூர் சூசையாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் இன்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்குவயது 85. எனது கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார். எனது பிள்ளைகள் ஆசைவார்த்தைகள் கூறி எனக்கு சொந்தமான வீடு, 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர். எனக்கு எந்த ஜீவனாம்சமும் தரவில்லை.

    எனவே முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார். 

    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் தந்தைக்கு தீவிர சிகிச்சை
    • நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை பெருங் கடையை சேர்ந்தவர் பவுல் (வயது 73). இவரது மனைவி அமலோற்பவம் (70). இவர்களுக்கு மோகன்தாஸ் (52) என்ற மகனும் 2 மகள் களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    மோகன்தாஸ் தொழி லாளியாக வேலை செய்ததுடன் ஆட்டோவும் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மோகன்தாஸ் தாய்-தந்தையுடன் வசித்து வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக மோகன்தாசுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவு மோகன் தாஸ் குடிபோதையில் தாய்-தந்தை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவம் சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பவுலை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்தாஸ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதனால் எனக்கும், எனது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அவரது சொத்துக்களை எனக்கு தரவில்லை.

    எனது சகோதரிகளுக்கு மட்டும் கொடுத்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முக்கடல் அணை பகுதியில் கிடந்த நிலம் ஒன்றை விற்பனை செய்தார். அதன் மூலமாக ரூ.30 லட்சம் கிடைத்தது. அந்த பணத்தில் ரூ.15 லட்சத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத் தார். மீதமுள்ள பணத்தை அவர் வைத்திருந்தார்.

    நான் அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தை பவுல், தாயார் அமலோற்பவத்தை வெட்டினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட மோகன்தாஸை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×