என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"

    • ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
    • மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.

    இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

    இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.

    தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.

    தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

    • நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.
    • முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

    தொடர்ந்து டெல்லியில் 9 வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.), தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
    • உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
    • 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.

    இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.

    கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-

    விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தீபாவளி போனஸ் பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
    • தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 80,000 மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பஸ்நிலையம், கிழங்கு மண்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், உணவகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 20 டன்னுக்கு அதிகமாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 77 தற்காலிக, 140 நிரந்தர பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

    இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.300 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606 ஊதியமாக வழங்க தொகை நிர்ணயம் செய்திருந்ததை துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்திடம் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மாதம் முதல் தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது.

    இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தாங்கள் 10 மாதங்களாக பணியாற்றியதற்கு தீபாவளி போனஸ் நகராட்சி பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

    ஆனால் நகராட்சி ஆணையாளர் அளித்த பதில் தூய்மை பணியாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில்: தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்து அவர்களுக்கு ஊதியம் வழங்கினால் எங்களின் பணி சுமை குறையும். இந்த ஆண்டு எங்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட சென்றால் எங்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்காமல் எங்களை அலைக்கழித்து வருகிறார் என்றனர்.

    • சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது
    • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஓய்வூதியம் வராமல் உள்ளது.

    உடுமலை : 

    உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் இங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அந்தந்த மாதத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் வழங்கப்படுவதில்லை.

    அதற்கு பதிலாக 3, 4 மாதங்கள் கழித்து ஓரிரு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்குள் அடுத்த மாதங்களுக்கான சம்பளம் நிலுவையில் சேர்ந்து கொள்கிறது.

    இந்த நிலையில் சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது. அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

    தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எப்.தொகை கடந்த 25 மாதங்களாக பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தப்படாமல் உள்ளது. இந்த தொகையை ஆலை நிர்வாகம், பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தினால்தான், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வுதியம் (பென்சன்) வரும்.

    ஆனால் ஆலையில் இருந்து பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தவேண்டிய தொகையை ஆலை நிர்வாகம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதால், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஓய்வூதியம் வராமல் உள்ளது.

    அதனால் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்.தொகையை பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தவேண்டும் என்று தொழிலாளர்கள், தொடர்ந்து ஆலை நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஆலையின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்தம் நடத்தினர்.
    • கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளையும், சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய மின்சார சட்ட திருத்தம் 2022-ஐ திரும்ப பெற வேண்டும். மேலும் கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் பணி யிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 10-ந் தேதியன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசும், மின்வாரியமும் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு விருதுநகர் மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் துரைப்பா ண்டியன், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதா கிருஷ்ணன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.

    பொருளாளர் பாலசுப்பி ரமணியன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில நிர்வாகிகள் சேக்கிழார், மணிகண்டன், பாண்டியராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மாயாண்டி, ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி பேசினர்.

    இதனை தொடர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலை வராக இளங்கோவனும், செயலா ளராக ஞான குருவும், செயல் தலை வராக தங்கவேலும், அமைப்பு செயலாளராக ராதாகிருஷ்ணனும், பொருளாளராக பாலசுப்பி ரமணியமும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
    • போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் அமைப்புகள் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் 5-ல் ஒரு பங்கு ரெயில்கள் மட்டுமே இயங்கி வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    குறிப்பாக ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்தின் கிராமப் பகுதிகள் பலவற்றிலும் ரெயில் சேவை முடங்கியுள்ளது. அதே சமயம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் நியாயமான உடன்பாட்டை எட்ட முடியாததால் தங்கள் போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அரசு தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லாவிடில் ஜனவரி மாத கடைசியில் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியும் 2,600 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் தொழிற்சங்க அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    • தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தன.
    • பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேசி சுமூகமான முறையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரி உத்தரவாதம் அளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

    எவர்சில்வர் பாத்திர வகைகளுக்கு 50 சதவீதம், பித்தளை, தாமிரம், வார்ப்பு வகைகளுக்கு 60 சதவீதம், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதம் கூலி உயர்வு கேட்பது என முடிவு செய்யப்பட்டு எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நியாயமான கூலி உயர்வு வழங்க முன்வர வேண்டும். கூலி உயர்வு வழங்காதபட்சத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அனுப்பர்பாளையம் வட்டாரததில் உள்ள பாத்திரபட்டறைகளில் பணிகளை நிறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தன.

    இதைத்தொடர்ந்து நேற்று கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் செந்தில்குமார், அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து தொழிற்–சங்க கூட்டு கமிட்டியின் சார்பில் ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), தேவராஜ் (ஏ.டி.பி.), ரத்தினசாமி (எல்.பி.எப்.), செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), பாண்டியராஜ் (எச்.எம்.எஸ்.), அசோக் (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூணன் (காமாட்சியம்மன் பாத்திர சங்கம்), சீனிவாசன் (பி.எம்.எஸ்.) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேசி சுமூகமான முறையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரி உத்தரவாதம் அளித்தார். மேலும் நாளை (1-ந் தேதி) நடக்க இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைக்கவும் கேட்டுக்கொண்டார்.

    வடக்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இன்று தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியினர் திருப்பூர் கலெக்டரை சந்தித்து முறையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை நடக்க இருந்த அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஊர்வலத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் அறிவித்தனர்.

    • மின்துறை அமைச்சர், குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • பீக் ஹவர் கட்டணத்தில், 10 சதவீத கூடுதல் தொகை இம்மாதம் முதல் திரும்ப வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறு, சிறு நிறுவனங்கள் நேற்று நடப்பதாக அறிவித்திருந்த வேலை நிறுத்தப்போராட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான 'போசியா' ஒருங்கிணைப்பாளர்கள், ஜேம்ஸ், சுருளிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில், பீக் ஹவர் கட்டணம் தொடர்பாக டி.ஓ.டி., மீட்டரை, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களே கொள்முதல் செய்து பொருத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    25 சதவீதமாக வசூலிக்கப்பட்ட பீக் ஹவர் கட்டணத்தில், 10 சதவீத கூடுதல் தொகை இம்மாதம் முதல் திரும்ப வழங்கப்படுகிறது. இதுவரை 17 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதர பரிந்துரைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். எனவே, கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவின்படி நேற்று நடைபெறவிருந்த, வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

    • 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
    • 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி,

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், விடுமுறை தின, இரவு நேர, வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகளைக் கைவிடுதல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட மருத்துவ விடுப்பு. ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், கணினி ஆபரேட்டர்களை பணிவரன் முறை செய்தல், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், அவுட் சோர்சிங் முறையை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக 4 வட்டாரம் 1 தலைமையிடம் ஆகிய இடங்களில் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள், அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

    • லாரிகளை காத்திருக்க வைப்பதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
    • தண்ணீர் லாரி ஸ்டிரைக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநகராட்சியின் குடிநீர் வினியோகிக்கும் நிலையம் உள்ளது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 55 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பல்வேறு இடங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் லாரிகளுக்கு போதிய அளவு முறையாக தண்ணீர் வழங்காமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த நிலையில் லாரிகளை காத்திருக்க வைப்பதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். மொத்தம் 42 லாரிகள் வேலைநிறுத்ததில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கோடம்பாக்கம், தி.நகர், ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரமாக குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் இல்லை என்று தெரிகிறது. தற்போது தண்ணீர் லாரி ஸ்டிரைக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ×