search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருக்கலைப்பு"

    • கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள்.
    • மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் கர்ப்பிணி பெண்ககளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இணை இயக்குநர் சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள், சிறிது நேரம் காத்திருந்து திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.

    விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும், தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சித்ராதேவியை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி போராட்டம்.
    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுக்கோட்டை அருகே கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்னாமராதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்ததால், கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.

    பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தை அடுத்த நல்லம்பள்ளி தாலுகாவில் நெல்குந்தி என்ற மலைப்பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. ஸ்கேன் மிஷின் வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த மாவட்ட நலப்பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் காலை முதலே இவர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரை இவர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே கைதான இவர், ஜாமினில் வெளியே வந்து தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் கர்ப்பிணி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்றும், பெண் குழந்தையாக இருந்தால் அவற்றை கருக்கலைப்பு செய்துள்ளதும் தெரியவந்தது. இதற்கு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.13 ஆயிரம் வசூலித்து வந்துள்ளதும் தகவல் வெளியாகி உள்ளது.

    முருகேசன் என்பவர் மருத்துவர் இல்லை என்றும் இவருக்கு கீழ் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முருகேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • பெண்ணின் உடலுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கேபினட் கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் இனிமேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும். இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த முடிவு பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பமானது ஒரு பெண்ணுடன் அவளது விருப்பத்திற்கு மாறாக, அவளது சம்மதமின்றி அல்லது போதுமான விருப்பமின்றி உடலுறவின் விளைவாக இருந்தால் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.

    அதேபோல் கர்ப்பத்திற்கு காரணமானவர் அந்த பெண்ணின் திருமணத்திற்கு தகுதியற்ற உறவினர்களில் ஒருவராக இருந்தாலும் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருக்கலைப்பு பெண்னின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனெ்னறால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் தொடர்பாக அரசாணை வெளியிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.

    • திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
    • கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிடப்பட்டது

    திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    கடந்த மே 3 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது கருவைக் கலைக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள் மட்டுமே கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதி உள்ளது என்றும் இந்த வழக்கில் மனுத்தாரரின் கரு 27 வாரங்கள் நிறைந்தது என்பதால் சட்டப்படி கருவைக் கலைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் மீதான விசாரணை இன்று (மே 15) உச்சநீதிமன்ற அமர்வில் நடந்தது. அப்போது பெண்ணின் வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது என்றும் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பி கருவைக் கலைக்க அனுமதி மறுத்துள்ளது.

    இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர், கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகரில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என கண்டறிந்து பணம் பறிப்பதாக, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஐயப்பன் (வயது 29) மற்றும் அவருடைய மனைவி கங்காகவுரி (27) ஆகிய 2 பேரும் வாடகை வீட்டில், சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என பரிசோதித்து பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் பெற்றால் மசோதா வெற்றி பெறும்.
    • ஆதரவு தெரிவித்து 780 வாக்குகள் பதிவானதால் மசோதா நிறைவேறியது.

    கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை தொடர்பான சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் கருக்கலைப்பு செய்ய இனிமேல் சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை. பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்து வரும் நிலையில், கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை என அறிவித்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.

    இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் சட்டத்தை நிறைவேற தேவை என்ற நிலையில் அமோக பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது.

    இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் வெளியிட்டுள்ள செய்தியில் "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம். உங்களுடைய உடல் உங்களுக்கானதாக நம்பப்படுகிறது. உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    கருக்கலைப்புக்கு ஆதரவானோர் இந்த செய்தியை கேட்டு பிரான்ஸ் ஈபிள் டவர் முன் குவிந்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் "என்னுடைய உடல் என்னுடைய தேர்வு" என்பதை வெளிப்படுத்தினர். மேலும் இந்த வாசகம் ஈபிள் டவரில் மின்விளக்கால் ஜொலித்தது.

    பிரான்ஸ் நாட்டில் 1974-ம் ஆண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிக அளவில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்பு.
    • மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோரும் கைது.

    கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த மருத்துவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை அடுத்து இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூரு போலீஸார் கைதுள்ளனர்.

    மருத்துவர் சந்தன் பல்லால் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிசார் ஆகியோர் ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் 30,000 ரூபாய் வசூலித்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

    இந்த மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சந்தேக நபர்களை பிடிக்க அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தனது காதலியை அஜித்குமார் திருமணம் செய்து கொண்டார்.
    • வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கோவக்காபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(22). இவர் நாகையகோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தபோது தன்னுடன் படித்துவந்த 19 வயது மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கவே காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்றார்.

    பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விபரம் அஜித்குமாரின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கும் தடைவிதித்தனர். இதனையும் மீறி கடந்த 18.8.2023-ம் தேதி தனது காதலியை அஜித்குமார் திருமணம் செய்து கொண்டார்.

    அவர் கருவுற்றிருந்தநிலையில் அவருக்கே தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளனர். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் நடந்த விபரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டபோது அவரது ஜாதியை சொல்லி திட்டி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து பெண்ணை ஏமாற்றிய கணவர் அஜித்குமார், தாய் பரமேஸ்வரி, பாட்டி வெள்ளையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று பார்ப்பதற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கின்றனர்.
    • கருவில் பெண் சிசு இருந்தால், அதனை கலைப்பதற்கு ரூ.15 ஆயிரம் முதல் பணம் வசூலிக்கின்றனர் என்பது தெரியவந்தது.

    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அருகே வீட்டில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்று பரிசோதித்து கருக்கலைப்பு செய்த செவிலியர் உள்பட 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கேன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே செம்மண்குழிமேடு என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக புரோக்கர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து,

    அதன் பேரில் தருமபுரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், சரவணகுமார் அடங்கிய குழுவினர் மற்றும் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் வெங்கட்ராமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் காரிமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் செம்மண்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (வயது 28) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது தருமபுரி அருகே அழகாபுரி 3-வது தெருவை சேர்ந்த கற்பகம் (வயது 38) என்ற பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக 7 கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என்ற பாலின பரிசோதனை மேற்கொண்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.

    மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் ( 35) மற்றும் தருமபுரி ஆசிரியர் காலனியை சேர்ந்த புரோக்கர் சிலம்பரசன் (31) நல்லம்பள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் (35), அந்த வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 நபர்களை பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து காரிமங்கலம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ஸ்கேன் எந்திரம், 4 செல்போன்கள், 2 சொகுசு கார், 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    கைதான பயிற்சி செவிலியர் கற்பகம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று தருமபுரி பகுதியில் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு குறித்து பரிசோதனை செய்ததாக செவிலியர் கற்பகத்தை தருமபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அவரது கணவர் உதவியுடன் கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக ஆணா? பெண்ணா? என்று பரிசோதனை செய்து வந்தார். அதில், பெண் சிசு இருந்தால் கருக்கலைப்பும் செய்து வந்தார்.

    இந்த கும்பல் கடந்த 2 வருடங்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கருப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரியவந்தது.

    இதற்காக அவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஊர்களில் தலா ஒரு புரோக்கரை நியமித்து தொடர் நெட்வெர்க் போல் செயல்பட்டு வருகின்றனர் என்பது தெரியவந்தது. திருமணம் முடித்து கர்ப்பம் தரிக்கும் பெண்களை அவர்கள் குறி வைத்து செயல்பட்டு வந்தனர்.

    மேலும் அந்த கும்பல் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று பார்ப்பதற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கின்றனர். கருவில் பெண் சிசு இருந்தால், அதனை கலைப்பதற்கு ரூ.15 ஆயிரம் முதல் பணம் வசூலிக்கின்றனர் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து கைதான கற்பகம், அவரது கணவர் விஜயகுமார் உள்பட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
    • குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கென தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் செயல்படுவதால், உரிய நேரத்தில் விண்ணப்பங்களுக்கு முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கருக்கலைப்பு அனுமதி வழங்குவதற்கென தனி வாரியம், குழு அமைக்க சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில், மகப்பேறு மற்றும் பெண்கள் நல டாக்டர், பச்சிளம் குழந்தைகள் நலன் நிபுணர், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன் மற்றும் நரம்பியல் ஆகிய துறைத்தலைவர்கள், மனநல ஆலோசகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாரிய குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    • கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தனி வாரியம் அமைக்கப்படும்.
    • உரிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகளில் தனித்தனியான கருக்கலைப்புக்கான வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தனி வாரியம் அமைக்கப்படும். கருக்கலைப்பிற்கான கருத்துக்களை 3 நாட்களுக்குள் வாரியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

    உரிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனைகள் இதில் அடங்கும். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் உறுப்பினர்களாக வாரியத்தில் இருப்பார்கள்.

    ×