என் மலர்
நீங்கள் தேடியது "பல்கலைக்கழகம்"
- உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
- தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார்.
சென்னை:
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தொன்மையும், பாரம்பரியமும் மிக்க "சென்னை பல்கலைக்கழகத்தின்" கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்படமாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி மொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவரால், உடனே மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்படுவர் என்று அப்படிவத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளை அறிந்தவர்களாய், புரிந்தவர்களாய் நியாயமான முறையில், ஜனநாயக வழிமுறைகளை கடைபிடித்து கேட்டுப் பெறக்கூடிய நிலையை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு.
ஆனால் தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார். தேசிய கல்விக் கொள்கையையும், சனாதன சித்தாந்தங்களையும், தமிழ்நாட்டில் புகுத்திடும் பெரும் முயற்சியில் பல்கலைக் கழகத்திற்கெல்லாம் கட்டளையிட்டு, செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.
மதுரை
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
"தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.
மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.
- கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
- பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு ஆகியவற்றை சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க பற்றிய பகுதிகளை நீக்க முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே இடம் பெற்று இருந்த கம்யூனிஸ்டு கட்சி வரலாறு மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் வரலாற்றை நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில மாநில கட்சிகளின் வரலாற்றை சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதுகலை வரலாறு பாடத்தின் 4-வது செமஸ்டரில் இந்த பாடத்திட்டங்கள் இடம் பெற உள்ளன. இந்த நிலையில் கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க பற்றிய பாடப்பகுதிகள் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.
இரணியல் :
இரணியல் லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு பிள்ளை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச பூப்பந்தாட்ட வீரர் ராஜபெருமாள், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன். ராஜரத்தினம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். கல்லூரி தலைவர் மற்றும் செயலர் பேராசிரியர் ராஜகோபால், கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனரும் தலைவருமான ஆறுமுகம் மற்றும் கபடி போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் ரஸ்கின், சிவக்குமார் மற்றும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.
- 15 அணிகள் கலந்து கொண்டன
- போட்டியில் முதலிடத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரி பெற்றது
மார்த்தாண்டம் :
கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடை யேயான ஆண்கள் கைப்பந்து போட்டி நடை பெற்றது. போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 15 அணிகள் கலந்து கொண்டன. இதன் நிறைவு விழா கல்லூரி அரங்கில் நடந்தது. துணை உடற்க ல்வித்துறை இயக்குனர் பி.அனுஷா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னராக மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் கன்வீனர் ஜான் ரஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் முதலி டத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராம லிங்க தேவர் கலைக்கல்லூ ரியும், 2-வது இடத்தை தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியும், 3-வது இடத்தை சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியும், 4-வது இடத்தை அம்பை ஆர்ட்ஸ் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு புனித அல்போன்சா கல்லூரி தாளா ளர் மற்றும் செய லாளர் அருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ், முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஆரோக்கிய சாமி, கல்லூரி வளாக வழிகாட்டி அருட்ப ணியாளர் அஜின்ஜோஸ், துணை முதல்வர் ஆர்.சிவனேசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
- கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
- பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர்.
திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார்.
- காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காலியாகவே உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங் காந்தி கிராம பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனரும், பேராசிரியருமான காமக்கோடி காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல், பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார். அப்துல்கலாம் டெக்னாலஜி இன்னோவேஷன் நேஷனல் பெலோஷிப், ஐ.இ.எஸ்.ஏ. டெக்னாலஜி தொலைநோக்கு விருது, ஐ.பி.எம். நல்லாசிரியர் விருது, டி.ஆர்.டி.ஓ. அகாடமி சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை பெற்றவர்.
மேலும் அசோஷியேசன் ஆப் கம்ப்யூட்டிங் அண்டு கம்யூனிகேசன் சொசைட்டி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். துணைவேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
- தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.
ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.
தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.
இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.
இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
- தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசு தான் உதவ வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது பெரும் தவறு.
தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். பெருந்தலைவர் காமராசரால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து பதுங்கி வருகின்றனர்.
- ஹமாஸ் அமைப்பின் இந்த சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.
டெல் அவிவ்:
காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.
காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.
இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
- போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
- சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் இளைஞர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அணி அணியாக கலந்து கொண்டனர். இதில் போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக பல போட்டிகள் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து நடுவர்களின் போன்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீதிபதி ஷாஜி என்பவரது போனுக்கு இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிவயவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன் மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லஞ்சம் புகாரை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மார்க்கம்களி நீதிபதி ஷாஜி (வயது52), காசர்கோடு ஜோமெட் (33), மலப்புரம் சூரஜ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
- பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள்-இளைய சமுதாயத்தின் எதிர் காலத்தை வளப்படுத்தும் பல்கலைக் கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் குமார், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது.
மாநிலப் பல்கலைக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.