என் மலர்
நீங்கள் தேடியது "விளையாட்டு"
- கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
- மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.
மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மண்ணை கண்டால் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள் ஏராளம். இன்று பெரியவர்களாய் இருக்கும் பலரும் மண்ணோடு உருண்டு புரண்டு விளையாடிய மகிழ்ச்சியான அனுபவத்தை கொண்டு இருப்போம். எத்தனை விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும் இயற்கையின் இலவசமான விளையாட்டுப் பொருள் என்றால் அது மண்தான். அதில் விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு அனுமதி கொடுங்கள். குழந்தைகள் மண், மணலில் விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

* கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
* மண்ணில் வீடுகட்டி விளையாடுதல், கோபுரம் கட்டுதல், குச்சியை மறைத்து வைத்து கண்டு பிடித்தல், எலிவளை அமைத்தல், குகைகள் அமைத்தல் போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் உடல் தசைகள் வலிமை பெறுகின்றன.
* குழந்தைகள் மணலில் விளையாடுவதால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒற்றுமை மலர்கிறது. விட்டுக்கொடுக்கும் பழக்கம் வளர்கிறது.
* மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.
* ஈரமணல், உலர்ந்த மணல், நீர் சேர்த்து குழைத்த மணல், களிமண் என பலவித மணல்களில் விளையாடும் போது குழந்தைகளின் பிரித்தறியும் திறன் வளர்கிறது.
* பெற்றோர் மணல் விளையாட்டுகள் மூலம் பெற்ற பசுமையான அனுபவங்களை குழந்தைகளுக்கும் கொடுத்திட வேண்டும். குழந்தைகளுக்கு மணல் விளையாட்டுகளின் மகிமையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* இன்றைக்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் உருவெடுத்தாலும் அடிப்படையில் மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வித்திடுகின்றன.
எனவே பெற்றோரே! குழந்தைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். மண் உண்டியலை வாங்கி கொடுத்து சேமிக்க சொல்லிக்கொடுங்கள். வீடுகளில் மணல் தரைகள் இல்லாத இந்த காலச்சூழலில் குழந்தைகளை பூங்காக்களுக்கும், கடற்கரைக்கும் அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.
இயற்கையின் கொடையான மண்ணை நேசியுங்கள்.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
சுவாமிமலை:
இரண்டாவது ஜூனியர், மாநில அளவிலான சூட்டிங்பால் சாம்பியன்ஷிப் 2022- க்கான போட்டி சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது சேலம் ஷூட்டிங் பால் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போட்டியில் நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனி பிரிவுகளாகவும், 18 வயதிற்குட்பட்ட, மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.
போட்டியில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நவீன், தமிழ்,அப்துல் ரகுமான், ஈஸ்வர், மாதேஷ் ஆகிய 12-ம் வகுப்பு மாணவர்களும், லுக்மன்,நரேன், வெங்கடேஷ்,கைலாஷ் ஆகிய 11-ம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
மேலும், சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிராஸ் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.
போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனி பிரிவுகளாகவும், 8, 10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.
போட்டியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் முகமது பிலால்,அப்துல் ரகுமான் ஆகியோர் சிறப்பாக விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
மாணவர்கள் அனைவரும் மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுமாறு பள்ளி நிறுவனர் கார்த்திகேயன், தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
மேலும், மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினர்.
கார்த்தி வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- தொண்டியில் செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடந்தது.
- முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேம்படுத்தப்ப ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அதில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொண்டி செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமை தாங்கினார். தொண்டி அரசு மருத்துவர் அருண் வரவேற்றார். நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். திருவெற்றியூர், பாண்டுகுடி, எஸ்.பி.பட்டிணம், வெள்ளையபுரம், மங்களக்குடி ஆகிய துணை சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவர்கள் கௌதமன், டார்லிங்டன், அல்ஷிபா ஆகிய மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம்பரிதி, சந்தானம் உட்பட சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், என ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டி முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.
- மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு.
- 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
பெருமாநல்லூர் :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்கா செங்கபள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மற்றும் ஸ்ரீ குமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளிகளின் 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி ரெயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி வரவேற்றுப் பேசினார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். சிறப்பு அழைப்பாளராக தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ராஜசேகர் கலந்துகொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
- 8 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
- திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர்.
சீர்காழி:
சீர்காழியில் போலிஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுமைதாநத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமைவகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், விவேகானந்தா கல்விநிறுவனங்களின் தலைவர் கே.வி.இராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கிவைத்தார்.இதில் 8அணிகள் பங்கேற்று விளையாடினர்.மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அணியும், திருவெண்காடு யூத் கிளப் அணியும் இறுதிபோட்டியில் விளையாடினர்.இதில் 25க்கு23,25க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். காவல்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோப்பையை வழங்கினார்.
- கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
- செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு பூங்கா திகழ்ந்து வருகிறது.
இந்த பூங்காவில் காலை மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அலை மோதி வரு கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண் டார்.
இதையடுத்து பூங்கா வில் இருந்த விளை யாட்டு உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டது.பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வசதி யாக செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் சிறுவர்களுக்கான ராட்டினங்களும் அமைக்கப் பட்டு உள்ளது.
இந்த ராட்டினங்களில் ஏற கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதி வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக இந்த ராட்டி னங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கட்டணங்களும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதே போல் மேலும் சில விளையாட்டு உபகர ணங்களை பூங்காவில் அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் பாழடைந்து மோசமாக காணப்படுகிறது. அதனை செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
- பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம்.
- பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் பெரியண்ணன் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு புதிய பூங்காவினை திறந்து வைத்தார். இந்த பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், ஊஞ்சல், சரக்கு ஏற்ற, இறக்க மரம் போன்ற பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.
விழாவில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, பாபநாசம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்திவாசன், சமீராபர்வீன், பிரேம்நாத் பைரன். பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலெட்சுமி, கோட்டையம்மாள், மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி–யில் 8 ஆம் ஆண்டு விளை–யாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை தாங்கி விளையாட்டு போட்டி–களை தொடங்கி வைத்தார். துணைத் தலை–வர் மோகன–சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு தடகள விளை–யாட்டு போட்டிகள், அணி–வகுப்புகள் நடந்தது. விழாவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா கலந்து–கொண்டு போட்டிகளில வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்பாது அவர் பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என எல்லோருக்கும் பிரச்சினை உள்ளது. அதைக்கண்டு பின்வாங்காமல் கையாளும் அணுகு முறையில் தான் நம் வாழ்க்கையில் சாதனை–யாளராக ஆக முடியும். எந்த ஒரு செயலிலும் விதிமுறையை மீறாத பழக்கம் வளர்த்துக்கொண்டு வரும் மனநிலை இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அமைவதோடு நாம் என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதை அடைந்து விடலாம் என்றார். இதில் சிறப்பு விருந்தி–னராக திருச்சி மின்வா–ரிய பொருளாதார கட்டுப்பட்டாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளா–கத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர்கள் சந்திரோதயம், ராஜேந்திரன், விளையாட்டு அலுவலர்கள் பிரபு, ராஜ் குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து–கொண்டனர். முன்னதாக முதல்வர் ஹேமா வரவேற்றார். முடி–வில் துணை முதல்வர் சாரதா நன்றி கூறினார்.
- மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் இணைந்து போட்டியை நடத்தியது.
- மேலும், அவர் மாணவர்களோடு ேடபிள் டென்னிஸ் விளையாடினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியை நடத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஹெர்பர்ட் ஜோன்ஸ் வரவேற்றார்.
புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெரோம் அடிகளார், மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் செயலர் அண்ணாமலை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைவர் கிளமெண்ட் அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் மாணவர்களோடு மேபிள் டென்னிஸ் விளையாடினார்.
இந்த நிகழ்ச்சியை எழுத்தாளர் தஞ்சை ராமதாசு தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் பால்பிண்டோ நன்றி கூறினார்.
- தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்க ண் குழுக் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் தலைமை கொறடா கோவி செழியன் பேசியதாவது:-
உண்மைக்கு புறம்பான வழக்குகள், முந்தைய கூட்டத்தில் இறுதி
செய்யப்படாதவை, உண்மைக்கு புறம்பான வழக்குகள், புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள் மொத்த வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள , விசாரணை முடிவுற்ற வழக்குகள்,
தீருதவித்தொகை நிலுவை, தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள்கு றித்து பொருள் விவாதிக்கப்பட்டது.
விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதுடன் தேவையான கட்டமைப்புகள், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலகம், போட்டி தேர்வுக்கான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு தலைமை கொறடா கோவி செழியன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சத்தியமங்கலம் சுபசக்தி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கபட்டது
குளித்தலை:
குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் உள்ள சுபசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி தாளாளர் லதா சக்திவேல் வரவேற்புரையாற்றினார், சுபசக்தி . கல்லூரி தலைவர் இன்ஜினியர் சக்திவேல் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இயக்குனர் ரத்தினம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பி.எஸ்.என்.எல். முதன்மை பொறியாளர் ஓய்வு இரத்தினசாமி கலந்து கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 1000 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.
- சிறப்பாக பணிபுரிந்த 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
- 155 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். விளையாட்டு துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தடகள மற்றும் கைப்பந்து போட்டிகளில் பரிசு பெற்ற 6 வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட நிர்வா கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் இருந்தார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் மூவர்ண பலூன்களை கலெக்டர் அரவிந்த் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகி யோர் வானில் பறக்க விட்ட னர்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய 18 போலீசாருக்கு நற்சான்றி தழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 120 மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தோட்டக் கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 77 ஆயிரத்து 400 நிதி உதவி யையும் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.முன்னாள் படை வீரர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வருவாய் துறை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 23 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 62 ஆயிரத்து 530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கி னார். அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வருவாய்த்துறை, நக ராட்சி, பேரூராட்சி, மருத்து வம், தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை துறை, மின்சார வாரியம், உணவு பாதுகாப்பு துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 155 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கி னார். விளையாட்டு துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தடகள மற்றும் கைப்பந்து போட்டி களில் பரிசு பெற்ற 6 வீராங்கனைகள் கவுர விக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. 12 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி, ராஜகுமாரி சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் குணால் யாதவ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ், ஏ.டி.எஸ்.பி.க்கள் ஈஸ்வரன், ராஜேந்திரன், டி.எஸ்.பி. நவீன்குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.