search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு"

    • உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.
    • சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிஸ்னஸ் கைமாறுகிறது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன் லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடைப்பட்ட காலத்தில் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன் 97 நிறுவனம் மற்றும் பே.டி.எம். நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    அதன்படி சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிசினஸ் கைமாறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக ஆன்லன் டிக்டிங் தொழில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தத்க்கது.

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
    • துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

    போட்டியின் 2-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீராங்கனை மனுபாகெர் வெண்கல பதக்கம் வென்றார். அவர் 221.7 புள்ளிகள் பெற்றார்.

    வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் மனுபாகெர் புதிய வரலாறு படைத்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

    ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான மல்லேஸ்வரி (பளு தூக்குதல்), சாய்னா நேவால் (பேட்மின்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), பி.வி.சிந்து (பேட்மின்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), மீரா பாய்சானு (பளு தூக்குதல்), லவ்லினா (குத்துச் சண்டை) ஆகியோருடன் மனுபாக்கர் இணைந்தார்.

    துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் விஜய் குமார் (வெள்ளி), ககன்நரங் (வெண்கலம்) பதக்கம் பெற்றனர். ரியோடி ஜெனீரோ, டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் கிடைக்கவில்லை. தற்போது இந்தப் போட்டியில்தான் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடங்கியது.


    ஒட்டு மொத்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 5-வது பதக்கம் கிடைத்தது.

    மனுபாகெரை தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இன்று மேலும் பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் ரமிதா ஜின்டல், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றனர். இதில் ரமிதா 631.5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அடைந்தார். முதல் 8 இடங்கள் வரையே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

    இதே போல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அர்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். மற்றொரு இந்தியரான சந்தீப்சிங் 629.3 புள்ளிகளு டன் 12-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

    ரமிதா மோதும் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. அர்ஜுன் பபுதா விளையாடும் இறுதி சுற்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இருவரும் பதக்கம் பெறுவார்களா? என்று ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இதே போல ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவிலும் பதக்கம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    தருணதீப்ராய், தீரஜ் பொம்ம தேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் பங்கேற்கிறது. தர வரிசையில் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி கால் இறுதி, அரை இறுதியில் வெற்றி பெற்று பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது.
    • நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின.

    யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இரண்டு அணிகளும் தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.

    தரவரிசை பட்டியலில் ஜெர்மனி அணி 6 புள்ளிகளிலும், சுவிட்சர்லாந்து அணி 4 புள்ளிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கத்து. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். ஆட்ட முடிவில் இரு அணியும் தலா 1 கோல் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் ஜெர்மனி சுவிட்சர்லாந்து அணியைவிட முன்னிலையில் இருக்கிறது.

    • குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.
    • 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.

    இப்போட்டியில், 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து பரிதாபமாக வெளியேறியது.

    முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் போலந்து தோல்வியடைந்தது. மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் போலந்து வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    இதில் குரூப் E பிரிவில் ஸ்லோவாக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியின் மைகோலா 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன்பின் 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக் இன்னொரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி உக்ரைன் வெற்றி பெற்றது.

    இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால் அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாகியா அணி மோதின. போட்டியில் முதல் கோலை ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் அடித்தது.

    இதையடுத்து பெல்ஜியம் அணியால் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இந்த போட்டியில் ஸ்லோவேகியா அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் க்ரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும்.ஸ்டனீஸ்லாவ்  ரொபொட் ஆட்ட நாய்கனாக் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் டி பிரிவில் ஆஸ்டிரியா மற்றும் ஃப்ரான்ஸ் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோலை அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுப்பிடித்து 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்டிரியாவை வீழ்த்தியது பிரான்ஸ்.

    கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    உலக கோப்பை கால் பந்துக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை (யூரோ) போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐரோப்பிய கால்பந்து

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவரை 16 தொடர் முடிந்துள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. ஜூலை 14 வரை 1 மாதகாலத்துக்கு இந்த திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

    ஜெர்மனி, ஸ்காட்லாந்து, அங்கேரி, சுவிட்சர்லாந்து (குரூப் ஏ), ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா (பி), சுலோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து (சி), நெதர் லாந்து, பிரான்ஸ், போலந்து, ஆஸ்திரியா ( டி), பெல்ஜியம், சுலோவாக்கியா, ருமேனியா, உக்ரைன் (இ ), போர்ச்சுக்கல், செக் குடியரசு, துருக்கி, ஜார்ஜியா (எப்).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும். 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். 2-வது ரவுண்டில் 16 அணிகள் விளையாடும்.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    26-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 29-ந் தேதி நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. ஜூலை 9 மற்றும் 10-ந் தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந் தேதியும் நடக்கிறது.

    பெர்லின், முனிச், டார்ட்மன்ட், ஸ்டட்கர்ட், ஹம்பர்க் உள்பட 10 நகரங்களில் மொத்தம் 51 போட்டிகள் நடக்கிறது. இதனால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    • 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிசுற்றுப் போட்டிகள், தற்போது நடைபெற்று வருகின்றன.
    • கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 37-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லல்லியன் சுவாலாசாங்டேஸ் கோல் அடித்தார்.

    2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிசுற்றுப் போட்டிகள், தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இரண்டாவது கட்ட தகுதிசுற்றுப் போட்டியில், இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதின.

    கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 37-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லல்லியன் சுவாலாசாங்டேஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் இந்தியா முன்னிலை பெற்றது.ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், கத்தாருக்கு சர்ச்சைக்குரிய வகையில் கோல் வழங்கப்பட்டது. இந்தியாவின் கோல் போஸ்ட்டிற்கு வெளியே, எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை உள்ளே இழுத்து, கத்தாரின் யூசுப் அய்மன் கோல் அடித்தார். கோட்டைத் தாண்டினால் பந்து OUT OF PLAY ஆகும். இருப்பினும் கத்தாருக்கு கோல் வழங்கப்பட்டது.

    இந்த சர்ச்சைக்குரிய கோல் காரணமாக, ஆட்டம் சமன் ஆன நிலையில், 85-ஆவது நிமிடத்தில் கத்தார் 2வது கோலை அடித்தது. இதன் பின்னர் கோல் அடிக்க முடியாத இந்தியா, 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து, உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இந்திய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சர்ச்சைக்குள்ளான கோல் குறித்து விசாராணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கால்பந்து அணி தலைவரான கல்யான் சௌபே, FIFA தலைவர், AFC நடுவர்கள், AFC போட்டி தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.
    • இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இதில் முன்னணி வீரர்களின் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

    பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்து விளையாடினார்கள். ஆனாலும் கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.

    இறுதியில் அவர் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 21 வயதில் க்ளே, கிராஸ் அண்ட் ஹார்ட் எனற மூன்று தளத்திலும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நபர் கார்லோஸ் அல்காரஸ் ஆவார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டில் விம்பில்டன் ஃபைனல் பட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு யூ.எஸ் ஓபன் ஃபைனல் பட்டத்தையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஐ.பி.எல் தொடரில் 14 ஆட்டங்களில் ஆடிய டோனி 161 ரன்களை எடுத்துள்ளார்.
    • அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

    இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் டோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது.

    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    ஆனால் இதுவரை டோனியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

    அதில், "எனக்கு அது தெரியாது. இதற்கான பதில் எம்.எஸ்.டோனிக்கு மட்டும் தான் தெரியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் மரியாதை தருவோம். அவர் சம்பந்தமான முடிவுகளை எப்போதும் அவர் தான் எடுப்பார். சரியான சந்தர்ப்பங்களில் அந்த முடிவுகளை அவர் தெரிவிப்பார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் என்னுடைய விருப்பமும் ரசிகர்களின் விருப்பமும் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்டதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    • நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார்.
    • ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.

    நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    போட்டி முடிந்து தோனி விராட் கோலிக்கு கை குழுக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் தோனிக்கு இதுதான் ஐபிஎல் போட்டியில் கடைசியாக விளையாடுவது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

    அதனால் நாம் தோனியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் . ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    ×