search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223236"

    • சாலை விபத்துக்கள் அதிகமாக தினமும் நடைபெறுகின்றன.
    • பொதுமக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை சாலையில் அதிகமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருமருகலை சுற்றியுள்ள சுமார் 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்த சந்தைப்பேட்டை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிவேகத்திலும் கட்டுபா டின்றி செல்வதாலும், சாலை விபத்துக்கள் அதிகமாக தினந்தோறும் நடை பெறுகின்றன.

    பொதுமக்கள் அனை வரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

    பொதுமக்கள் நலன் கருதியும்,சாலை விபத்து ஏற்படாமல் இருப்ப தற்கும்,அரசு மருத்துவமனை அருகில் வேகக்கட்டுப்பாட்டு தடையும், சந்தைப்பேட்டை சாலையிலும், அண்ணாமலை நகர் சாலையும் சந்திக்கும் இடத்தில் வேகக்கட்டுப்பாட்டு தடையும் அமைத்து தரும்படி பொதுமக்கள் சார்பாகவும், திருமருகல் வர்த்தகர்கள் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரத்தை உறுதி செய்ய ஒன்றியம் வாரியாக தொழில்நுட்ப உதவியாளர்களை அரசு நியமித்துள்ளது.
    • புதிதாக கிராமப்புற இணைப்பு ரோடுகளை அமைக்க உள்ளது.

    திருப்பூர் :

    கிராம சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை கண்காணித்து, தரத்தை உறுதி செய்ய ஒன்றியம் வாரியாக தொழில்நுட்ப உதவியாளர்களை அரசு நியமித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், கிராமங்களில், பல்வேறு திட்டங்களில், கிராமப்புற ரோடுகள் அமைக்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக அரசு, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில், புதிதாக கிராமப்புற இணைப்பு ரோடுகளை அமைக்க உள்ளது. இப்பணிகளில், தொய்வு ஏற்படுவதை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு வட்டாரத்துக்கு, 2 தொழில்நுட்ப உதவியாளர் நியமிக்க, அரசு உத்தரவிட்டது.

    அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக முறையில், 30 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில், ஒன்றியத்தில், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • கோல்டன் நகா் சாலை போதிய பராமரிப்பில்லாமல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
    • பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சி, கோல்டன் நகா் சாலை போதிய பராமரிப்பில்லாமல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதனை கோல்டன் நகா் கிளை செயலாளா் பிரனேஷ் தொடங்கி வைத்தாா். இதில், வாலிபா் சங்க வடக்கு மாநகரச் செயலாளா் விவேக், வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா்கள் பிரவீன்குமாா், சீனிவாசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா் மனோகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது.
    • பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு ஏதும் இன்றி வறண்ட வானிலை நிலவி வந்தது. பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நகர் முழுவதும் அனல் காற்று வீசியது.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை இரவு) திடீரென இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல், எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை பகுதியில் எடப்பாடி-சேலம் பிரதான சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நகரின் பல இடங்களில் மின் பாதைகளில் பழுது ஏற்பட்டதால் தொடர்ந்து நள்ளிரவு வரை நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    • சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வாகனம் மோதி விட்டது.
    • சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடி குமுளை அருகே பைபாஸ் சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை கோட்டம், வேதாரண்யம் உட்கோட்ட த்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை திருச்சி, நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் விஜயலெட்சுமி தலைமையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் தரம் குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது, தஞ்சாவூர், நெடுஞ்சாலை த்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டப்பொ–றியாளர் நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    • தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • வெள்ளமடம் பகுதியில் இன்று மீண்டும் விபத்து

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் முக்கியமான பகுதியாக ஆரல்வாய்மொழி உள்ளது. இங்குள்ள வெள்ளமடம், குமாரன்புதூர், சகாய நகர் பகுதியில் வளைவுகள் அதிகம் உள்ளன.

    இதனால் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஆடல்-பாடல் குழுவினர், திருச்செந்தூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது, சகாயநகர் பகுதியில் வேன் விபத்தில் சிக்கியது. சாலையின் எதிர்புறம் பாய்ந்த வேன் அரசு பஸ் மீது மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, விசுவாசபுரம், சகாய நகர் விலக்கு, குமரன் புதூர், வெள்ள மடம் ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே சிமெண்ட் கல் கொண்டு தடுப்புகள் (சென்டர் மீடியன்) அமைத்தனர். இதனால் விபத்துக்கள் குறையும் என கருதப்பட்டது. ஆனால் பாதுகாப்பு என வைக்கப்பட்ட தடுப்பு விபத்துக்கு மேலும் காரணமாக அமைந்து விட்டது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி வந்த வேன், மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் போன்றவை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நடந்த சூழலில் இன்று மற்றோரு வாகனமும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதன் டிரைவர் பலியாகி விட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை ஒரு பால்வண்டி புறப்பட்டது. அதனை மேலநத்தம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் நம்பிபாலன் (வயது27), ஓட்டி வந்தார்.கிளீனராக யேசுராஜ் இருந்தார். இந்த வேன் வெள்ள மடம் அருகே உள்ள விசுவாசபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் சென்ற வேன், தடுப்பு சுவர் கல்லில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனை பார்த்த பலரும் அங்கு ஓடிவந்து மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் வேனை அவர்களால் மீட்க முடியவில்லை. வேனின் அடியில் சிக்கிக் கொண்ட டிரைவர் மற்றும் கிளீனர் கூச்சலிட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆரல்வாய் மொழி போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து சுமார் 1½ மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த வேனை நிமிர்த்தினர். ஆனால் அதற்குள் டிரைவர் நம்பிபாலன் பரிதாபமாக இறந்து விட்டார். கிளீனர் யேசுராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    பலியான நம்பிபாலனுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலைய தலைமை காவலர் ராபின் வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்துக்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் தொடர் விபத்துக்களுக்கு காரணமாகி வருவது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மையத்தடுப்புகளில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் ஸ்ரீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவா் சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அவினாசி:

    அவிநாசி நகர பாஜக. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரத் தலைவா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் ஸ்ரீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவா் சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொதுசெயலாளா் மோகன் வரவேற்றாா். கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் லியாகத்அலி பேசினாா்.

    இதில் அவிநாசியில் போக்குவரத்து நெருக்கடி, தொடா் விபத்துகளை தடுக்க உடனடியாக அவிநாசி-சேவூா் சாலை சந்திப்பில் இருந்து பட்டறை பேருந்து நிறுத்தம் வரை சாலையை அகலப்படுத்தி மையத்தடுப்பு அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படும் கோவை பிரதான சாலை அவிநாசி அரசுக் கல்லூரி முதல்-முத்துச்செட்டிபாளையம் பிரிவு வரை மையத்தடுப்புகளில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகரப் பொருளாளா் ரமேஷ்குமாா் நன்றி கூறினாா். 

    • சாலை அமைக்க பூமிபூைஜ நடந்தது.
    • ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரூபி, துணைத் தலைவர் சுலைமான், ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு, தலைமை மருத்துவர் அசோக், வார்டு உறுப்பினர் நாகநாதன், பெரியாள் என்ற முனியசாமி, மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், தி.மு.க. தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார் கவுன்சில் நிதியில் இருந்து ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
    • சாலையை விரிவாக்கம் செய்து உயர்ந்த தரத்துடன் முழுமையாக சீரமைக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சி களில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பரசேரி - திங்கள்நகர் - புதுக்கடை சாலை கடைசியாக 2016-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த சாலையின் நடுப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தின் ராட்சத சிமெண்ட் குழாயில் நீர் அழுத்தத்தால் ஏற்படும் உடைப்புகளாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது.

    இந்த சாலை மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து சாலை. இந்த சாலையில் பரசேரி-–திக்கணங்கோடு, திக்கணங்கோடு-–கருங்கல் என இரு கட்டங்களாக சாலைகள் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    ஆனால், மிகவும் பழுதடைந்துள்ள கருங்கல்-புதுக்கடை சாலை எந்த திட்டத்திலும் இதுவரை சேர்க்கப்படவில்லை. ஆகவே, கருங்கல்-– புதுக்கடை வரை சாலையை விரிவாக்கம் செய்து உயர்ந்த தரத்துடன் முழுமையாக சீரமைக்க வேண்டும்.

    ஏழுதேசம் மற்றும் ஆறுதேசம் கிராமங்கள் வழியாக செல்லும் கன்னியாகுமரி பழைய உச்சக்கடை சாலை கணபதியான்கடவு முதல் விரிவிளை வரையுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வள்ளவிளை –எடப்பாடு– இரவிப்புத்தன்துறை சாலை மற்றும் முள்ளூர்துறை-அரையன்தோப்பு-தேங்காப்பட்டணம் சாலை ஆகிய 2 சாலைகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கடல் சீற்றத்தால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சாலைகளும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் மிகமுக்கியமான சாலைகளாகும். இந்த 2 சாலைகளையும் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து நிரந்தரமாக சாலை சீரமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை எண் 21 -ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரு வருடம் முடிந்த பிறகும் இதுவரை கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகவே கடல் சீற்றம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் நலன்கருதி கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து இந்த 2 சாலைகளையும் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முஞ்சிறையிலிருந்து மங்காடு வழியாக கோழிவிளை செல்லும் மங்காடு சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே, மங்காடு சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு பணி நிமித்தமாக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் போது அவர்கள் தங்குவதற்காக எந்தவித வசதியும் இல்லை. இதனால் அவர்கள் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவிலில் உள்ள அரசு பயணிகள் விடுதியில் தங்க வேண்டிய நிலை காணப்படு கிறது. ஆகவே கிள்ளியூர் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கோ ரிக்கை களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் திருவட்டார் தெற்கு ஒன்றியம் ஆற்றூர் பேரூ ராட்சிக்குட்பட்ட ஆற்றூர் புளியமூடு முதல் ஞாறாகுளம் பள்ளிக்குழி விளை வரை செல்லும் சாலை மிகவும் மோச மடைந்து காணப் பட்டது.

    அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக பால்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.89.5 லட்சம் மதிப் பீட்டில் தார் சாலை அமைக்க நிதி பரிந்துரைக்க ப்பட்டது.

    இந்த சாலை பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ஆற்றூர் பேரூர் செயலாளர் சோழராஜன் தலைமை தாங்கினார். ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், துணை தலைவர் தலைவர் தங்க வேல், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் றூஸ், திருவட்டார் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர் ஆன்றனி, வார்டு கவுன்சிலர்கள் ஜேம்ஸ், பாபுராஜ், கவி, ராஜகுமாரி மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது. ஏழை மாணவனுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது.

    • கண்மாய் மடை நீர் செல்ல சாலையில் பாலம் அமைக்க வேண்டும்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்டத்தை சேர்ந்த குருக்கள்குளம், வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், தெய்வேந்திரி, தைலாகுளம், சிங்கம்மாள்புரம் அத்திகுளம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலப்பதிவு, நில நிர்வாகம், வருவாய்த் துறை தொடர்பான 115 கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர்.

    தெய்வேந்திரி, சோளங்குளம், நொச்சிகுளம் கண்மாய் நீரை பயன்படுத்து வோர் சங்க தலைவர் தேவப்பிரியம் அளித்த மனுவில், 'மதுரை- கொல்லம் 4 வழி சாலை பணிக்காக தெய்வேந்திரி குளத்தின் பாசன நிலங்களை அரசு கைய கப்படுத்தி உள்ளது.

    இந்த சாலையின் குறுக்கே செல்லும் தெய்வேந்திரி கண்மாய் நடுமடை, வடக்கு மற்றும் தெற்கு மடை ஆகிய 3 மடைகளின் கால்வாய் களில் சிறு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. ஆனால் இந்த மடைகள் மூலம் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தண்ணீர் செல்ல வேண்டியுள்ளது. அதனால் குழாய்கள் அமைத்தால் நீரின் அளவு குறைந்து பாசனம் தடைபட வாய்ப்புள்ளது.

    3 கால்வாய்களிலும் உள்ள சிறிய வாய்க்கால்களை அடைத்து விடாமல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    தென்னை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளைர் முத்தையா அளித்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகதோப்பு பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு செல்பவர்களிடம் வனத்துறை ஒரு நபருக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

    விவசாயிகள் மற்றும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×