என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை வழக்கு"

    • 2017ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
    • சிறுமி வசித்து வந்து குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யபட்டு, நீதிமன்றம் தூக்கத்தண்டனை வழங்கியது.

    2017ஆம் ஆண்டு சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்-ஐ அவரது தந்தை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். அதோடு வீட்டையும் குன்றத்தூருக்கு மாற்றினார்.

    இதனிடையே தனது செலவுக்கு பணம் தராததால், தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான். சென்னை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தஷ்வந்த்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 2018ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கியது. தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

    • அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.
    • அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அப்பலநாயுடு-ஜெயம்மா. இவர்களது மகன் ராஜசேகர்.

    இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராஜசேகர் விற்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் ராஜசேகர், பெற்றோர் என்றும் பார்க்காமல் அப்பலநாயுடுவையும், ஜெயம்மாவையும் டிராக்டரை ஏற்றி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    சொத்து தகராறில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அழுதுகொண்டே, தனது தந்தையை யாரோ கொன்றுவிட்டதாகவும், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.
    • கைது செய்யப்பட்ட சிறுமி சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    சத்தீஸ்கரில் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஜஷ்பூர் மாவட்டத்தில், பாக்பஹார் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 50 வயது நபர் கடந்த ஏப்ரல் 21 இரவு ஆம் தேதி தனது வீட்டில் கோடரியால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.

    அந்த நபரின் 15 வயது மகள் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அழுதுகொண்டே, தனது தந்தையை யாரோ கொன்றுவிட்டதாகவும், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.

    தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கியது. சிறுமியின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த போலீஸ், தாயின் முன்னிலையில் சிறுமியை விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டுள்ளது.

    சிறுமியின் வாக்குமூலத்தின்படி, தந்தை தினமும் மது போதையில் சிறுமியையும், தாயாரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். ஏப்ரல் 21 ஆம் தேதி தாய் வெளியே சென்றிருந்த நிலையில் இரவு 9 மணியளவில் குடிபோதையில் வீடு திரும்பிய தந்தை சிறுமியை அடிக்கத் தொடங்கினார். கோபத்தில், வீட்டில் வைத்திருந்த கோடரியால் தனது தந்தையின் தலையில் சிறுமி தாக்கியதன் விளைவாக அவர் உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று (வியாழக்கிழமை) சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    • ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்.
    • அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.

    டெல்லியின் சீலம்பூரில் வியாழக்கிழமை மாலை பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் குணால் என்ற 17 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டெல்லி காவல்துறை, இளம் பெண் தாதா ஜிக்ராவை கைது செய்துள்ளனர்.

    ஜிக்ரா தன்னுடைய உறவினரான சாஹிலுடன் சேர்ந்து, பழி வாங்கும் ஒரு பகுதியாக இந்த கொலையை செய்திருக்கிறார்.

    2023-ம் ஆண்டு நவம்பரில் சாஹிலை மீது கொலை முயற்சி நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் லாலா மற்றும் ஷம்பு என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் குணாலின் நெருங்கிய நண்பர்கள். சிறுவன் என்பதற்காக குணால் பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் இல்லை. குணாலே திட்டமிட்டு சாஹில்- ஐ கொலை செய்ய முயன்றதாக ஜிக்ரா நினைத்துள்ளார். இதனால் அவர் தற்போது சாஹில் உடன் சேர்ந்து குணாலை கொலை செய்துள்ளார்.

    ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார். ஆயுதங்களுடனும், இந்த சிறுவர்களுடனும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.

    ஜோயா என்பவருக்கு பவுன்சராகவும் ஜிக்ரா வேலை செய்து வந்திருக்கிறார். ஜோயா தற்போது சிறையில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜிக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.  

    • அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது.
    • 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள பிரவீனின் உடல் மார்ச் 28 இல் அழுகிய நிலையில் சாக்கடை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

    அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ரவீனாவுக்கு சுரேஷ் என்பவருடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் -இல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    ரவீனா - சுரேஷ் இருவரும் இணைத்து ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

    கணவன் பிரவீன் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ரவீனா சுரேஷுடன் இணைந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யூடியூபில் இயங்கி வந்துள்ளார். அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது.

    இதற்கிடையே கணவன் பிரவீன், கடந்த மார்ச் 25 ஆம் தேதி ரவீனா சுரேஷுடன் அந்தரங்கமான நிலையில் இருப்பதை கண்டுள்ளார். இதனால் இருவருடனும் பிரவீன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவீனா மற்றும் சுரேஷ் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

    பின் பைக்கில் உடலை கொண்டு சென்று, 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள சாக்கடையில் வீசியுள்ளனர்.  மார்ச் 28 இல் அழுகிய நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.

    அதன்பின் போலீசார் சிசிடிவியை ஆராய்ந்ததில் உண்மை வெளிப்பட்டது. இதன்பின் நடந்த விசாரணைக்குப் பின் இருவரும் தற்போது கைது செய்துள்ளனர். பிரவீன் - ரவீனாவின் 6 வயது மகன் அவனது தாத்தாவின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளான்.

     

    • இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
    • இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன்.

    தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள சோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்டபு பிரேம்சாகர் (வயது 35).

    இவரும், தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ், சாகர் ஆகியோர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி என்ற கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தான் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வாலிபர் வாளால் 3 இந்தியர்களையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் அஷ்டபு பிரேம்சாகர், சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். சாகர் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துபாயில் 2 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறும்போது, தெலுங்கானாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள், துபாயில் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முழு ஆதரவையும், உடலை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார், இந்த விஷயத்தில் விரைவான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் பாடுபடும் என்றார்.

    கொல்லப்பட்ட பிரேம்சாகர் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    • கொடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வருமாறு அஞ்சலியிடம் சிவேந்திரா கூறியுள்ளார்.
    • அவரது உடலை தீவைத்து எரித்து, பாதி எரிந்த உடலை யமுனை ஆற்றில் வீசியுள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சலி (வயது 28). கணவனை இழந்த அஞ்சலிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அஞ்சலி தான் வசித்துவந்த பகுதியில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அதேபகுதியை சேர்ந்த சொத்து புரோக்கரான சிவேந்திரா யாதவ் (26) என்பவரிடம் பிளாட் நிலம் வாங்க 6 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

    பணத்தை வாங்கிக்கொண்ட புரோக்கர் சிவேந்திரா நிலத்தின் பத்திரத்தை அஞ்சலியிடம் கொடுக்காமல் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சிவேந்திராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், அஞ்சலிக்கும், சிவேந்திராவுக்கு பிரச்சினை ஏற்பட்துள்ளது.

    இந்நிலையில், கொடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வருமாறு கடந்த 7ம் தேதி அஞ்சலியிடம் சிவேந்திரா கூறியுள்ளார்.

    அன்றைய தினமே சிவேந்திராவின் வீட்டிற்கு அஞ்சலி சென்றுள்ளார். அங்கு பணத்தை திரும்ப தராமல் சிவேந்திர மற்றும் அவரது கூட்டாளி கௌரவ் (19) அஞ்சலியை தாக்கியுள்ளனர்.

    மேலும் அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, அவர் போதையானதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின் அவரது உடலை தீவைத்து எரித்து, பாதி எரிந்த உடலை யமுனை ஆற்றில் வீசியுள்ளனர்.

    சிவேந்திராவை பார்க்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி அன்று இரவுக்குள் வீட்டுக்கு திரும்பி வராதது குறித்து அஞ்சலியின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து மறுநாள் அவர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக சிவேந்திராவிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அஞ்சலியின் உடலை நேற்று (சனிக்கிழமை) ஆற்றின் அருகே மோசமான நிலையில் கண்டெடுத்தனர். இதைத்தொடர்ந்து சிவானந்தா மற்றும அவரது கூட்டாளி கௌரவை போலீசார் கைது செய்தனர்.  

    • வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் கிடந்தன.
    • ஷபினா இவரின் இரண்டாவது மனைவி.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் ஒரு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இன்று போலீசார் தெரிவித்தனர்.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் முன்னர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் குழு கதவை உடைத்து பார்த்தபோது, அறைக்குள் ஷபினா மற்றும் அவரது மகள் இனயாவின் உடல்கள் இருப்பதைக் கண்டனர்.

    அவை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் ஷபினாவின் கணவர் ரஷீத்தை காணவில்லை. ஷபினா இவரின் இரண்டாவது மனைவி.

    ரஷீத் தனது மனைவியையும் வளர்ப்பு மகளையும் கொன்றுவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

    • ரஞ்சனா தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார்.
    • மோமோஸ் விற்கும் தெருக் கடையைத் தொடங்க விரும்பினார் .

    மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் கல்யாண் நகரின் அம்பிவாலி பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சனா பதேகர் (வயது 60). கடந்த மார்ச் மார்ச் 20 அன்று, ரஞ்சனா வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அக்பர் முகமது ஷேக் சந்த் (30) என்பவரால் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சம்பவத்தன்று, அக்பர், ரஞ்சனாவின் வீட்டுக் கதவைத் தட்டி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். ரஞ்சனா தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார்.அவர் தனியாக இருப்பதை அறிந்த அக்பர் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி வால்யூமை சத்தமாக வைத்துவிட்டு, ரஞ்சனாவின் கழுத்தை நெரித்து அக்பர் கொலை செய்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க காதணிகளுடன் அவர் தப்பிச் சென்றார்

    அக்பர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தர்வாடி சிறையில் இருந்து 8 மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டவர். அன்றிலிருந்து அவர் வேலையில்லாமல் இருந்தார்.

    மோமோஸ் விற்கும் தெருக் கடையைத் தொடங்க விரும்பினார் விரும்பிய அவர் இந்த ரஞ்சனாவை கொலை செய்து நகைகளுடன் தப்பியது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அட்டாலி பகுதியில் அக்பர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதாகவும் கடக்பாடா காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அமர்நாத் வாக்மோட் தெரிவித்தார்.

    • இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.
    • சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மனைவியை மக்கள் முன்னிலையில் கணவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளியைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி கிருஷ்ணப்பா (43 வயது). இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சாரதா வேலை முடித்து வீட்டுக்கு வரும் வழியில் கிருஷ்ணப்பா காத்திருந்தார். அவர் வந்ததும், சாலையில் வைத்தே தனது மனைவியின் கழுத்தை கிருஷ்ணப்பா அறுத்து கொலை செய்தார்.

    சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து ஓட முயன்ற அவரை பிடித்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் சாரதாவின் உடலை மீட்டு, கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.

    • மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.
    • அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகித்து அவரை கணவன் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் அஸ்மா கான் (44 வயது). நொய்டாவில் செக்டார் 15 இல் தனது கணவன் நூருல்லா ஹைதர் (55 வயது) மற்றும் ஒரு மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் வைத்து மனைவியில் தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, அஸ்மாவுக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாக ஹைதர் சந்தேகித்தார். இந்த சந்தேகத்தின் காரணமாக, அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார். மேலும் தம்பதியினரிடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தன.

    இதன் உச்சமாக நேற்று காலை 5 மணியளவில் அவர் மனைவியை கொலை செய்தார். தனது தாய் கொலை செய்யப்பட்டதாக மகன் உறவினர்களுக்கு போன் மூலம் கூறியுள்ளான். அவர்கள் அங்கு வருவதற்குள் கணவனே நேரடியாக போலீசில் சரணடைந்துள்ளார். 

    • அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது
    • உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

    பஞ்சாபை சேர்ந்த 17 வயது சிறுவன் வைத்திருந்த ஐபோன் 11க்காக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நவ்ஜோத் சிங். மார்ச் 24 அன்று நவ்ஜோத்தின் பிறந்தநாள். அதற்கு அடுத்த நாள் மார்ச் 25 அன்று தனது நண்பர்களுடன் ஹரித்வார் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

    ஆனால் சிறிது நேரம் கழித்து தான் ஹரித்வார் செல்லவில்லை என்றும், மீண்டும் வீட்டுக்கு திரும்புவதாகவும் பெற்றோரிடம் போன் செய்து கூறியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

    அதே இரவு ரயில் நிலையத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மார்பில் பல வெட்டுக் காயங்கள் இருந்தன. உடலை அடையாளம் காண முடியவில்லை.

    உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதற்கிடையே மார்ச் 30 அன்று, ஹர்ஜிந்தர் சிங் தனது மகனைத் காணவில்லை என போலீசிடம் சென்றுள்ளார். அதன்பின் அந்த உடல் நவ்ஜோத் சிங் உடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், நவ்ஜோத் அவரது நண்பர் அமன்ஜோத்தால் கொலை செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தனர். காரணம் நவ்ஜோத்தின் ஐபோன்-11. நவ்ஜோத்தை கொலை செய்து மற்றொரு நண்பன் உதவியுடன் உடல் ரெயில் பாதையில் கிடத்தப்பட்டுள்ளது. நவ்ஜோத்தின் மொபைலை அமன்ஜோத்திடமிருந்து போலீசார் மீட்டனர். அமன்ஜோத் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ×