என் மலர்
நீங்கள் தேடியது "டிரைவர் கொலை"
- கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிரபல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கீரப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது27) என்பவர் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிகண்டனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை.
கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார்.
மதுரை:
மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணக்குமார் (வயது 29). கோவையில் உள்ள கண்ணாடி கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார்.
நேற்று மதியம் தத்தனேரி பகுதியில் இருந்து வைகை வடகரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சரவணக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால், காரில் வந்த ஒரு கும்பல் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து கிடந்த சரவணக்குமாரை, காரில் வந்த 5 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சரவணக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சரவணக்குமாரை பிரிந்து சென்ற அவரது மனைவி பரத் என்பவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார். இது மனைவி குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணக்குமாரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. குழந்தையை கேட்ட விவகாரத்தில் அவரது மனைவி குடும்பத்தினர் சரவணக்குமாரை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படும் பரத் மற்றும் வல்லரசு உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரவணக்குமார் கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார்.
- ராஜூவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடந்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர், நரசிம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது30). கார் டிரைவர். அதேபகுதியில் வசித்து வந்த இவரது மாமனார் உடல்நலக் குறைவால் இறந்துபோனார். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பார்த்திபன் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பார்த்திபனின் நெருங்கிய உறவினரான எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பாண்டியன் என்கிற ராஜூ என்பவர் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதத்தால் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து ராஜூவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
+2
- கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை கிராமம் மாட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 53). டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய லாரியில் மணி டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த 8-ந்தேதி கசுவரெட்டிப்பட்டியில் உள்ள கிணற்றில் மணி பிணமாக மிதந்தார். அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது. தாரமங்கலம் போலீசார், உடல் பாகங்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
போலீசாரின் அதிரடி விசாரணையில், மணியின் நெருங்கிய நண்பரான தாரமங்கலம் அருகே உள்ள கருக்கப்பட்டி பகுதியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ் (வயது 55) என்பவர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம் வருமாறு:-
நான், மரங்கள் அறுத்து அவற்றை லாரிகளில் அனுப்பும் தொழில் செய்து வருகிறேன். கொலையுண்ட மணியும், நானும் மற்றும் துட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் நண்பர்கள். நாங்கள் தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய தோட்டத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். நாங்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.
வழக்கம்போல் கடந்த 7-ந்தேதி 3 பேரும் சேர்ந்து, பன்றிக்கறி சமைத்து எடுத்துச் சென்று எனது வீட்டில் வைத்து மது குடித்தோம். சிறிது நேரத்தில் சக்திவேல் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் நானும், மணியும் தொடர்ந்து மது குடித்தோம்.
அப்போது போதையில் எனது மனைவி குறித்து தவறாக பேசினார். அதனை கண்டித்தும் கேட்காமல் ஆபாசமாக பேசினார். இதனால் எனக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து மணியின் பின்தலையில் தாக்கினேன். இதனால் மணி சரிந்து விழுந்தார். பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் கொலையை மறைக்க முழு உடலையும் துண்டு துண்டாக வெட்டி முடிவு செய்தேன்.
கத்தியை கொண்டு அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டினேன். அவற்றை அப்படியே எடுத்துச் சென்று வெளியே வீசினால் பொதுமக்கள் பார்த்து விடுவார்கள் என கருதி உடல் பாகங்களை 3 சாக்குமூட்டைகளில் போட்டு கட்டினேன்.
பின்னர் அந்த சாக்குமூட்டைகளை எடுத்து சென்று நாங்கள் பணியாற்றி வந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். மீண்டும் வீட்டிக்கு வந்து மது குடித்தேன்.
இரவு நேரத்தில் பயமாகி விட்டதால், எனது மகள் வீட்டிற்கு சென்று மருமகனிடம் சம்பவத்தை கூறி கதறினேன். மறுநாள் மதியம் கிணற்றில் வீசப்பட்ட உடல் பாகங்கள் மிதக்க தொடங்கியதால் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.
கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
- குழந்தைவேல் புதிதாக வீடு கட்ட உள்ளார்.
- சின்னசாமி தரப்பினர், குழந்தைவேலுவுடன் தகராறில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மல்லுார் அருகே பாரப்பட்டி தொட்டியங்காட்டை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 55). இவர் அரசு பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (62).
குழந்தைவேல் மற்றும் சின்னசாமியின் தந்தைகள் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு தலா 1.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால், குழந்தைவேல், சின்னசாமி இடையே வழித்தட பிரச்சனையால் முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் குழந்தைவேல் புதிதாக வீடு கட்ட உள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த மின் வழித்தடத்தை மாற்றி அமைக்க, நேற்று மாலை மின் கம்பத்துக்கு குழி தோண்டினார். அப்போது அங்கு வந்த சின்னசாமி தரப்பினர், குழந்தைவேலுவுடன் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, ஆத்திரம் அடைந்த சின்னசாமியின் தம்பி ராஜா, மண்வெட்டியால் குழந்தைவேலுவின் தலையில் வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் குழந்தைவேல் சரிந்து விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தைவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பாரப்பட்டி தொட்டியங்காடு பகுதியை சேர்ந்த குழந்தைவேல் உறவினர்களான ராஜா (48), சின்னசாமி (62), கணேசன் (36), தினேஷ் (28), சுரேஷ் (31) ஆகியோரை 5 பேரை கைது செய்தனர்.
வழித்தடப் பிரச்சினையில் அரசு பஸ் டிரைவர் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் காந்தி ராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் காதலித்து வந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவலும் வெளியானது.
மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை காந்திராஜன் காதலித்து வந்தள்ளார். இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணுடன் காந்திராஜன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21), 17 வயது சிறுவனான மற்றொரு மகன் ஆகிய இருவரும் காந்திராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து காந்தி ராஜன் கொலை கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
- பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் விடியல் (வயது30). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தார்.
நேற்று இரவு விடியல், தனது ஆட்டோவில் வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரிஷி, சுர்ஜித், கபில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நேற்று முன்தினம் கபில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து சென்று உள்ளார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் விடியல் கபிலிடம் தகராறில் ஈடுபட்டார். நீ என்ன பெரிய ரவுடியா, கருப்பு நிற வேட்டி அணிந்து செல்கிறாய் என்று கூறி கபிலை அடித்து நடுரோட்டில் முட்டி போட வைத்ததாக தெரிகிறது.
இதற்கு பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஜய லட்சுமியின் கணவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- கள்ளக்காதல் தகராறில் வீடுபுகுந்து டிைரவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த பொத்தூர் செல்வகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது29). கார் டிரைவர். இவருக்கும் கணவரை பிரிந்து வாழ்ந்த உறவினரான நசரத் பட்டையை சேர்ந்த விஜய லட்சுமி என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் வேலைக்காக வெளியே செல்ல சுரேஷ் குமார் புறப்பட்டு கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டுக்குள் திடீரென கத்தி, அரிவாளுடன் மர்ம நபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் சுரேஷ் குமாரை சுற்றி வளைத்து வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் வீட்டுக்குள்ளேயே சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினர்.
காதலன் சுரேஷ்குமாரை மர்ம கும்பல் வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி அவர்களை தடுக்க முயன்றார். இதில் அவரது கையிலும் பலத்த வெட்டு விழுந்தது.
பின்னர் கொலை வெறி கும்பல் சுரேஷ்குமாரை கள்ளக்காதலி கண்முன்னேயே வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கையில் வெட்டுக்காயம் அடைந்த விஜயலட்சுமிக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் விஜய லட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளகாதல் விவகாரத்தில் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
சுரேஷ்குமாரும், விஜய லட்சுமியும் உறவினர்கள் ஆவர். விஜயலட்சுமி கணவரை பிரிந்த பின்னர் சுரேஷ்குமாருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்து உள்ளார்.
இதனால் விஜயலட்சுமியின் கணவர், மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் அவர் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் தங்களது பிரிவுக்கு சுரேஷ்குமார் தான் காரணம் என்று கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை சுரஷே்குமார் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே விஜய லட்சுமியின் கணவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளக்காதல் தகராறில் வீடுபுகுந்து டிைரவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் குமரன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 46).
தற்போது கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் என்ற இடத்தில் அவர் புதிதாக வீடு கட்டி வந்தார்.சண்முக சுந்தரம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு சண்முகசுந்தரம் புதுவையில் இருந்து தனியார் பஸ்சில் கண்டமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கும் பஸ்சில் வந்த ஒரு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய சண்முகசுந்தரத்தை பஸ்சில் தகராறு செய்த கும்பல் அவரை தலையில் பின் பக்கமாக தாக்கினர் இதில் நிலைத்தடுமாறி சண்முகசுந்தரம் கீழே விழுந்தார்.
பின்னர் அங்கு கிடந்த கற்களால் சண்முக சுந்தரத்தின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சண்முகசுந்தரம் இறந்து கிடந்தது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் கொலையான சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது.
இதனால் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
- போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27), டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசனின் தாய் செல்வி(55) காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இளவரசனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து உடலை பாலாற்றில் புதைத்ததாக, 4 பேர் வாலாஜா போலீசில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்தனர்.
அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனும், லோகேஷ் என்கிற லாலு (27), பூவரசன் (24) , வாசுதேவன் (27), அருண்குமார் (33), ஆகியோர் நண்பர்கள்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த மயிலாறு திருவிழாவின்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு லோகேஷ் மற்றும் அவரது நண்பர்களான பூவரசன், வாசுதேவன், அருண்குமார் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த இளவரசனை, 4 பேரும் வழிமறித்து தகராறு செய்தனர்.
இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் இளவரசன் தலையில் அடித்தனர். உடைந்த பீர் பாட்டிலால் வயிறு மற்றும் பல இடங்களில் குத்தியும் கொலை செய்தனர்.
மேலும் போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
காணாமல் போன இளவரசனை போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
முழுமையாக விசாரணை நடத்திய பிறகே கொலை செய்ததற்கான காரணம் தெரியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸரய்யா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
பாலாற்றில் இளவரசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழு முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- காரின் உரிமையாளர் தச்சநல்லூர் அருகே உள்ள மேலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.
- மேலக்கரை, மேலப்பாளையம், பாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். இவரது மகன் வீரபுத்திரன்(வயது 28). லோடு ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிச்சென்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் செயல்படும் தனிப்படை உள்பட மொத்தம் 5 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரபுத்திரனை கொன்ற கும்பல் காரில் வந்து சென்றுள்ளதால் நெல்லை-அம்பை நெடுஞ்சாலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அந்த கும்பல் வெள்ளை நிற காரில் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த காரின் பதிவெண் கேமராவில் பதிவாகி உள்ளதால் அந்த எண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த காரின் உரிமையாளர் தச்சநல்லூர் அருகே உள்ள மேலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபரை வீட்டுக்கு தேடி சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் மேலக்கரை, மேலப்பாளையம், பாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை தேடி வருகின்றனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.
இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.