என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு"

    • பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் 2 பேர் ஈடுபட்ட விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

    இந்த விவகாரம் தொடர்பாக இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
    • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

    சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

    அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

    • புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்
    • இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்

    இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும்.

    திருப்பூர் நாமக்கல் கரூர் காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்

    இந்நிலையில் இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.

    மதுரை

    திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

    மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மாடு குறுக்கே புகுந்ததால் பைக்கில் சென்ற தம்பதி படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வசந்தம் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா.

    சம்பவத்தன்று இவர் கணவர் பாலசண்முகத்துடன், மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். சிலைமான் ெரயில்வே மேம்பாலம்- நான்கு வழிச்சாலை பகுதியில் வந்தபோது மாடு குறுக்கே பாய்ந்தது.

    இதில் வாகனம் நிலை தடுமாறி தம்பதியினர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த பாலசண்முகம்- ஜெயசித்ராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜெயசித்ரா சிலைமான் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 

    • சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கபட்டது
    • சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் லீமாசைமன் உத்தரவுபடி நகராட்சிப் பணியாளர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 50 க்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்து சட்டமன்ற அலுவலகம் எதிரே உள்ள வளாகத்தில் பூட்டி வைத்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மாடுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகளை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் தங்களுடைய மாட்டின் அடையாளத்தை கூறி ரூ 2 ஆயிரம் அபராதம் செலுத்தி மாடுகளை கூட்டிச் செல்லுமாறு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    • துறையூர் அருகே அரசு கால்நடை மருத்துவரின் அலட்சியத்தால் விவசாயி பசு மாடுகளை பறிகொடுத்தார்
    • மர்ம நோய் தாக்குதலுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறை–யூர் அருகே உள்ள வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த–வர் வீரமணி (வயது 35). இவர் அப்பகுதியில ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகி–றார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசு மாட்டிற்கு மர்ம நோய் தாக்கி–யதில் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து மாட்டினை, கால்நடை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்ல முடியாத–தால், விவசாயி வீரமணி தனது கிராமத்திற்கு உட்பட்ட குன்னுப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு சென்று விவரத்தை கூறியுள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் அரசு கால்நடை மருத்துவர், தனக்கு வேலை உள்ளதால், என்னால் நேரில் வந்து மாட்டிற்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியுள் ளார்.

    பின்னர் அவர் முசிறி உட்கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனரிடம் வீரமணி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா–ததால், விவசாயி வீரம–ணியின் பசுமாடு பரிதா–ப–மாக உயிரிழந்தது. இதே–போன்று கடந்த ஆறுமாத காலத்தில், விவசாயி வீர–மணியின் ஐந்து மாடு–கள் மர்ம நோய் தாக்கி உயி–ரிழந்துள்ளது என்பது குறிப்பி–டத்தக்கது.

    துறையூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மர்ம நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பல பசுமாடுகள் இறந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரி–விக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ அல்லது கால்நடை பராம–ரிப்பு துறை மண்டல இணை இயக்குனரோ அல்லது கால்நடை பரா–மரிப்பு துறையில் பிரத்யேமாக செயல்பட்டு வரும் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க–வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ஒவ் வொரு வருவாய் மாவட்டத் திற்கும் கால்நடைகளுக்கான பிரத்யோக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு, இலவச அழைப்பு எண்ணாக 1962 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பொது–மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தா–ததால், இதுபோன்ற ஏரா–ளமான கால்நடைகள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துள்ள–தாகவும் விவசாயிகள் தெரி–வித்துள்ளனர்.

    இனி வரும் காலங்களில் இது போன்ற கால்நடை இறப்புகள் ஏற்படாத வண் ணம், ஒவ்வொரு வட்டார அளவில் சுழற்சி முறையில் கால்நடை மருத்துவர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் விதத் தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது–மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • மாடுகளின் உரிமையாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரிய நாச்சி அம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்திற்கு 12 மைல் தூரமும், சின்ன மாடு பந்தயத்திற்கு 8 மைல் தூரமும் போட்டி நடந்தது. பெரிய மாடு மற்றும் சின்ன மாடு பந்தயத்தில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை விளாத்திகுளம் வீர ஜோதி என்பவரது மாடும், 2-வது பரிசை மதுரை மாவட்டம் திருப்பாலை விஷால் என்பவரது மாடும், 3-ம் பரிசை கே.வேப்பங்குளம் நல்லதேவர் என்பவரது மாடும், 4-ம் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் வென்றது.

    சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசை சுரேஷ்குமார் என்பவரது மாடும், 2-ம் பரிசை ராஜேந்திரன் என்பவரது மாடும், 3-ம் பரிசை பூலாங்கல் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், 4-ம் பரிசை மேலச் செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மாடும் பெற்றன.

    மாடுகளின் உரிமை யாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடு களை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • உத்திர பிரதேச மாநிலத்தில் பசுமை உணவகத்தை மாடு திறந்து வைத்தது.
    • பசுமை உணவகத்தின் உரிமையாளர் முன்னாள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் ஆவார்.

    உத்திர பிரேதச மாநிலத்தின் லக்னோவில் உணவகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் மாடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதோடு மாடு அந்த உணவகத்தை திறந்து வைத்து இருக்கிறது. லக்னோவின் முதல் பசுமை உணவகமான இது, 'ஆர்கானிக் ஒயாசிஸ்' என்ற பெயரில் திறக்கப்பட்டு உள்ளது.

    முன்னாள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் இந்த பசுமை உணவகத்தின் உரிமையாளர் ஆவார். பசுமை பொருட்களால் சமைக்கப்பட்ட உணவு வகைகள் மட்டுமே இந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. பசுமை உணவகத்தை மாடு திறந்து வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

     

    வைரல் வீடியோவின் படி, மாடு மஞ்சள் நிற ஆடை அணிந்த நிலையில் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் அங்கு கூடியிருந்த பொது மக்கள் மாட்டை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பசுமை உணவக ஊழியர்கள் ஆர்கானிக் ஒயாசிஸ் என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்களை அணிந்துள்ளனர்.

    "நமது விவசாயம் மற்றும் பொருளாதாரம் மாடுகளை சார்ந்தே இருக்கிறது. இதன் காரணமாகத் தான் எங்களது உணவகத்தை கோமாதா திறந்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மக்கள் ஆரோக்கிய உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்று தற்போது நினைக்க துவங்கிவிட்டனர்."

    "எனினும், இரசாயன பொருட்களால் பதப்படுத்தப்படும் உணவு வகைகளே தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சொந்த உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் பதப்படுத்தும் இந்தியாவின் முதல் உணவகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உணவை சாப்பிட்டால், மக்கள் வித்தியாசத்தை உணர்ந்து பின் இதற்கான தேவை அதிகரிக்கும்," என்று பசுமை உணவக உரிமையாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார்.

    • பாலமேடு அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் மாடு பலியானது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



    பலியான மாடு.

     அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் முழுவதும் சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று அலங்காநல்லூர் பகுதிக ளில் மதியம் 2 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் மீது மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. கூரை, ஓட்டு வீடுகள் பலத்த காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன.

    தோட்டங்களில் போடப் பட்டிருந்த தகர செட், மற்றும் கொட்டகைகள் காற்றில் சேதமடைந்தன.

    கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் அந்தப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. மின்சார ஊழி யர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பெய்த கனமழையால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    • இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம்.

    கரூர்:

    கரூர் அருகே, கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது என, கரூர் அருகே, பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால் நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் வழிமு றைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், பசுந்தீவன உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் கலப்பு தீவனம் தயாரித்தல் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம். என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மின்னல் தாக்கி பசு மாடு இறந்தது
    • இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து மாடு வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் 3 மாடுகளையும் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்த பிறகு கொட்டகையில் கட்டி விட்டு கிராமத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அவரது பசு மாடுகளில் ஒன்று மின்னல் தாக்கி உயிரிழந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது பசுமாடு உயிரிழந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், தனக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×