search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு"

    • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
    • ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

    இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமத் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த எருமை மாடு ஒன்று திடீரென பொது மக்களை விரட்டி, விரட்டி முட்டிதள்ளியது.

    இதில் அதே பகுதி அம்சா தோட்டம், 2-வது தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மதுமதி (33) என்பவரையும் எருமை மாடு முட்டி தூக்கியது. அப்போது மாட்டின் கொம்பில் சேலை சிக்கிக் கொண்டதால் மது மதியை தரதரவென சாலையில் இழுத்தபடி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மாடு இழுத்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது.

    எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மதுமதியின் காலில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் பெரிதானது. மேலும் தொடர்ந்து காயம் அதிகரித்ததால் தற்போது மதுமதியின் காலில் புண் இருந்த இடம் அழுக தொடங்கி இருக்கிறது. அதில் அறுவை சிசிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர். மதுமதிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க அரசும், மாநகராட்சியும் உதவி செய்யவேண்டும் என்று மதுமதியின் கணவர் வினோத் கண்ணீர்மல்க தெரிவித்து உள்ளார்.

    வேன்டிரைவராக வேலைபார்த்து வரும் வினோத் மனைவியை கவனித்து வருவதால் அவரும் வேலைக்கு செல்லமுடியாமல் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மாடு முட்டியதில் காயம் அடைந்த மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது காலில் உள்ள காயம் தற்போது அழுகும் நிலையில் உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இதுவரை ரூ.1 லட்சத்துக்கும்மேல் செலவு செய்து விட்டேன். என்னிடம் மேலும் வசதி இல்லாததால் மேல் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறேன். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மதுமதி சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, மாட்டின் கொம்பு மதுமதியின் காலில் குத்தி கிழித்து உள்ளது. இதனால் அவரது காலில் 12 செ.மீட்டர் அளவுக்கு சதை கிழிந்தது. அந்த இடத்தில் சதை அழுகி சேதம் அடைந்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்து அதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும். காலில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது என்றார்.

    • சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    சாலையில் சுற்றும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், நாலூர், பட்டமந்திரி, காட்டூர், உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் மாடுகள் ஹாயாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சாலையின் ஓரத்தில் படுத்துக் கொள்வதால் கனரக வாகனங்களில் மாடுகள் அடிபட்டு இறக்கும் சம்பவமும், இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே பொன்னேரி, மீஞ்சூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.
    • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.

    விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. அதிலும் வளர்ப்பு மிருகங்களாக நாய், மாடு ஆகியவை மனிதர்களை தாக்குல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நெல்லையில் நடந்துள்ள சம்பவம் ஒன்றின் வீடியோ வெளியாகி காண்போரை பதற வைக்கும்படி உள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

    இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.   

    • கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
    • சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை.

    சென்னை:

    திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது எருமை மாடு அவரை முட்டி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற வந்தவரையும் மாடு முட்டி தள்ளியது. இந்த சம்பவத்தில், இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியையும் மாடு முட்டியது.

    ஆவடியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை மாடு முட்டியது. திருவல்லிக்கேணி டி.பி.தெருவில் கஸ்தூரி ரங்கன் என்பவரும் மாடு முட்டி காயமடைந்தார். குன்றத்தூர் அருகே நேற்று சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்த பூந்தமல்லியை சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்.

    மாடு முட்டி பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வருகின்றன. மாடுகளை பிடித்து அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம் போல் மாடுகளை சாலையில் திரியவிடுகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கும், வளர்க்கவும் தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க, 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டு உள்ளது. தற்போது, மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாடுகளை வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை. எனவே, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    அதன்படி சந்தை பகுதிகள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாடுகள் வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டனர்.
    • பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.

    இஸ்லாமியர்கள் சார்பில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தின் மெடாக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக இரு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே இடத்தில் நான்கிற்கும் அதிகமானோர் ஒன்றுகூட அனுமதி இல்லை. இதன் மூலம் பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.

    மோதல் தொடர்பாக ஏற்கனவே ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக இரு பிரிவினரை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து, அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    "மோதல் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்," என்று மெடாக் பகுதிக்கான காவல் துறை கண்காணிப்பாளர் பி பால சுவாமி தெரிவித்துள்ளார். 

    • வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
    • வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (37).விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல மாட்டுக்கொட்டையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று விட்டு மதியம் திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக் கொட்டையில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடைகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறுத்தை கடித்து ஆடு பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
    • மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மாதேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் மாட்டுத் திருவிழா பிரபலமானது ஆகும்.

    200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    விழாவில் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இங்கு ஒரு ஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்கி சென்றனர். இந்த விழா 6 நாட்கள் வருகிற 11 - ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    விழாவில், சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
    • மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி வெள்ளியமட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவர் மேத்யூ பென்னி. இவரது தந்தை பென்னி ஏராளமான மாடுகளை வளர்த்து வந்தார். அதனை வைத்து பால் பண்ணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் பென்னி திடீரென இறந்துவிட்டார். இதனால் தனது தந்தை வளர்த்துவந்த மாடுகளை, மாணவன் மேத்யூ பராமரிக்க வேண்டிய நிலை உருவானது. இதையடுத்து அவர் தனது தந்தையின் பண்ணையில் இருந்த மாடுகள் அனைத்தையும் பராமரித்து பால் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    சிறு வயதில் மாடுகளை சிறப்பாக வளர்த்து வந்ததன் காரணமாக பிரபலமானார். இதன் காரணமாக மாணவன் மேத்யூவுக்கு விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் வளர்த்து வந்த 22 மாடுகளில் பல மாடுகள் அடுத்தடுத்து சுருண்டுவிழுந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்.

    இருந்தபோதிலும் பண்ணையில் இருந்த 13 மாடுகள் அடுத்தடுத்து இறந்தன. இதனைப்பார்த்து மாணவன் மேத்யூ அதிர்ச்சியடைந்தார். தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்துகிடப்பதை பார்த்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மூலமட்டம் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது மரவள்ளி கிழங்கு தோல் சாப்பிட்டதே மாடுகள் இறந்ததற்கு காரணம் என்பது தெரியவந்தது.


    மாடுகள் சாப்பிட்ட மரவள்ளி கிழங்கு தோலில் ஹைட்ரோசியானிக் அமிலம் கலந்திருந்ததால் அவை இறந்திருக்கின்றன. இறந்தவற்றில் 5 மாடுகள் கறவை மாடுகள் ஆகும். 13 மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    அவர் மாடுகளுக்கு காப்பீடு எதுவும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்தது மாணவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இறந்த மாடுகள் அனைத்தும் அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புகைக்கப்பட்டன.

    மற்ற மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    • கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.
    • சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் நிமித்தமாகவும், அன்றாட தேவைகளுக்காகவும் தினமும் வெளியே சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.

    இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இபுறாஹீமை சந்தித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    இதன் எதிரொலியாக முகமது இபுறாஹீம் தலைமையில், கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் தொடங்கி குமரன் பஜார், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், பங்களா வாசல், பெரிய கடை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை துப்புரவு பணியாளர்களை கொண்டு விரட்டி, விரட்டி பிடித்தனர். இரவு 9 மணி தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை மாடுகளை பிடித்தனர். மொத்தமாக 46 மாடுகள் பிடிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாட்டர் டேங் அருகில் உள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டது.

    இதுகுறித்து செயல் அலுவலர் முகம்மது இபுராஹிம் கூறுகையில்:-

    பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களிடம் தலா ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளாத மாடுகளை மயிலாடுதுறை அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கபடும் என்றார்.

    நள்ளிரவு வரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை விரட்டி, விரட்டி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு இறந்தது.
    • புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் புலிகள் வன காப்பக பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக வனத்துறையினர் வனப்பகுதியில் பொது மக்கள் செல்ல கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    கடந்த ஆண்டு ஸ்ரீவில்லி புத்தூர் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதை யடுத்து போலீசார் வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரம் மேற்கு பகுதியில் சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நீண்ட நேரமாகியும் அது திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முக ராஜ் மாட்டை தேடிச் சென்றார். அப்போது புதுக்குளம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாடு இறந்து கிடந்தது. வாய் கிழிந்த நிலையில் மாட்டின் தலை சிதறியிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டை கடித்ததில் மாடு பலியாகி இருப்பது தெரியவந்தது.

    புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×