search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு
    X

    மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு

    • மின்னல் தாக்கி பசு மாடு இறந்தது
    • இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து மாடு வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் 3 மாடுகளையும் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்த பிறகு கொட்டகையில் கட்டி விட்டு கிராமத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அவரது பசு மாடுகளில் ஒன்று மின்னல் தாக்கி உயிரிழந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது பசுமாடு உயிரிழந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், தனக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×