search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223470"

    • பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • மது அருந்தி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஐயப்பன் (வயது 30). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பேரளம் போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இறப்பதற்கு முன் ஐயப்பனுடன் பேரளம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் மணிகண்டன், பிரபு உள்ளிட்ட நண்பர்கள் மது விருந்து நடத்தி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனைத் தொடர்ந்து இறந்து போன ஐயப்பனின் தந்தை அன்பழகன், தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் பேரளம் போலீஸ் மணிகண்டன் மற்றும் பிரபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    இந்த புகார் மனு குறித்து மாவடட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி நேரத்தில் உரிய அனுமதியின்றி தனிப்பட்ட நபரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால் மணிகண்டன், பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    பணி நேரத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மது போதையில் நடனம் ஆடிய போலீசார் 2 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை மற்றும் மகாலட்சுமி நகர் பகுதிகளில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அந்தப் பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை யை சேர்ந்த நரேஷ் குமார் (24),ராம்குமார்(27),ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மோஷின், மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.
    • அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

    திருப்பூர் :

    மது போதையில் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரை சேர்ந்த மோஷின், (36). மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.

    பனியன் தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே பல இடங்களில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கா்நாடகத்தில் இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு திரும்ப அளிக்க வேண்டும்.
    • இஸ்லாமியா்கள் மீதான விரோதப்போக்கினை ஜனநாயகரீதியாக எதிா்கொள்வோம்.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த அருள்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் 23வது மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மேலாண்மைக் குழுத் தலைவா் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம்.எஸ்.சுலைமான், பொதுச்செயலாளா் ஆா்.அப்துல்கரீம், செயலாளா் என்.அல்அமீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-

    கா்நாடகத்தில் இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு திரும்ப அளிக்க வேண்டும். தமிழகத்தில் 2 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருப்பதை நீக்க வேண்டும். ஹிஜாப் அணிய தடை, காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து 370 பிரிவு நீக்கியது, ஹலால் இறைச்சி தடை உள்ளிட்ட பா.ஜ.க அரசின் அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாமியா்கள் மீதான விரோதப்போக்கினை ஜனநாயகரீதியாக எதிா்கொள்வோம்.

    தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3.5 சதவீத இடஒதுக்கீடு பல துறைகளில் முறையாக வழங்கப்படுவதில்லை. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழக அரசு இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் அனைத்து வழிமுறைகளையும் அரசு நிறைவேற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். 

    • பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 99620 10581 என்ற வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    அவினாசி :

    அவிநாசி காவல் துறை, மதுவிலக்கு போலீசாா் சாா்பில் சட்ட விரோதமாக சாராயம், மது விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 99620 10581 என்ற வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு கள்ளச்சாராயம், போலி மது, சட்டவிரோதமாக மது விற்பனை ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இது குறித்த துண்டுப் பிரசுரத்தை அவிநாசி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் அனுராதா தலைமையிலான போலீசார் சேவூா் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினா்.இதில் காவல் ஆய்வாளா் சேகா், தனிப் பிரிவு தலைமைக் காவலா் செல்வராஜ், காவலா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • மதுரை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்.
    • மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மது விற்பனை

    மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கோனசேரி சாலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார்
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராஜகுமார் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில், மே.23-

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த சூரியகோடு புதுச்சேரிவிளை வீட்டை சேர்ந்தவர் ராஜ குமார் (வயது 55). ஒர்க் ஷாப்பில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது.

    சம்பவத்தன்று ராஜ்குமார் அதிக அளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோனசேரி சாலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் ராஜகுமாரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராஜகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லா பாய் அளித்த புகாரின் அடிப்படையில், கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 100-க்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
    • அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். மேலும் தஞ்சாவூர் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தமிழகம் முழு வதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கோட்டார், வடசேரி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அனுமதி யின்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து மதுபாட்டில் களும் பறிமுதல் செய்யப் பட்டது.

    இதேபோல் தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட் பட்ட பகுதியிலும் அனுமதி இன்றி மது விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பாரிலும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய் துள்ளனர்.

    மது விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மது விலக்கு போலீசாரும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். சாராயம் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து மலையோர பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அனுமதி இன்றி தொடர்ந்து மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீ சார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.
    • சிகிச்சைக்காக 2 பேரும் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 67).

    அதே பகுதியை சேர்ந்தவர் விவேக் (36).

    இவர்கள் 2 பேரும் இன்று கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

    இதை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.

    உடனடியாக இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது,

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு குப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து விவேக்கிற்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழகத்தில் கள்ளசாராயத்தில் பலர் இறந்த நிலையில் தஞ்சையில் இன்று மது குடித்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

    • நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.
    • ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது.

    நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.

    இந்த சலுகையை பெற அலுவலகத்தில் குறைந்தது 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் ஒரு வாளகத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவை வைத்திருக்க வேண்டும் என்றும் அது சுயமானதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள சுங்கான்கடை பனவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 56). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

    நேற்று இரவும் சாலமன் மது அருந்தி வந்து வீட்டில் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மகன், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த சாலமன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெயா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆகாஷ் உள்ளிட்ட 3 பேரும், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர்.
    • செந்தில்வேலை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது22), கட்டிட தொழிலாளி.

    தொழிலாளி தாக்குதல்

    இவர் கடந்த 25-ந்தேதி சாத்தான்குளம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். சாத்தான்குளம் அருகே ஆத்துபாலம் அருகில் சென்றபோது சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு மற்றும் லிங்கம் மகன் அழகு, சடையன்கிணறு இசக்கிமுத்து மகன் ஆகாஷ்(22) ஆகிய 3 பேரும் செந்தில்வேலை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பீர் பாட்டில் மற்றும் கைகளால் தாக்கியதுடன், அருகில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இவர்களில் ஆகாஷை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×