என் மலர்
நீங்கள் தேடியது "slug 223615"
- கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர்.
- விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர்.
கரூர்
கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர். கடந்த, 2011 மே மாதம் கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழா வையொட்டி, கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக செல்வ கனி ஓட்டி சென்ற லாரி, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் லாரி டிரைவர் செல்வகனியை கைது செய்து கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், லாரி டிரைவர் செல்வ கனிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 31 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து, நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு அளித்தார். லாரி டிரைவர் செல்வகனி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- சேலம்–சென்னை புறவழிச்சாலை மேம்பாலத்தில், நேற்று ஆத்துார் பக்கமிருந்து சேலம் நோக்கி சென்ற டாரஸ் லாரி மீது, அவ்வழியில் சென்ற ஈச்சர் லாரி மோதியது.
- இந்த விபத்தில், ஈச்சர் லாரியை ஓட்டிச் சென்ற கரூர் அடுத்த வெங்கப்பாளையத்தைச் சேர்ந்தவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாழப்பாடி:
வாழப்பாடியில் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்–சென்னை புறவழிச்சாலை மேம்பாலத்தில், நேற்று ஆத்துார் பக்கமிருந்து சேலம் நோக்கி சென்ற டாரஸ் லாரி மீது, அவ்வழியில் சென்ற ஈச்சர் லாரி மோதியது. இந்த விபத்தில், ஈச்சர் லாரியை ஓட்டிச் சென்ற கரூர் அடுத்த வெங்கப்பாளையத்தைச் சேர்ந்த மணிமாறன் (28). உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
- சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு
- னிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே உள்ள காரியாவிளையைச் சேர்ந்தவர் சுஜிலா. மருந்தாளுநர் பணி செய்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார்.
அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது மர்மமாக இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுஜிலாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் ஏற்பட்ட சந்தே கத்தின் அடிப்படையில் போலீசார் சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்ய ப்பட்டது.
இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கும்,தற்கொலை தூண்டுதல் வழக்காக மாற்றப்பட்டது.
இந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய மினி பஸ் டிரைவர் சிபின் கைது செய்யப்பட்டார்.
- இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
- ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள பாலூர் வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் ஐயப்பன் ஆசாரி மகன் சுனில்குமார் (வயது 46). இவர் நகை தொழில் செய்து வந்தார். இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று, இவரது மனைவி சாந்தி இவரை வேலைக்கு செல்ல வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுனில்குமார் அவரை தள்ளி விட்டு அறைக்குள் சென்று மனைவியின் சேலையால் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 32). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வரதராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதுபற்றி ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.
- மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28).
இருவரும் 8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.சுஜிலா நாகர்கோவில் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார்.தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் சுஜிலா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடல் பரிசோதனை செய்ய ப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ஆனந்தின் சகோதரி வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு ஊருக்கு வருகிறார்.
அதன்பின்பு சுஜிலா உடல் ஊருக்கு எடுத்து அடக்கம் செய்யப்படும் என ஆனந்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர். சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியது திங்கள்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் அவர் இறந்த பின்பும் அவரது செல் போனுக்கு அழைப்பு வந்தது.செல்போனை போலீசார் எடுத்து பேசினர்.அப்போது பேசிய மினி பஸ் டிரைவர் கோபத்தில்தான் பேசியுள்ளார்.இதனால் இவர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதன் முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் கூறினர். போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த மினிபஸ் டிரைவர் தலைமறைவாகி விட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.அவரை பிடித்து விசாரித்தால்தான் சுஜிலா மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியும் என கூறினர்.
தற்கொலை செய்து கொண்ட சுஜிலா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அதில் மினிபஸ் டிரைவர் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் 'ஐ மிஸ் புருஷா'என காதல் கணவன் ஆனந்தை குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகள் சாக்லெட் சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்'எனவும் ஆனந்தை அவர் கேட்டு எழுதியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
சுஜிலா அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.மினி பஸ் டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், மினி பஸ் டிரைவர் இரவு வேளையிலும் சுஜிலாவுக்கு போன் செய்து டார்ச்சர் கொடுப்பாராம்.சுஜிலா வெளிநாடு செல்வதை மினிபஸ் டிரைவர் விரும்பவில்லையாம்.இதனால் நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.நேற்று முன்தினமும் அவர் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்ற சுஜிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.
சுஜிலாவுக்கு கடும் தொல்லை கொடுத்து வந்த மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
- செல்போன் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை
மதுரையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சில அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பார்த்துக் கொண்டே பஸ்சை ஓட்டி செல்கின்றனர்.
நேற்று மதியம் மதுரை ரெயில் நிலையம்-பெரியார் பஸ் நிலையம் இடையே அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் விபத்து அபாயத்தை உணராமல் செல்போனில் காட்சிகளை பார்த்தபடி ஓட்டிச் சென்றார். பஸ் டிரைவரின் அலட்சியத்தை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் சில பஸ்டிரைவர்கள் மற்றும் ஆட்டோ, கார் வாகன டிரைவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்போனை பார்த்தபடி வாகனங்களை ஓட்டுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் விலை மதிப்பில்லாத மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பார்த்து கொண்டு இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் சில போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.
இருசக்கர வாகனங்களை அடிக்கடி நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறும் பெரிய வாகனங்கள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில்லை.
சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை
- ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி:
தக்கலை சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தக்கலை அருகே பள்ளியாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்கள் எடுத்து கடத்தப்படுவதாக தக்கலை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தாசில்தார் வினோத் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிம வளம் கடத்த முயன்றதாக டிரைவர் விருதுநகர் தபசுலிங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- படுகாயமடைந்த பஸ் பயணி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே வெள்ளியாக்குளம் மேற்கு கரையை சேர்ந்தவர் ஹரிகுமார் (வயது 51).கூலித்தொழிலாளி.
19 வருடத்திற்கு முன் இவர் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் இடது கால் தொடை எலும்பில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அவரால் சரிவர நடக்க முடியாது. சம்பவத்தன்று இவர் குளச்சல் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல குளச்சலிருந்து திக்கணங்கோடு சென்ற மினி பஸ்சில் ஏறினார்.
மினி பஸ் டிரைவர் அவரை வெள்ளியாகுளம் நிறுத்தத்தில் இறக்கி விடாமல் குளவிளை நிறுத்தத்தில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் டிரைவருக்கும் ஹரிகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மினி பஸ் டிரைவர் , தொழிலாளி ஹரிகுமாரை தாக்கினாராம்.இதில் அவருக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஹரிகுமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து குளச்சல் போலீசார் மினி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது.
- சசியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார்.
குனியமுத்தூர்
கோவை சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் சசி (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரை மிரட்டி குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது. மேலும் திரும்ப ஒப்படைப்பதற்கு ரூ. 10 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டார்.
இதனை சசி தனது நண்பரான வாட்டர் கேன் சப்ளையர் மாரிமுத்து(35) என்பவரிடம் தெரிவித்து, அவரிடம் ரூ. 10 ஆயிரம் வாங்கி பூவேந்திரனிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட அவர் சசியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார். இது குறித்து அவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாரிமுத்து, அவரது நண்பர்களான டிரைவர்கள் குனியமுத்தூர் ஆதி சக்தி நகரை சேர்ந்த சேகர்(31), திருநகரை சேர்ந்த சுஜித்(33) ஆகியோருடன் குனியமுத்தூர் சிறுவாணி ரோட்டில் உள்ள ஒரு தாபாவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது பூவேந்திரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு வந்தார். அப்போது மீண்டும், மாரிமுத்து தரப்புக்கும், பூவேந்திரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூவேந்திரன் உட்பட 4 பேர் கும்பல் மாரிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு தலை, தோள்பட்டையில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அவர் மீதான தாக்குதலை, சேகர் மற்றும் சுஜித் தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் சேகர் மற்றும் சுஜித்தையும் கத்தியால் குத்தினர். பின்னர் 4 பேரும் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
கத்திக்குத்தில் மாரிமுத்து, சேகர், சுஜித் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் 3 பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் பூவேந்திரன்(34) உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- மது அருந்துவதால் இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
- தனது அறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளார். 2 தினமான போதும் கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை தட்டியுள்ளார்.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார்(34) இவர் அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் குடிபழக்கம் உள்ளவர். பாலவிளை பகுதியில் தனது மனைவி வீட்டில் தங்கி வருகிறார். இவர் மது அருந்துவதால் இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மனைவியிடம் தகராறு செய்து விட்டு தனது அறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளார். 2 தினமான போதும் கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததினால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து அக்கம்பக்கத் தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரள லாரி டிரைவர்- மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
- விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
கேரள மாநிலம் கொல்லம் லேபர் காலனியை பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார்(வயது42). இவர் சென்னை தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் லாரியை சென்னையில் விட்டுவிட்டு கொல்லத்திற்கு வரும்போது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதிக்கு வந்து உள்ளார்.
ஆலம்பட்டி பகுதியில் திலீப்குமார் நடந்து வந்து கொண்டிருந்தபோது பெரிய பூலாம்பட்டி கிராமத்தில் இருந்து திருமங்க லம் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருங்குடி போலீஸ் சரகம் பரம்புபட்டி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தது யார்? என்றும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர்.
- படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர்
அனுப்பர்பாளையம் :
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்திற்கு காலை 8 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர். முன்புறத்தில் படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது முன்புறம்,பின்பக்கத்திலும் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். மேலும் படிக்கட்டில் நின்று சத்தம் போட்டும் கிண்டல் அடித்தும் வந்துள்ளனர். இதனால் பெண்களும் பயணிகளும் முகம் சுழித்தனர்.
பஸ் கண்டக்டர் மாணவர்களிடம் பஸ்சிற்குள் வரச்சொல்லி வலியுறுத்தினார். ஆனால், மாணவர்கள் கேட்காமல் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் நின்றுகொண்டு கைகளை வெளியே வீசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை பூண்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்து பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு வந்தால் நான் பஸ்சை எடுக்கமாட்டேன் என்று உறுதிபடகூறி கீழேயே நின்று கொண்டார். மாணவர்களின் இந்த செயல் பயணிகள் -பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.