என் மலர்
நீங்கள் தேடியது "slug 223670"
- குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
- இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.
இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே சாலை குறுகியதாக உள்ளது. அதில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றால் டூவீலர்கள் கூட போக முடியாது.
இந்த நிலையில் சாலையோரங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களும், கடைக–ளுக்கு சரக்கு கொண்டு வரும் டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது. சரக்கு வாக–னங்கள் நகர் எல்லைக்குள் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும்.
இதுபோல் போக்கு–வரத்திற்கு இடையூறு ஏற்ப–டுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமை–யாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
- மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும்.
திருச்சி
திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடைகளை தங்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்குமாறு கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிவது வாடிக்கையானது. அதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் சமயபுரம் வாரச்சந்தை, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 15-க்கும் மேற்பட்ட மாடுகளை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து பேரூராட்சி திருமண மண்டப பகுதியில் நிறுத்தி வைத்தனர்.
இந்த மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும். மீண்டும் இதேபோல் சாலைகளில் சுற்றித்திரிந்து மாடுகள் பிடிபட்டால் ரூ.5,000 அபராதமாக செலுத்திய பிறகே மீட்கலாம். அதற்கு பின்னரும் சாலைகளில் வலம் வந்தால் அந்த மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என செயல் அலுவலர் சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
- வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சாலையின் நடுவே பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது குடிநீர்திட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணி களை துரிதமாக முடிக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார். இதனால் குடிநீர் பைப் லைன்கள் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
வடசேரி அண்ணா சிலை சந்திப்பிலிருந்து புத்தேரி சிபிஎச் மருத்துவமனை வரை குடிநீர் குழாய் பதிக் கும் பணிகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து பஸ் போக்குவரத்தை மாற்றி விட போக்குவரத்து போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டனர். இன்று காலை முதல் அந்தச் சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. வடசேரியில் இருந்து புத்தேரி வழியாக செல்லும் அனைத்து பஸ் களும் வடசேரி சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கர சாலை சென்று புத்தேரி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வடசேரி அண்ணா சிலை பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து சாலை மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டு இருந்தனர். இருப்பி னும் காலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதே போல் பூதப் பாண்டி, திட்டுவிளை, துவரங்காடு வழியாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், வாகனங்கள் புத்தேரி நான்கு வழி சாலை வழியாக அப்டா மார்க்கெட் வந்து வடசேரிக்கு சென்றது. இந்த போக்குவரத்து மாற்றம் குடிநீர் பைப் லைன்கள் அமைக்கும் பணி முடியும் வரை அமலில் இருக்கும் என்று போக்கு வரத்து போலீசார் தெரி வித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து சாலை நடுவே குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- விதிகளை மீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
- கரூர் நகரப்பகுதிகளில்
கரூர்:
கரூரில் போக்குவரத்து போலீசார் உத்தரவை மதிக்காமல் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் தீபாவளி பண்டிகை வர இருக்கும் இந்த நேரத்தில் கரூர் மாநகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து தினந்தோறும் 30 - க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கரூர் மினி பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாமல் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகிறது. இதற்கிடையே பேருந்துநிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர், உழவர் சந்தை,லைட்ஹவுஸ் கார்னர் போன்ற பகுதிகளில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் ஒரு சில மினி பஸ் டிரைவர்கள் நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் வரிசையாக நிற்பதால் கூடுதலாக நெரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மினி பஸ்களை நிறுத்தமில்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரித்தும் மினி பஸ் டிரைவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் செயல்படுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகில் மும்முனை சந்திப்பு உள்ளது.
- ஒரு மின்கம்பத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகில் மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, சேவூர் ரோடு என மும்முனை சந்திப்பு உள்ளது. அத்துடன் சந்திப்பு ரோடு பகுதியில் பேக்கரி ஒட்டல்.
ஜவுளி, நகை கடைகள் வங்கி என ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளது. பள்ளி கல்லுரிக்கு செல்லும் வாகனங்கள, காரி, லாரி, அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆயிரகணக்கான இருசக்கர வாகனங்கள் என எந்த நேரமும் மும்முனை சந்திப்ப ரோட்டில் போய் வருகின்றன. சந்திப்பு ரோட்டில் உள்ள ஒரு மின்கம்பத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.அந்த கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வார்கள் பல ஆண்டுகளாக மின் வாரிய அலுவலகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் நேற்று போக்கு வரத்திற்கு இடையூராக இருந்த மின்கம்பத்தை மின்வாரிய அலுவலர்கள் மாற்றி அமைத்தனர்.
- பரிவேட்டை திருவிழாவையொட்டி நடவடிக்கை
- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துஉள்ளது.
இவற்றை தினமும் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது.
தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வருகிற 5-ந்தேதிகாலை 11.30 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வல மாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த பரிவேட்டை திருவிழா வில் சுற்றுலாப்ப யணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும்பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை கன்னியா குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழா நடைபெறும். வருகிற 5-ந்தேதி அன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நிறுத்துவதால் அன்றைய தினம் பகல் 12 மணி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப்படும் என்று விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
- பேருந்து நிலையத்தினுள் ஒரு பகுதி பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சிறுவணிக வளாகம் போல செயல்படுகிறது
- மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
தக்கலையில் அமைந் துள்ள காமராஜ் பேருந்து நிலையத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வந்து செல்கிறது. இந்த பேருந்து நிலையத்தினுள் ஒரு பகுதி பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சிறுவணிக வளாகம் போல செயல்படுகிறது.இதனால் பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்து போகின்றனர். மேலும் பயணிகளுக்காக நிழலகமும், ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை பயணிகள் பயன்படுத்தாத வாறு தனியார் வாகனங்கள் அத்துமீறி பேருந்து நிலையத்தினுள் நீண்ட நேரமாக நிறுத்தி செல்கின்றனர். இது போக சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு உணவருந்த செல்கிறார்கள். பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் தனியார் வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெரிசலும், சிலநேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது.
இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தக்கலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களாக பேருந்து நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதித்தனர்.
அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளிடம் தனியார் வாகன பார்க்கிங்கால் ஏற்படும் மோசமான விளைவு களையும் எடுத்துக் கூறி மீண்டும் இவ்வாறு அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை ஏற்படும் என எச்சரித்தனர்.தக்கலை போக்குவரத்து போலீ ஸாரின் இந்நடவடிக்கை பயணிகள், மத்தியில் வரவேற்பை பெற்றது.
- தாராசுரம் பகுதியில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.
- சாலை மறியலால் கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள 31 முதல் 35 வது வார்டுகளில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக குடி தண்ணீர் சரி வர வழங்கப்படவில்லை
இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் முறையாக குடிநீர் வழங்க வேண்டி பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பத்ம குமரேசன் தலைமையில் கும்பகோணம்- தஞ்சை சாலையில் மறியலில் இன்று ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலில் மாநகராட்சி கவுன்சிலர் கௌசல்யா வாசு, அதிமுக நிர்வாகிகள் லெனின். கோவி. கேசவன், பொன்னையன், கோவி.ரமணன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்
கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இந்த சாலை மறியலால் கும்பகோணம் தஞ்சாவூர் பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்.
- சோழன் விரைவு ெரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் பாதுகாப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு, சரக்கு போக்குவரத்து முனையகட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அவருடன் கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார், வர்த்தக பிரிவு மேலாளர், எலக்ட்ரிக்கல் சிக்னல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அது சமயம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெயராமன், துணைச் செயலாளர் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, உறுப்பினர்கள் சங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர் அவன் விபரம் வருமாறு :
பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிறிய பழுதுகளை நீக்க வேண்டும், கட்டி முடிக்கப்பட்ட பட்டுக்கோட்டை இரயில் நிலைய காவல் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்,
சோழன் விரைவு இரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கோட்ட ரயில்வே மேலாளர், சோழன் விரைவு ரயிலுக்கான இணைப்பு ரயில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வாரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
விரைவில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு முழுமையான ரயில் சேவை குறிப்பாக தாம்பரம், செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்பதிவு மைய நேரத்தை நீட்டிக்கவும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.
பட்டுக்கோட்டை ரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்படுவதற்கு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
- பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில் சிக்கிய அரசு பஸ்
- போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 95 சதவீதம் நிறை வடைந்துள்ளது. இறுதி கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது சவேரியார் ஆலய பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்ததையடுத்து பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்ததால் செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து மேயர் மகேஷின் அதிரடி நடவ டிக்கையின் காரணமாக அந்த பணிகள் துரிதப்ப டுத்தப் பட்டது. தற்பொ ழுது பணி கள் முடிந்து அந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைக்கு பைப்லைன் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத் தில் ஜல்லிக்கொட்டப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாக ஒரு வாகனம் மட்டுமே சென்று வரக்கூடிய அளவில் தற்போது பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து போக்கு வரத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள னர். இந்த நிலையில் இன்று காலை அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று அந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடி யாக அந்த பஸ்சை அப்பு றப்படுத்த அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்டு எடுத்தனர்.
இதே போல் நாகர்கோவி லில் இருந்து ராஜாவூருக்கு சென்ற அரசு பஸ்சும் அந்த பள்ளத்தில் சிக்கியது.பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பஸ்கள் அந்த இடத்தில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே அந்த பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக உள்ளது.
அந்த பகுதியில் வேலையை விரைந்து முடித்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து மக்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
- மேலூரில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அழகர் கோவில் ரோட்டில் உள்ள ஆற்றுக்கால் பிள்ளையார் கோவில்-4முனை சந்திப்பில் ஏற்படும் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த ரோட்டில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி வேன்கள், பஸ்கள் செல்கிறது. பிள்ளையார் கோவில் அருகில் தான் அரசு மருத்துவமனை உள்ளது.
அழகர்கோவில், நத்தம் செல்லும் பஸ்கள் இந்த வழியாக செல்ல வேண்டும். அதேபோல் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.
பெரிய கடை வீதி சந்திப்பு, பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் கால்வாய் பாலம் சந்திப்பு, சிவகங்கை மற்றும் திருவாதவூர்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் பஸ்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்று விடுகின்றன.
இதனால் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத அவல நிலை ஏற்படுகிறது. இந்த இடங்களில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 519 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,94,300 வசூலிக்கப்பட்டது.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 172 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 21 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது,நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 519 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,94,300 வசூலிக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 78 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது .இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.