என் மலர்
நீங்கள் தேடியது "செயின்"
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவரது மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று பகல் நேரத்தில் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வளர்மதியிடம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியை கேட்டு சென்றார். பின்னர் அந்த நபர் மீண்டும் திரும்பி வந்தார். அப்போது வளர்மதி செல்போன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த நபர், வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ராசி புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை
கன்னியாகுமரி:
ஆண்டார்குளத்தை சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மனைவி ஜோதி ரோஸ்லின் (வயது 53). இவர் ஆண்டார்குளத்தில் இருந்து சாந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு 8 மணி அளவில் ஆண்டார்குளம் செல்வ தற்காக சாந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் ஜோதி ரோஸ்லின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
உடனடியாக ஜோதி ரோஸ்லின் கூச்சலிடவே பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மறைந்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து ஜோதி ரோஸ்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
- வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் பெங்களூரில் ரிக் வண்டியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நவீனா (26). இவர் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர். அதேபோல் போதுப்பட்டி சரவணன் நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவர் முட்டை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (32). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.
கண்காணிப்பு கேமரா
இந்த தொடர் திருட்டு குறித்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ.க்கள் முருகன், சங்கீதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓரீரு நாளில் கொள்ளை யர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அவர் சொன்ன அடையா ளங்களை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிய 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வழிப்பறிக் கொள்ளையர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- சேலம் ஸ்ரீரங்கபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சத்திய சரவணன். இவரது மனைவி ஆட்டோவில் சென்ற போது 4 பவுன் செயின் மற்றும் ரூ.2000 பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.
சேலம்:
சேலம் ஸ்ரீரங்கபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சத்திய சரவணன். இவரது மனைவி சந்தியா (வயது 45). இவர் சம்பவத்தன்று சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கைப்பையில் வைத்திருந்த 4 பவுன் செயின், ரூ.2000, ஏடிஎம் கார்டை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தியா சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.
- ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 12- ந் தேதி மாலை தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்- இன்ஸ்பெக்டர் வீரன்
மற்றும் போலீசார், வழிப்பறி யில் ஈடுபட்ட அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (19), கவியரசன் (25) ஆகிய இருவரையும் நேற்று கைது
செய்தனர். மேலும் தலைமறை வாக உள்ள அவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர். போலீசார், கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மஞ்சக்கல்பட்டி கிராமம், அம்பாள் நகரை சேர்ந்தவர் சாந்தி இவர், எடப்பாடி அருகே வட்ராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
- நேற்று இரவு வீட்டில் உறங்கினார். வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2000, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் ஊராட்சி, மஞ்சக்கல்பட்டி கிராமம், அம்பாள் நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர், எடப்பாடி அருகே வட்ராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு, இவரது கணவர் குமரவேல் (63), மகள் சண்முகப்பிரியா (33), பேரன் லவன்அர்ஷத் (11) ஆகியோருடன் வீட்டில் உறங்கினார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2000, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
அப்போது விழித்துக் கொண்ட சாந்தி கூச்சலிட்டார். வீட்டில் இருந்தவர்கள் வருவதற்குள், தாலியை பறித்துக் கொண்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இச்சம்பவம் குறித்து சாந்தி சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, எஸ்.ஐ சுதாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சீலநாயக்கன்பட்டி, வேலுநகர் பிரிவு ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சில நபர்கள் அண்ணாதுரையை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜடேஜா என்கிற தியாகராஜன் (32), சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த குரு என்கிற குப்பன் தாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிமிருந்து செயின், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- ெரயிலில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார்.
- ெரயில் பெட்டியிலே தவறவிட்டது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை ரெயில் நகரை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 34). இவர் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார். ஏ.சி கோச்சில் பயணம் செய்தார்.
பின்னர் தஞ்சாவூர் வந்து இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது தான் அணிந்திருந்த ஒன்றரை பவுன் கை செயின் காணாதது கண்டு அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்த அவர் தஞ்சை ெரயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ெரயில் பெட்டியிலே தவறவிட்டது தெரியவந்தது.
இந்த கைச்செயினை தஞ்சை பெண் பயணி ஒருவரின் சகோதரர் எடுத்து அதனை போட்டோ பிடித்து வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருப்பு பாதை போலீஸ் டி.எஸ்.பி. பிரபாகரனின் அறிவுறுத்தல் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல்,
சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் அந்த செயினை மீட்டு ராகேசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செயின் கிடைக்க காரணமாக இருந்த நபரையும் பாராட்டினர்.
- சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியில் தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
- அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலக். இவரது மனைவி அருணா (வயது 38). இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அருண்பென், இவரது மனைவி அபிராமி மற்றும் தீபா.
இந்த நிலையில் அருண்பென், தனது வீட்டிற்கு உறவினரை இடப்பற்றாக்குறை காரணமாக, கடந்த 20-ந் தேதி அருணா வீட்டில் தங்க வைத்துள்ளார். இதற்காக அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் அருணா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே அருணா, தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.
- 10 பவுன் தாலி செயினை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நடராஜா காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கிரகலட்சுமி (வயது 49). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் பிள்ளைகளை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் கிரகலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் கிரகலட்சுமி புகார் செய்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சேனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- மூதாட்டியிடம் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு அருகே உள்ள புலவன்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தா (வயது 75).
இவர் சம்பவத்தன்று தனது சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியிடம் தஞ்சாவூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்டனர்.
பின்னர் சிறது நேரத்தில் மூதாட்டி யிடம் இருந்து 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இது குறித்து வசந்தா பாப்பாநாடு போலீசில் புகார் அளி த்தார்.
அதன் பேரில் பாப்பா நாடு இன்ஸ்பெ க்டர் இள ங்கோவன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்க ளை தேடி வருகி ன்றனர்.