search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானம்"

    • இந்துக்களுக்கு ஆபத்து, எனவே மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது
    • 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்'

    வங்காள தேச அகதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க பக்கம் இருந்து அழுத்தம் வரத் தொடங்கியுள்ளது.

    கடந்தவாரம் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின்போது பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே வங்காளதேச இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதால் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் எனவே அவர்கள் நுழையும் வழிகளாக உள்ள மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில்தான், நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு [attempt to divide the state] எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

    நேற்று இந்த தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசிய மம்தா, 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

     

    இதற்கிடையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஊடுருவல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவும் நேற்று பேசியிருந்தார். மேலும் மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வங்காள தேசத்திலிருந்து 1 கோடி இந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் நுழைவார்கள் என்று பேசி சர்ச்சையைக் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. 

    • ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வருவாய்துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    • வணிகர் தின நிவாரண மாநாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
    • 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் மே 5 வணிகர் தின நிவாரண மாநாடு, நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.

    மாநாட்டை சங்க அமைப்பாளர் த.பத்மநாபன் துவக்கி வைக்க தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம் வரவேற்புரை நிகழ்த்தினர்.

    கடந்த டிசம்பர் மாதம் மழை பெரு வெள்ளம் ஏற்பட்ட போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்காததால் மகாஜன சங்கம் சார்பில் 500 வணிகர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் இந்த மாநாட்டில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

    சென்னை, தூத்துக்குடி, ஏரல் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட 500 வணிகர்களுக்கு தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக் தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

     இதில் எம்.என்.ராஜா, கவிஞர் திலகபாமா, தங்கமுத்து, டி.ராஜ்குமார், ஆர்.சுந்தரேஸ்வரன், பயில்வான் ரங்கநாதன், பிரதாப் சந்தர், ஆர்.எஸ்.முத்து, புழல் தர்மராஜ், சத்திரியர் மக்கள் கட்சித் தலைவர் மின்னல் ஸ்டீபன் நாடார், திரவியம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    இதில் கொட்டிவாக்கம் முருகன், சண்முக துரை நாடார், தொழில் அதிபர்கள் எஸ்.ஜெகதீஷ், ரவீந்திரநாதன், சிவக்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள்.

    மாநாட்டில் நிர்வாகிகள் சிங்காரம், துரை சுந்தரசேகர், செல்வகுமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், மாரீஸ்வரன், காமராஜ், தங்கதுரை, முருகேசன், நெல்லை டேவிட்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் பொதுச் செயலாளர் ஹாஜி மம்முசா நன்றி கூறினார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஜி.எஸ்.டி. தொகையில் ஒரு சதவீதத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு அரசுகள் வழங்க வேண்டும். தயாரிப்பு உற்பத்தி பொருட்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வண்டலூர், ஓட்டேரி மருந்து வணிகர் வினோத்குமார் கொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

    லூலூ மார்க்கெட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி விடுதலையான வணிகர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வாடகை கடைகளுக்கு வணிகர்கள் மாநகராட்சி உரிமம் புதுப்பிக்க கடை உரிமையாளரின் வீட்டுவரி செலுத்திய ரசீதை இணைக்க வேண்டும் என்கிற மாநகராட்சி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
    • மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வின் சர்வதேச அமைப்புக ளுக்கான துணை வெளி யுறவுத்துறை மந்திரி கிம்சன் கியோங் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த கூட்டாளியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்" என்றார்.

    • பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை.
    • மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சி 15வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    சர்வதேச சுற்றுலா பகுதியின் முக்கியத்துவம் கருதி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவெடுத்து உள்ளது. அதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செய்துவருகிறது.

    இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை. இதற்கான அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கினர். மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக மாறுவதால் பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றல், தெரு விளக்கு, சாலை வசதி, சாலை அமைத்தல், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வடமாடு நலச் சங்கத்தின் சார்பில் ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    சங்கத்தின் கவுரவ தலைவர் சேவியர்தாஸ், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் செல்வம், மாநில தலைவர் அந்தோணி முத்து, மாநில செயலாளர் ரெக்குமோகன், மாநில துணைத்தலைவர் பரத்ராஜ், மாநில பொருளாளர் முத்து பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஸ்வரன், கவுரவ ஆலோசகர் தனசேக ரன், பொருளாளர் ரஞ்சித், மாவட்ட துணை செயலா ளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்பொழுது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு 6 மாத காலம் மற்றும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆண்டு முழுவ தும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மோகன், கவியரசன், பார்த்திபன், மோசஸ், செல்வகணேசன், செல்வம், கவுந்தர பாண்டியன், விஜய், ஸ்ரீதர் ராஜ், முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
    • கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் 12-வது மண்டல அலுவலகம் ஆலந்தூர், புதுப்பேட்டை தெருவில் செயல்பட்டு வந்தது. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்காக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு போதிய இடவசதி இல்லை. இந்தநிலையில் ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் இன்று தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர்கள் மற்றும் மண்டல அதிகாரி சீனிவாசன் உள்பட சுமார் 70 பேர் பங்கேற்றனர். ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அதிகாரிகள் கூட்டத்தில் நின்றபடி பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு அதிகாரிகளுக்கு தனியாக நாற்காலிகள் கொண்டுவரப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காளையார்கோவிலை பேரூராட்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விவசாய சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காளையார்கோவில்

    தமிழ்நாடு விவசாய சங் கத்தின் சிவகங்கை மாவட்ட அளவிலான 27-வது மாநாடு காளையார் கோவி லில் நடைபெற்றது. மாநில விவசாய சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

    இந்த மாநாட்டில் முன் னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாநில விவசாய சங்க செய லாளர் மாசிலா மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கணங ணகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி னர்.

    மாநாட்டில் வழக்கறிஞர் மருது, கோபால், முருகேசன், ஆறுமுகம், மாதர் சங்கத்தின் சார்பில் பாண்டியம்மாள், மஞ்சுளா, மாவட்ட விவசாய சங்க செயலாளர் காமராஜ், சகாயம், ராஜா, பாண்டி, ஒன்றியச் செயலாளர் திரு செல்வம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சந்தைத் திட லிலிருந்து மாநாடு திடல் வரை பேரணி நடைபெற்றது. மாநாட்டில், அதிக மக்கள் தொகை உள்ள காளையார் கோவில் ஊராட்சியை தமிழக அரசு பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்,

    தொண்டி-மதுரை ரெயில் பாதையை மத்திய அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.
    • எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்

    அரியலூர்

    அரியலூர்பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது.

    துணைதலைவர் அசோகன்,செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் அம்பி கா,ராமச்சந்திரன், நல்ல முத்து, குலக்கொ டி,வசந்த மணி,சகிலாதேவி, ராஜேந்திரன்,அன்பழகன், தனசெல்வி,கீதா, புள்ளியியல் அலுவலர் பால சுப்பிர மணி யன்,அலுவலக உதவியா ளர்கள் ரமேஷ், ராமராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுப்பாளையம்நெறிஞ்சிக்கோரை,பெரியநா கலூர்,அஸ்தி னாபுரம்,வாலாஜநகரம், தாமரைக்குளம் சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள்  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுத்தனர்.

    ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொ டுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,விவசாயிகள் கொடுத்துள்ள அந்த நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் நடத்தவுள்ளது. எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும்,  விவசாயி களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.

    மீறி நடத்தப்பட்டால் அங்கு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தி்ல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியு றுத்தினர். கோரிக்கைகள் அனைத்து உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

    • தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரும் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் தி.மு.க தலைவரும், முதல்-அமைச்ச ருமான மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வருகை தர உள்ளார். முதல்வரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் இரு வண்ண கொடியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெருமளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தர ராஜன்,மாநில தீர்மா னக்குழு துணைத்தலைவர் திவாகரன், மாநில விவசாய அணி துணை ெசயலாளரும், முது குளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், மாநில, மாவட்ட, நகர், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாய சங்க கூட்டம் நடந்தது.
    • செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் நீரினை பயன்படுத்து வோர் சங்க கூட்டம் தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீரினை பயன்ப டுத்துவோர் சங்க கூட்டம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நிர்வாக கவனத்திற்கு எடுத்துச் செல்வது.

    2022-23ஆண்டில் பருவ மழை பொய்த்ததால் வைகை தண்ணீர் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தண்ணி வராததால் இத னால் பாசனம் பெறும் 72 துணை கண்மாய்கள் நீர்வ ரத்து இல்லாமல் விவசாய முற்றிலும் பாதிக்கப்பட்ட தால் விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண வழங்க வேண்டும் எனவும், மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கண் மாய்களின் வாரத்துக்கு கால்வாய்களை தூர்வார வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் உகந்தான்குடி ராமநாதன், நாகனேந்தல் விசுவநாதன், பாரனூர் சரவணன், துணைத் செய லாளர் பால்ராஜ், சிறு வண்டல் முருகானந்தம் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி பெறவேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை யில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம், துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

    இதில் தொண்டி பேரூராட்சியின் மேலத்தெரு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளின் பழுதடைந்த வால்வுகளை பழுது நீக்குதல், பாரூர் போர்வெல்லி லிருந்து திருவாடானை செல்லும் பைப் லைனை மர்ம நபர்கள் உடைப்பதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. அதனால் திருவாடனை மின் வாரிய அலுவலகம் முதல் ஆராய்குடி குளக்கால் வரை சுமார் 2.62 கிலோ மீட்டர் தொலைவில் புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் உள்ளிட்ட குடிநீர் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மழை காலமாக இருப்ப தால் பொது மக்களின் சுகாதார நலன் கருதி சாலை களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மணிமுத்து ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருபுறங்களில் கரை அமைத்து தண்ணீர்சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக்கூட்டங்கள் அனுமதி பெறாமல் நடத்தப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால் இனி வரும் காலங்களில் சாலைகள் மற்றும் தெரு க்களில் பொதுக்கூட்டம் நடத்த பேரூராட்சி நீர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ேமலும் கூட்டம் தொடர்பாக அனுமதி வழங்க மாவட்ட எஸ்.பி. மற்றும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி யோருக்கு தெரியப்படுத்து தல் தொடர் பாகவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    ×