என் மலர்
நீங்கள் தேடியது "தீர்மானம்"
- இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்,அக்.30-
மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியபடி பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் செயலியில் (TNSED Parent App) வருகை பதிவு, பள்ளிகளில் திட்டமிடுதல் சார்ந்த விவரங்களை பதிவேற்றினர்.
இதன்மூலமே பள்ளி வளர்ச்சிக்கு விவாதிக்கப்பட்ட பொருள், தீர்மானங்கள் பெற்றோர்களுக்கு பகிரப்பட்டன. மேலும் பெற்றோர்களிடம் காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரங்களை பகிர்ந்து கற்றல் அடைவு சார்ந்த கலந்தாலோசனை நடைபெற்றது.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்த ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து, அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே பிளஸ் 2 முடித்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களில் உயர்கல்வி முகாமில் பங்கேற்ற 47 பேர் உயர்கல்வி சேர முன்வந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா, என்று பள்ளி கல்வித்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவ்வகையில் திருப்பூரில் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 150 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வியை தொடரவில்லை.
இவர்கள் உயர் கல்வியை தொடர உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களில், 47 பேர் உயர்கல்வி சேர்வதற்கான வாய்ப்புகளை கேட்டறிந்தனர். இதில் 8 பேர் ஐ.டி.ஐ., தொழிற்கல்வியில் சேரவும், 3 பேர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கை நீட்டிப்பு செய்தால், விண்ணப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.பலர் நீட், வேளாண் படிப்பு கலந்தாய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும், நிச்சயம் உயர்கல்வி தொடர்வதாக உறுதியளித்தனர். இவ்வாறு மொத்தம் 47 பேர் உயர்கல்வி தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தேர்ச்சியடையாத மாணவர்கள் பலர் பியூட்டிஷியன், டெய்லரிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். 2 கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டறிந்தனர்.கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி முகாமில் பங்கேற்க தவறியவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுள்ளனர்.
- வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும்.
- வேளாண்மை திட்ட பணிகளை பற்றி எடுத்து கூறி பயனாளிகளின் பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.
கபிஸ்தலம்:
ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கபிஸ்தலம் பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன
கபிஸ்தலம் பகுதியில் கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், சருக்கை, உம்பளப்பாடி, ராமானுஜபுரம், சத்திய–மங்கலம், உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், ஓலைப்பாடி, கொந்தகை, ஆதனூர், திருவைகாவூர், துரும்பூர், கூனஞ்சேரி, திருமண்டங்குடி, உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். மேல கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பால சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வேளாண்மை திட்டப் பணிகளை பற்றி எடுத்துக் கூறி பயணாளிகளின பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.
கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், சரவண பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஆனந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 2022 -23 ஆம் ஆண்டுக்கான வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும் எனவும் உள்ளாட்சி தினத்தில் கிராம சபை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
- ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
- பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் பிச்சை மூப்பன்வலசை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏர்வாடியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், ஏர்வாடி பகுதியில் சிறந்த சேவை செய்த மகளிர் சுயஉதவிக்குழுவினரை பாராட்டுவது, பேரிடர் காலத்தில் விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சி செயலாளர ஜெயராம கிருஷ்ணன் நன்றி கூறினர். ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் கூறுகையில், ஏர்வாடி ஊராட்சியில் 15 கிராமங்கள் உள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணி செய்வதில் மிகுந்த சிரமத்துடன் செய்து வருகிறோம்.
துப்புரவு பணிக்கு டிராக்டர் வாங்க அனுமதி அளிக்க வேண்டும். ஏர்வாடியை பேரூராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். பள்ளி அருகில் அமைந்துள்ள மதுக்கடையையும், மனநல காப்பகம் அருகில் அமைந்த மதுக்கடையையும் மூடிவிட்டு நகருக்கு வெளிப்புறத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள்.
- இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி னார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர் பொன்னேரி சிவா கூறியதாவது:-
தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள். முதல் முதலாக சென்னை, சென்னை ராஜ்தானியாக இருந்தபோது ராஜாஜி இந் தியை புகுத்தினார். இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில்பெ ரும்போராட்டம் நடைபெ ற்றது. மொழிக்காகமுதல் முதலில் சின்னச்சாமி உயிர் தியாகம் செய்தார். 1938-ல் மொழிக்காக சிறையில் சாகடிக்கப்பட்ட நடராஜன் மறைவிற்கு அண்ணாமலை செட்டியார் தனது காரை வழங்கினார். 1975-ம் ஆண்டு ஐ.நா. சபை முகப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரேயாவரும்கேளிர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.
தமிழ் மொழியின் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிர சன்னா கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். உத்தரவுக்கு ஏற்ப மோடி, அமித்ஷா அகியோர் இந்தியை திணித்து வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து கல்விநிறுவனங்க ளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும்.
இவ்வாறு இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கி ருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. சமஸ்கிருதம் வரும்போது, சனாதானமும் தானாக வந்து விடும். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம். இவ் வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன் னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம்,
பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், செல்வம், பிராங்கிளின், மதியழகன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
- மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து ஏராள–மானோர் கலந்து கொள்வது.
சீர்காழி:
சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேல், மோகன், குமார், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்துவது, வருகிற 27ஆம் தேதி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. தலைமையில் நடைபெறும் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் கலந்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய செயலா–ளர்கள் செல்வகுமார், வேலுமணி மற்றும் நிர்வா–கிகள் ஆகாஷ், சக்திவேல், மணிவண்ணன், ராஜதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.
முடிவில் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.
- அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
- சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.
வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.
- மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும்.
- மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.
நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேதுராமன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
இதில் மன்னார்குடி ரெயில்வே நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வது, மேலும் அங்குள்ள பொது கழிப்பிடத்தை சுத்தமாக பயன்படுத்துவது, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும்.
மன்னார்குடியில் இருந்து டெல்லிக்கு வாரந்தோறும் சிறப்பு ரயிலும், மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை செல்லும் டெமு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பது, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் அதன் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மன்னார்குடியில் இருந்து காலையில் மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.
மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும். மன்னை- பட்டுக்கோட்டை ரெயில் வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து மன்னார்குடி ரயில்வே நிலையத்துக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து சேவை சங்க பிரதிநிதிகளுடன் சென்று ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலுவை சந்தித்து மனு அளிப்பது, திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் மன்னார்குடி சேவை சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பின் தலைவர் பத்மநாபன், எஸ்.பி.ஏ.மெட்ரிக் பள்ளி தாளாளர் ரமேஷ், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன், நேசசக்கரம் அமைப்பின் நிர்வாகி சேதுராமன்ஆகியோர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் பாரதி நன்றி கூறினார்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
- 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலூர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.
இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.
மேலூர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.
இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.
- நில அளவை அலுவலர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- 9 கோரிக்கைகளை தீர்மா னமாக நிறைவேற்றப்பட்டது.
தருமபுரி,
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் பொதுக்குழு கூட்டம் தருமபுரி ஆவண காப்பக வளாகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கல்பனா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பெரியசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பிரகாஷ், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ரவி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பனிமலர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த செயற்குழு கூட்டத்தில் செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை, தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது.
இதனை அடுத்து மாநில மையம் களப்பணியாளர்கள் பணி சுமையை குறைத்து விடவும், நெறிப்படுத்திடவும் மனித சக்திக்கு மீறிய செய்மான குறியீட்டினை கட்டாயம் ஈட்ட வேண்டும் என்ற சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும். செய்த பணிகளை கருத்தில் கொள்ளாமல் நிலுவை மனுக்களை காரணம் சொல்லி பணியாளர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 கோரிக்கைகளை தீர்மா னமாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல், உறுப்பினர்கள் விவா தம் நடந்தது.மாநில தலைவர் ராஜா நிறைவு றையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் தவமுனி நன்றி கூறினார்.
- நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை.
- அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்–பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் இந்திரசித்தன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன், செயலாளர் புயல் குமார், பொருளாளர் மதியரசு, மகளரணி செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் அண்ணாத்துரை தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் ஐபெட்டோ பவளவிழா எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது, மாவட்ட கல்வி அலுவலகத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகஸ்தியன் பள்ளி - திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரெயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதில் சங்க உறுப்பினர்கள் அம்பிகாநிதி, நீலமேகம், சேகர், ஆனந்த் முருகு, பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் குமரவேலவன் நன்றி கூறினார்.
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு கூட்டம் இண்டூரில் நடைபெற்றது.
- ஊக்குவிப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இண்டூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு கூட்டம் வட்டார துணைச் செயலாளர் மாதையன் தலைமையில் இண்டூரில் நடைபெற்றது.
கூட்டத்தில் இம்மாதம் 29-ம் தேதி தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் இண்டூர் பகுதியில் இருந்து திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் நல்லம்பள்ளி ஒன்றியத்தை பிரித்து இண்டூரை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் ஏற்படுத்தவேண்டும். நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தை இண்டூரில் அமைக்கவேண்டும்.
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் இல்லாமல் முறையாக பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சுடுகாடு இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் சுடுகாடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்காமல் மறுப்பதை கலெக்டர் கண்காணித்து மாணவ, மாணவிகளுக்கு முறையாக ஊக்குவிப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.