என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை ஓட்டம்"

    • பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம்.
    • மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    மேலும், பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    அதன்படி, பூந்தமல்லி- போரூர் இடையே 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான 2ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மெட்ரோ ரெயில் 35- 40 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    • முதல்கட்ட சோதனை கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
    • 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

    பூந்தமல்லி பணிமனை நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    மேலும் பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

    • பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
    • ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயிலில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

    மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கிலோமீட்டர் தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் இன்று முதன் முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

    அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சென்னை போரூர் - பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் தாமதம் என தகவல் வெளியானது.

    தொடர்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் இன்று நடப்பதில் சிக்கல் எனக் கூறப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அடுத்த 3 மணி நேரத்திற்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 160 பயணிகளுடன் இயக்கி வெற்றி.
    • சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஊட்டி,

    நீலகிரி மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகை மற்றும் கரித்துகள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்களால் தீ விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் வகையிலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும் குன்னூா் ெரயில்வே பணிமனையில் தலைமை மெக்கானிக் மாணிக்கம் தலைமையிலான குழு, டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் 2-வது என்ஜினை குன்னூரில் வடிவமைத்திருந்தது.

    அந்த என்ஜின் முதல்முறையாக 160 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் ெரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும், யுனெஸ்கோ அமைப்பு சாா்பில் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில்.

    ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சுவிட்சா்லாந்தில் வடிவமைக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த மலை ெரயில் என்ஜின்கள், மேட்டுப்பாளையம் முதல் குன்னூா் வரை நீராவி மூலம் மட்டுமே வரை இயக்கப்பட்டு வந்தது. நிலக்கரியை எரிபொருளாக கொண்டு பல ஆண்டுகளாக மலை ெரயிலை இயக்கி வந்தனா். நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அதிலிருந்து வெளியேறும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், கரித்துக ள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்கள் வனப் பகுதிகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாலும், பா்னஸ் ஆயிலை எரிபொ ருளாக கொண்டு இயங்கும் வகையில் என்ஜினில் மாற்றம் செய்யப் பட்டது.

    பின்னா் காற்று மாசைக் குறைக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் வகையில் முதல் மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிம னையில் வடிவமை க்கப்பட்டது.

    இது வெற்றி பெற்றதைத் தொடா்ந்து இரண்டா வதாக டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் என்ஜின் தயாரிக்கப் பட்டு சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன. 

    • கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன
    • விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப் பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஓடுதள பராம ரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் காரணத்தால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது.

    உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப் பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் கோவை யில் இருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல பன்னாட்டு தொழில் நிறுவனம் சமீபத்தில் பிரத்யேக சரக்கு விமான போக்குவரத்தை இந்தியாவில் தொடங்கி உள்ளது. டெல்லி, பெங்க ளூர், ஐதராபாத், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவையை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளது.

    இதன் முன்னோட்டமாக கோவையில் கடந்த மாத இறுதியில் கோவை - ஐதராபாத், கோவை - பெங்களூர் நகரங்களுக்கு இடையே சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக செலவாகும் எரிபொருளின் அளவு, சரக்குகள் கையாளும் திறன், நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

    கோவையில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல இரு பன்னாட்டு நிறு வனங்களின் பொருட்கள் சேமிப்பு குடோன்கள் செயல்படுகின்றன.

    சாலை வழியாக பொருட்களை கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதத்தை சரக்கு விமான சேவை குறைக்கும்.

    சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில் சரக்கு விமான சேவையை கோவையில் தொடர்ந்து செயல்படுத்த அந்த நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.
    • நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.

    நெல்லை:

    சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு தென்மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

    தென்னக ரெயில்வேயில் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாக இந்த வழித்தடம் உள்ளது. ஆனால் சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

    இதன் காரணமாக நெல்லை-தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளுடன், பாதைகள் பலப்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் குறிப்பாக 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடம் 2012-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அந்த பாதையில் ரெயில்கள் இயங்கி வருகிறது.

    அதன் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.

    அதன்படி நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.

    மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து புறப்பட இருந்த இந்த ரெயில் சோதனை ரத்து செய்யப்பட்டது. அதிவேக சோதனை ஓட்டத்திற்கு பிறகு நெல்லை-தென்காசி வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் அந்த வழியாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் பயண நேரம் குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நெல்லையில் இருந்து புறப்பட்ட அந்த என்ஜின் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.
    • பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி இடையே 72 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது போக்கு வரத்துக்கு தயாராக உள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக அந்த பாதையில் மின்சார ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட அந்த என்ஜின் நெல்லையில் இருந்து புறப்பட்டு தென்காசி வரை சென்று மீண்டும் நெல்லைக்கு வந்தது. அந்த என்ஜின் பாவூர் சத்திரம் ரெயில் நிலையத்தில் நெல்லை -செங்கோட்டை ரெயில் கிராசிங்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள் அதை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

    இந்த நிலையில் நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடை யம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வரையிலான பாதையை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் உட்பட அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த ஆய்வானது நாளை (திங்கட்கிழமை) நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.பின்னர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு மின்சார ரெயில் சோதனை நடத்தப் படும். இந்த பணிகள் மாலை 4.30 மணியுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் முடி வடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரெயில் இயக்குவதற்கு வசதியாக வீரவ நல்லூர் ரெயில்வே சார்பில் துணை மின் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டை யில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார் குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலை யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விருதுநகர் - தென்காசி இடையே 122 கிலோமீட்டர் தூரத்துக்கும், தென்காசி - பகவதிபுரம் இடையே 14 கிலோமீட்டர் தூரத்துக்கும் இந்த மாத இறுதிக்குள் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைய உள்ளது குறிப் பிடத்தக்கது.

    • கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர்.
    • கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது


    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்க்காக பொது கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வந்தன.

    இந்த கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். பொது கழிப்பிடங்களை ஊழியர்கள் கைகளில் சுத்தம் செய்வதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு எதிர்ப்பு காட்டி வந்தது.

    கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு நவீன கருவிகளை வழங்க வேண்டி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனுவை பரிசோதித்த செயல் அலுவலர் நீண்ட நாள் முயற்சிக்கு பிறகு கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நடந்தது.

    இந்த எந்திரம் எந்த அளவு தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்கிறது என்பதையறிந்து தேவைக்கேற்றார் போல் மேலும் சில எந்திரங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என ெசயல் அலுவலர் தெரிவித்தார்.

    • கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்

    கோவை,

    தொழில் நகரமான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்கள் என மொத்தம் கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ள வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையானது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    எனவே கோவை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கினால் நன்றாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    தற்போது அவர்களின் கனவு நனவாக உள்ளது. வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி கோவை-சென்னை இடை யே வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கி வைக்க உள்ளார்.வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ள செய்தி கோவை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. இதனை யொட்டி இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரெயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக முற்பகல் கோவை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது. மதியம் 12.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து மாலை 6.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது.இன்று நடந்த இந்த சோதனை ஓட்டத்தில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்று ரெயிலில் பயணித்தனர். விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ளதும், இதனையொட்டி சோதனை ஓட்டம் நடந்ததும் கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோவை மக்கள் கூறியதாவது:-

    கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் ேசவை தொடங்கப்பட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.

    விரைவில் கோவை-பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி, வழித்தடத்தில் விலங்குகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கேற்ப ஊழியர்களை பணியில் அமர்த்தி சீரான முறையில் கண்காணிக்க வேண்டும். இந்த ரெயில் சேவைக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.
    • 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிதாக 4-வது குடிநீர் திட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எடுக்கப்பட்டு குழாய் மூலமாக திருப்பூர் கொண்டு வரப்பட்டது. திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளில் கடந்த மாதம் 4-வது திட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு சோதனை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.

    ஆனால் தெற்கு மாநகர பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த மாமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த மாத இறுதிக்குள் தெற்கு பகுதியில் 4-வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் உறுதியளித்தார்.

    இந்தநிலையில் நேற்று 4-வது திட்ட குடிநீர் திருப்பூர் தெற்கு மாநகர பகுதிக்கு வந்து சேர்ந்தது. சோதனை ஓட்டமாக ஆலங்காடு மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வந்து சேர்ந்தது. மேயர் தினேஷ்குமார் மலர் தூவி குடிநீரை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் சாந்தாமணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    குடிநீர் பரிசோதனைக்கு உட்பட்டு வெள்ளோட்டம் விடப்படுகிறது. பகிர்மான குழாய்களில் தண்ணீர் விடப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் தெற்கு மாநகர பகுதியில் உள்ள 16 மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

    • மிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
    • திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அவினாசி :

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ற பெயரில் அத்திக்கடவில் இருந்து அவினாசிக்கு வாய்க்கால் வெட்டி, அதன்மூலம் வறண்ட பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளை நீரால் நிரப்பும் திட்–டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் அறிவிப்பாகவே பல ஆண்டுகளாக இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    அத்திக்கடவில் இருந்து கால்வாய் வெட்டுவதற்கு பதிலாக, ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீர் எடுக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குட்டை, குளங்களில் நீர் நிரப்பும் வகையில் இந்த பணி தொடங்கியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும், இந்த பணியை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதுமட்டுமின்றி திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவை 15 ஏரிகள், 243 குட்டைகள் என 258 நீர்நலைகள், திருப்பூரில் 43 ஏரிகள், 385 குட்டைகள் என 428 நீர்நிலைகள், ஈரோடு மாவட்டத்தில் 16 ஏரிகள், 343 குட்டைகள் என்ற 359 நீர்நிலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப்பட்டன. இதன் படி நீர்வளத்துறை ஏரிகள் 32, ஒன்றிய ஏரிகள் 42, குட்டைகள் 971 என மொத்தம் 1,045 நீர்நிலைகள் மூலம் நிலத்தடி நீர் செறிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 24 ஆயிரத்து 487 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். ஈரோட்டில் மட்டும் 8 ஆயிரத்து 767 ஏக்கர் பயன்பெற உள்ளது.

    ஏரி–கள் குளங்களை இணைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பவானி ஆற்று உபரி தண்ணீரை நீரேற்றம் செய்ய பவானி காலிங்கராயன்பாளையம், நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என 6 இடங்களில் தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீரேற்று நிலையங்களை இணைக்கும் பிரதான குழாய்கள் 106.8 கிலோ மீட்டர் அளவுக்கும், ஏரிகள், குளங்களை இணைக்கும் கிளை குழாய்கள் 958.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட உள்ளன.

    சுமார் 6 மாத காலமாக திட்டப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி இருந்த நிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.

    பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:- அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. முன்னதாகவே இந்த பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் உபரி நீர் வருகை குறைவாக இருந்ததால் சோதனை ஓட்டம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இன்னும் 5 நாட்களில் தேவையான அளவு உபரி நீர் கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே சோதனை ஓட்டப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். இதன் மூலம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சோதனை ஓட்டமானது ஒவ்வொரு தலைமை நீரேற்று நிலையம் வாரியாக நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் செலுத்தி, கசிவுகள், உடைப்புகள் சரி செய்யப்பட்டு முழுமை செய்யப்படுகின்றன. தற்போதைய திட்டத்தின் படி 1045 குளம், ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குளங்களில் தடையின்றி தண்ணீர் சேர்க்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இன்னும் கூடுதலாக குளங்களை இந்த திட்டததில் சேர்க்க கோரிக்கைகள் வரப்பட்டு இருக்கின்றன. இதற்காக தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து வருங்காலங்களில் நீட்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

    • 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
    • பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, வாகன காப்பக வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கோர்ட்டு வழக்குகள் காரணமாக பஸ் நிலையம் திறப்பது தள்ளிப்போகிறது.

    இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் அதனை தற்காலிகமாக திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் முதற்கட்டமாக டவுன் பஸ்களை இயக்குவதற்காக பஸ் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகளை அகற்றி, பஸ்கள் வந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று பஸ் நிலையத்தை சுற்றி பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும் 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து பாளை, புதிய பஸ் நிலையம், தச்சநல்லூர், டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    வருகிற 19-ந் தேதி முதல் முழுமையாக அனைத்து டவுன் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×