என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை கைது"

    • கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்று காட்டு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனை நோட்டமிட்ட மர்மகும்பல், டாஸ்மாக் விற்பனை நேரம் முடிந்து ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது கடைக்குள் புகுந்து, வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி ஊழியர்களிடமி ருந்து ரூ.6லட்சத்து 47ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் 3பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    கொள்ளையர்களை அடையாளம் காண சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக் சரண்(வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் மற்ற கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலில் பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
    • தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.

    இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.

    பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ் என்ற கொள்ளையனை கைது செய்தனர்.
    • பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையன் சதீஸ் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை மடிப்பாகத்தில் 5 வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ் என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையன் சதீஸ் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.

    • பல்வேறு இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
    • சுமனை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் காரனை புதுச்சேரி கூட்டு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கேளம்பாக்கம், ஜோதி நகரை சேர்ந்த சுமன்(45) என்பதும், கூடுவாஞ்சேரி, காயரம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சுமனை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    • கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர்.
    • காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு காரில் வந்து மர்ம நபர் திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வந்தது. அவர் வந்த காரின் எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பதிவெண் கொண்ட கார் திருப்பூரிலும் நடமாடி வந்தது. மேலும் அந்த காரில் இருந்த மர்மநபர் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கார்த்திகேயன், முபாரக் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சம்மந்தப்பட்ட பதிவெண் கொண்ட கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர். காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்ததில் அவர் சிவகங்கை மாவட்டம் தெற்கு தமராக்கி பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் அதிபதிராஜா (வயது 23) என தெரியவந்தது.

    இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விதவிதமான கார் பதிவெண்களை கொண்டு பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 2 கார்கள், போலி பதிவெண்கள், கையுறை, முகமுடி, பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பறினர்.

    மேலும் அதிபதிராஜாவை பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டை சேர்ந்த பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் அகிலன், நித்தீஸ், கேடி கண்ணன், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அராத் என்ற பாசில் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டையில் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறி வைத்து கொள்ளையடித்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் சத்தியவேடு, வரதயபாளையம், புத்தூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள வங்கிகளில் பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி ரூபாய் நோட்டுகளை கீழே வீசி மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இந்த கும்பலை பிடிக்க திருப்பதி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் புத்தூர் துணை போலீஸ் கண்காணிப்பாளர் யஸ்வந்த் மேற்பார்வையில் சத்தியவேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரெட்டி தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சத்தியவேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் சென்னை ராஜமங்கலம், இந்திராநகரை சேர்ந்த விமல் (28) என்பதும் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து விமலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 2.96 லட்சம் ரொக்கம், 5 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மற்றும் சத்தியவேடு, வரதயபாளையம், புத்தூர் ஆகிய பகுதிகளிலும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    கைதான விமலை போலீசார் புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பதி சிறையில் அடைத்தனர்.

    • திருப்பூரில் தங்கியிருந்த கொள்ளையர்கள் சங்கமேஸ்வரன் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளனர்.
    • நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் ஓடக்காடு ராயபண்டாரம் வீதியைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (வயது 63). சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா் தனக்கு சொந்தமான வீட்டில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். கடந்த 12-ந்தேதி சங்கமேஸ்வரன் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு முகக்கவசம் அணிந்து வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் 4 போ் கதவை உள்புறமாக பூட்டினர்.பின்னா் சங்கமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கட்டிப்போட்டனா். மேலும், அவரது மகள் ஷிவானியை மற்றொரு அறையில் போட்டு பூட்டினா். பின்னா் வீட்டில் இருந்த ரூ.30 லட்சம், 40 பவுன் நகை ஆகியவற்றைக கொள்ளையடித்து விட்டுத் தப்பிச்சென்றனா்.அவற்றின் மதிப்பு ரூ.50லட்சம் இருக்கும்.

    இதுகுறித்து ஷிவானி தனது மடிக்கணினி மூலமாக அமெரிக்காவில் உள்ள தனது சகோதரியை தொடா்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாா். இதன் பின்னா் ஷிவானியின் சகோதரி திருப்பூரில் உள்ள நண்பருக்கு தகவல் கொடுத்ததன்பேரில் திருப்பூா் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து 3 பேரையும் மீட்டனா்.

    இந்த சம்பவம் தொடா்பாக திருப்பூா் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படையும் அமைக்கப்பட்டது.தனிப்படையினர் நெல்லை, மும்பையில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சங்கமேஸ்வரனுக்கும், திருப்பூா் வேலம்பாளையம் சொா்ணபுரி லேஅவுட் பகுதியை சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (34) என்பவருக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கோகுலகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சங்கமேஸ்வரன் வீட்டில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கார் வியாபாரம் செய்து வந்த கோகுலகிருஷ்ணனுக்கும், சங்கமேஸ்வரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் அவர்களுக்குள் பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஒரு மோசடி வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோகுலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேனியை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிறையில் இருந்து வெளியே வந்த கோகுலகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. சங்கமேஸ்வரனிடம் அதிகம் பணம் இருப்பதை அறிந்த கோகுலகிருஷ்ணன் அவர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

    இது பற்றி அவர் வள்ளிநாயகத்திடம் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்திருந்த அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி வள்ளிநாயகம் தனது நண்பர்கள் 3பேரை அழைத்துக்கொண்டு திருப்பூர் வந்துள்ளார். திருப்பூர் வந்த அவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் தங்குவதற்கு இடம் மற்றும் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார்.

    திருப்பூரில் தங்கியிருந்த கொள்ளையர்கள் சங்கமேஸ்வரன் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளனர். யார்-யார் வீட்டிற்கு வருகிறார்கள், வீட்டில் எப்போது ஆட்கள் இல்லாமல் உள்ளனர் என்பதை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கமேஸ்வரன் வீட்டு அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து வீட்டிற்குள் சென்று அவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடித்ததும் கோகுலகிருஷ்ணனுக்கு ரூ.1.50லட்சம் பணத்தை கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறி விட்டு 3 பேரும் தப்பி சென்றுள்ளனர். தலைமறைவான வள்ளிநாயகம் மற்றும் 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்து நகை-பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பெரம்பூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்தவர் அமர்நாத் (19). இவர் நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ரமணாநகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்த 3 பேர் அமர்நாத் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்கள்.

    மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவரிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை கத்தியை காட்டி பறித்தனர். பின்னர் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார்கள்.

    திருடன் திருடன் என்று அமர்நாத் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். அப்போது அருகில் உள்ள சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிகளை மடக்கி பிடித்தார்.

    அவர்கள் பறித்துச் சென்ற பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தார்.

    அப்போது அவர்கள் புழலை சேர்ந்த பாட்சா (19), எருக்கஞ்சேரியை சேர்ந்த தீபக் (21), ஜெயசந்திரன் (21) என்பது தெரியவந்தது. பல இடங்களில் இது போல் கத்தியை காட்டி பணம், செல்போன்களை பறித்தது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிளும், கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு அருகே கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள படாளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மாலை படாளம் கூட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்பு, கஜேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிற்குமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். உஷாரான அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மதுராந்தகத்தை அடுத்த ஜமீன்என்றத்தூரைச் சேர்ந்த தனுஷ், செய்யூரை அடுத்த தேவராஜபுரம் காமேஷ், மதுராந்தகம் கவாங்கரையைச் சேர்ந்த புனிதன் என்பது தெரிந்தது.

    பிடிப்பட்ட 3 பேரும் சித்தமூர் அண்ணாநகர் பகுதியில் 2 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இதே போல் அணைக்கட்டு, படாளம் பகுதிகளிலும் கை வரிசை காட்டி இருக்கிறார்கள்.

    செங்கல்பட்டு டவுனில் மோட்டார் சைக்கிளை திருடி தப்பி வந்தபோது 3 பேரும் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது

    செக்கானூரணியில் ஆட்டோ டிரைவரை தாக்கி வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். #arrest

    மதுரை:

    உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48), ஆட்டோ டிரைவர்.

    இவர் செக்கானூரணியில் திருமங்கலம் சாலையில் ஆட்டோவில் சென்றார். அப்போது அங்கு 4 பேர் வந்தனர்.

    அவர்கள், பணம் கேட்டு கணேசனிடம் மிரட்டல் விடுத்தனர். அவர் தர மறுத்ததால் அடித்து உதைத்து விட்டு, கணேசனின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்து செக்கானூரணி போலீசில் கணேசன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் கணேசனிடம் பணம் பறித்ததாக கொக்குளம் கழுங்கு பட்டியைச் சேர்ந்த பழனி குமார் (23), காசிமாயன் (25), தமிழரசன் (23), திலீப் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மாமல்லபுரம் அருகே கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம், அணுபுரம், நெய்குப்பி, கரியச்சேரி பகுதிகளில் தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன், அவரது நண்பர் சதீஷ்ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    திருவான்மியூரில் கார் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    சோழிங்கநல்லூர்:

    திருவான்மியூர், அஷ்ட லட்சுமி கோவில் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் வீட்டு முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மர்ம நபர்கள் காரை திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே திருடப்பட்ட கார் கொட்டிவாக்கம் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர்.

    உடனே காரில் இருந்த 2 வாலிபர்களும் வேகமாக செல்ல முயன்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதனால் அதில் இருந்த 2 வாலிபர்களும் தப்பி செல்ல முடியவில்லை. அவர்களை போலீசார் கைது செய்து காரை மீட்டனர்.

    விசாரணையில் பிடிபட்ட இருவரும் பெசன்ட் நகரை சேர்ந்த அய்யனார், சரண் என்பது தெரிந்தது. பழைய குற்றவாளிகளான அவர்கள் பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    கைதான 2 பேரையும் போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    ×