என் மலர்
நீங்கள் தேடியது "இளம் பெண்"
- இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
- கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பர்சானா ருகி (வயது 23). இவருக்கும் திருச்சி வரகநேரி பஜார் மன்சூர் அலி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மன்சூர் அலி குடும்பத்தினருக்கு 60 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர் பொருட்களும் மற்றும் 3லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியை பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் கருவுற்ற பர்சானாருகியை கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பர்சானா ருகி புகார் செய்தார். இதன் பேரில் கணவர் மன்சூர் அலி, மாமியார் புர்கான் பீவி, மாமனார் ஜாபர் அலி கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நிரவி நாகத்தோப்பு தெருவைச்சேர்ந்தவர் கந்தவேல். கொத்தனார் வேலை செய்துவரும் இவரது 2-வது மகள் உமாமகேஸ்வரி(வயது21). இவர் காரைக்கால் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரியில், பி.ஏ படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். உமா மகேஸ்வ ரிக்கும், திருவாரூ ரில் உள்ள உறவினர் கலிய பெருமாள் மகன் சதீஷ் என்ப வருகும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீஷ்க்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் சதீஷ்க்கு திருமணம் செய்துவைக்க யோசித்தனர். பிறகு, கந்தவேல், தனது மூத்த மகன் இதேபோல் காதல் விசயத்தில் இருந்தபோது, பெண் வீட்டார் சம்மதிக்காத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார்.
இருப்பது ஒரே மகள் என கூறியதை அடுத்து, சதீஷ் வீட்டார் கடந்த நவம்பர் 30ந் தேதி கந்தவேல் வீட்டுக்கு சென்று, திருமணம் குறித்து பேசி முடிவெடுத்து, விரைவில் நிச்சயார்த்த தேதி சொல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது.
மறுநாள் சதீஷ் உமா மகேஸ்வரி ஆகியோர் செல்போனில் பேசியதா கவும், அதன் பிறகு இருவரும் பேசவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி கந்தவேலின் மனைவி உஷா, விரைவில் நிச்சயதார்த்த தேதி சொல்வதாக கூறினா ர்கள் யாரும் போன் செய்யவில்லை. நீயாவது போன் செய் என மகளிடம் செல்போனை கொடுத்த போது, உமாமகேஸ்வரி போனில் ேபசாமல், போனை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 1.30 மணி அளவில், சதீஷ் சகோதரர் கந்தவேலுக்கு போன் செய்து, டிசம்பர் 7ந் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்ற தகவலை கூறியுள்ளார். அன்று பிற்பகல் 3 மணி அளவில், உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, கந்தவேல், நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.
- நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை என புகார்.
- பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அனிதா கிடைக்க வில்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ஆவாஜிப்பேட்டை கிராமத்தில், லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அனிதா(வயது22. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்த குப்பைகளை வெளியே கொட்டி வைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து காணாமல் போன அனிதாவை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் அனிதாவின் தந்தை மாணிக்கம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
- பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு சி. என். பாளையம் சேர்ந்த 20 வயது இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.
- சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லைலா (65). விதவையான இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது அதே பகுதியில் உள்ள நூலகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் லைலா நூலகம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டி லைலாவிடம் பேச்சுகொடுத்தார். நூலகம் இருக்கும் இடம் வழியாக செல்வதாகவும், வண்டியில் ஏறும்படியும் கூறினார். இதனால் லைலா இளம் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் டிப்-டாப் இளம் பெண், மூதாட்டி லைலாவிடம் மீண்டும் பேச்சு கொடுத்தார். நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் நன்றாக உள்ளது. எனக்கு கொடுத்தால் அணிந்து கொண்டு போட்டோ எடுத்து திருப்பிக் கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்.
இதை நம்பிய லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.
அதனை அணிந்த இளம்பெண் திடீரென மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டார். இதனால் மூதாட்டி லைலா அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற டிப்-டாப் இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பொது மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
- கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் வயதான பாட்டியிடம் 2 வாலிபர்கள் வாக்கு வாதம் செய்வதை சிலர் பார்த்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரித்த போது, 2 வாலிபர்களும் போதையில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பாட்டியிடம் விசாரித்தபோது, அவர் ஒரு உணவகத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது இந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மூதாட்டியிடம் வாக்கு வாதம் செய்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்ததும் இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு:
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.
அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:
எனது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். ஈரோடு முனிசிபால் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென ஒரு நாள் உன்னை பிடித்துள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.
அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர் பெற்றோருடன் வந்து திருமணம் பற்றி பேசினார்.
இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவரது குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.
அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன்.
இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.
மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்தும் என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும்.
எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது.
- ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார்.
கள்ளக்கறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வேண்டாமலை அவரது 2 -வது ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் குடும்ப சூழ்நிலை சரியில்லை என்றும் இந்த வருடம் செய்ய வேண்டாம் என்றும் கூறி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக்கின் மனைவி வேண்டாமலை வீட்டில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேண்டாமலையின் தந்தை லோகநாதன் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
- திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
கொடுமுடி,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.10 மணியளவில் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் வந்து நின்றது. பின்னர் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு ரெயில் கரூர் நோக்கி புறப்பட்டது.
ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரெயில் மெதுவாக சென்றதால் அந்த பெண் பலத்த காயம் அடைந்து தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மேலும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது அந்த பெண் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
- விபத்தில் பலியான அந்த பெண் யார் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்பதுபற்றி விசாரணை
கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள ஈத்தங்காடு சந்திப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று அந்த பெண் மீது மோதியது இதில் அந்த பெண் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய அந்த பஸ்சும் அங்கு நிற்காமல் சென்று விட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தென்தாம ரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பலியான அந்த பெண் யார் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்பதுபற்றி விசாரணை நடத்தி வரு கிறார்கள். மேலும் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சையும் போலீ சார் தேடிவருகிறார்கள்.
- சந்தியா அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சந்தியா (வயது 17).இவர் அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி என்பருக்கு சொந்தமான சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
- வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மாரியப்பன்அவதூறாக பேசி உள்ளார்.
- இளம் பெண் வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வி.கே.புதூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவதூறாக பேசி உள்ளார்.
மேலும் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, கதவை தட்டி உள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
உடனே அந்த பெண், வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு உறவினர்கள் விரைந்து வந்தனர்.
வழக்கு
அதனை பார்த்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் வி.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.