என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்டிடம்"

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதியில் கிள்ளியூர் பேரூராட்சிக் குட்பட்ட, மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் உள்ள பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனால் இந்த அங்கன் வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இவர்களின் கோரிக்கை யை ஏற்று மாங்கரையில் பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி, குழந்தைகள் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டி டம் அமைக்க அடிக்கல் நாட்டி பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ராஜபாளையம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
    • மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் ரூ.3.41 கோடி மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரா ட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    அதன்படி, ரூ.341.50 லட்சம் மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) அனிதா, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் தலைமையில் செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலையில் கூட்டம் நடந்தது.

    இதில் பேரூராட்சியின் தற்போதைய கட்டிடம் பழைமையான கட்டிடம் என்பதாலும், அங்கு போதிய இடவசதி இல்லாத கார ணத்தாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் சீரணி அரங்கம் பகுதியில் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.

    இது சம்பந்தமாக நடைபெற்ற ஆேலாசனை கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அ.தி.மு.க. நகர செயலாளர் வாசு பேசும்போது, புதிய பேரூராட்சி கட்டிடத்தை தவிர வர்த்தக பயன்பாட்டிற்காக வேறு எந்த ஒரு கட்டிடமும் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகி களும் பேசினர்.

    கூட்டத்தில் சிறுவர் பூங்கா அருகே மஞ்சு விரட்டு மணி செய்யும் தொழிலாளர்களை மாற்று இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. நிர்வாகி விடுத்தார். அதற்கு தி.மு.க. கவுன்சிலர் மணிசேகரன் கூறும்போது, சிங்கம்புணரி நகருக்கான கோவில் ஊழியம் செய்யும் சிறு தொழில் செய்யும் அவர்களின் வாழ்வா தாரத்தை நசுக்ககூடாது. அவர்களுக்கு அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனே பேரூராச்சி தலைவர் அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    • திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்துக்கு கடந்த 1957-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கக்கன் 1958 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டிடம் கட்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது.

    இதற்காக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு பின்பகுதியில் தற்காலிக அலுவலகத்திற்காக ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்கனவே இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உஷாராணி, மாயாண்டி, சாந்தி மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் தலைவர் வேட்டையன் பங்கேற்காமல் நிகழ்ச்சியை புறக்கணித்தார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

    • கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா கோட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 23. 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து, தமிழக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை, தி.மு.க. மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தமிழ் ஐயா பரமசிவம், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, இளைஞரின் அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், ஆரஞ்சு பாப்பா குணசேகரன், செல்லப்பிள்ளை, அருணாச்சலம், கல்லாக்கோட்டை முத்துக்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
    • சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ரூ.22.65லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    அகணி ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டமுடிவு செய்யப்பட்டு எம்ஜிஎன்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் ரூ.12லட்சத்து 65ஆயிரம், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.10லட்சம் என மொத்தம் ரூ.22.65லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    அதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் நந்தினிபிரபாகரன் வரவேற்றார்.சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தியாக.விஜயேஸ்வரன், தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் சசிக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்வேணி, சமூக ஆர்வலர் கோ.அ.ராஜேஷ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    நிறைவில் ஊராட்சி செயலர் வீரமணி நன்றிக்கூறினார்.

    • சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
    • சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் எதிர்ப்பு பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பேரூராட்சி கட்டிடம் 70 ஆண்டுகளுக்கு முன்பு 19.11.1953-ல் திறப்பு விழா கண்டது. இந்த பழைய கட்டிடம் போதிய வசதி இல்லாததாலும், பழைய கட்டிடம் என்பதாலும், சீரணி அரங்கம் பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட கருத்து கேட்டு அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒருமனதாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர். அனைத்து கட்சி நிர்வாகிகளிடமும் கையெழுத்தும் பெறப்பட்டது.

    2015 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இதே சீரணி அரங்கம் பகுதி காலி இடத்தில் அம்மா விளையாட்டு அரங்கம் கட்ட தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இதை ஆட்சேபித்து சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

    தற்போது தி.மு.க. நிர்வாகம் சீரணி அரங்கம் பகுதியில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    இந்த நிலையில் சீரணி அரங்கை இடித்துவிட்டு புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டக்கூடாது என்று சிங்கம்புணரி ஒன்றிய பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

    பாரம்பரியமிக்க சீரணி அரங்கத்தை இடிக்க கூடாது, சீரணி அரங்கை தவிர்த்து மாற்று இடத்தில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்ட வேண்டும் என பா.ஜ.க. ஊடகப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டன.

    மேலும் சீரணி அரங்க திடலை பாதுகாப்போம் என்று சிங்கம்புணரி நகர் பகுதி முழுவதும் சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

    இதன் மூலம் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இங்குள்ள கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் இருந்தது.

    இப்பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருதார்.

    அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது ரூ1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.

    ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவை தலைவர் நெடுஞ்செழியன், எம்.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் வரவேற்றார் விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்–செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.

    ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, தினகர், மங்கை.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் பழனிவேல் நன்றி கூறினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
    • மீன்சந்தை அருகே காலியிடத்தில் ரூ. 1.5 கோடியில் காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கன்னியாகுமரி:

    வாகனங்களின் அதிக ரிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக களியக்காவிளை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முந்தைய அ.தி.மு.க. அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக பஸ் நிலை யத்தின் அருகில் உள்ள காய்கனி சந்தையையும் இணைத்து விரிவாக்கப் பணி மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு காய்கனி சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து மீன்சந்தை அருகே காலியிடத்தில் ரூ. 1.5 கோடியில் காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்ததையடுத்து காய்கனி சந்தை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து புதிய சந்தை கட்டிடம் திறப்பு விழா களியக்கா விளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரமாதேவி, விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரிப்பன் வெட்டி காய்கனி சந்தையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, களியக்காவிளை பேரூராட்சி இளநிலை பொறியாளர் பத்மதேவன், பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரிபாய், வின்சென்ட், உமா மகேஸ்வரி, சுனிதா, விஜய குமாரி, தாஸ், விஜயா, நிஷா, டெல்பின் ஜலீலா, வர்த்தகர் சங்க மாநில துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
    • பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திட்டப்பணிகள்

    தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
    • பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே ஜக்கம்மாள்புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

    இந்நிலையில், அங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில், ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வந்து, பள்ளியில் 81 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பழைய நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், வள்ளி நாயகிபுரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு எம்.எல்.ஏ. விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வீரபாண்டியபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அனைத்து துறைகள் பங்கேற்கும் சிறப்பு முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முதல்-அமைச்சரின் மானாவாரி வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2500 மதிப்பிலான நியூட்ரிசாப் பயிர் பூஸ்டர் டானிக் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் திட்ட பயனாளிகளுக்கு ஹெக் டருக்கு ரூ.6000 மதிப்பிலான இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார்.

    வேளாண்மை உழவர் நலத்துறை நலத்துறை சார்பில் கருத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. முகாமில் விவசாயிகளிடம் தேவை குறித்த மனு பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், வேளாண் உதவி இயக்குநர் கீதா, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகப் பிரியா, லக்கம்மாள், ஜக்கம்மாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு, செயலாளர் பார்த்திபன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டும் பணி தொடங்கப்பட்டது
    • கங்கைகொண்ட சோழபுரம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டசோழபுரத்தில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டும் பணி, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், நடைபெற்றது. எம்.எல்.ஏ.கண்ணன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஈஸ்வரன், செயற்பொறியாளர் பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் விஜியலெட்சுமி, உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ச.பரிமளம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, உதவி செயற்பொறியாளர் வாஹிதா பானு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி), அமிர்தலிங்கம் (கிராம ஊராட்சி), ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.என்.ரவிசங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், உதவி பொறியாளர் கெ.குமார், ஜெயங்கொண்டம் வேளாண்மை அட்மா குழு தலைவர் இரா.மணிமாறன், தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிமுத்து கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×