என் மலர்
நீங்கள் தேடியது "அங்கன்வாடி மையம்"
- சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 1-வது வார்டில் நடைபெற்ற நகர பகுதி சபை கூட்டத்திற்கு சிங்கம்புணரி நகர் சேர்மனும் 1-வது வார்டு உறுப்பினருமான அம்பலமுத்து தலைமை தாங்கினார். செயல் அதிகாரி ஜான் முகமது முன்னிலை வகித்தார். இதில் 1-வது வார்டு பொதுமக்கள் திரளான அளவில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் செய்து தருவதாக சேர்மன் அம்பலமுத்து உறுதியளித்தார். அதை தொடர்ந்து அந்த வார்டு பொதுமக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சமுதாயக்கூடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சார வசதி கிடையாது. ஆகவே சமுதாய கூடத்தை சிறந்த முறையில் பராமரிப்பு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்போது பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து அங்கன்வாடி மையம் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.
- 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.
- ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.
அவினாசி:
சமூக ஆா்வலரும், வக்கீலுமான திருமூா்த்தி முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: -
அவிநாசி வட்டம், சேவூா் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராமியம்பாளையம்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ராமியம்பாளையம், சாலைப்பாளையம், ஓடத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.
50 ஆண்டுகளுக்கு முன் கருங்கல்லாலும், ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.மேலும் தற்போது ஓடுகள் உடைந்தும், சுவா்கள், தரைகள் தளம் இடிந்தும் உள்ளதால் மழை நீா் மையத்துக்குள் வழிகிறது.தரை ஓதத்தினால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
இதனால் குழந்தைகள் உட்காா்ந்து பயிலவோ, ஓய்வெடுக்கவோ, விளையாடவோ கூட இடமின்றி உள்ளதால், பெற்றோா் மிகவும் அச்சமடைந்துள்ளனா்.ஆகவே சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது.
- சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மாவட்ட கனிமவளத்துறை நிதி ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிட பணிக்கான பூமி பூஜையும், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது. சோழவந்தான் சட்டம ன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி பொறியாளர் பூப்பாண்டி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், ஊராட்சி தலைவர் பவுன்முருகன், துணைதலைவர் பாக்கியம்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, சுப்பிரமணி, ஊராட்சி துணைதலைவர் கேபிள்ராஜா, ரிசபம் ஊராட்சிதலைவர் சிறுமணி, திருவேடகம் ராஜா, பேட்டை பெரியசாமி, மாணவரணி தவமணி, ஊராட்சி செயலர் திருசெந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தில் வி.கள்ளப்பட்டி சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெய்த மழையிலும், தொடர்மழை காரணமாகவும் அங்கன்வாடி மையத்தின் முன்பு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது அந்த தண்ணீர் கழிவுநீராகி நோய் பரவும் மையமாக உருவெடுத்து உள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.இதன் காரணமாக அங்கன்வாடி மைய பொறுப்பாளர் அருகில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை அங்கு வைத்து பாடம் நடத்தி வருகிறார்.
அங்கன்வாடி மையத்தின் அருகிலே உள்ள நியாய விலைக் கடையும் தண்ணீர் தேங்கிய காரணத்தினால் மூன்று மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. நியாய விலை கடை திறக்க முடியாத சூழல் இருப்பதால் தற்காலிகமாக நியாய விலை கடை தும்மக்குண்டு அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக உடை யாம்பட்டி, கரிசல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் இப்பகுதியினர் தெரி வித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று மாத காலமாக மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
வேர்க்கிளம்பி பேரூ ராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.
வேர்க்கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், துணைத் தலைவர் துரைசிங் மனு வேல், செயல் அலுவ லர் சதீஷ் குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தின குமார், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேஷியஸ், காட்டாத்துறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன், காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசை யாஸ், மற்றும் வேர்கிளம்பி பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், பொது மக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
- பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்டப்பணிகள்
தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.
பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
- கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது.
பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- ஊட்டச்சத்து மிக்க உணவை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
சென்னை:
சென்னை ராயபுரம் மண்டலம் 63-வது வார்டுக்கு உட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குழந்தைகளை நல்ல முறையில் கவனித்து கொள்ளவேண்டும் என்றும், ஊட்டச்சத்து மிக்க உணவை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார்
- மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தார்
வாணியம்பாடி:
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது முதல் தற்போது 4 பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிந்த பின்பும் சரி இதுவரையில் இருந்த மாவட்ட கலெக்டர்கள் யாரும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரவு தங்கியது இல்லை.
ஆய்வு
இந்த நிலையில் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் பகுதியில் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும், ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் மத்திய அரசு மையத்திலும் ஓய்வு விடுதிகள் பிரமாண்டமான அளவில் உள்ளது.
இந்த ஓய்வு விடுதிகளில் தான் கலெக்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அரசு துறை உயர் அதிகாரிகளும் இங்கு வந்தால் இரவு தங்குவார்கள்.
இருப்பினும் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் அடுத்த பீமகுளம் ஊராட்சியில் உள்ள மந்தாரக்குட்டை அங்கன்வாடி மையத்தில் திடீரென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இரவு தங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய கலெக்டர் நேற்று மாலை மிட்டூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். பீமக்குளம் ஊராட்சி மந்தாரகுட்டை கிராமத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வகுப்பில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை கற்பித்தார்.
தொடர்ந்து மழை பகுதி மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார். அவர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பின்னர் அதே பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு தங்கினார். ஒரு கலெக்டர் மலைப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கியது இதுவே முதல் முறையாகும்.
கலெக்டர் ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சம்பத், வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் மேகலா திருப்பதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பீமகுளம், நாயக்கனூர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பொதுக் குழாய்களில் குடிநீர் வருகிறதா என குழாய்களைத் திறந்து பார்த்தார்.
மலைப்பகுதிக்கு வரும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரம் கொட்டுவதை தடை செய்தும் அங்கு கொட்டப்பட்டிருப்பதை உடனடியாக அகற்றவும் கூறினார்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குக்கிராம ஊராட்சி களிலும், குறிப்பாக ஆத்திக்காட்டு விளை போன்ற பகுதிகளில் செயல்ப டுகின்ற, கிராம ஊராட்சி அரசு பள்ளிகள் அங்கன் வாடிகளில் மின்கட்டணம் செலுத்த வில்லை என்று மின்வாரியத்தின் மூலம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுபள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிடத்திற்கு தேவை யான தண்ணீர் கிடைக்காமல் சுகாதார கேடு ஏற்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல கிராம ஊராட்சிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகிக்க முடியாமல் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மின்சார துண்டிப்பின் காரணமாக அழகியபாண்டியபுரம் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் பயன்பெருகின்ற சுமார் 225 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். இதுபோன்று தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையிலும் மின்வாரி யத்தின் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது.
எனவே கிராம ஊராட்சிகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பினை உடனடியாக வழங்க மின்சார வாரியமும், அரசும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- ராமநாதபுரம் 4-வது வார்டில் அங்கன்வாடி மையத்தை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
- ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2020-21 நிதியின் கீழ் யானைகல் வீதியில் அங்கன்வாடி மையம் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது.
4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டியம்மாள் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இதையடுத்து நகராட்சி சேர்மன் ஆர்.கே.கார்மேகம், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோரது முயற்சியால் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதன் திறப்பு விழா நடந்தது.
நகராட்சி சேர்மன் ஆர்.கே. கார்மேகம் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டி யம்மாள், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன், உதவி பொறியாளர் செல்வகுமார், மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஜே.ஆர்.பி.மணிகண்டன் நன்றி கூறினார்.
- அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
- மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டிடம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் கட்டப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களின் பணியை பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் 30 உறுப்பினர்கள் கட்டுமான தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சியை 2 மாத காலம் பெற்றனர். இந்த பயிற்சியில் புதிதாக கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்டு உரை தயாரித்தல், ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பணியை அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி பெற்றனர். அதனை தொடர்ந்து தற்பொழுது முதன்முறையாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஆண்கள் பார்த்து வந்த கட்டுமான பணி தற்போது பெண்களாலும் முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.