என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையெழுத்து"

    • நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
    • காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.

    நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயோ ஆராய்ச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு எனும் தலைப்பில் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன், சன் பயோ நேச்சுரல்ஸ் நிறுவன அதிகாரி சக்திவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கல்லூரியின் கூட்ட அரங்கில் பயோ ஆர்கானிக் உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்த விவாதம் நடந்தது. வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது. உதவி பேராசிரியர் கருப்புராஜ், ஆர்கானிக் உரம் தொழில்நுட்பத்தை பற்றியும், பூச்சியல் இணை பேராசிரியர் விஷ்ணுபிரியா, ஆர்கானிக் பூச்சிக்கொல்லி பற்றியும் பேசினர். இதில் கல்லூரி தாளாளர் சேதுகுமணன், பயோ நேச்சுரல்ஸ் சக்திவேல், ஆடிட்டர் எழில், இயக்குநர் கோபால் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது
    • இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க, மதுவை ஒழிக்க அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் அருண்பாண்டியன் முன்னிலையில் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டனர். கையெழுத்து இயக்கத்தை ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். பஸ் நிலையத்திற்கு வந்த ஏராளமான பொதுமக்கள், பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து மதுவை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து போட்டனர். இதில் போதை வஸ்துகளான மது, கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற கொடிய போதைக்கு சுமார் 10 கோடி பேர் அடிமையாக உள்ளனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டும், அனைவரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாகவும், விமானங்கள் வழியாகவும் சட்டவிரோதமாக கொண்டு வந்து குவிக்கப்படும் கொடிய போதை பொருட்களை தடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் கையில் கத்தியுடன் கைது செய்யப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் 18 வயது முதல் 30 வயது உடைய போதைக்கு அடிமையானவர்களே. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரவு, பகலும் பாதுகாப்பற்ற சூழல் மாறி வருகிறது. இரவு நேர தெருக்களில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை மீட்டெடுக்க வேண்டியது ஒன்றிய மாநில அரசுகளின் கடமையாகும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், கைத்தறி நெசவு தலைவர் துரைராஜ், பத்மாவதி, கோவிந்தராஜ், ரவி, முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணி-கைெயழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மனிதசங்கிலி நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    தொடர்ந்து விழிப்பு ணர்வு பிரசார வாகனத்தை யும் கலெக்டர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு, மனித சங்கிலி போன்றவற்றில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழி லாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) மைவிழிச்செ ல்வி, விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 11 இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நடந்தது.

    இதேபோல் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர், அருப்புக் கோட்டையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நடந்தது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்து உள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீபிதி பூரண ஜெய ஆனந்த் தலைமை தாங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர், வழக்கறிஞர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீபிதி சுந்தரராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி, நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டீ, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சட்டம் சார் தன்னார்வலர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.
    • திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி சாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 14ந் தேதி டெல்லியை சேர்ந்த ரோகித்ராய் (வயது22), கமல்ராய் (22), மெகந்தர்ராய் (30), அஜய்ராய் (23), மேக்ராஜ் (60) ஆகிய 5 பேர் திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மேஜிக் செய்து காட்ட அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் அளித்தனர்.

    ஆனால் இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர்கள் கல்வி அலுவலக வெளியில் இருந்த அறிவிப்பு பலகையில் நாசுருதீன் கையெழுத்தை ஸ்கேன் செய்து பள்ளிகளில் மேஜிக் செய்ய அனுமதி வழங்கப்ப டுவதாக போலியான சுற்றறிக்கையை தயார் செய்தனர். மேலும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து மேஜிக் ஆசாமிகளை பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரியில் 2 இடங்களில் நடந்தது

    கன்னியாகுமரி :

    தமிழக கவர்னர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதற்காக ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு மற்றும் கோவளம் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் நேற்று மாலை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வக்கீல் வெற்றிவேல் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாலசு ப்பிரமணியம் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு சிறப்பு விரு ந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பிச்சுமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்-அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி யில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமையில் தலைஞாயிறு பஸ் நிலை யத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் கன கராஜ், மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா, மூத்த உறுப்பினர்கள் ஞானசி காமணி, மணி மேகலை, இளைஞர் காங்கி ரஸ் கார்த்தி ஹரி உள்ளிட்ட தொண்ட ர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து கையெழு த்திட்டனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் கூறுகையில்:-

    தலைஞாயிறு பேரூராட்சி க்கு உட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தி சுமார் 5 ஆயிரம் பேரிடம் கையெ ழுத்து பெற்று முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வளையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கருத்துகேட்பு கூட்டம்

    அவர்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சிப்காட் சம்மந்தமான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

    இதில் சிப்காட் எதிர்ப்பாளர்கள், நிலம் பாதிக்கப்படும் விவசாயிகள், சிப்காட் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவே சிப்காட் அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தனர்.

    மீண்டும் போராட்டம்

    சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதாலும், அதிகாரிகள் கேட்டுக் கொாண்டதாலும் கடந்த 2 வாரங்களாக அவர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    கருத்துக்கேட்புக் கூட்டம் முடிவுற்ற நிலையில் இன்று மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், என்.புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெறுகிறது.

    • மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
    • டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் கவிஞர் பாட்டாளி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழ்நாடு தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்ற தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வசேவையா, மாநகர செயலாளர் பிரபாகர், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் ராவணன், தமிழர் அறம் இயக்கத்தின் தலைவர் ராமசாமி, எழுத்தாளர் சாம்பான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி யோகராஜ், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் நாத்திகன், மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ் தேச மக்கள் முன்னணி செயலாளர் ஆலம்கான், மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜோதிவேல், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.
    • சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம்.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கல்வி உரிமைக்கான கழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

    நம்முடைய அரசு அமைந்த பிறகு, கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி நம்மு டைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி முடித்தோம். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    அந்தப் போராட்டத்திலேயே நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை நாம் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியிருந்தேன். அதற்கான முன்னெடுப்பாக தான் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்க உள்ளோம்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் நம் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் இருக்க வேண்டும்.

    மக்களின் கையெழுத்துகளை பெறுவதற்காக 'போஸ்ட் கார்டு' மற்றும் இணையதளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.

    ஏனெனில் அதில் ஒவ்வொருவரும் கையெழுத்து இடஇட நீட் தேர்வுக்கு எதிராக எத்தனை பேர் கையெழுத்து போட்டுள்ளனர் என்ற கவுண்ட் டிஜிட்டலாக அந்த வெப்சைட்டில் தெரியும்.

    அதனால் உறுப்பினர் சேர்க்கைக்கு படிவங்களை எடுத்து செல்வதுபோல் ஐபாட், டேப்களை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று வீடு வீடாக ஏறி நாம் கையெழுத்து பெற வேண்டும்.

    கவுன்ட் காட்ட வேண்டும் என்பதற்காக இல்லாதவர்களின் பெயர்களை போலியாக எழுதி, ஏதோ 10 நம்பர்களை போன் நம்பர் என டைப் செய்வது போன்ற தவறான விஷயங்களை தயவு செய்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதல்-அமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம். பிறகு முறைப்படி அறிவாலயத்தின் வழியாக, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம். கல்லூரி முன்பு நின்று மாணவர்களின் கையெழுத்துகளை பெறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியை பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வகையில் சிறப்பாக செய்திட வேண்டும்.

    சென்னையில் கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (21-ந்தேதி) கையெழுத்து இயக்கத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்த உள்ளனர்.

    ×