என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்கம்"

    • வாடிப்பட்டி அருகே ரூ.56.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலங்கள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்தவழியாக நாச்சிகுளம் பஞ்சாயத்து உட்பட்ட நரிமேடு கிராமத்திற்கும் கருப்பட்டி, இரும்பாடி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., இடிந்து விழுந்த அந்த சிறு பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டிட நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    அதன்படி வாடி பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பொம்மன்பட்டி-கருப்பட்டி இடையே மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலமும், நாச்சிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நரிமேடு செல்ல போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு சாலையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலமும் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

    இந்த சிறுபாலங்கள் கட்டிட கட்டுமான பணி க்கான பூமி பூஜை நடந்தது.

    இந்த பூஜைக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் கமிஷனர் கதிரவன், ஒன்றிய பொறியாளர் ராதா, ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், பேரூர் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான பால்பா ண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க.நிர்வாகிகள் பிரகாஷ், மோகன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 34 மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது.
    • இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணி, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பொதுமக்கள் இணைய தளம் மூலம் ஆதார் எண்ணை மின் இணைப்பு நம்பருடன் இணைத்தனர். ஒரே நேரத்தில் பெரும்பா லானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முயன்றதால், மின்வாரிய இணைய தளத்தின் சர்வர் முடங்கியது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அதில் 'பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில அளவில் 2 ஆயிரத்து 811 அலுவலங்களிலும் இன்று(28-ந் தேதி) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 மின்வாரிய அலுவல கங்களிலும் சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. பண்டிகை தினங்கள் தவிர ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை இந்த முகாம் செயல்படும்.

    பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

    மதுரை அரசரடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இன்று ஆதார் எண்ணை இணைப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஆதார் எண்ணை இணைக்கும் போது தற்போதைய மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைக்கும். பெயர் மாற்றமும் செய்ய இயலும். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் வராது.

    அதேபோல கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களுக்கான மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் தொடரும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



    தாமிர கொப்பரை.

    ............... 

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடந்தது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 12.20 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

    விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி மதியம் 11 மணிக்கு கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.அன்று மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன்பிறகு இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    • கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடங்க ப்பட்டு,சாமிதோப்பு தலைமைப்பதி தலைமைகுரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றுகிறார்.இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவின் 15-ம் நாளான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு முடிவில் இனிமம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

    • பரமக்குடியில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
    • இதனை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    பரமக்குடி

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார வள மையம் சார்பாக வட்டார அளவிலான கலைத்திருவிழா சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார். இந்த கலைத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் அழிந்து வரும் கலை வடிவங்களை மீட்டெடுக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், வட்டார கல்வி அலுவலர்கள் ரவிக்குமார், சுதாமதி, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், வட்டார வளமைய ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
    • 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை யொட்டி மதுரை- விருதுநகர் நான்குவழிச்சாலை செல்கிறது.

    நெடுஞ்சாலை உயரமானதால் ஓமியோபதி மருத்துவ கல்லூரி வளாகம் தாழ்வானது. இதனால் மழைக்காலங்களில் மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போதெல்லாம் கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    கடந்தாண்டு பெய்த தொடர்மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழந்ததால் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன.

    இந்த ஆ ண்டும் தற்போது உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பி உள்ள நிலையில் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் வர தொடங்கி உள்ளது.

    இதனால் திருமங்கலம் ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக புகுந்து வந்தது. இன்று காலை கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து இன்று மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையின் வெளியிலேயே பாடம் நடத்தப்பட்டது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கூறுகையில், வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் வகுப்புகளை நடத்த முடியவில்லை. நாளை முதல் 15 தினங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 2, 3, 4-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கிளினிக் வகுப்புகளும் நடைபெறும்.

    கிளினிக் வகுப்புகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஓமியோபதி மருத்துவ மனையில் நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    • மேலூரில் ரூ.3.45 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலூர் யூனியன் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 3.45 கோடி மதிப்பில் புதிய யூனியன் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், வள்ளாலபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், யூனியன் முன்னாள் சேர்மன்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுபைத அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர் வட்டம் தெற்கு தெரு மற்றும் கருத்த புளியம்பட்டி கிராமத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 84.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள அடுக்கு மாடி குடியிப்பு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆணை களை வழங்கினார்.

    • விழாவின் சிகர நிகழ்ச்சி யான கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
    • விழாவையொட்டி தினமும் காலை, மாலை மங்கல மற்றும் தேவார இசை, வேதபாராயணம் ஆகிவை நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பூதப் பாண்டியில் சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்க சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை மங்கல மற்றும் தேவார இசை, வேதபாராயணம் ஆகிவை நடைபெறுகிறது.

    22-ந்தேதி காலை 4.30 மணிக்கு மங்கல இசை, 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. காலை 5 மணிக்கு 4-ம் காலயாக சாலை கிரிய பூஜை ஆரம்பமாகிறது. 5.30 மணிக்கு பிரம்மசுத்தி, ஆலயசுத்தி, ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

    காலை 6.30 மணிக்கு யாத்ராதானம், 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல், காலை 7.35 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவார விமானம் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தம், இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி, பஞ்சமூர்த்தி தரிசனம் உலா ஆகியவை நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    • 27 யாக குண்டங்கள் அமைப்பு
    • கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5 மணிக்கு தீபாராதனையும் மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி பூஜை தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி காலை 7 மணிக்கு பூர்ணகிரி, கோ பூஜை, தீபாராதனை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை ,தனலட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை இரவு 8 மணிக்கு வயலின் இசை நடக்கிறது.

    24-ந்தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரியா பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலை பூஜை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந்தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை கிரிய பூஜை காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடகம் எடுத்து வந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் அலங்கார தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தமும் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம் பி ,தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபி ஷேகத்தையொட்டி திருப்பணிகள் முடிந்து தற்போது கோவில் வளாகத் தில் 27 யாக குண்டங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

    கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடி மரத்தில் பொருத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல் பகுதி யில் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும்.
    • குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.

    கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மீண்டும் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் வள்ளங்களில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டம் மாற்றம் காரணமாக வழக்கமாக கிடைக்கும் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.இதனால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குளச்சல் கடல் பகுதியில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்நிலையில் வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால் இந்த நாட்களில் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராம விசைப்படகு, கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என குளச்சல் மீன் துறை மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையே குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    இதனை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற குளச்சல் விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக கரை திரும்பிய வண்ணம் உள்ளது.கரை திரும்பிய விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனை செய்ய நாள் ஒன்றுக்கு 20 விசைப்படகு களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

    நேற்று விசைப்படகுகளி லிருந்து இறக்கப்பட்ட மீன்களில் சூரை, வெளா மீன்கள் அதிகமாக இருந்தன.அவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்து கேட்டு வாங்கி சென்றனர்.நேற்று மீண்டும் மீன்வரத்து தொடங்கியதால் மீன்கள் வழக்கமான விலைக்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தல மான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுஉள்ளது.

    இந்த சிலையைகடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும் போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். கடல் நடுவில இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துஉள்ளதால் இந்த சிலை அடிக்கடிஉப்பு காற்றினால்சேதம்அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்புகாற்றின்பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளு வர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு இந்தமுறை திருவள்ளுவர்சிலைபராம ரிப்புபணியானதுரூ1கோடி செலவில்கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது.அதைத் தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவது மாக சுத்தம் செய்யப்பட் டது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்டஇரும்புபைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று முடிந்து உள்ளது. ரசாயன கலவை பூசும்பணிநிறை வடைந்து உள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலைக்கு படகு போக்கு வரத்துஇயக் கப்படுகிறது.இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளு வர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப் படுத்தப்பட்டு தயாராகி கொண்டிருக்கிறது.

    • செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங் களுக்கு கூடுதலாக புதிய ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு மார்க்கத்திலும் 3 நாட்கள் இந்த ரெயில் சேவை வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை ஆகிய 3 நாட்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வாரந்தோறும் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலுக்கான கால அட்டவணை தென்னக ரெயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறும்போது, நாட்டின் அதிவேக ரெயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் ரெயிலை கோவை-சென்னை இடையே இயக்குவதற்கு தென்னக ரெயில்வே பரிசீலித்து வருகிறது. திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான மீட்டர்கேஜ் பாதை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை வாரம் 3 முறை இயக்கக்கூடிய ரெயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த 3 ரெயில் சேவைகளையும் அடுத்த மாதம் 8-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வே துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றனர்.

    ×