என் மலர்
நீங்கள் தேடியது "குப்பை கிடங்கு"
- தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
- குடியாத்தம் நகர் மன்ற தலைவர் ஆய்வு
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஒரு பகுதி குடியாத்தம் தரணம் பேட்டை வீரபத்திர மேஸ்திரி தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அருகே உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த குப்பை கிடங்குக்கு அருகில் பஜார் பகுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், எம். எஸ்.குகன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பார்வையிட்டு தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
- 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-
வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம். எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது.
- கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட 45 வார்டுகளில் அகற்றப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே ஆற்று ஓரமாகவும், சாலைகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்ப டைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆங்காங்கே அகற்றப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதன் மூலம் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் செய்து வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கூட்டம் நடைபெற்றதில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வெள்ளப்பாக்கம், மருதாடு, வரக்கால்பட்டு, அழகிய நத்தம், இராண்டாயிரம் வளாகம், குமராபுரம் ஆகிய ஊரை சேர்ந்த அனைத்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சி குப்பைகளை கொட்ட திட்டமிடுவதை கைவிட வேண்டும். அரசு விதைப்பண்ணை நிலத்தை மீண்டும் விவசாய பண்ணையாக மாற்ற முன்வர வேண்டும்.
அரசு விதை பண்ணை நிலம் அருகில் பள்ளிகள் உள்ளதால் மாணவர்களின் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். தென்பெண்ணையாறு அருகாமையில் உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு தொட ர்ந்து ஏற்படுவதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் வெள்ளப்பாக்கம் பகுதியில் திரண்டனர். பின்னர் அங்கு அமைக்க ப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என தொடர்ந்து குப்பை கிடங்கு அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி வருகின்றனர் .
இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டு மானால் மக்களாகிய உங்கள் அனுமதியை முழுமையாக பெற்ற பிறகு குப்பை கிடங்கு அமைக்கப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு முக்கிய பிரமுகர்கள் 10 நபர்கள் கடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஏற்கனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது இது போன்று அதிகாரிகள் தெரிவித்துவி ட்டு சென்றனர். ஆனால் இதனால் வரை இதற்கு தீர்வு ஏற்படவில்லை. மேலும் இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு அரசு முழு வீச்சில் நடவடி க்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் போராட்ட களத்திற்கு நேரில் வருகை தந்து இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் தான் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என திட்ட வட்டமாக தெரிவித்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்க ப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.
- மேயர் மகேஷ் தகவல்
- வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைப்பு
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் 52 வார்டுகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் இன்று மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குப்பை களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. ஏற்கனவே நாகர் ேகாவில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்பட்டு உள் ளது. இங்கு அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்த குப்பை கிடங்கை மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. ஏற்க னவே குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற குப்பைகளை உரமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் ஆறு மாத காலத் திற்குள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்க நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறோம். கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைக்கப் பட்டு வருகிறது. பொது மக்க ளுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். விரைவில் புத்தன் அணை குடிநீர் திட்டம் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து வி.என். காலனி பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அந்த பூங்காவை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் ஷேக் மீரான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
- இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
கொடுங்கையூர் குப்பைக்கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வரும் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டநிதி, மாநில அரசுநிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பின் மூலம் பயோ-மைனிங் முறையில் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்தப் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்
- இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பீச் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோ வில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. தற்பொழுது நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.
மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வரும் நிலையில் மக்காத குப்பைகளை மட்டும் குப்பை கிடங்கில் கொட்டி வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் குப்பை கிடங்கில் இருந்து புகைமண்டலங்கள் வந்தது. இதை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்
பின்னர் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.உடனடியாக நாகர்கோவில் நிலைய தீயணைப்பு வீரர்கள் வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கு எரிந்த தீயை தண்ணீரை பீச்சு அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாகர்கோவில் நகரில் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து வரும் துர்நாற்றத் தின் காரணமாகவும் புகை மண்டலத்தின் காரணமாக வும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புகுள்ளாகி உள்ளனர். எனவே மேயர் மகேஷ் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
- காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடு பட்டனர்.
தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இருப்பினும் தீ கட்டுப்படுத்த முடிய வில்லை.
இன்று காலையில் 3-வது நாளாக தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி திங்கள் சந்தை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் தீ எரிந்து கொண்டே உள்ளது. காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
புகை மண்டலத்தின் காரணமாக இன்று 3-வது நாளாக அந்த பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருவதையடுத்து பொது மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வலம்புரிவிளை குப்பை கிடங்கையொட்டி உள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு அவர்களின் உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புகை மண்டலத்தின் காரணமாக குழந்தைகள் பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் வலம்புரி விளையில் முகாமிட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் உதவிகரமாக உள்ளனர் .
அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு புகை மண்டலத்தின் காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் புகை மண்டலமாக அந்த பகுதி காட்சி அளித்தது. மாணவ-மாணவிகள் நலன் கருதி இன்றும், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.
- பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
- 5 ஏக்கர் இடத்தில் குப்பை
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரி வித்து பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு
திருவண்ணாமலை ஒன்றி யத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட் டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல் காடு. கலர்கொட்டாய்.
ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக விவ சாயிகள் சங்கத்தினரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட் சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 8-ந் தேதியன்று குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத் தில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அந்த இடத்தில் குப்பை கொட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு உள்ள இடத்தை சுற்றி சுற்றுசுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
காத்திருப்பு போராட்டம்
இந்த பணியை நிறுத்தக் கோரி மீண்டும் நேற்று முன்தி னம் முதல் புனல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் . குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தின் அருகில் உள்ள மரத்தடியில் காத்திருப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அங்கேயே கஞ்சி காய்ச்சி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குப்பை கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.
- ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகிறது. சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் கிடங்கில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்படுகிறது. 1 முதல் 8 மண்டலங்களில் உள்ள குப்பைகளை இங்கே கொண்டுவரப்படுகின்றன. இதனால் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை குவிந்து கிடக்கின்றன. குப்பையில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவு வெளியேறுவதால் வெயில் காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதில். இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு, 7 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீ விபத்தை தடுப்பதற்காக முன்எச்சரிக்கையாக இரண்டு குடிநீர் லாரிகள், பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை பொறுக்கும் நபர்கள் இரும்பு, செம்பு கம்பிகளை எடுப்பதற்காக வயர்கள் உள்ளிட்ட பொருட்களை அவ்வபோது குப்பைகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மர்ம நபர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.
இதே போல் குப்பை கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசு பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குப்பைகளில் கொட்டப்படும் `ப்ளோரசன்ட்' பல்புகளில் இருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசிப்பதால் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றது. குப்பைகளில் இருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்' வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட 20 மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்ப டுகிறது. இதை தொடர்ந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதி நிலத்தை பசுமையாக மாற்றுவதற்கான முயற்சியாக குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.
இந்த திட்டம் 6 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. இதன் மூலம் பல ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டு பணிகளை மேற்கொள்ளும் போது சிறந்த முறையில் செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்ட பணி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. 2025-ம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி குப்பை கிடங்கு கழிவில் இருந்து மின்சாரம், கியாஸ், உரம் தாயரிக்கப்படும். இதற்காக திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைந்த செயலாக்க நிலையங்கள் அமைய உள்ளன.
இதற்கிடையே கொடுங்கையூர் குப்பை கிடங்கில் செயல்படுத்தப்பட இருக்கும் பயோ மைனிங் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தண்டையார் பேட்டையில் உள்ள காலரா தொற்று நோய் ஆஸ்பத்திரியில் உள்ள கலையரங்கத்தில் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் கொடுங்கையூர், ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர் அவர்கள் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்டு எடுப்பதற்கான அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதில் திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேஸ்வரன், தலைமையில், ஆர்.கே.நகர் ஜே.ஜே. எபினேசர் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல பொறுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் இந்த திட்டம் குறித்து பேசும்போது இந்த திட்டம் சிறப்பானது ஆகும். இதை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது போல் தற்போதும் கிடப்பில் போடாமல் விரைவில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்தத் திட்டத்திற்காக ரூ. 648 கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் மற்றும் மிகவும் நவீன வசதியுடன் கூடிய எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த பணியானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2025-ம் ஆண்டுக்குள் முடித்து செயல்பாட்டிற்கு வரும். ஏற்கனவே பெருங்குடி குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது என்றனர்.
- நகராட்சி குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
- மக்காத குப்பை கிடங்கிலிருந்து மறுசுழற்சிக்கு உதவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 4 குப்பை கிடங்குகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட நவீன தகன மேடை அருகில், ரூ.43 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் "மெட்டீரியல் ரெகவி பெசிலிட்டீஸ்" எனும் மறுசுழற்சிக்கு பயன்படும் மக்கா குப்பை சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது.
நகராட்சி குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. மக்காத குப்பை கிடங்கிலிருந்து மறுசுழற்சிக்கு உதவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். திருவண்ணாமலை சாலையில், இதே போல மற்றொரு மக்கா குப்பை சேமிப்பு கிடங்கும் கட்டப்பட உள்ளது. தொடர்ந்து "லேயிங் மிஷின்", "எக்ஸ்ட்ரூடர் மிஷின்" உள்ளிட்டவைகள் போடப்பட்டு, மக்கா குப்பையை இறுக்கி, தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கப்படும். இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது.
- திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், சென்று வருகின்றன.
சென்னை நகரில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்று அடையாறு ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் இந்த ஆறு உருவாக்குகிறது. இந்த ஆறு சென்னையில் உள்ள அடையாறு முகத்துவாரம் பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆறு 42.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது ஆகும்.
சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், படகு மற்றும் மீன்பிடித்தல் இந்த ஆற்றில் நடைபெறுகிறது. சென்னை நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது.
இந்த நிலையில் சென்னை அடையாறு ஆற்றங் கரையோரப் பகுதியான ஈக்காட்டுத் தாங்கல், கிண்டி தொழிற்பேட்டைக்கு பின்புறம் உள்ள பகுதிகள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுபற்றி புகார் எழுந்ததையடுத்து சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்கு முன் குப்பை கொட்டிய கரையோர பகுதிகளை சுத்தம் செய்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. அதன் முந்தைய பரிதாப நிலையே அங்கு மீண்டும் உருவாகி உள்ளது. இதனை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மேலும் அடையாறு ஆற்றுப்பாலத்தில் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் பாலத்தின் சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து உள்ளன. எனவே அதனை முறையாக பராமரிப்பு பணிகள் செய்து பாலத்தை சீரமைக்க வேண்டும்.
அடையாறு திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன. ஏராளமான பொதுமக்களும் இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இப்பாலம் பழுதடைந்து உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், தூண்களில் மரம், செடி, கொடிகள் முளைத்து வளர்ந்து உள்ளன. பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது.
பாலத்துக்கு கேடு விளைவிக்கும் மரம், செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். பாலத்தின் கரையோர பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் உள்ள புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளன. மேலும் இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. வரும் மழைக்காலங்களின் போது இவைகள் தண்ணீர் போக்குவரத்தை தடைசெய்ய வாய்ப்புகள் உருவாகும்.
அடையாறு ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகள், குப்பைகள் அகற்ற வேண்டும். அடையாறு ஆற்றின் கரையினை மேலும் விரிவுபடுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் பெருவெள்ளம் புகுந்தது போன்ற நிலை மீண்டும் உருவாகக்கூடாது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
கூவம் ஆற்றின் கரை யோரப் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. எனவே அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைந்து, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறது.
தமிழகஅரசு அதிகநிதி செலவழித்து அடையாறு மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு குடிசைகளில் வசித்த மக்கள் அகற்றப்பட்டு மறு குடியமர்வு செய்யப்படுகிறார்கள்.
தூர்வாருதல் மற்றும் ஆற்றின் கரையோரம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. 24 கி.மீ. தூரத்திற்கு வேலி அமைக்க திட்டமிட்டு 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கரையோர பகுதிகளில் 4.53 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.
- குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இதில் 32.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடம் அமைந்திருக்கிறது. இங்கு மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.
வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தின் போது இங்கு காற்றின் வேகத்தால் திடீரென தீ பற்றி மளமளவென எரிவதும், அதனை தீயணைப்புத் துறையினர் வந்து அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 3 லாரிகளில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . நள்ளிரவு வரை நடந்த இந்த பணியினை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென பரவியது. இதனால் ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது. குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலையில் இருந்து பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதற்கிடையே குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் சுமார் 5 கிலோ மீட்டர் பரப்பளவு வரை விரிந்து இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற நிலைக்கு பொதுமக்கள் தொடர்ந்து தள்ளப்பட்டு வருகின்றனர் என்றும், சிலர் வேண்டுமென்றே குப்பை கிடங்கிற்கு தீ வைத்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
நேற்றும், இன்றும் எரியும் குப்பை கிடங்கு தீயின் காரணமாக வெளியேறும் புகை மூட்டத்தினால் குப்பை கிடங்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாற்று இடங்களுக்கு தற்காலிகமாக சென்றுள்ளனர்.
தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.