search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரம்"

    • விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுபோனவை.
    • மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    பீகாரில் உள்ள அரசுக் கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட மெஸ் உணவில் இறந்த பாம்பின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசுப் பொறியியல் கால்லூரி தங்கும் விடுதியில் கடந்த வாரம் வியாழனன்று சமைக்கப்பட்ட இரவு உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. அவற்றை சாப்பிடாவிட்டாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாவிட்டாலோ தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

    இதன் உச்சமாகவே தற்போது பாம்பு கிடந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமான நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

     

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
    • ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் அனை யேரி ஊராட்சியில் உள்ள சாலையை தரம் உயர்த்தி தார் சாலையாக அமைப்ப தற்கும் பூமி பூஜை விழா அனையேரி பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அனையேரி ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஜெய பாலன், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர் கிருஷ்ணகுமார் ஒன்றிய செயலாளர் விஜய ராகவன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய துணைச் செய லாளர்கள் குமார், தாட்சி யாணிகார்த்திகேயன் ஆவின் இயக்குனர் மாத்தூர் தாஸ் நிர்வாகிகள் எட்டி யான், தக்ஷிணாமூர்த்தி பாண்டுரங்கன், ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

    • விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும்.
    • சான்று பெறாத விதைகளை விதைப்பதால் மகசூல் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜதாபாய் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    உரிமம் பெற்ற விற்பனை நிலையம்

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தங்களது விதை தேவைகளுக்கு விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதை சான்று துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும்.

    விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும். விவர அட்டைகளில் விதையின் காலக்கெடு தேதியை கவனித்து காலக்கெடு முடிவடையாத விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.

    விதை சான்றுதுறை

    விதை சான்று துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, அந்த பருவத்திற்கு ஏற்ற ரகம்தானா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    விதைகள் வாங்கும் போது விற்பனை ரசீதை கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும்.

    விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை ரசீதில் வாங்குபவர்கள் கண்டிப்பாக கையொப்பம் இட்டு வாங்க வேண்டும். விதையின் கொள்கலன் கிழி படாமல் அட்டைகள் பொருத்தி நன்றாக தைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சான்று பெறாத உண்மை நிலை விதைகள் அல்லது விபர அட்டை இல்லாத விதைகளை வாங்கி விதைப்பு செய்தால் முளைப்பு மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே விவசாயிகள் விதைகள் வாங்கும் போது இவற்றை கவனத்தில் கொண்டால் விளைச்சல் பாதிப்புகள் இல்லாமல் அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.
    • பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பால், ஆவின் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு அளிக்கப்படுகிறது. மக்களுக்கும் நேரடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை. பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.

    அதேநேரம் பாலின் தரத்தை கண்டறியும் வகையில் இமெட் எனும் எலக்ட்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட் கருவிகளை இத்தகைய இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அதிக அளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களை தேர்வு செய்து அங்குள்ள பொது இடங்களில் உணவு பாதுகாப்பு துறையால் இமெட் கருவி வைக்க வேண்டும்.அதன் வாயிலாக, நுகர்வோர் அனைவரும் பாலின் தரத்தை இலவசமாக பரிசோதிக்கலாம். ஏற்கனவே இக்கருவிகள் சில இடங்களில் வைக்கப்பட்டது. ஆனால் கருவியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.பெரும்பாலான தனியார் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் குறைவாகவே உள்ளது. அங்கு இமெட் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்படம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாமக்கல் நகராட்சியினை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.
    • இதன் மூலம் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

    நகராட்சிக்கு தற்போது ஜேடர்பாளையத்தில் இருந்து புதிய குடிநீர் திட்டம் ரூ. 256.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழைய நகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 23 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைப்பு முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது நாமக்கல் நகராட்சியின் சொந்த ஆண்டு வருமானம் ரூ.25.64 கோடியாகும். மேலும், இதர வருமானங்கள் சேர்த்து மொத்தம் ஆண்டு வருமானம் ரூ.45.15 கோடி ஈட்டப்படுகிறது. நாமக்கல் நகராட்சி தற்போதைய பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நிலையில் உள்ளது.

    எனவே, தற்போது உள்ள நகரின் பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், நாமக்கல் மாவட்டத்தின் தலைநகரத்தில் அமைந்துள்ள, நாமக்கல் நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது நாமக்கல் நகராட்சியினை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. சுமார் 23 கி.மீ. நீளம் கொண்டுள்ள ரிங் ரோடு முதலைப்பட்டியில் தொடங்கி மரூர்ப்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி, ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுதா, நகராட்சி துணைத் தலைவர் பூபதி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை
    • திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் காங்கரை பகுதியில் காங்கரை தேரி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மிகவும் சிரமத்துடன் செல்லும்.

    லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பெரும் சிர மத்துடன் தான் சென்று வரு கின்றன. இதன் காரணமாக சாலையும் சேதத்தை சந்தித்து வருகிறது. மேலும் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையின் வழியாக அடிக்கடி சென்று வருவதும் சாலையில் சேதத்தை அதிகப்படுத்துகிறது.

    மார்த்தாண்டம் -பேச்சி ப்பாறை நெடுஞ்சாலை கடந்த ஆண்டு தொடக்க த்தில் புதிதாக அமைக்க ப்பட்ட நிலையில் கடந்த வாரம் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. மேலும் தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் இதனை சீரமைத்தார். ஆனால் ஒரு வாரம் கூட முடியாத நிலை யில் தற்போது மீண்டும் சாலையின் குறுக்காக 2 இடங்களில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டின் ஓரம் முழுவதும் பெயர்ந் துள்ளது. சாலையில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதால் இந்தப் பகுதி வழியாக செல்லும் வாகன ஒட்டுநர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற முறை யில் அமைக்கப்பட்ட சாலையை அகற்றி விட்டு தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த பகுதியில் பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குலசேகரத்தில் உள்ள நாகக்கோடு சந்திப்பில் இருந்து திருவரம்பு வரை உள்ள சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை பணிகள் தொடங்கின.

    இதற்காக திருவரம்பு பகுதியில் சாலையை அகலப்படுத்த சுமார் 2½ அடி ஆழத்தில் ரோட்டோரம் மண் அப்புறப்படுத்தப்பட்டது. மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    ஆனால் அதனை செய்யாமல் ஜல்லிக்கு பதிலாக குறைந்த கழிவுகள் நிறைந்த பாறைப்பொடிகள் கொண்டு வந்து சாலையில் குவித்துள்ளனர்.

    இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும், இளைஞர்களும் ஆத்திரமடைந்து மோசமான பாறைப்பொடியை இங்கே ஏன் கொட்டுகிறீர்கள்? தரமான ஜல்லியை தான் முதலில் போட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக நெடுஞ்சாலை த்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து நெடுஞ் சாலைதுறை அதிகாரிகள், கழிவு கலந்த பாறைப்பொடிகளை உடனே அப்புறப் படுத்தச் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாறைப் பொடிகள் டெம்போவில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

    ஏற்கனவே இந்த சாலை பணியால் திருவரம்பு முதல் நாகக்கோடு வழி யாக சென்று வரும் பஸ்கள் மாற்று பாதையில் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவியர், மருத்துவமனைக்கு செல்லும் வயதானவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு மிகவும் சிரம மான நிலை ஏற்படுகிறது.

    போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்படு வதால் சுற்று வட்டார மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நெடுஞ்சாலைத் துறையினர் போதிய அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சாலைப் பணியை தரமாக விரைந்து முடித்து போக்குவரத்து வசதி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட உத்தரவு.
    • சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு. கே. என் .நேரு தலைமையில் நடைபெற்றது.

    அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், நகராட்சி நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர்தட்சிணாமூர்த்தி , பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ் , மாவட்ட கலெக்டர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்), அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம்), லலிதா (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது:- 

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், எரிவாயு தகனமேடை, சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திருவிடைமருதூர். வேப்பத்தூர் பேரூராட்சிகளைச் சார்ந்த 2 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.117.09 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.82 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர், ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகளுக்கு ரூ.265.29 கோடி மதிப்பீட்டில் 1.79 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம். தஞ்சாவூர் மாவட்டம் பாநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பீட்டில் 2.09 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், திரு. டி.கே.ஜி.நீலமேகம் , அன்பழகன் ,அண்ணாதுரை ,ஜவாஹிருல்லா ,ஷாநவாஸ் , ராஜ்குமார் , பன்னீர்செல்வம், நிவேதா முருகன் , நாகைமாலி , பூண்டி கலைவாணன்,டி. ஆர்.பி.ராஜா,மாரிமுத்து , கூடுதல் கலெக்டர்கள்சுகபுத்ரா , ஸ்ரீகாந்த், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள்அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்முத்து, மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில் முருகன் (கும்பகோணம்) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
    • 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது.

    அவினாசி, நவ.23-

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள 18 வார்டுகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தினசரி டன் கணக்கில் குப்பை சேருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 52 தள்ளுவண்டிகளில் துப்புரவு பணியாளர்கள் தினசரி குப்பையை சேகரித்து வருகின்றனர்.

    இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே வீடுகள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை.

    இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒருவாரத்திற்கு வீடுவீடாக சென்று குப்பையை தரம்பிரிக்காதவர்கள் யார் என்று ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனர். பெரிய வார்டுகள், வியாபார நிறுவனங்களில் அதிக அளவில் குப்பை சேருகிறது. பொதுமக்கள் தாங்களாகவே தரம் பிரித்து வழங்கினால் தூய்மை பணியாளர்களுக்கு வேலை பழு குறைவதுடன் அனைத்து பகுதிகளிலும் விரைவில் குப்பை சேகரிக்க ஏதுவாக இருக்கும்.

    குப்பையில்லா பேரூராட்சியாக மாற்றும் நோக்குடன் குப்பைகள் தேங்காமல் தினசரி சேகரிப்பதற்காக 15-வது நிதிக்குழு மானியம் மூலம் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் ஒலிபெருக்கி வசதியுடன்4 ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 2-பகுதிகளாக பிரித்து குப்பைகள் சேகரிக்கப்படும். அதற்கு முன்பாக 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது. மேலும் தரம்பிரிக்காமல் குப்பையை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம் என்றார்.

    • குமரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்
    • நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல விதை சில தரங்களை கொண்டது ஆகும். இனத்தூய்மை, புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வையே தரமான விதை யாகும். இந்த விதை தரங்கள் அனைத்தும் உடைய விதையே அதிக மகசூலுக்கு காரணி யாக அமையும். விதை யின் தரத்தினை அறியவே விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.

    அதிக அளவு முளைப்புத் திறனும் சரியான அளவு ஈரப்பதத்துடனும் காணப்படுவதே தரமான விதையாகும். இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு வழங்கப்படுவதே சான்று செய்யப்பட்ட விதைகளாகும். எனவே சான்று செய்யப்பட்ட விதைகளை வாங்குவதன் மூலம் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்களிடமுள்ள விதைகளை விதை பரிசோ தனை நிலையத்திற்கு அனுப்பி, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வற்றை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பெரும்பாலான பொதுமக்கள் தற்போது தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் ஆகிய 6 தாலுகாக்களில் 764 ரேஷன் கடைகள் உள்ளன.

    இக்கடைகள் மூலம் சுமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 830 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இது தவிர அந்தியோதையா அன்ன யோஜனா குடும்ப அட்டை தாரர்கள் (ஏஏஒய்) 14 சதவீதமும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (பிஹெச்ஹெச்) 42 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்கள் (என்பிஹெச்ஹெச்) 42 சதவீதமும், முன்னுரிமையற்ற சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் (என்பிஹெச்ஹெச்-எஸ்) 2 சதவீதமும் பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது குமரி மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்பட்டு வரும் அரிசியானது சமையலுக்கு உகந்த அரிசியாக இல்லாமல் உருட்டு அரிசியாகவும், அரிசியுடன் கருப்பு அரிசி கலந்தும் தரமற்ற முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடையில் விநியோகிக்கப்படுகின்ற அரிசியின் மூலம் தங்களது வறுமையை போக்கி வந்த பெரும்பாலான பொதுமக்கள் தற்போது தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக செண்பகராமன்புதூர் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி விநியோகிப்பதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட அரிசியினை இறக்க விடாமல் லாரியை முற்றுகையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுபோன்று கடுக்கரை, சாமிதோப்பு, கொட்டாரம், தர்மபுரம், மேலகிருஷ்ணன்புதூர், மணக்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகள் முன்பு தரமான அரிசி வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியினை பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் தரமானதாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
    • கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை

    கன்னியாகுமரி:

    தக்கலை பஸ்நிலையம் அருகில் தாலுகா அலுவலகம், கிராம அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.இங்கு காலை, மாலை வேளையில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சாலையோரம் பழ வியாபாரங்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

    அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போலியான கவர்ச்சி விளம்பரங்கள் செய்து அழுகிய பழங்களை விற்பனை செய்து வருகின்ற னர். நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மாம்பழம் வாங்கியுள்ளார். பழத்தை வாங்கி பார்த்த போது அழுகி புழுக்கள் இருந்தன. உடனே கடைகாரரிடம் தகராறில் ஈடுபட்டார். இதே நிலைதொடர்ந்து இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பல வகை நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    தக்கலை பிரபல பல் மருத்துவமனை அருகில் உள்ள சாலையோர கடைகளில் கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

    ×