search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாங்கண்ணி"

    • பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    • கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

    ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தரும் பேராலயம் வேளாங்கண்ணியில் உள்ளது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக இந்த பேராலயம் விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.

    அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து 'ஆவே மரியா' என முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    திருவிழாவையொட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி பேராலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. 

    • கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
    • ரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது.

    சென்னை:

    கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 28-ந் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 30-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4.10 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு 28-ந்தேதி இரவு 7.10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்.
    • திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06115) நாளை (புதன்கிழமை), 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.

     இதேபோல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
    • சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து வருகிற 26-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01161) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளா ங்கண்ணி வந்தடையும்.

    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    இதேபோல், மும்பையில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.


    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01164) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    மேலூர்:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிலர் வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இந்த மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குமரி மாவட்டம் களியாக்க விளையைச் சேர்ந்த பயணி ஜஸ்டஸ் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனின் இடிபாடுகளில் சிக்கி ஸ்மைலா (21), லேடிங் ஜான் (43), ஜல்சா மேரி(43), ராஜகுமாரி (43) உள்பட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், நெடுஞ்சாலை ரோந்து படை அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.

    அவர்களால் மீட்க இயலாமல் போகவே உடனடியாக மேலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த ஜஸ்டஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

    • புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலம்.
    • சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    முன்னதாக 2023-ம் ஆண்டிற்கு நன்றி செலுத்தி வழியனுப்பும் வகையில் இரவு 10.45 முதல் 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நடந்தது.

    பின், 2024-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், பேராலய பங்கு தந்தை டேவிட் தனராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. இரவு சரியாக 12 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார்.

    அதனைத் தொடர்ந்து, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 2023-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பேராலயம் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்காணோர் திரண்டதால் நகரமே களைகட்டியது.

    • ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
    • கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.


    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

    இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தஞ்சை-சென்னை இடையே அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும்.
    • திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.

    தஞ்சாவூர்

    காவிரி டெல்டா ரெயில்வே பயணிகள் சங்க த்தின் தலைவர் அய்யனா புரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், துணைச்செ யலாளர் கண்ணன், துணை தலைவர் பேராசிரியர் திருமேனி, சோளகம்பட்டி ஊராட்சி தலைவர் மேனகா முத்துசாமி ஆகியோர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    திருச்சி -தஞ்சாவூர் இடையில் உள்ள சோழகம்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட் அமைக்க வேண்டும்.

    தஞ்சை - சென்னை இடையே ரெயில் பயண தூரத்தை குறைக்கும் வகையில் தஞ்சையை அடுத்த திட்டை கிராமத்தில் இருந்து அரியலூருக்கு சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.

    திருச்சி-தஞ்சை-வேளாங்கண்ணி-காரைக்கால் மார்க்கத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக மின்சார ரெயி ல்கள் இயக்க வேண்டும்.

    காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை தஞ்சை யில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

    திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை முன்புபோலவே திருச்சியில் காலை 7.35 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும்.

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிதாக அதி விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நடைபெற்றது.
    • வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவும், போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    புனிதஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் அவர்களுடைய உறவினர்களின் கல்லறை களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து படையலிட்டு, மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

    • கிறிஸ்தவர்களுக்கு அன்பின் விருந்து உபசரிப்பு தரப்பட்டது
    • அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது

    ஊட்டி,

    ஊட்டி பேண்டு லைன் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 11-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன்ஒருபகுதியாக அன்பின் விருந்து உபசரிப்பு நடந்தது.

    இதனை தி.மு.க நகர செயலாளர் ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மாலை 7 மணிக்கு அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது.அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தேர் பவனியில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    • கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது.
    • செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மாதாவின் பிறந்தநாள்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது.

    கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் வங்கக்கடலோரம் அமைந்து எழில்மயமாக காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

    மாதா பிறப்பு திருவிழா

    பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த பேராலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து மாதாவை வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றம் நடைபெறும். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 8-ந்தேதி வரை 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    கொடியேற்றம்

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.

    வேளாங்கண்ணியில் உள்ள கீழ்கோவில், மேல்கோவில் ஆகிய இடங்களில் நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசி உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடந்தது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பெரிய தேர் பவனி

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது. தேர்பவனி தொடங்குவதற்கு முன்னதாக தஞ்சை மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து முன்னாள் ஆயர் மற்றும் பரிபாலகர் ஆகியோர் பெரிய தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தனர். ஆரோக்கியமாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் இரவு 8 மணி அளவில் பேராலய முகப்பில் இருந்து பவனி வர தொடங்கியது. பெரிய தேருக்கு முன்னால் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர், லூர்துமாதா, உத்திரியமாதா ஆகிய 6 தேர்கள் அணிவகுத்து வந்தன.

    மரியே வாழ்க கோஷம்

    கடற்கரைசாலை, ஆரியநாட்டு தெரு வழியாக பவனி வந்த தேர்களின் பவனி மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. தேர் பவனியின்போது திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாதா தேர் மீது பூக்களை வீசி 'மரியே வாழ்க' என கோஷம் எழுப்பி மாதாவை வேண்டி கொண்டனர்.

    முன்னதாக பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்தள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ், ஆரோக்கியவின்டோ.

    மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி கார்த்திகா, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, மற்றும் சர்வமத பிரதிநிதிகள் ரஜதநீலகண்டர் குருக்கள், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் கலிபா சாகிபு, நாகூர் தர்கா தலைமை மானேஜிங் டிரஸ்டி சையதுமுகமது ஹாஜி ஹூசைன் சாகிப், சமூக ஆர்வலர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    3 ஆயிரம் போலீசார் குவிப்பு

    விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், பேராலயம் மற்றும் பேரூராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுகாதாரத்துறையின் மூலம் வேளாங்கண்ணியில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    இன்று திருவிழா நிறைவு

    இன்று (வெள்ளிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.

    • தொண்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
    • குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தொண்டி

    தமிழகத்தில் பிரச்சித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தற்போது கொடியேற்றப் பட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக வேளாங்கண்ணிக்கு செல்கிறார்கள்.

    அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தொண்டி அருளானந்தர் தேவாலயத்தில் வழிபட்டு அங்கிருந்து வேளாங் கண்ணிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் செல்கின்றனர்.

    இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் குளம், திருப்பா லைக்குடி குடிநீர் ஊரணி மற்றும் சாலையோரம் உள்ள நீர்நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ×