என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர்"

    • இது குறித்து போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது.
    • செல்போனில் 59 கல்லூரி மாணவிகள் படங்கள் வீடியோக்கள் இருந்தன.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் சேத்பூல் சந்த் பாக்லா என்ற முதுகலை கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரியில் புவியியல் பேராசிரியராக ரஜ்னிஷ் குமார் (வயது 50). என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அழகான மனைவி உள்ளார். ஆனால் குழந்தைகள் இல்லை.

    பேராசிரியர் ரஜ்னிஷ்குமார் அடிக்கடி தனது செல்போன் மற்றும் தனது அறையில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படங்களை பார்த்து வந்தார்.

    கல்லூரி மாணவிகளை அவருடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்ய முடிவு செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் மிகவும் அக்கறையாக பேசுவது போல் நடந்து கொண்டார்.

    அந்த மாணவிக்கு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகவும், தனக்கு தெரிந்த தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

    இதுபற்றி பேசுவதற்காக தனது அறைக்கு வரும்படி மாணவியை அழைத்துச் சென்றார். அங்கு வந்த மாணவியை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். அதனை தனது கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார்.

    கண்ணீர் விட்டு கதறிய மாணவியிடம் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் ஆபாச படத்தை ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்.

    ஒரு மாணவியை சீரழித்த பேராசிரியரின் ஆசை நிற்கவில்லை. ஆண்டுதோறும் அவருடைய லீலைகள் தொடர்ந்தன. மேலும் பல மாணவிகளை அதிக மதிப்பெண் மற்றும் வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறியும். மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கற்பழித்தார்.

    அதனை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து தனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டார்.

    பல ஆண்டுகளாக பேராசிரியரின் அட்டூழியம் தொடர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி தன்னுடைய அறைக்கு வரவழைத்தார்.

    அப்போது மாணவியிடம் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் அத்துமீற தொடங்கினார். பதறிப்போன மாணவி அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இது குறித்து போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது. இதனை அறிந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். புகார் கொடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் தலைமறைவாக இருந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமாரை கைது செய்தனர்.

    அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் போலீசார் ஆய்வு செய்தபோது 65-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதில் 59 கல்லூரி மாணவிகள் படங்கள் வீடியோக்கள் இருந்தன.

    மற்ற ஆபாச வீடியோக்கள் அவர் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். அடிக்கடி செல்போனில் இருந்த ஆபாசங்களை பார்த்து ரசித்துள்ளார்.

    இது குறித்து ரஜ்னிஷ் குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தருவதாகவும், அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி மாணவி களை அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தேன். மேலும் சில மாணவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளேன்.

    கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரை அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்தேன். அப்போது எங்களுக்கு தெரியாமலேயே அங்கிருந்த கம்ப்யூட்டர் வெப்கேமராவில் உல்லாசமாக இருந்த காட்சிகள் பதிவாகிவிட்டது.

    அதனை பார்த்த பிறகுதான் எனக்கு மற்ற மாணவிகளை கற்பழித்து ஆபாச படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டியது.

    இதனைத் தொடர்ந்து எனது கம்ப்யூட்டரில் பாலியல் பலாத்காரத்தை பதிவு செய்வதற்காக சிறப்பு கேமரா மென்பொருள் ஒன்றை நிறுவினேன். அதன் மூலம் மாணவிகளின் ஆபாச படங்களை பதிவு செய்தேன்.

    இதுவரை எத்தனை மாணவிகளை கற்பழித்துள்ளேன் என்பது எனக்கே தெரியவில்லை. மாணவிகளை ஆபாச படங்களை காட்டி மிரட்டியை அடிபணிய வைத்து அமைதியாக இருக்கச் செய்தேன். இதனால் அவர்கள் புகார் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கல்லூரி பேராசிரியர் மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளை கற்பழித்து வீடியோ எடுத்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் குறித்து போலீசாருக்கு கடிதம் மூலம் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில் பேராசிரியர் செல்போனில் உள்ள ஆபாச படங்கள் நிறைந்த பென்டிரைவ் ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது.

    அதில் பேராசிரியர் அதிக மதிப்பெண்கள் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி மாணவிகளை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    "நான் என் உண்மையான பெயரைப் வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் இரக்கமற்ற பேராசிரியர் என்னைக் கொன்றுவிடுவார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

    இந்த கடிதத்தின் அடிப்படையிலேயே போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனே பேராசிரியர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். 

    • பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
    • பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடமாக ஈடுபட்டு வந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் 59 வயதான கல்லூரி அரசுக்கல்லூரி பேராசிரியர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) ஆக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).

    இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக  அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார்.  இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படாத பின், உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.

    இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

     

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எப்ஐஆர் பதவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.

     மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை  வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்த படங்களில் 12, ரஜ்னீஷ் சின்ஹா, காலேஜின் டீன் ஆபீசில் வைத்தே மாணவிகளிடம் அத்துமீறுவதைக் காட்டுகிறது.

    அதில் உள்ள மாணவிகளை அடையாளம் காண போலீசார் முயன்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் போலீஸ் ஈடுபட்டுள்ளது. 

     

    • 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
    • இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

    சென்னை :

    பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.

    மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

    இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ''தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது" என்று கூறியுள்ளார்.

    • புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி பரவை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் கிறிஸ்டோபர் (வயது65). ஓய்வு பெற்ற பேராசிரியர். தற்போது அங்குள்ள ஒரு கிறிஸ்தவ சபை தலைவராக உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் டெல்லியில் ராணுவ வீரராக உள்ளார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இது சம்மந்தமாக புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று அங்குள்ள திரு மண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் சென்று ள்ளனர். அப்போது ஜெகன் குமார் தகாத வார்த்தை கள் பேசி ஜஸ்டின் கிறிஸ்டோ பரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.

    இதில் காயம் அடைந்த ஜஸ்டின் கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்று ஜெகன்குமார் அளித்துள்ள புகாரில் ஜஸ்டின் தன்னை தகாத வார்த்தைகள் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடு த்துள்ளதாக தெரிவித்து ள்ளார். மேலும் அவர் தேங்கா ப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழ் மொழி யின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன் பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணி சென்று, நிறைவாக நகரின் முக்கிய பகுதியான அரண்மனை பகுதியை வந்தடைந்தன.

    அப்போது கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை பாதுகாக்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் வணிகர்கள் தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழ் மொழியில் வைத்திட வேண்டும், என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

    நாகர்கோவில்

    மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந் தார்.

    அந்த கல்லூரியில் ரவிக்குமார் என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரியில் இருந்து கன்னி யாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது லாட்ஜில் வைத்து பேராசிரியர் ரவிக்குமார் மாணவரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இந்த நிலையில் கும்பகோணம் சுவாமிமலை போலீசிலும் புகார் செய்தார். இது தொடர்பாக ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சம்பவம் நடந்த இடம் கன்னியாகுமரி என்பதால் இந்த வழக்கை கன்னியாகுமரியில் விசாரிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாணவன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பேராசிரியர் ரவிக்குமார் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    • முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர்.

    மேலும் மூத்த பேராசிரியர்கள் 3 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும்போது பேராசிரியர்களாக மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.

    முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகைகள் திருட்டு நடந்தது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சின்னக்கடை வீதி எழுத்தாணி கார தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தேவக்கோட்டை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று தற்போது மதுரையில் உள்ள ஒரு வேறு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாம்பிகை (வயது54).

    சம்பவத்தன்று இவர் வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து வேலைக்கார பெண் வந்தால் கொடுக்குமாறு கூறி சென்றார். வேலைக்கார பெண் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சாவியை திருப்பி கொடுத்துவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் மீனாம்பிகை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் பீரோவில் பார்த்த போது 35½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் மீனாம்பிகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய அருளப்பன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித் தனர். கொள்ளை தொடர் பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    • வாலிபர், நான் கூப்பிட்டால் நூறு பேர் வருவார்கள் என உளறி ரகளையில் ஈடுபட்டிருந்தார்.
    • போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சூலூர்,

    மது குடிப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என என்னதான் பாட்டிலில் வாசகம் எழுதி இருந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் மது வாங்கி குடிப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

    அப்படி குடிப்பவர்களில் சிலர் போதை தலைக்கேறிய நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், அவ்வழியாக வருவோர், போவோரிடம் ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    அந்த மாதிரியான ஒரு சம்பவம் கோவை சூலூர் பகுதியில் நடந்துள்ளது. கோவை சூலூர் போலீசார், போலீஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரின் மோட்டார் சைக்கிள் சாலையில் அங்குமிங்கும் சென்றபடியே வந்தது.

    இதனை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் எதற்காக இப்படி வருகிறீர்கள் என விசாரித்தனர். அவர் போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனது வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி உளறி கொண்டிருந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருப்பதை போலீசார் அறிந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து, அவரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அப்போது அந்த நபர், பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் நான் யார் தெரியுமா என கேட்டதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார்.

    இருந்த போதிலும் போலீசார் அவரிடம் மென்மையாக நடந்து கொண்டனர். உங்களது நண்பர் யாராவது இருந்தால் வந்து வாகனத்தை எடுத்து கொண்டு அவருடன் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.ஆனால் அவர் நான் கூப்பிட்டால் நூறு பேர் வருவார்கள் என உளறி ரகளையில் ஈடுபட்டிருந்தார். உடனே போலீசார் அவரது நண்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    அவர் போலீஸ் நிலையம் வந்து, நண்பரை தன்னுடன் வந்து விடுமாறு அழைத்தார்.

    ஆனால் அந்த நபரோ தான் வரமாட்டேன். வண்டியை தரச்சொல். அப்படி தரவில்லை என்றால் நான் 100 பேரை கூட்டி கொண்டு வந்து வண்டியை எடுத்து செல்வேன் என கூறினார். அவரது நண்பரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்.

    தான் ஒரு கல்லூரி பேராசிரியர். அதனால் எனக்கு எல்லாமே தெரியும். உங்களுக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும் என கூறி கொண்டே இருந்தார்.

    மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் இதனை படம் எடுத்து யூடியூப்பில் போடுங்கள் எனவும் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டார்.

    சில மணி நேரங்களுக்கு பிறகு அவர் போதை தெளிந்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது வாலிபர் என்பதும், கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    மேலும் கல்லூரிக்கும் குடிபோதையில் சென்றதால் அவரை கல்லூரி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியதும் தெரியவந்தது.

    இவர் மீது அவரது மனைவி ஏதோ வழக்கு கொடுத்துள்ளதாகவும், அதில் ஆஜராவதற்காக வந்த போது குடிபோதையில் வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அவரது நண்பருடன் அனுப்பி வைத்தனர்.

    மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சூலூர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.

    நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.

    இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.

    அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.

    பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.

    பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர்.

    இவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எச்.டி. முழு நேரமாக படித்து வருகிறேன். எனது கல்லூரியில் 50 வயது பேராசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் அடிக்கடி நான் உணவறை மற்றும் கழிவறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்து தொடக்கூடாத இடங்களில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

    படிப்பு சம்பந்தமாக கருத்தரங்கு ஆகியவற்றிக்கு செல்லும் போது கூட நான் ஆண் என்று தெரிந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனை மனவேதனை அடைந்த நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது.எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.கல்லூரி மாணவரின் புகாரின் பேரில் துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×