என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்டம்"

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.
    • வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டயரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார். அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா , ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ ஆணையர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை (மத்திய தொழிற் பணி), மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையில் இருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிட நலப் பள்ளியில் எண்ணிக்கை, நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதிதிராவிடர் நல விடுதிக ளின் எண்ணிக்கை, கடந்தாண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரம், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு பொருளடக்கம் இக்கூட்ட த்தில ஆய்வு செய்யப்பட்டது.

    ஆதித்திரா விடர்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்ட ங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தங்கு தடையின்றி பயனாளிகளுக்கு சென்று நேர அலுவலர்கள் முனைப்பு டன் செயல்பட வேண்டும்.

    மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.1224235 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.4355786 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    மேலும் மகளிருக்கான சுய உதவிக்குழுக்களின் கீழ் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 குழுக்களுக்கு 120 மகளிருக்கு தாட்கோ மானியமாக ரூ.2500000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.7447000 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென மின் இணைப்பு 25 விவசாயிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.5790000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.6480000 மதிப்பீ ட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்ப ட்டன.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மற்றும் நான்கு மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.
    • பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

    பல்லடம்:

    பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன், முருகன் நகரில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.

    கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 4.85 கோடி மதிப்பிலான 9 சாலை பணிகளை துவக்கி வைத்தார். பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் ரூ.31.21 லட்சம் மதிப்பில் 5 சாலை பணிகளை துவக்கினார். ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நில மட்ட நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

    பல்லடம் வட்டார பகுதிகளில் குடிநீர் தேவைக்காக பில்லூர் அணையிலிருந்து சூலூர் பேரூராட்சி வழியாக பல்லடம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரும்திட்டத்தினை முதலமைச்சர் முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து போது கொண்டு வந்தார்கள். தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டுள்ளது. தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பில்லூர் 3-ம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணி நடைபெற்று வருவதால், மீண்டும் இத்திட்டத்தினை பல்லடம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும். இதன் மூலம் பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லட்சுமணன்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம்,பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிர மணியம்,ஊராட்சி மன்ற தலைவர்கள் புனிதா சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாய்மேடு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
    • பொதுமக்களுக்கு வேஷ்டி, புடவை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேட்டில் நாகை மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பி னருமான பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆயக்கார ன்புலத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, பின் வாய்மேடு சமத்து வபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தொடர்ந்து, வாய்மேட்டில் நடந்த நிகழ்ச்சி யில் பொது மக்களுக்கு வேஷ்டி, புடவைகள், தென்ன ங்கன்று கள் வழங்கினார்.

    இதில் இந்தோனேஷியா தொழிலதிபர் திராவிட மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் அருள் அரசு, ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், சுப்ரமணியன், செந்தமிழ்ச்செல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



    இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரிடம் மனுக்களை வழங்கினர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷாமிட்டல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.
    • விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 231 திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    வீரத்தின் விளைநிலம் விழுப்புரம் மாவட்டம். வரலாறு பெருமை கொண்டது விழுப்புரம் என்று பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இலக்கிய புகழும், பெருமைகளும் நிறைந்த மாவட்டம் விழுப்புரம்.

    * விழுப்புரத்தின் பெருமையை பற்றி பேச நாளும் பொழுதும் பத்தாது.

    * கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் நினைவாக மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * வாழ்நாள் எல்லாம் எண்ணி பெருமைபடும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

    * தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஏ. கோவிந்தசாமி.

    * தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று முதலில் வென்றவர் ஏ.கோவிந்தசாமி.

    * வன்னிய சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * இன்றும் துடிப்பு மிக்க போராளியாக திகழ்பவர் பொன்முடி.

    * அதிமுக ஆட்சியில் காக்கை, குருவிகளை போல் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.

    * இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பென்சன் வழங்கியவர் கலைஞர்.

    * ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியில் தான்.

    * சமூகநீதியை நிலைநாட்டுவது தான் திராவிட இயக்கத்தின் நோக்கம்.

    * சொன்னபடியே 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * பிற்படுத்தப்பட்டோர் இன்று முன்னேறுவதற்கு கருணாநிதியை காரணம்.

    * சமூகநீதி அகில இந்திய அளவில் போராடி வருவதும் திமுக தான்.

    * நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.

    * விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * சாத்தனூர் அணையின் உபரிநீர் நந்தன் கால்வாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சாத்தனூர் அணை உபரிநீருக்காக ரூ.304 கோடி செலவில் நந்தன் கால்வாய்திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * சங்கரபாணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.

    * விக்கிரவாண்டி பேரூராட்சியில் பல்நோக்கு சமுதாய கூடம் அமைக்கப்படும்.

    * செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

    * ரூ.5 கோடியில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்க திட்டம்.

    * நிதி மட்டுமே தடையாக உள்ளது, வேறு எந்த தடையும் எங்களுக்கு இல்லை.

    * குறை சொல்வது எதிர்க்கட்சி தலைவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறைபாடு

    * எந்த பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

    * நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது அல்ல நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே எனது இலக்கு.

    * நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதை அடையவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றார். 

    • அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது.
    • வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DODGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

    விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DODGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DODGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

     டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.

    "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.  மேலும் எலான் மஸ்க் ஒரு சிறப்பு அரசு ஊழியராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

    திறமையற்றவர்கள் எனக் கூறி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை  பணிநீக்கம் செய்யும் ஆலோசனையை அரசுக்கு DODGE வழங்கியுள்ளது.

     அரசின் வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் பரவலான அச்சம் மக்களை தொற்றியது.

    'அமெரிக்க அரசின் அதிகாரத்தின் மீது தனது கட்டுப்பாட்டை எலான் மஸ்க் அசாதாரண வேகத்தில் இறுக்கி வருகிறார்' என ஜனநாயகக் கட்சியினரும் அரசியல் அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை மீறி மஸ்க் எதுவும் செய்யமுடியாது என்று டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.

     

    நேற்று இதுகுறித்து பேசிய அவர், "எலோனால் எங்கள் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டார். பொருத்தமான விஷயங்களில் நாங்கள் அவருக்கு ஒப்புதல் அளிப்போம்; அப்படி இல்லாத விஷயங்களில் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார்.

    தலைமை கழக பேச்சாளர்கள் இடி முழக்கம் இளமுருகன், தீப்பொறி ராமலிங்கம் ஆகியோர் கட்சியின் வரலாறு தொடர்பாக விளக்க உரையாற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்எல்ஏ பேசியபோது கூறியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்டிக் காத்து வருகிறார்.

    கட்சியின் பொன்விழா என்று நினைவாக இந்த கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    விரைவில் தமிழகத்தின் ஆட்சியைப் கைப்பற்றும். இவ்வாறு கூறினார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா.இராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், திருவாரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட கழகப் பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யூ.மணிகண்டன், செந்தில் வேல், திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் கூரியர் மதி, திருவாரூர் மாவட்ட ஒன்றிய துணைத் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்விழா என்று நினைவாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.
    • வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், மத்திய அரசின் கோயம்புத்தூர் மத்திய தொழிலாளர் கல்வி மண்டல அலுவலக அலுவலர் எஸ். சேரன், வெள்ளகோவில் பகுதியில் உள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களான பென்ஷன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு, வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    இந்த பயிற்சி இன்று 12ந்தேதி, நாளை மறுநாள் 14 ந்தேதி, மற்றும் 17ந்தேதி ஆகிய தேதிகளில் 4 வகுப்புகளாக நடைபெற உள்ளது.இந்த விழிப்புணர்வு பயிற்சியானது ஒவ்வொரு வகுப்பிலும் 25 உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை, பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூர் மற்றும் குருவிகுளம் வட்டார வேளாண்மை துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்டத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்ட நெல் 4663 ஹெக்டேர், சிறுதானியங்கள் 3001 ஹெக்டேர், பயறு வகைகள் 1338 ஹெக்டேர், பருத்தி 962 ஹெக்டேர், கரும்பு 1436 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1183ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.

    மழை அளவு நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பாரத பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கும், திட்ட மானிய தொகை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கும் பவர்டிரில்லர் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 47,370 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பொறுப்பு கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண்மை துணை இயக்குனர்,வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கிருஷ்ணகுமார், உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்குதல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திறந்து வைத்து மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்ததாவது-

    வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது உலக வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும்.

    திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி வட்டத்தில் 51 கிராம ஊராட்சிகளிலும், வலங்கைமான் வட்டத்தில் 50 கிராம ஊராட்சிகளிலும், நீடாமங்கலம் வட்டத்தில் 44 கிராம ஊராட்சிகளிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் 29 கிராம ஊராட்சிகளிலும் மொத்தம் 174 கிராம ஊராட்சிகளில் இத்திட்டமானது செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    முந்தைய திட்டங்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள், வளங்கள் மற்றும் திறன்களை கொண்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பங்களே இத்திட்டத்தின் முதன்மை இலக்கு ஆவர்.

    இத்திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்தி றனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    தொழில் முனைவோ ருக்கும் தொழில் நிறுவனங்க ளுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்கு வதற்காக திட்டத்தின் மூலம் "மகளிர் வாழ்வாதார சேவை மையம்" தொடங்கப்பட்டுள்ளது.

    இம்மையத்தின் மூலம் மகளிர், இளைஞர்கள், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்குதல், ஊரகப்பகுதிகளில் உள்ள புதிய மற்றும் பழைய தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவர்களது தொழில் வளர்ச்சிக்கு தேவையான வணிக மேம்பாட்டு சேவைகளை வழங்குதல், போன்ற பணிகள் மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் செயல்படுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து 11 மகளிர் குழுவை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளும், 2 மகளிர் சுயவுதவி குழுவிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தொழில் முதலீட்டு கடனுதவியும், 10 தொழில் முனைவோர்களுக்கு சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான அங்கீகார சான்றிதழ் என மொத்தம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நீடாமங்கலம் ஒன்றிய சேர்மன் சோம.செந்தமிழ்செல்வன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல் அலுவலர் செல்வம், வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என பேசினார்.
    • திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வையிட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் ''நியூ மாடல் கேம்ப்'' தொடக்க விழா நடந்தது.

    முகாமை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய்பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், இந்த முகாமில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் அரங்குகள் அமைத்து செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர் மூலம் செயல் விளக்கம் அளிப்பதுடன் கையேடுகளும் விநியோகிக்கப்படுகிறது .

    இதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    முகாமில் நீதித்துறை (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு), வருவாய்த் துறை , காவல் துறை (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு), பொது சுகாதாரத் துறை, சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், மாவட்ட காசநோய் மையம், தொழுநோய் பிரிவு, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சைல்டு லைன் , மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத்துறை, முதியோர் உதவி எண் 14567, நகராட்சி நிர்வாகத் துறை ஆகிய 18 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது .

    விழாவில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன் , போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி பரமேசுவரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1. அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 சத்தியநாராயணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வை யிட்டனர்.

    • முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர்.
    • ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார் என்று ஆர்.பி.உதய குமார் கூறினார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க 50-வது ஆண்டு பொன்விழா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    நிகழ்ச்சிக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சுப்புலட்சுமி சந்திரன் தலைமை தாங்கினார். எட்டயபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.பின்னர் ராஜினாமா செய்தார்.

    அதன் பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். பின் தி.மு.கவுடன் இணைந்து சட்டமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு எதிராக வாக்களித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் போது ஓ.பி.எஸ். மவுன யுத்தம் நடத்தினார். இதனால் அ.தி.மு.க செல்வாக்கு 5 சதவீதம் சரிந்தது.

    மவுன யுத்தம்

    எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்க வில்லையோ அப்போது எல்லாம் ஒரு மவுன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார்.ஓ.பி.எஸ் மவுனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம் .

    சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர்.

    எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓ.பி.எஸ் உருவாக்குவார். அதற்காக போராடுவார், தர்மயுத்தத்தினை நடத்துவார்.அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஓ.பி.எஸ்க்கு வெற்றி தராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சிவபெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வேலுச்சாமி,ஊராட்சி குழு தலைவி சத்யா, மகளிர் அணி ரத்தினம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனி ராஜீ, அ.தி.மு.க புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, எட்டயபுரம் பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கார்ட்டன் பிரபு, ஒன்றிய நகர, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×