என் மலர்
நீங்கள் தேடியது "உயர்வு"
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும் ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலா யுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.160-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கட்டான் ரூ.200-க்கும் ஏலம் போனது.
இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சாலையோரம் படுத்து உறங்கும் மக்கள்
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி
கன்னியாகுமரி:
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் கன்னி யாகுமரியும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இதனால் தற்போது கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன்களை கட்டி உள்ளது.இதனால் தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிப்பதோடு மட்டுமின்றி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை ஆர்வத்துடன் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். மேலும் பகவதி அம்மன்கோவில், திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போடுகிறார்கள்.
இது தவிர கன்னியாகுமரி யில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுனாமி நினைவு பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகிறார்கள். மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார்கள்.
அதன் பிறகு சுற்றுலா பயணிகள் கூடுதலாக ஒருசில நாட்கள் லாட்ஜிகளில் தங்கிஇருந்து கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர்தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம்பீச், சொத்தவிளை பீச், வட்டக் கோட்டை போன்ற சுற்றுலா தலங்களையும் பார்வை யிட்டு செல்கிறார்கள்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம், போன்ற தொடர் விடுமுறை காரண மாகவும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் 106 லாட்ஜ்கள் இருந்த பிறகும் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திண்டாடுகிறார்கள். இந்த சீசனை பயன்படுத்தி கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அறை வாடகை தாறுமாறாக உயர்ந்துஉள்ளது. சீசன் இல்லாத காலங்களில் ரு.1000 வாடகைகட்டணம் உள்ள 2 படுக்கைகள் கொண்ட சாதாரண அறைவாடகை தற்போது சீசனையொட்டி 3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்துக்கு வாடைக்கு விடப்படுகிறது. அதேபோல ரூ.2 ஆயிரம் வாடகை உள்ள 2 படுக்கை கள் கொண்ட"குளுகுளு" வசதியுடையஅறை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7ஆயிரம் வரை வாடகைக்கு விடப்படுகிறது.
தற்போது இந்த லாட்ஜ்களில் உள்ள அறை கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சாலையோரம் படுத்து தூங்கும் அவல நிலை ஏற்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் ஒரு சில சுற்றுலா பயணி கள் கன்னியாகுமரியில் தங்கு வதற்கு அறை கிடைக்காத தால் நாகர்கோவில் போன்ற வெளியூர்களுக்கு சென்று தங்கி இருந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறார்கள்.
எனவே கன்னியா குமரியில் சீசன் காலங்க ளில் லாட்ஜ்களில் அறை வாடகையை தாறு மாறாக உயர்த்துவதை கட்டுப்படுத்த வாடகை கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதே போல கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியலை அந் தந்த லாட்ஜ்களில் வைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
- இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஒன்றிய அரசின் நிதி உதவியில் 2005-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கான இச்சிறப்பு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயின்றவர்கள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு 10-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தொடர்கல்வி பயில்வதை இத்திட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
தொடர்ச்சியாக தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்றவற்றில் உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக நடப்பாண்டில் உயர்த்தி மாநில அரசின் தொழிலாளர் மற்றும் திறன்வளர்ப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்கல்வி ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
தற்போது பயிலும் கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கிக்கணக்குப்புத்தக நகல், 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை திட்ட இயக்குநர், குழந்தைத் தொழிலாளர் திட்டம் , 6-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாக விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புகின்றனர்.
- ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
- பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
- கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ இன்று ரூ.2000- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு :-
மல்லிகை - ரூ.2000, முல்லை - ரூ.2000, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.1000, கலர் காக்கட்டான் - ரூ.1000, மலை காக்கட்டான் - ரூ.900, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.360, வெள்ளை அரளி - ரூ.360, மஞ்சள் அரளி - ரூ.360, செவ்வரளி - ரூ.400, ஐ.செவ்வரளி - ரூ.400, நந்தியா வட்டம் - ரூ.150.
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் குண்டுமல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1300- க்கும், முல்லை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், அரளி ரூ.250- க்கும், ரோஜா ரூ.150-க்கும் விற்பனையானது.
நேற்று நடந்த ஏலத்தில், குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கும், சம்பங்கி ரூ160- க்கும், அரளி ரூ.450- க்கும், ரோஜா ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.4000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.1700-க்கும், காக்கட்டான் ரூ.1800-க்கும் விற்பனையானது.
மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வடைந்து உள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதியில் பாலப் பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப் பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு ஏலம் போனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
- 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் , பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று
பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. அப்போது கறிக்கோழியின் உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .அதன்படி கறிக்கோழி விலை இன்று 91 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
- 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
- சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ர மணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனு டையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் 18,047 மாற்றுத்திறனுடைய பயனாளிகளுக்கு 2023 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2023 ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 கிடைக்கப் பெறாத சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவீதம் மாற்றுத்திறன் உடையோர் எவரும் இருந்தால், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்களது வட்டத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளது.
- இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய்
இடையாறு, குப்பிச்சிபாளை யம், மோகனுார், பரமத்தி வேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு
நல்லி கோவில், அய்யம்பா
ளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், இருக்கூர், ஜமீன் இளம்பள்ளி, சோழசி ராமணி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் பூவன், கற்பூர வள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை
யான வாழை, ஆயிரக்க ணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வாங்கப்படும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம்,
கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் அதிக பட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் , மொந்தன் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது. தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதால் அதிக பூக்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கிச் சென்றனர்.
- தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள்
பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான தண்ணீர் பந்தல், கபிலர்மலை, சின்ன மருதூர், பெரிய மருதூர், ஆனங்கூர், பாகம்பாளையம், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், நொய்யல், நடையனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, ரோஜா, அரளி, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். வாங்கிய உதிரிப்பூக்கள் மூலம் பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர்.சிலர் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதால் அதிக பூக்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கிச் சென்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800- க்கும், சம்பங்கி கிலோ ரூ.60- க்கும், அரளி கிலோ ரூ.90- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.1000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.80- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.500- க்கும் ஏலம் போனது. தைப்பூசத் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ90- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.220- முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது. தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- அரளி ரூ.150, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு விற்பனையாகியது.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர் , நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
விசேச தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்கள் தேவை அதிகரிக்கும் நிலையில் பூக்கள் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம்.
அதிலும் பனிப்பொழிவு, மழை மற்றும் பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் பூக்கள் விலை அதிக அளவு உயரும்.
இந்த நிலையில் இன்று முருகர் சுவாமிக்கு உகந்த தைப்பூச நாள் என்பதால் பூக்களின் தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இன்று பூக்களின் விலை கணிசமாக அதிகரித்தது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.
இதே போல் முல்லை ரூ.1000, கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.400, அரளி ரூ.150, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு விற்பனையாகியது. இந்த பூக்களும் சற்று விலை உயர்ந்துள்ளது.
நாளையில் இருந்து பூக்களின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது