என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கொலை"

    • போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    காளிதாசுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால் அவர் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் தலையில் பலத்த காயத்துடன் காளிதாஸ் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர்.

    அதில் தலையில் ரத்த காயம் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே காளிதாசின் சகோதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழுகுமலை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே உமா மகேஷ்வரன்இறந்த நிலையில் கிடந்தார்.
    • உமா மகேஷ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் உமா மகேஷ்வரன் ( வயது 44). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கழுகுமலை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது தலை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் கழுகுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமா மகேஷ்வரனின் உடலில் காயங்கள் இருந்த தால் அவர் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா மகேஷ்வரன் கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கருத்து வேறுபாடு காரணமாக சார்லஸ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • சாலையில் படுத்து தூங்குவது தொடர்பாக சார்லசுக்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு வாடி தெருவை சேர்ந்தவர் சார்லஸ் (வயது42). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இவர் இரவு நேரங்களில் சாலையோரம் படுத்து தூங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சார்லஸ் அப்பகுதியில் சாலையோரம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் சாலையில் படுத்து தூங்குவது தொடர்பாக சார்லசுக்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நேற்றிரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது சிலோன் காலனியை சேர்ந்த சின்னமுத்து(39), எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமி புரத்தைச்சேர்ந்த குருசாமி (38) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சார்லசை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • ஜெயக்குமார் திருட்டு மோட்டார் சைக்கிளை குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் (56) மகன் சரவணன் (25) என்பவரிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
    • தனிப்படையினர் முருகன், பொன் வைரவி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). தொழிலாளி. நேற்று இவர் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சந்தீஷ் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஜெயக்குமார் திருட்டு மோட்டார் சைக்கிளை குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் (56) மகன் சரவணன் (25) என்பவரிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

    இதையறிந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் சரவணனிடம் தகராறு செய்து அதனை எடுத்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தனது தந்தை முருகனுடன் சென்று மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த பணத்தை திருப்பி தருமாறு ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளனர்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தந்தை-மகன் சேர்ந்து ஜெயக்குமாரை தாக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. மேலும் கொலையில் முருகனின் மனைவி பொன் வைரவி (45) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படையினர் முருகன், பொன் வைரவி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, ஜெயக்குமார் திருட்டு மோட்டார் சைக்கிளை எங்களிடம் விற்பனை செய்துவிட்டார். இதையறிந்த அதன் உரிமையாளர் எங்களிடம் வந்து அதனை எடுத்து சென்றுவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    எனவே ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் கேட்டோம். அப்போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாங்கள் அவரை தாக்கினோம். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார் என்றனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர்.
    • ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் எடிசன் (வயது 42), கொத்தனார்.

    இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். இவருக்கும் அவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40) என்பவருக்கு இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் அவரது அண்ணன் ஜார்ஜ் எடிசனை நெஞ்சில் சரமாரியாக குத்தினார்.

    இதில் ஜார்ஜ் எடிசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அண்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த மார்ட்டின் ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக ஜார்ஜ் எடிசனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அங்கு டாக்டரிடம் தனது அண்ணன் ஜார்ஜ் எடிசன் விபத்தில் சிக்கியதாக கூறினார். டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அங்கு வந்து மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

    பின்னர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மார்ட்டின் ஜெயராஜை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    பிடிபட்ட மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்திய போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஜார்ஜ் எடிசனை குத்தியதாக கூறினார். இதிலிருந்து தப்பிக்க விபத்தில் சிக்கியதாக நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது.

    சகோதரரை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது குடித்து விட்டு 3 பேரும் வெளியே வந்தனர்.
    • 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    செட்டிப்பாளையம்,

    கோவை மலுமச்ச ம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 39). தொழிலாளி. இவர் தனது நண்பர்களான தமிழ்செல்வன், ஞான பிரகாசம் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    மது குடித்து விட்டு 3 பேரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த காரில் வந்த 5 பேருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் ஒரு மொபட்டில் சென்றனர். பின்னால் காரில் 5 பேரும் சென்றனர்.

    அப்போது மொபட்டில் சென்றவர்கள் காருக்கு வழி விடாமல் சென்றனர். இதனைடுத்து காரில் சென்றவர்கள் ஹாரன் அடித்து முந்தி சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கினர். தாக்குதலில் தாக்குபிடிக்க முடியாமல் தமிழ்செல்வன், ஞான பிரகாசம் ஆகியோர் அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர்

    பிரபாகரன் மட்டும் சிக்கி கொண்டார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் தென்னை மட்டையால் தாக்கினர். பின்னர் பிரபாகரனை கீழே தள்ளி அங்கு இருந்த கல்லால் தலையில் தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செட்டி ப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 5 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களில் 5 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை கொண்டு போலீ சார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த 2 சிக்கினர். இவர்கள் தான் பேடிஎம் பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் மது வாங்கி இருக்கிறார்கள். அந்த விவரங்களை கொண்டு போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    5 பேரும் சிக்கியதும் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கைகாட்டி அருகே உள்ளது கீழ விளாங்குடி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர் மரம் வெட்டும் வேலைக்கு செல்வார்.

    இவர் தினமும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது வழியில் மது அருந்தி விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    பக்கத்து ஊரான ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (50). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவரும் அறிவழகன் மது அருந்தும் டாஸ்மாக் கடைக்கு வருவது வழக்கம்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர். அப்போது முதல் இருவரும் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அறிவழகன், வெங்கடாசலம் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவரின் குடும்ப விஷயங்களை பகிர்ந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டனர். மணல் மேடான பகுதிக்கு சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடாசலத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கருப்பு கோவில் அருகே குழி தோண்டி புதைத்த அறிவழகன் மண்ணால் மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    ஆனாலும் மதுபோதை குறையாத அறிவழகன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை உளறிக் கொட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில், விரைந்து சென்ற கயர்லாபாத் போலீசார் தாசில்தார் கண்ணன், வி.ஏ.ஓ. ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
    • பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    பல்லடம்:

    திருச்சி கருவம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் முனீஸ்வரன், விக்னேஸ்வரன், சிவகாந்த பிரியதர்ஷினி ஆகிய 2மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி சிவகாமி இறந்துவிட்டதால் தனது மகன்களுடன் திருப்பூர் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் தனது சகோதரி ரேணுகா வீட்டில் குடியிருந்து கொண்டு கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கந்தசாமி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை. இது குறித்து திருச்சியில் உள்ள உறவினர்களிடம் ரேணுகா மற்றும் குடும்பத்தினர் விசாரித்த போது கந்தசாமி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    இந்தநிலையில் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    கந்தசாமியுடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ஒருவர் மட்டும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது அவர் கந்தசாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் கரண் (22) என்பதும் கந்தசாமியுடன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கந்தசாமி சொந்த ஊருக்கு சென்று பணம் கொண்டு வந்ததை தெரிந்த கரண், தனது கள்ளக்காதலி பழனி அருகே உள்ள புதிய ஆயக்குடியை சேர்ந்த சசிகலா (34) என்பவருடன் சேர்ந்து கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கந்தசாமி வைத்திருந்த ரூ.10ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உடலில் பாறாங்கல்லை கட்டி கிணற்றில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் கரண், சசிகலா சிக்கிக்கொண்டனர். ரூ.10ஆயிரம் பணத்திற்காக தொழிலாளியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது39). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், சர்தன் (12) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு சுரேஷ் தனது மகனுடன் தென்பரங்குன்றம் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த 3 பேர் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுரேசை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேசை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தென்பரங்குன்றத்தை சேர்ந்த டேவிட்ராஜா என்பவரின் மகன் தீனதயாளன். கட்டிட தொழிலாளியான இவர், அந்த பகுதியில் அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை சுரேஷ் கண்டித்து வந்திருக்கிறார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சுரேஷ் தனது மகனுடன் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு தீனதயாளன், தனது நண்பர்களான விக்னேஷ்வரன், சிங்கராஜா ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். சுரேசை பார்த்த அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் தனது நண்பர்களுடன் சுரேசுடன் தகராறு செய்தார்.

    அப்போது அவர்கள் வாள் மற்றும் கத்தியால் சுரேசை அவரது மகனின் கண்முன் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீனதயாளன், விக்னேஷ்வரன், சிங்க ராஜா ஆகிய 3 பேர் மீதும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது.
    • மணிகண்டன் குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60).

    இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர்.

    மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர்.

    செல்லையா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து வேலம்மாள் தனது மகன் மணிகண்டனுடன் தனியாக வசித்து வந்தார். மணிகண்டன் தச்சு வேலை செய்து வந்தார்.

    மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மணிகண்டன் குடிபோதையில் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து தனது சகோதரர் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதாக தங்கமாரி சகோதரி செல்வியிடம் கூறி வேதனைபட்டார்.

    அப்போது செல்வியின் கணவர் பாலசுப்பிரமணியம், இவர்களை தொடர்பு கொண்டு உங்கள் சகோதரருக்கு வேலையே கிடையாது. எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வருகிறார் என கேட்டார். அதற்கு அவர்கள், பாலசுப்பிரமணியத்தை திட்டியுள்ளனர்.

    இதனால் பாலசுப்பிரமணியத்திற்கு, மணிகண்டன் மீது கோபம் உண்டானது. நேற்று இரவு பாலசுப்பிரமணியம் குடிபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.

    இதையடுத்து அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு நெற்றி, மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் தீராத பாலசுப்பிரமணியம் இரும்பு கம்பியால் மேலும் அடித்தார்.

    இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து திருவள்ளுவர் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கிருந்து தனது மனைவியை தொடர்பு கொண்டு, உனது தம்பி உயிருடன் இருக்கிறானா? என்று போய் பார்த்து கொள் என்று கூறினார்.

    இதை கேட்டு பதறிப்போன அவர் தனது தாயுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மகனின் உடலை பார்த்து வேலம்மாள் கதறி அழுதார்.

    இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார்.
    • ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கேரளாவை சேர்ந்தவர் முகமது பாசில்(வயது28).

    இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தங்கி பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    தினமும் இருவரும், அந்த பகுதி முழுவதும் ஒன்றாக சேர்ந்து குப்பைகளை சேகரித்து, அதனை விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ்(51) என்பவரும் தங்கி இருந்தார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    2 பேரும் நண்பர்களாக பழகினர். இதையடுத்து 2 பேரும் ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்தனர். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் 2 பேரும் பணி முடிந்ததும் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் 2 பேரும் ஒரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்றும் வழக்கம் போல் 2 பேரும் தங்கள் வேலையை முடித்து விட்டு ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். மதுகுடித்த பின்னர் தூங்க சென்றனர். அப்போது முகமது பாசில், ரமேசை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

    ஆனால் ரமேஷ் வர மறுத்தார். மேலும் உனது ஆடையை களைந்து இருக்குமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் முகமது பாசிலின் மீது கடும் கோபம் கொண்டார். அவரை கொல்ல முடிவு செய்தார்.

    அதன்படி முகமது பாசில் தூங்கியதும், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது முகமது பாசில் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ஒரின சேர்க்கைக்கு அழைத்ததால் ரமேஷ், முகமது பாசிலை கல்லை போட்டு கொன்றது போலீசின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் துடியலூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
    • ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள என்.தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது37). கூலி தொழிலாளியான இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிவசக்தி (23) என்பவருக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×