என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228242"

    • அலங்காநல்லூரில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • தேசிய மாணவர் படை மற்றும் அரிமா சங்கம் சார்பில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் அரிமா சங்கம் சார்பில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அய்யப்பன் கோவில் முன்பிருந்து பஸ் நிலையம் வழியாக கேட்டுகடை வரை சென்று மீண்டும் பஸ் நிலையம் வந்தனர்.

    தலைமையாசிரியர் பிராக்ரன்ஸ் லதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி, அரிமா சங்க தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் மனோகரவேல் பாண்டியன், முன்னாள் தலைவர் ரகுபதி, நடராஜன், பிரபாகரன், தேசிய மாணவர் படை அலுவலர் காட்வின், நாட்டு நலப் பணி திட்ட செயலர் ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்தடைந்தனர்.

    பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம் தலைமையில் அம்மா பேரவை இணை செயலாளர் காந்தி முன்னிலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் நிக்கல்சன் வங்கி தலைவர் சரவணன், மாவட்ட அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தினசுந்தரம், அம்மா பேரவை துணை செயலாளர் பாலை ரவி , மாணவர் அணி முருகேசன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், காந்திமதி , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர் , முன்னாள் நகர செயலாளர் முருகேசன், 51-வது வட்டச் செயலாளர் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புயல், வெள்ள பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
    • பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பேரிடர் இன்னல்குறைப்பு விழிப்புணர்வு பேரணி தாசில்தார் மலர்கொடி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது அவர் பேசும்போது,

    எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ள பாதிப்புகளை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அர்ப்பணிப்பு தன்மையுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், அப்போதுதான் பேரிடர் இன்னல்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்றார்.

    நிகழ்ச்சியில் பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம் நடைப்பெற்றது. பேரணி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரைநடைப்பெற்றது.

    பேரணியில் பாலம் தொண்டுநிறுவன செயலாளர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்குமார், நிலைய தீயணைப்பு அலுவலர் காளிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், முரளிதரன், , கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம், பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள். கலந்துக்கொண்டனர்.

    • 40 ஆண்டுகளாக அம்பு விடுதல் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
    • முருகப்பெருமானை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் சாட்சிநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது.

    விழாவின் பத்தாம் நாளில் சுவாமி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் வீதியுலா சென்று அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 40 ஆண்டுகளாக அம்பு விடுதல் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்நிலையில், மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நடப்பாண்டு அம்பு விடுதல் திருவிழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட்டார்.

    அதன்படி, கோவில் கண்காணிப்பாளர்கள் முத்தையன், சுப்பிர மணியன், பழனியப்பாபிள்ளை, செங்குட்டுவன் மற்றும் பொதுமக்கள் இணைந்து அம்பு விடுதல் நிகழ்ச்சியை நேற்று வெகு விமர்சையாக நடத்தினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான நேற்று அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமான் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நவராத்திரி விழாவை யொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்கார வழிபாடு நடைபெற்றது.
    • விஜயதசமி நாளையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.

    குமாரபாளையம்:

    நவராத்திரி விழாவை யொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்கார வழிபாடு நடைபெற்றது. விஜயதசமி நாளையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.

    மேலும் குழந்தைகளுக்கு அம்மன் வேடமிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, குழந்தைகளுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வந்த திருவீதி உலா கோவிலில் நிறைவு பெற்றது.

    கோவிலில் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • இன்று காலை தொடங்கியது
    • வாள்-வில், அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்ன தானம், வாகனபவனி, நாதஸ் வரக்கச்சேரி, பாட்டுக்கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது.திருவிழாவை யொட்டி இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரி வேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான விஜயதசமியான இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்புபோன்றஆயுதங்களையும்அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.அதன்பிறகுகாலை 10 மணிக்குகோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து காலை 11-30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம்நோக்கிஅம்மனின்பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும் கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும்போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர். ஊர்வலத் துக்கு முன்னால் நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட 3 யானைகள் அணிவகுத்து சென்றன. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம்அணிந்து சென்றனர். அதனை அடுத்து கோவில் ஊழியர் ரமேஷ் வாள் ஏந்திய படியும் சுண்டன் பரப்பைச் சேர்ந்த பரம்பரை தர்மகர்த்தா

    வில் - அம்பு ஏந்தியபடியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரளபுகழ்தையம்ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்டகிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்ம னின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகா தானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதிஅம்மன் செல்கிறார்.

    அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபடுகிறார்கள். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ளகாரியக்காரன்மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர் கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் அஞ்சுகிராமம் கன்னியா குமரி சாலையிலும்இன்று காலை11மணிக்குபிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பரிவேட்டை ஊர்வலத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞான சேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், கொட்டாரம் நகர செயலாளர் வைகுண்டபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பா ளையம் வெள்ளை கரடு திம்ம ராய பெருமாள் கோவில் 2-வது சனிக்கிழ மையை முன்னிட்டு சாமி ஊர்வலம் விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பா ளையம் வெள்ளை கரடு திம்ம ராய பெருமாள் கோவில் 2-வது சனிக்கிழ மையை முன்னிட்டு சாமி ஊர்வலம் விழா நடந்தது. கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பூ அலங்காரத்தில் சாமி ஊர்வலம் வெள்ளாண்டி வலசை நடுத்தெரு காளியம்மன் கோவில் வீதி வீரப்பம்பாளையம் வழியாக பெண்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக சாமி ஊர்வலம் சென்று பின்பு கோவிலை அடைந்தனர். அதைத்தொடர்ந்து கொடி தீபம் ஏற்றப்பட்டது.

    பின்பு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராமு, கிட்டு, குப்புசாமி பண்டிதர் மற்றும் மருத்துவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

    • தாரமங்கலம் வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்து மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் வளர் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்து மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தாரமங்கலம் பவளத்தானுர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ரத்த சோகையின் அறிகுறிகள், ரத்தசோகை தடுப்புமுறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அடிப்படை உண்மைகள், ஊட்டச்சத்து உணவு ஏன் அவசியம்? சக்தி தரும் உணவுகள், தானிய வகைகள், கிழங்கு வகைகள், நுண்ணுட்ட சத்து நிறைந்துள்ள உணவுகள் குறித்த விழிப்புணர்வு விளக்க பிரசார நோட்டீஸ் வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் வளர் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதா, 2-ம் நிலை மேற்பார்வையாளர் தனலட்சுமி, வட்டார திட்ட உதவியாளர் ரமேஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்–கள், உதவியாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர் .

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.

    விழாவின்போது பாரம் பரிய முறைப்படி 10 நாட்களும் அம்ம னுக்கு அபிஷே கத்து க்குரிய புனிதநீரை எடுத்து வருவதற்கு யானையை பயன்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெறப்பட்டது.

    அதன்பயனாக திற்ப ரப்பில்இருந்து கன்னியா குமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு யானை வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பகவதி அம்மன் அபிஷேத்துக்குரிய புனிதநீர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவில் முன்பு வைத்து பூஜை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யானைக்கு கஜ பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு வெள்ளிக் குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    யானை ஊர்வலத்தை கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர்செயலாளர் வைகுண்டபெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் சந்திர சேகர், செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞர்அணி அமைப்பாளர் பொன் ஜான்சன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்படதிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்கு ரத வீதி, நடுத் தெரு, தெற்கு ரத வீதி, சன்னதி தெரு, வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக்கின் அதன் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • இந்த ஊர்வலத்தில் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூ ராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதன் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் மணி தலைமை வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கண்காட்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியில் பொதுமக்கள் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்தக் கூடாது என தனித்தனியாக வகைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் ரமேஷ், ராமச்சந்திரன், நாச்சிமுத்து, பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை, துப்புரவு அலுவலர் ரவி, மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக-கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
    • ஊர்வலமாக சென்ற சுவாமிகளை வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் ஆட்சி காலத்தில் இந்த விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    அந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகளை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

    அப்போது மன்னர்கள் காலத்தில் பயன்படுத் தப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனையில் வைக்கப் பட்டிருக்கும் உடைவாளும் கொண்டு செல்லப்படும். சாமி சிலைகள் புறப் பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நடை பெறும். பாரம்பரிய முறைப் படி பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும் சுவாமி சிலைகள் ஊர்வலம் புறப்படும் இடத்தில் இருந்து கேரள மாநில எல்லை வரை பொது மக்கள் திரண்டு நின்று பூப்பந்தல் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்தும். மின் விளக்குகளால் அலங்கரித்தும் வரவேற்பு கொடுப்பார்கள்.

    தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் சாமி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும். இதில் தமிழக-கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்த சாமி சிலைகள் ஊர்வ லத்தில் யானையும் பயன் படுத்தப்படும்.

    பின்னர் சாமி சிலை களை மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு. இந்த ஆண்டு நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி நேற்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலத்துடன் புறப்பட்டு குமாரகோவில் முருகன் கோவில் வந்தடைந்தது. பின்னர் இன்று காலை பூஜைகள் முடிந்து முன்னுதித்த நங்கை அம்மனுடன் குமாரகோவில் முருகனும் பல்லக்கில் பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து கேரள அரசின் பாரம்பரிய மரியாதையுடன் கேரள போலீசார்அணிவகுப்பு மரியாதையுடன் பத்மனாபபுரம் அரண்மனை முன்பு வந்தடைந்தது. அப்போது அங்கு பூசாரிகள் மூலம் பிடிகாணிக்கை வழங்க பட்டது.பின்னர் அரண்மனையில் உள்ள உப்பரி மாளிகையில் பாதுகாக்கப்பட்ட மன்னர் பயன்படுத்திய உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பூஜைகளுக்கு பின்னர் அரண்மனை கண்காணிப்பா ளர் அஜித்குமார் உடை வாளை எடுத்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ண னிடம் ஒப்படைத்தார். அந்த உடைவாளை அவர் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார். அவர் குமரி மாவட்ட இணை ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினார். பின்னர் இது அரண்மனை ஊழியர் சுதர்சனிடம் வழங்கப்பட் டது. இதையடுத்து அரண்மனை ஊழியர் உடை வாளுடன் முன் சென்றார். யானையில் சரஸ்வதி அம்மன், 2 பல்லக்கில் முன்னுதித்த நங்கையம்மன், முருகன் ஆகியோர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் கேரளா பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் குமாரகுருபரன், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, தாசில்தார் வினோத், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், நகர தி.மு.க. செயலாளர் சுபிகான், மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவர் குமரி ரமேஷ், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், மத்திய அரசு வக்கீல் வேல்தாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலமாக சென்ற சுவாமிகளை வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வழிபட்டனர். இன்று கேரளபுரம் திருவிதாங்கோடு வழியாக ஊர்வலம் குழித்துறை செல்கிறது. அங்கு தங்கிவிட்டு நாளை காலை சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு தமிழக எல்லையான களியக்காவிளை செல்கிறது. அங்கு கேரள மாநில அரசு முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டு நெய்யாற்றின் கரையில் தங்க வைக்க படுகிறது. தொடர்ந்து புறப்பட்டு திருவனந்தபுரம் ஆரிய சாலையில் வந்தடைகிறது.

    அங்கு 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்கிறது.10 நாள்கள் பூஜை முடிந்து அங்கிருந்து சாமி சிலைகள் மீண்டும் புறப்பட்டு குமரி வந்தடைகிறது.

    • முத்துகுமரனை அவர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது30). பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். காய்கறி வியாபாரம் செய்து வந்த முத்துக்குமரனுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கி ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு கடந்த 4-ந்தேதி சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதிக்குப்பிறகு முத்துக்குமரனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதற்கிடையே கடந்த 9-ந்தேதி குவைத்தில் முத்துகுமரன் இறந்து விட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் கலங்கி போனார்கள்.

    குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டதும், முத்துகுமரனை அவர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒட்டகம் மேய்க்க மறுத்த முத்துகுமரனுக்கும், அவரது முதலாளிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்ததை அறிந்த குவைத் முதலாளி் அவரை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் குவைத்தில் முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குவைத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன், ஆந்திராவை சேர்ந்த ஏஜெண்டு மோகனா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது. இதில் குவைத்தில் உள்ள தமிழர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் முத்துக்குமரன் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சொந்த ஊரில் இன்று இறுதி சடங்கு அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு முத்துக்குமரனின் உடல் வந்து சேருகிறது.

    அதன் பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமரனின் உடல் கூத்தாநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு இறுதி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் முத்துக்குமரனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    முத்துக்குமரனின் உடலை கூத்தாநல்லூருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம், முத்துக்குமரன் மனைவி வித்யா மனு கொடுத்தார். இதனையடுத்து கலெக்டர் விரைவான நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து முத்துக்குமரனின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதற்காக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு முத்துக்குமரன் மனைவி வித்யா மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    ×