என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசம்"

    • வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
    • ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை, சாத்தான்குப்பம், கீரப் பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளை யம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக் கான ரூபாய்கள் பயிரிடப் பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பி லான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப் பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற் பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதி களில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜன வரி மாதம் வரை வாழைத் தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறு வடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லா மல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1100 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்தநிலையில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூவன்பழம் ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் குறைந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது மேலும் ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் விலை அனைத்தும் 2 மடங்காக உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் வாழைப் பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலை யில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • தீயணைப்பு போலீசார் வருவதற்குள் கடை தீக்கிரையானது
    • கடைக்கு யாராவது தீவைத்தார்களா என விசாரணை

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 65). இவரது வீட்டின் முன்பு ஆறுச்சாமி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக துணி அயர்ன் செய்யும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    இன்று அதிகாலை திடீரென அந்த அயர்ன் கடை தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த துணிகளும் தீக்கிரையானது.

    இதுபற்றி வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த கடைக்கு யாராவது தீவைத்தார்களா, அல்லது விபத்து காரணமாக தீப்பிடித்ததா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.  

    • மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது.
    • அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் சாலையில், தாமரைக் குளம் பகுதியில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இங்கு தர்மபுரி மாவட்டம் எம். பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி சிவகாமியுடனும், அதே பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் தனது மனைவி உமாவுடனும், தனித்தனியாக தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு குமாரின் மனைவி சிவகாமி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. இதில் மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது. சிறிது நேரத்திலேயே இரு குடிசைகளும் முற்றிலும் தீயில் எரிந்ததால் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர். அவிநாசி வட்டாட்சியர் மோகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தீ விபத்து பகுதியில் ஆய்வு செய்து இரு குடும்பத்தினரும் மாற்றிடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    • நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
    • அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தீ விபத்துக்குள்ளான எலக்ட்ரானிக் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்று சாலையில் போட்டனர்.
    • இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஷோரூமில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென தானாக எரிய தொடங்கியது.

    இதைக் கண்டு அதிர்ச்சடைந்த பணியாளர்கள் சுதாரித்துக் கொண்டு தீ விபத்துக்கு உள்ளான எலக்ட்ரானிக் மோட்டார் சைக்கிளை ஸ்டோர் ரூமில் இருந்து இழுத்துச் சென்று சாலையில் போட்டனர்.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிய தொடங்கியது இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தார்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து முற்றிலும் நாசமானது இச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • சின்னசேலம் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமாயின.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் லட்சுமணபுரம் செல்லும் சாலையில் மாமந்தூர் கிராமத்தில் வசிக்கும் அய்யாதுரை. இவர் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் மாடுகளை பராமரித்து வருகின்றார். மாடுகள் உண்பதற்கு அய்யாதுரை வீட்டில் அருகே வைக்கோல் போர் அமைத்துள்ளார். இன்று காலை வைக்கோல் போர் திடீரென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அய்யாதுரை உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் உள்ள குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் போர் முழுவதும் தீயில் எறிந்து நாசமாயின. வைக்கோல் போரை திட்டமிட்டு யாராவது தீ வைத்தாரா? அல்லது அவ்வழியே சென்றவர்கள் பீடி பற்ற வைத்து விட்டு தெரியாமல் தீக்குச்சை போட்டு விட்டார்களா? என்பது தெரியவில்லை. இந்த வைக்கோல் 250 கட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    • இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட சாக்குகள், படுதாக்கள் எரிந்து நாசமாகின.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் அரசு நெல் குடோன் செயல்பட்டு வருகிறது.

    இங்கு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் வாங்கி அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.

    தற்போது ஏராள மான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து சென்று பார்த்தபோது தீ மளமளவன பற்றி எரிந்து கொண்டிருந்தது. சாக்குகள், படுதாக்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன.

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா உத்திரவு படி நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட சாக்குகள் ,படுதாக்கள் எரிந்து சேதம் ஆகின. நெல்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக கெமிக்கல்வைக்க ப்பட்டிருக்கும்.

    அதில் தண்ணீர் பட்டு தீவிபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும் தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.
    • கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டிருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் நான்குவழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கண்ணையன் என்பவர் டீ ஸ்டால் வைத்துள்ளார்.

    கடை முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது. இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.

    இதனை அடுத்து டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.

    இருந்த போதிலும் தீகொளுந்து விட்டு எரிந்ததில் கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.கடை உரிமையாளர் பாலமுரு கனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு கொட்டகை தீ பிடித்து வாகனங்கள்-தானியங்கள் எரிந்து நாசமானது.
    • வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் 3-வது வார்டு மேற்கு தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் நீதி (வயது 50). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(47). இவர்களது மகன் பிரபாகரன்(34), மகள் பிரியா(33). இதில் பிரியாவுக்கு திருமணமாகி கூகையூரில் தனது கணவர் முருகனுடன் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பிரபாகரன் அவரது மனைவியுடன் களரம்பட்டிக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நீதி, லட்சுமி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் நீதியின் வீட்டையொட்டி முன்புறம் கல்நார் வேயப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கண் விழித்த நீதி, கொட்டகை கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரும், லட்சுமியும் உடனடியாக வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இதில் பைக் மற்றும் தானியங்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூங்கில் மரங்களில் பரவிய தீப்பொறி காற்றில் பறந்து சிலம்பரசன் வீட்டின் கூரையில் பட்டு கூரை எரியத் தொடங்கியது.
    • சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது தீ வீடு முழுக்க பரவியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் மேலராமநாதபுரத்தில் வசித்து வரும் தமிழரசன் மகன் சிலம்பரசன் தனது வீட்டிலேயே சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். அவரது வீட்டிற்கு எதிர் புறம் மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. இந்த மூங்கில் குத்தில் லேசாக தீ பற்றி எரிந்துள்ளது.

    இதை கவனித்த சிலம்பரசன் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவக்கூடிய அபாயம் இருப்பதால் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கலாம் என்கிற அடிப்படையில் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று ஊராட்சி மன்றத் தலைவருக்கு தொலைபேசி எண்ணை வாங்கி தகவல் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் மூங்கில் மரங்களில் பரவிய தீப்பொறி காற்றில் பறந்து சிலம்பரசன் வீட்டின் கூரையில் பட்டு கூரை எரியத் தொடங்கியுள்ளது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிலம்பரசனின் மகள் லியாஸ்ரீ (வயது6) அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிலம்பரசன் குழந்தையை காப்பாற்றினார்.பிறகு தனது சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது தீ வீடு முழுவதுமாகப் பரவி உள்ளது. அங்கிரு ந்தவர்கள் தீயை அனைத்து பார்த்துள்ளனர். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் தீயில் கருகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மகேந்திரன் என்பவர் வீட்டின் கூரையிலும் தீ பரவியது.

    சிலம்பரசன் வீட்டில் இருந்த சவுண்ட்சர்வீஸ் பொருட்களானஸ்பீக்கர், ஆம்ப், ஹாரன் உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின. அதேபோ ன்று வீட்டிலுள்ள குளிர்சாத னப்பெட்டி டிவி கிரைண்டர் மிக்ஸி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் என மொத்தம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சிலம்பரசன் வீட்டில் சேதமடைந்துள்ளது.

    மகேந்திரன் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. மேலும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அடுத்தடுத்து வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இது குறித்து வைப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரத்தில் இந்த ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    ×