என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் பாதுகாப்பு"
- சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் பதற்றம் நிலவுவதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ், வி.ஆர். மால், ஸ்பென்சர் பிளாசா, விஜயா மால் உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்ற சூழல் எதிரொலியால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார்.
அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி லாக்கரில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வங்கியில் இருந்து தங்க கவசம் எடுத்து செல்லப்பட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.
பின்பு குருபூஜை விழா முடிந்ததும் தங்க கவசம் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்படும். லாக்கரில் உள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. பொருளாளரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்று செல்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேவர் தங்க கவசத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனித்தனியாக கேட்டுக்கொண்டனர். ஆனால் தங்களிடம் தான் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அ.தி.மு.க.வின் 'ஏ' மற்றும் 'பி' தரப்பில் பல்வேறு பிரச்சினை இருப்பதால் தங்ககவசத்தை அவர்களிடம் வழங்க உத்தரவிட முடியாது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகளும், தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்து போட்டு தங்க கவசத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து மதுரை வங்கியில் இருந்த தேவர் தங்க கவசத்தை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள், தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பசும்பொன் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு “ஒய் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மும்பை
முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கி வருகிறது.
தலைவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அடிப்படையில் ஒய், ஒய் பிளஸ் என பல்வேறு வகைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மராட்டியத்தில் ஆட்சி செய்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் மந்திரிகள், தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதன்படி முன்னாள் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரிகள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல விஜய் வடேட்டிவார், பாலாசாகேப் தோரட், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பாஸ்கர் ஜாதவ், சதேஜ் பாட்டீல், தனஞ்செய் முண்டே, சினில் கேதாரே, நர்கரி ஜர்வால் மற்றும் வருண் சர்தேசாய் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நீக்கப்பட்ட ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் அனில் தேஷ்முக் 3 பேரும் முன்னாள் உள்துறை மந்திரிகள் ஆவர்.
அதேநேரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினர், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் முதல்-மந்திரிகளுமான அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஆச்சரியமளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட செயலாளரும், நம்பகத்தன்மை வாய்ந்த உதவியாளருமான மிலிந்த் நர்வேகருக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் அச்சுறுத்தல் உணர்வை கருத்தில் கொண்டு நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டவை என்றும், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் முன்னாள் மந்திரிகள் ஆவர். இனி இவர்களின் வீடுகளுக்கு வெளியேயும், அவர்களுக்கு துணையாகவும் நிரந்தர போலீஸ் பாதுகாப்பு இருக்காது.
மராட்டிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மகா விகாஷ் அகாடி கூட்டணியை சேர்ந்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.
விழுப்புரம்:
கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தலைமையிலான சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார், தலைமை போலீசார்கள் கணேசன், சபரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டிவனத்தில் உள்ள கோவில், சர்ச், மசூதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேக படும் படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா எனவும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் தங்கும் விடுதியில் உள்ளவர்களின் அடையா ளங்களை சேகரிக்கும் பொருட்டு எப்.ஆர்.எஸ். செயலி மூலம் தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.
- வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்
- இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்து மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.
இந்த சீசன் கடை ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். ஏலம் எடுக்க சென்ற வியாபாரிகள் போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதி
- பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடவடிக்கை
வேலூர்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இன்றுகாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைக்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.
கார், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகள் பலர் போலீசாரை கண்டதும் உள்ளே செல்லாமல் தானாக திரும்பி சென்றனர்.
இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தலப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் சோதனை செய்யபடுகிறது.
மாவட்டம் முழுவதும் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் புதன்கிழமை காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டிருக்கும்.
- சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் காவி உடையுடன் கூடிய அம்பேத்கர் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஐகோர்ட்டில் வக்கீல்களும், ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் காவி சாயம் பூசி விடக்கூடாது என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் முன்பு நேற்று இரவில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெரியார், அம்பேத்கர் சிலைகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் முக்கிய சந்திப்புகளில் இந்த 2 சிலைகளும் நிறுவப்பட்டிருக்கும். கிராமப்புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் உள்புற சாலைகளிலும் இந்த 2 தலைவர்களுக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள 350 கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
- சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பண்டிகையைக் கொண்டாட மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நகை பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாரிமுனை அந்தோணியார் ஆலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கதீட்ரல்) ஆலயம், சைதாப்பேட்டை சின்னமலை ஆலயம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வரும் கிறிஸ்தவ ஆலயங்களில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் ரோந்து வாகனங்கள் முக்கியமான பகுதிகளில் தொடர் ரோந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், 'டிரோன்' கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கிறிஸ்தவ மக்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது, கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் இன்று இரவு தொடங்கி 2 நாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காதவாறு தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும் போலீசார் அங்கு ரோந்து செல்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள 350 கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
- புத்தாண்டையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
- நாளை மறுநாள் இரவு 10 மணியில் இருந்தே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர்.
சென்னை:
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2022-ம் ஆண்டு முடிந்து 2023 ஆண்டு பிறப்பதையொட்டி அதனை வரவேற்க மக்கள் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து முக்கிய நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகள் ஆகியவற்றில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுவிருந்துடன் விதவிதமான உணவு வகைகளும் நட்சத்திர ஓட்டல்களில் பரிமாறப்பட உள்ளன.
இப்படி நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும் நிலையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.
புத்தாண்டு பிறக்கும் 31-ந்தேதி நள்ளிரவில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு 'ஹேப்பி நியூ இயர்' என உற்சாகம் பொங்க கூச்சலிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள்.
இந்த கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
புத்தாண்டையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. நாளை மறுநாள் இரவு 10 மணியில் இருந்தே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் சுமார் 450 இடங்களில் வாகன சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தங்களது பகுதியில் பிரச்சினை ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணிக்கு பிறகு சாலைகளில் சுற்றுபவர்களை எச்சரித்து வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவிலும், புத்தாண்டு தினத்தன்றும் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் சவுக்கு கட்டைகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்பட உள்ளது. வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்கள் இரவு முழுவதும் செயல்பட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இந்த அனுமதியை போலீசார் வழங்கி இருக்கிறார்கள்.
புத்தாண்டு அன்று போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட்டாலும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வேகமாக செல்வதை தடுப்பது என்பது சில நேரங்களில் இயலாத காரியமாகவும் மாறிவிடுகிறது.
இதை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
இதன்படி சென்னையில் உள்ள பெரிய மேம்பாலங்களை மூடிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரங்களில் உள்ள 40 மேம்பாலங்களின் நுழைவு பகுதி, இறங்கும் பகுதி ஆகியவற்றில் தடுப்புகளை அமைக்க உள்ளனர்.
இதனால் போதையில் பாலங்களின் மீது மக்கள் பயணம் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் 20 ஆயிரம் போலீசாரும் மாநிலம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
- கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது.
- தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.
சேலம்:
அனைத்து கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது. தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.
இதை அடுத்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம் கலெக்டர்களுக்கு நேற்று முதல் எஸ்.ஐ தலைமையில் 5 முதல் 7 போலீசார் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல கலெக்டர்கள் ஆய்வு பணிக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சென்றனர். அதில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்ட பெண் கலெக்டர்களுக்கு கொலை மிரட்டல் இருந்தது.
இதேபோல் சேலம் கலெக்டர் கார்மேகம் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்ட வர்களால் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக உளவு அமைப்புகள் அரசுக்கு அறிக்கை அளித்தனர். இதனால் கலெக்டரின் பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.
- இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்புறம் தினசரி மார்க்கெட் மற்றும் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போலீசிடம் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் இன்று இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் அந்த இடத்தில் போலீஸ் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.
- போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளான அக்ராவரம், லாலாபேட்டை, நெல்லிக்குப்பம், மோட்டூர், டெல்லி குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
லாலாபேட்டையில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். முகுந்த ராயபுரம் மற்றும் லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் கோவிலை நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிவன் கோவில் முகுந்தராயபுரம் ஊராட்சியில் உள்ளதால் கோவில் சார்பில் அறக்கட்டளை தொடங்கி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் முகுந்தராயபுரத்தை சேர்ந்தவர்களாக மட்டும் இருப்பார்கள் என்றும் லாலாபேட்டை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் லாலாபேட்டையை சேர்ந்தவர்களின் விவசாய நிலங்கள் முகுந்தராயபுரம் பகுதியில் உள்ளதால் அங்குள்ள 4 ஏரிகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது.
சுடுகாடுகளை பயன்படுத்தக் கூடாது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் லாலாபேட்டையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளதால் லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.