என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229217"

    • கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
    • குளச்சல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் அசின். இவர் தனது நண்பருடன் காரில் கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் பாலூர் பகுதியில் வரும்போது திடீரெனை முன்பக்கம் இருந்து புகை வந்து உள்ளது. உடனடியாக அவரும், அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீப் பிடித்தது. அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    மேலும் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் பாண்டமங்கலம் முதல் வெங்கரை வரை செல்லும் சாலையில் 1.2 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாடு செய்யப்பட்ட பணியையும் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாமக்கல் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் மற்றும் உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், சாலை ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ள னர்.

    குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலை மையில், திருவிதாங்கோடு சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியனர் ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அமைப்பின் மாநில நிர்வாகி செரீப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார்.
    • பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து, காரிப்பட்டியில் பொது வினியோக கூட்டுறவு அங்காடியை ஆய்வு செய்த அவர், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார்.

    இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி அரசினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியையும், சர்க்கார் வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தையும் திடீர்ஆய்வு செய்தார்.

    வாழப்பாடி பேரூராட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த மீட்கப்பட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட, பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். இந்த நிலம் தொடர்பான ஆவணங்களை வாழப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் விஷ்ணுவர்த்தினி, வாழப்பாடி தாசில்தார் (பொ) ரவிக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்தரகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார்.
    • இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கிரில் தேவராஜ் (வயது 48), இவர் நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த பஸ் இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போரா டினார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் 108 ஆம்பலன்சுக்கு தகவல் தெரி வித்தார். 108 ஆம்புலன்ஸ் குழு வினர் விரைந்து வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது . பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது.

    இது குறித்து உறவினர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. அவர்கள் கத றிய படி சேலம் விரைந்து ள்ள னர். இந்த சம்ப வம் இன்று காலை பஸ் நிலை யத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.
    • சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார்.

    சேலம்:

    சேலம் டவுன் தேவேந்திரபுரம் பகுதியில் வசித்து வருபவர் போகாராம். இவருடைய மகன் பரத்குமார் (வயது 17). இவர்களுடைய சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.

    போகாராம் சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார். மகனை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பரத்குமாரை ேதடி வருகின்றனர்.

    • இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (26). இவர் சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூர் அருகே தங்கி அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குமாரபாளையம் விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதலில் ஈடுப்பட்டனர்.
    • அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    குமாரபாளையம்:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 -2023-ன்படி குமார பாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1.92 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்த இடத்தில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் வந்தி ருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விஜய்கண்ணன், இது நகராட்சி சார்பில் நடத்தப்படும் பூமி பூஜை, இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க அனுமதி இல்லை, கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

    இதனால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இது பற்றி நகர செயலாளர் செல்வம் கூறியதாவது:-

    இது தமிழக அரசு ஒதுக்கிய நிதி, அதுவுமின்றி பொது நிகழ்ச்சி. நாங்கள் பங்கேற்போம்.

    அமைச்சர் நேரு 2 நாட்க ளுக்கு முன்பு வந்த போது, காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பாக பணி யாற்றியதற்காக, சால்வை அணிவித்து பாராட்டினார்.

    மேலும் நகராட்சி சார்பில் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி சென்றார். எனவே அரசு விழாக்களில் நாங்கள் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்து இன்று குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல காலதாமத மானது.

    இதனால் வழக்கமாக அந்த வழியில் இயங்கி வரும் 8-ம் எண் அரசு பேருந்தில் மாணவ-மாணவிகள் ஏற முயன்றனர். அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு குமாரபாளையம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப் படுத்தினர். இதை அடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இதுகுறித்து மாணவி மவுனிகா ஸ்ரீ மற்றும் வசந்தி கூறியதாவது:-

    வழக்கமான பள்ளிக்கு செல்லும் நேரத்தில் விடப்படும் சிறப்பு பேருந்து சில நேரங்களில் காலதாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் 8-ம் எண் மற்றும், 5-ம் எண் கொண்ட பேருந்துகளில் மாணவ, மாணவிகளாகிய நாங்கள் ஏறினால் நடத்துனர்கள் இடம் இல்லை எனக் கூறி இறக்கி விடுகிறார்கள்.

    பள்ளிக்கு நேரமாகிவிட்டது என கூறினால் தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பு மூஞ்சிக்கு வந்து விடும் என கூறுகிறார்கள்.

    நாங்கள் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். காலையில் சென்றால் மாலை வரை வீடு திரும்ப நேர ஆகிறது. பேருந்துகளை நம்பி செல்ல வேண்டி இருப்பதால் எங்களுக்கு சரியான நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மாண-மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியலால் கீழேரிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
    • சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரஹாசநல்லி மன்னப்பன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ். வாழவந்தியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் ரத்தினம் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார், ரத்தினத்தின் மகள் வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் .தகவலின் அடிப்படையில் ரத்தினத்தின் மகன் விஜயகுமார் மற்றும் அவரது சகோதரி வெண்ணிலா ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர்களது தந்தை ரத்தினம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரும் எஸ். வாழவந்தியில் உள்ள கல்குவாரிக்குச் சென்று அங்கு அவரது தந்தையுடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போது ரத்தினம் காலை 9 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அங்கு வந்த கல்குவாரியின் உரிமையாளரின் தாயார் சாந்தாமணி சத்தம் போடவே ரத்தினத்துடன் வேலை பார்க்கும் ராஜேந்திரன் மற்றும் குழந்தைவேல் ஆகியோரின் உதவியுடன் ரத்தினத்தை கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார் அவரது காரில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், கூறியுள்ளனர்.

    இதுகுறித்து விஜயகுமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பரமத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களின் விவரங்களை ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது புற நோயாளிகள் தினசரி வருகை குறித்த பதிவேடு, உள் நோயாளிகள் விவர பதிவேடு, பணியாளர்களின் வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார்.

    ஆய்வக பதிவேடுகளை பார்வையிட்டு ரத்தம், சிறுநீரில் சர்க்கரை அளவு பரிசோதனை, கொலஸ்ட்ரால், எச்.ஐ.வி நோய் தொற்று பரிசோதனை, உப்பு சத்து பரிசோதனை, கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    கர்ப்பிணித்தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைக்கான வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களின் விவரங்களை ஆய்வு செய்தார். கர்ப்பிணித்தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் வருகை புரிந்துள்ளனரா, அவர்களை கிராம சுகாதார செவிலியர்கள் சரியான முறையில் அழைத்துவந்துள்ளார்களா என்பன குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    நோயாளிகளுடன் கலந்துரையாடி நோயின் விவரம் குறித்தும், மருந்து மாத்திரைகள் பெற்றுக்கொண்டீர்களா என்றும் கேட்டறிந்தார். சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்காக வந்த நோயாளிகளிடம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உங்களுக்கு மாத்திரைகள் தொடர்ந்து வீடு தேடி வந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    பின்னர், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி ஊராட்சி, அங்கன்வாடி மையங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். மேலும், வளரிளம் பெண்களுக்கு சானிடெரி நாப்கின் வழங்கப்படும் எண்ணிக்கை குறித்தும், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கப்படும் விவரம் குறித்தும் கேட்டறிந்து, உணவு பொருட்களின் இருப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, மணப்பள்ளி ரேசன் கடையில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண் எண்ணை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார்.

    மேலும் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மணப்பள்ளி ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தர்ணாவில் ஈடுபட்டாா்.
    • அங்கு வந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.

    நாமக்கல்:

    கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில், நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ஏ.கே.பி.சின்ராஜ். நேற்று காலை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தர்ணாவில் ஈடுபட்டாா்.

    அங்கு வந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அதற்கு சின்ராஜ் எம்.பி. மறுத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதியம் 1 மணிக்கு மீண்டும் கலெக்டர் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அப்போது, 'சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டம், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தலாம், பல்வேறு காரணங்களால் கடந்த மாதங்களில் நடத்த முடியாமல் போனது என்று தெரிவித்தாா். இதனை ஏற்றுக் கொண்ட மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தனது போராட்டத்தைக் கைவிட்டாா்.

    அதன்பிறகு சின்ராஜ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், சாலைப் பாதுகாப்பு, மின்வாரிய கணக்குக் குழுக் கூட்டம், ஆண்டில் 4 முறை நடத்தப்பட வேண்டும். இதற்கு தலைவராக நான் உள்ளேன். மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பணிகள் நடைபெறும். இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக மாவட்ட கலெக்டருக்கு பலமுறை கடிதம் அனுப்பினேன். ஆனால், அவரிடம் இருந்து உரிய பதில் வரவில்லை.

    அமைச்சரானாலும், மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினரானாலும் இக்கூட்டத்தில் சாதாரண உறுப்பினா்கள் தான். காலதாமதத்தைக் கண்டித்துதான் போராட்டத்தில் ஈடுபட்டேன். தற்போது சாலை பாதுகாப்பு, வளா்ச்சிக் குழு கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் நடத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளாா். மின் கணக்குக் குழு புதிய உறுப்பினா்கள் நியமனத்திற்குப் பின் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    ஊரக வளா்ச்சித் துறையில் நிறைவுற்ற பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கால்நடைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. அரசு விழாக்களில் முன்னுரிமை அளிக்காமல் என்னை அவமதிக்கும் வகையில் கலெக்டர் நடந்து கொள்கிறாா். இனிமேல் அதுபோன்ற தவறுகள் நிகழாது என தற்போது கலெக்டர் உறுதியளித்திருக்கிறாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×