என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரி
    • சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருச்சி,

    கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரியான இவர் அவ்வப்போது திருச்சிக்கு வந்து செல்வார். கடந்த 17ம் தேதி கேரளாவில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்தவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் இரு தினங்களாக அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சப்- இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் பாபு பணமாக கிடந்தார்.

    அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் போலீசார் நடத்திய சோதனையில் அதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றதற்கான சீட்டு மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆகவே உடல் நலக்குறைவால் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விடுதி அருகில் வியாபாரி பிணமாக கிடந்த சம்பவம் அந்த விடுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் , அவினாசி வட்டாரம் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள்- வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ. சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டியன், இயக்குனர் முனைவர் தர்மராஜ் மற்றும் கள அலுவலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    • கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.
    • தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட அரசாணை வெளியிட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் கணேசன், பல்லடம் சங்க செயலாளா் அண்ணாதுரை ஆகியோா் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே வணிக நிறுவன கடைகள் திறந்திருக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறக்கக்கூடாது என்பதால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வியாபாரிகள் நலன் கருதி தமிழக அரசு தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணிக்கு மேலும் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

    • தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மீது தாக்குதல் நடத்தினர்.
    • புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மல்லியக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செங்குகவுண்டர் என்கிற சாமியார் (வயது 72). இவர் கடந்த 5 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கடை போடாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும்கடை போட்ட செங்கு கவுண்டரிடம் குத்தகை தாரர்கள் விடு முறை நாட்களுக்கும் சேர்த்து சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதுபற்றி தாரமங்கலம் போலீஸ் நிலை யத்தில் செங்கு கவுண்டர் கொடுத்த புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் விழுந்ததில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இடைக்கோடு மாலைக் கோடு சாமவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (வயது 33). இவர் மாலைக்கோட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார்.

    கடந்த 19-ந்தேதி இவர், கோவிக்கரை பிரவின் ராஜ் (27), பிரதீப் (37) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் பி கழுவன்திட்டையிலிருந்து மேல்புறம் சாலையில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துள்ளது.

    இதனால் மோட்டர் சைக்கிளை ரைஸ் செய்தபடி பிரவின் ராஜ் வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த பிரின்ஸ் ராஜ் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார்.

    இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு அங்கிருந்து காரக்கோ ணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரின்ஸ் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார்.
    • தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் ஏழுமலை (வயது 43). இவர் இருசக்கர வாகனம் மூலம் புலி, பூண்டு வியா பாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்த ஏழுமலையை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தை பாலாஜி என்ப வரது கிணற்றில் ஏழமலை பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஏழுமலை உடலை மீட்டனர். அதன் பின்னர்பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாபாரி ஏழுமலை எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அம்மாபேட்டை சாமிநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
    • இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய மொத்த, சில்லரை ரெடிமேட் ஜவுளி கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள், ஜூஸ் கடை, வளையல் கடை என பல்வேறு நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடைபாதை கடைகளை அகற்றுவதற்காக லாரிகளை எடுத்து வந்ததாக தெரிகிறது.

    லாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் எம்.சி.ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் கடைகளை அகற்றாமல் சென்றனர்.

    இந்நிலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மோகனா (32) என்பவர் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் தன்னையும் நடைபாதை வியாபாரிகளையும் தகாத வார்த்தையில் மிரட்டல் விடும் தோரணையில் பேசி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • முருகன் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
    • மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டி.என்.பி. காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது32). இவர் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

    தீக்குளிப்பு

    நேற்று மாலை இவர் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி திடீரென தீக்குளித்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    10 சதவீத தீக்காயத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, முருகனின் அண்ணன் ஆவுடையப்பன். இவருக்கும் இவரது மனைவி சுப்புலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    தகராறு

    இந்நிலையில் சுப்புலட்சுமி தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தன்னிடம் கூறாமல் மகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததால் ஆவுடையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்தனர்.

    இது தொடர்பாக ஆவுடையப்பன், சுப்புலட்சுமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இது தொடர்பாக புகாரின் பேரில் தென் பாகம் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன், வியாபாரி முருகன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 46). இவர் தெற்கு தெருவில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கோவில் திருவிழாவுக்கு கணக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மாலை மகேஷ்குமார் கடையில் இருந்தார். அங்கு வந்த 2பேர் அவரை தாக்கிவிட்டு தப்பினர்.

    இது தொடர்பாக மகேஷ்குமார் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிச்சியம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(42), அவரது மகன் ஹரி ரஞ்சித்(23) ஆகியோரை கைது செய்தனர்.

    ஜெய்ஹிந்த்புரம் இருதய நகரை சேர்ந்தவர் வாசு தேவன்(72). இவரது மகன் மாரிராஜா. இருவருக்கும் இடையே அனுமதியின்றி சகோதரியை திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று இரவு வாசுதேவன் வீட்டில் இருந்தார். அங்கு வந்த மாரிராஜா தந்தை என்றும் பாராமல் வாசுதேவனை தாக்கி விட்டு தப்பினார். இது தொடர்பாக வாசுதேவன், ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரி ராஜாவை கைது செய்தனர்.

    • வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58) இவர் மளிகை கடைகளுக்கு மசாலா பொருட்கள் சப்பளை செய்யும் வேலை செய்து கொண்டிருந்தார். இவருக்கு மகாலட்சுமி (57) என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரவிச்சந்திரனின் மனைவி மகாலட்சுமி கடைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். மகள் வேலைக்கு சென்று விட்டிருந்தார். ரவிச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மகாலட்சுமி கடைக்கு சென்று திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது ரவிச்சந்திரன் வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ரவிச்சந்தி ரனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவம னைக்கு கூட்டி சென்று பார்த்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளகோ வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ராஜா முகமது வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜா முகமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் வெளியே இருந்த திரைச்சீலை எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா முகமது உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மாலை ராஜா முகமது, தனது மனைவி ரம்ஜானுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜா முகமது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி கீழே விழுந்தனர். இது தொடர்பாக ராஜா முகமது, விபத்தை ஏற்படுத்திய நபர்களிடம் தட்டிக்கேட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த நபர்கள் தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×